Monday, October 12, 2020

மெக்ஸிக்கோ - கே.நல்லதம்பி

 “மெக்ஸிக்கோ” – இளங்கோ. சமீபத்தில் வெளியான இவரது நாவல். இவர் இலங்கைத் தமிழர். புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார். புதிய சூழ்நிலைக்குத் தங்களை நிலை நிறுத்திக்கொண்டு அடையாளப்படுத்திக்கொள்வது புலம்பெயர்ந்தவர்களின் இயல்பான தவிப்பு. அந்தத் தவிப்பின் பல அனுபவங்கள் இவர் கதைகளில் தெரிகிறது. ஒரு இளைஞன் தனது பயணங்களின் தேடலைச் சொல்லும் கதை.

இளைஞர்களைக் கவரும் கதை. “எதையோ மறக்கவோ அல்லது எதையோ புதிதாய் கண்டடையவோதான் பயணங்கள்” “எவ்வளவு காயங்கள் வாழ்வில் வந்தாலும், பெண்களில்லாத வாழ்வு சாத்தியப்படாது”. “காதல் அதிக வேலையில் துயரத்தைத்தான் தருகிறது என அறிந்தும் ஏன் அதைத் தேடித்தேடி அலைந்திருக்கிறேன்”. இதுபோல அங்கங்கே தெறிக்கும் வரிகள் படிப்பவர்களைக் கவருவதில் சந்தேகமில்லை.

இவருடைய “கள்ளி” என்ற சிறுகதையை 4 ஆண்டுகளுக்கு முன் கன்னடத்தில் “கந்த காமினி” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து “சகி” என்ற கன்னட இதழில் பிரசுரமாகி இருக்கிறது.

படியுங்கள் பிடிக்கும்.

டிஸ்கவரி புக் பேலஸ் - சென்னை ரூ. 200/-

(நன்றி: https://www.facebook.com/elanko.dse/posts/10158196956258186)

No comments:

Post a Comment