கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'சாம்பல் பறவைகள்'

Thursday, March 10, 2016


"உன‌க்கான‌ இட‌ம் இதுவ‌ல்ல‌வென‌ உன‌க்கு ந‌ன்கு தெரியும். ப‌ல‌முறை ப‌ல்வேறு ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் அது நிரூபிக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கிற‌து. ஆனாலும் நீ சாம‌ர்த்திய‌மாய் சில‌ கார‌ண‌ங்க‌ளை உருவாக்கி அவ‌ற்றுக்காய்த்தான் இங்கே தொங்கி பிடித்துக்கொண்டிருக்கின்றேன் என்று கூறிக்கொண்டிருக்கின்றாய். உன‌து சுய‌ம், உன‌து க‌ர்வ‌ம், உன‌து கோப‌ம் எல்லாம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அழிக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்ற‌து என்ப‌தை நீ ந‌ன்க‌றிவாய். இனி முதுகை இன்னுமாய் வ‌ளைப்ப‌த‌ற்கு முள்ள‌ந்த‌ண்டும், போலியாய்ச் சிரிப்ப‌த‌ற்கு உத‌டுக‌ளும் இல்லையென்றாலும் ஒவ்வொரு முறையும் புதிய‌ புதிய‌ முக‌மூடிக‌ளை அணிந்துகொள்வ‌த‌ற்கு நீ த‌யாராக‌ இருக்கிறாய். உன்னுடைய‌ க‌ன‌வுக‌ள் வேறுவித‌மான‌வை. அதை நீ செம்ம‌ண் த‌ரைக‌ளில் காற்ச‌ட்டை க‌ழ‌ன்று விழ‌ விழ‌ ஓடிய‌ நாட்க‌ளிலிருந்தே நாம‌னைவ‌ரும் அறிவோம். ஆனால் ஒரு ம‌த்தியான‌ வேளையில் உன‌து ம‌ண்ணையும், அரைக்காற்ச‌ட்டைக‌ளையும் நீ கைவிட்டு வந்த‌பின், உன‌து க‌ன‌வுக‌ளையும் கைவிட்டு வ‌ந்துவிட்டாயோ என்றுதான் எண்ண‌த்தோன்றுகின்ற‌து"

வசந்தன்: இப்போது இந்தக் கடந்துபோகின்ற பொம்பிளைப்பிள்ளை ஏன் நீலக்கலரில் நகத்திற்குச் சாயம் பூசியிருக்கா? அவர் கூட்டிக்கொண்டு போகின்ற நாயிற்கு என்ன பெயராய் இருக்கும்..... என்பது போன்ற கேள்விகள்.

நகுலன்: இதெல்லாம் ஒரு கேள்விகள்...

வசந்தன்: பதில்களை ஏற்கனவே தெரிந்த எளிய கேள்விகளை நாங்கள் எழுப்பினால், உடலுக்கு மட்டுமில்லை, உள்ளத்திற்கும் மிச்சம் நல்லது.

நகுலன்: சரி, இப்ப சொல்லு, வாழ்க்கை என்றால் என்ன?
வசந்தன்: ஆ...வாழ்க்கை என்றால்.... என்னவென்றால்... உலாத்தலுக்குக் கூட்டிக்கொண்டு போகின்ற இந்த நாயிற்கு, அவா தன்னுடைய பழைய போய்-பிரண்டின்ரை பெயரைத்தான் வைத்திருப்பா...
போதுமா?

நகுலன்: உனக்கு நாயிற்கும் வாழ்க்கையிற்கும் வித்தியாசம் தெரியவில்லை.


('சாம்பல் பறவைகள்' நாடகம், 'உயிர்ப்பு - 05' நிகழ்வினூடாக, மார்ச் 05, 2016 ரொறொண்டோ யோர்க்வூட்ஸ் அரங்கில் மேடையேறியது, அதில் வரும் முதலாவது காட்சி இது.
புகைப்படம்: ஈகுருவி)



0 comments: