அபூர்வமான சந்திப்புகள் அவ்வப்போது நாம் எதிர்பார்க்காமலே நடக்கும்
மதிற்பிற்குரிய எழுத்தாளர் Elanko DSe அவர்களின் சந்திப்பும் அவ்வாறே. அவருடைய ஆழமான, பகடியான சமகால எழுத்துக்கள் எப்போதும் எனக்கு பிடித்தமானவை.
தோழைமையோடு வந்திருந்தவர் அவருடைய இரண்டு புத்தகங்களை “தாய்லாந்து ” மற்றும் “மெக்ஸிக்கோ” புத்தகங்களை கையளித்து அம்பை, சூடாமணி, எஸ் ரா என உரையாடல் நீண்டது.
நானும் மொன்றியல் எழுத்தாளர்கள் நடராசா அம்மா & வீணை மைந்தன் ஐயாவின் புத்தகங்களை வாசிக்க கொடுத்தேன்.
அத்தி பூத்தார் போல் நடக்கும் இது போன்ற புத்தகம் ,எழுத்து உலக மனிதர்களோடு உரையாடல் உள்ள நிறைவை அளிப்பது போல் அன்றாடம் அமைவதில்லை.
10 வயதேயான எனது மகனோடு சதுரங்கம் ஆடி சென்றபின் அவருடைய புத்தகங்களை காட்ட “wow amazing cover and opt size for reading ” என சட்டென உதிர்த்தான் வார்த்தைகளை .. மகனின் முதல் விமர்சனம்.
தாய்லாந்து ” மற்றும் “மெக்ஸிக்கோ” வாசிப்பு பயணம் முடித்து எனது அனுபவம் பகிர்கிறேன்.

0 comments:
Post a Comment