கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மனிதச்சங்கிலியாய் ஈழத்திலுள்ள மக்களுக்காய்...

Friday, January 30, 2009

கடுங்குளிரிலும் ரொறோண்டோத் தெருக்களில் கூடிய கூட்டம்...

நடந்த நிகழ்வை காணொளியில் பார்க்க...

நிகழ்வு மனிதச்சங்கிலியாய் ஆரம்பித்து இறுதியில் ரொரண்டோ பெரும்பாகத்தின் முக்கிய போக்குவரத்துப்பாதையான yonge-bloor-university பாதை மக்கள் திரளால் முற்றாக மூடப்பட்டு, உள்ளூர் ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் - காலம் கடந்ததாயினும்- முக்கிய breaking news ஆகக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

As Many As 10,000 Protestors Create Commuter Chaos At Union Station During Afternoon Rush Hour

Friday January 30, 2009

CityNews.ca Staff

It has been an extraordinary day in the downtown core, a spectacle rarely if ever seen in this city. The cause: a day long downtown-wide massive protest by Canadian Sri Lankans, designed to attract attention to what they call acts of genocide in their homeland.
The human chain demonstration stretched from Bloor St. to University Ave. and Yonge St. and snaked all the way to Front.
But it was at that final destination that the crowds truly tried to make their point. As many 5-10,000 people wound up at Union Station, causing such an overwhelming sea of humanity that police were forced to close off the roadway for a time.
Mounted units, traffic cops and even the RIDE spotcheck command post were all called into action while chaos prevailed around the transit hub. The assembled multitude was peaceful, a remarkable achievement for such a large gathering, but it was inside the typical transit hubs where chaos reigned.
Police were able to finally open a small corridor to allow pedestrians and travellers to get through.
A man named George was one of those caught in the gridlock while attending a library convention downtown. He didn't seem to mind the inconvenience it caused. "I'll support the protesters, it's a good cause," he confirms. "But, you know what? There's thousands of people that have been affected."
But while police did their best to clear the way, when commuters finally did get down to Union Station it was hardly clear sailing. It was so crowded in the subway the line waiting to get in stretched all the way back to the area where passengers pay their fares.
And it was almost as bad uptown. Busy Bloor Station was so filled with passengers, the TTC was forced to stop all its trains before they entered the station to ensure safety.
It was a long day for authorities, who were hopping since the protest began earlier in the morning. Drivers were also affected, as the protestors kept to the sidewalk but provided an endless visual distraction for blocks.
It was an amazing sight, all the more so because it stayed so peaceful. "There are probably thousands, tens of thousands of Tamils here all trying to bring some attention to their cause," confirmed CityNews reporter Francis D'Souza at the height of the madness. "You can see them on the street corners here trying to hand out pamphlets just to let people know what they're actually talking about."
He believes they more than achieved their aims. "Their message is 'stop Tamil genocide in Sri Lanka.' If that's what they wanted, that's what they're getting right now. Because the hundreds of thousands of commuters who use Union Station every day are trying to get through and listening to their message."
How busy was it at the height of the protest? D'Souza reveals he was forced to get out of the CityNews vehicle and walk to the scene. His cameraman and all his equipment didn't get through the gridlock until 25 minutes later.
The protestors had promised their massive march would end at 6pm. True to their word, as the dinner hour struck, the crowds slowly began to disperse and left the area, creating yet more headaches for an already swollen public transit system.
Thanks: http://www.citynews.ca/news/news_31530.aspx



















இர‌ண்டு இராணுவ‌ங்க‌ளுக்கு இடையில்

Wednesday, January 28, 2009

In English: எழுதிய‌வ‌ரின் பெய‌ர் குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை. இந்த‌க்குறிப்பு ம‌ட்டும் உள்ள‌து - The author is a photographer and aid worker who left the Vanni in September 2008
(தேவை க‌ருதி அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாய் மொழிபெய‌ர்த்த‌து. த‌மிழ் மொழிபெய‌ர்ப்பில் தெரிய‌க்கூடிய‌ த‌வ‌றுக‌ளுக்காய் ஆங்கில‌த்தில் எழுதிய‌வ‌ரிட‌ம் முன்கூட்டிய‌ ம‌ன்னிப்பு. ~டிசே)

கைவிட‌ப்ப‌ட்ட‌ வீடுக‌ள், சிதைக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்வு, இட‌ம்பெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள். இல‌ங்கை இராணுவ‌த்துக்கும், விடுத‌லைப் புலிக‌ளுக்கும் இடையில் ந‌டைபெறும் உக்கிர‌மான‌ போரின் கோர‌த்தை விப‌ரிக்கின்றார் உத‌விப்ப‌ணி செய்யும் ஒருவ‌ர்.

"வ‌ன்னியிலுள்ள‌ இலுப்பைக்க‌ட‌வையில் என‌து வீடு இருக்கிற‌து. தை இர‌ண்டாந்திக‌தி, 2007 காலை ஒன்ப‌து மணிக்கு கிபீர் (இல‌ங்கை விமான‌ப்ப‌டையின் ஜெட்ஸ்) வ‌ந்த‌ன‌. அவை எங்க‌ள் கிராம‌த்தில் குண்டுக‌ளை வீசின‌, நில‌ம் அதிர்ந்துகொண்டிருக்க‌, குண்டின் சித‌ற‌ல்க‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ற‌க்க‌த்தொட‌ங்கின‌. ப‌ல‌ ம‌க்க‌ளுக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌து போல‌வே நானும் காய‌ப்ப‌ட்டேன். இவ்வாறே நான் என‌து காலை இழ‌ந்தேன்."

ஸ்ரெல்லா, செந்த‌ளிர்ப்பான‌ முக‌மும் வனப்புமுள்ள 13 வ‌ய‌துடைய‌வ‌ள். நான் அவ‌ளை ஆவ‌ணி 05, 2008ல் ம‌ணிய‌ங்குள‌த்தில் ச‌ந்தித்தேன்; இல‌ங்கை வ‌ட‌க்கிலுள்ள‌ வ‌ன்னியில் இருக்கும் ம‌ணிய‌ங்குள‌ம் கிராம‌ம், அவ்வ‌ருட‌த்தின் ஆர‌ம்ப‌ம் வ‌ரை த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டிலிருந்த‌து. ஸ்ரெல்லா அவ‌ள‌து வாழ்வின் முக்கிய‌ க‌ட்ட‌த்திலிருந்தாள், அவ‌ள‌து ம‌ன‌மும் உட‌லும் வ‌ள‌ர்ச்சிய‌டைந்துகொண்டிருந்த‌து. ஆனால் அவ‌ளுக்கும் அவ‌ள‌து வய‌திலிருந்த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்குமிடையில் பாரிய‌ வித்தியாச‌மிருந்த‌து; அவ‌ள் சாதார‌ண‌ ப‌தின்ம‌ வ‌ய‌துடைய‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்ப‌த‌ற்கு அப்பால் நிறைய‌ விட‌ய‌ங்க‌ளைச் ச‌ந்தித்திருந்தாள்.

"ஆனி 20, 2008ல், எங்க‌ள் புதிய‌ வீட்டுக்கு அண்மையாக‌ எறிக‌ணைக‌ள் விழ‌த்தொட‌ங்க‌, நாங்க‌ள் ப‌ய‌த்தில் வீட்டை விட்டு ஓடவேண்டியிருந்த‌து. எங்க‌ளால் ப‌ல‌ பொருட்க‌ளை(உடைமைக‌ளை) எடுக்க‌முடிய‌வில்லை, என‌து குடும்ப‌த்தின‌ரின‌தும் உற‌வின‌ர்க‌ளின‌தும் உத‌வியுட‌ன்- என்னுடைய‌ ஊன்றுகோலோடு- எவ்வ‌ள‌வு வேக‌மாக‌ ஓட‌முடியுமோ அவ்வ‌ள‌வு வேக‌மாய் நான் ஓட‌வேண்டியிருந்த‌து. நாங்க‌ள் இங்கே ஒருவார‌மாய் இருக்கின்றோம், ஆறு குடும்ப‌ங்க‌ள் இருப்ப‌த‌ற்கு ஒரேயொரு த‌ங்குமிட‌ம் ம‌ட்டுமேயிருக்கிற‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 23 பேர். ம‌ல‌ச‌ல‌கூட‌ங்க‌ள் வ‌ச‌தியாய் இல்லை, என‌து (ஒற்றைக்)காலால் என‌க்கு இன்னும் க‌ஷ்ட‌மாயிருக்கிற‌து."

"என‌க்குத் தெரிய‌வில்லை, நாங்க‌ள் இந்த‌ இட‌த்திலிருந்து இனியும் இட‌ம்பெய‌ர்ந்தால் என்னால் எப்ப‌டி ச‌மாளிக்க‌ முடியும் என்று. என்னிட‌ம் செய‌ற்கைக்கால் இருக்கிறது, சைக்கிள் ஓட‌வும் முடியும். என்னிட‌ம் ஒரு சைக்கிள் இருந்திருந்தால், வாழ்க்கை இன்னும் இல‌குவாய் இருக்கும்."

"நிம்ம‌தியாக‌ப் ப‌டுக்க‌ ஒழுங்கான‌ த‌ங்குமிட‌ங்க‌ளையும், வ‌ச‌தியான‌ ம‌ல‌ச‌ல‌கூட‌ங்க‌ளையும் நாங்க‌ள் பெற‌முடியுமென்றால் என்னால் ம‌கிழ்ச்சியாக‌ இருக்க‌ முடியும்; ஆனால் இவ‌ற்றுக்க‌ப்பால், என‌க்கு ஒரு சைக்கிளே முக்கிய‌ தேவையாக‌ இருக்கிற‌து."

நான் ஸ்ரெல்லாவை மீண்டும் ஆவ‌ணி 20, 2008ல் ச‌ந்தித்தேன். அவ‌ள் தாங்க‌ள் த‌ங்கியிருந்த‌ ம‌ணிய‌ங்குள‌ம் வீடு இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன் எப்ப‌டி இல‌ங்கை இராணுவ‌த்தால் தாக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை விப‌ரித்தாள்.

"மாலை 7.30 ம‌ணிய‌வ‌ள‌வில் எறிக‌ணைக‌ள் விழ‌த்தொட‌ங்க நாங்க‌ள் அவ‌ச‌ர‌ம‌வ‌ச‌ர‌மாக‌ 5 கிலோமீற்ற‌ர்க‌ள் தொலைவிலுள்ள‌ கோணாவில் பாட‌சாலைக்கு ஒடினோம். என்னுடைய‌ செய‌ற்கைக்காலால் என்னால் தொட‌ர்ந்து போக‌ முடிய‌வில்லையென்ப‌தால் எங்க‌ள் குடும்ப‌ம் அவ்விர‌வை இப்பாட‌சாலையிலேயே க‌ழிக்க‌வேண்டியிருந்த‌து. எங்க‌ள் குடும்ப‌ம் த‌ங்க‌ள‌து உடைமைக‌ளைக் காவிக்கொண்டு வ‌ந்தால் அவ‌ர்க‌ளால் என‌க்கு உத‌வ‌வும் முடிய‌வில்லை. என‌து குடும்ப‌ம் ஓடுவ‌தை நான் மெதுவாக்கிக் கொண்டிருந்த‌தால் என‌க்குச் ச‌ரியாக‌க் க‌வலையாக‌ இருந்த‌து. அந்த‌ இர‌வு எறிக‌ணை‌கள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்த‌தால் பெரும் ச‌த்த‌ங்க‌ளுடைய‌தாக‌ இருந்த‌து. ம‌ற்ற‌க் குடும்ப‌ங்க‌ளால் இன்னும் தூர‌த்துக்கு ஓட‌ முடிந்திருந்த‌து, ஆனால் என்னுடைய‌ காய‌ங்க‌ளினால் நாங்க‌ள் இங்கேயே த‌ங்க‌வேண்டியதாக‌ப் போய்விட்ட‌து."

"நாங்க‌ள் இப்போது இந்த‌ப் பாட‌சாலையில்(கோணாவில்) இருக்கின்றோம், என‌க்குத் திருப்ப‌வும் க‌ஷ்ட‌மாக் இருக்கிற‌து. இந்த‌ப் பாட‌சாலை என‌து ப‌ழைய‌ பாட‌சாலை போல‌வே இருக்கிற‌து, ஆனால் நாங்க‌ள் இதை ஒரு வீடாய்ப் பாவித்துக்கொண்டிருக்க, இந்த‌ப் ப‌க்க‌த்திலுள்ள‌ சிறுவ‌ர்க‌ள் க‌ஷ்ட‌ப்ப‌ட‌ப்போகின்றார்க‌ள். திரும்ப‌வும் எறிக‌ணைக‌ள் ஏவ‌ப்ப‌ட்டு இந்த‌ இட‌த்தை விட்டும் திரும்ப‌வும் ஓட‌வேண்டியிருக்குமோ என்று என‌க்குச் ச‌ரியாக‌ப் ப‌ய‌மாயிருக்கிற‌து. ஒரு இட‌த்திலிருந்து இன்னொரு இட‌த்துக்கு ஓடியோடி என‌க்குச் ச‌ரியாக‌க் க‌ளைப்பாக‌வும், எந்த‌ இட‌மும் பாதுகாப்பாய் இருக்காது போல‌வும் தோன்றுகிற‌து."

"இல‌ங்கை அர‌சும், புலிக‌ளும் எங்க‌ளை அனும‌தித்தார்க‌ள் என்றால், இந்த‌ இட‌த்திலிருந்து த‌ப்பியோட‌ என‌க்கு மிக‌ச் ச‌ந்தோச‌மாக‌ இருக்கும். என‌க்கும் எங்க‌ள் குடும்ப‌த்துக்கும் நிம்ம‌தி வேண்டும், என்னால் இனியும் ஓட‌முடியாது. என‌க்கு இன்னும் கிபீர் விமான‌த்தாக்குத‌ல் குறித்த‌ கெட்ட‌ க‌ன‌வுக‌ள் வ‌ருகின்ற‌ன‌. கிபீர் விமான‌ங்க‌ளின் ச‌த்த‌த்தைக் கேட்கும்போது, நான் மிக‌வும் ப‌ய‌ப்பிடுகின்றேன்."

ஸ்ரெல்லா அந்த நேர‌த்தில் என்ன‌த்தையெல்லாம் அனுபவித்தாள் என்ப‌தை நான‌றியேன். இல‌ங்கை அர‌சு. 2009ம் ஆண்டு முடிவ‌த‌ற்குள் விடுத‌லைப் புலிக‌ளை அக‌ற்றி, விடுவிக்க‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளில் ச‌னநாய‌க‌த்தை வ‌ழ‌ங்க‌ப்போவ‌தாய் சூளுரைத்திருக்கிற‌து. தை 02ல் இல‌ங்கை இராணுவ‌ம் முக்கிய‌ ந‌க‌ரான‌ கிளிநொச்சிக்குள் நுழைய‌, புலிக‌ள் எல்லா விலையையும் கொடுத்து ச‌ண்டை பிடித்துக்கொண்டிருக்க‌ நிலைமை இன்னும் மோச‌ம‌டைந்திருக்கிற‌து. இந்தத் த‌ருண‌த்தில் கேள்வி இருக்கிற‌து: வ‌ன்னியிலுள்ள‌ த‌மிழ் ம‌க்க‌ளுக்கு என்ன‌ நிக‌ழ‌ப்போகின்ற‌து?

இல‌ங்கை இராணுவ‌த்துக்கும், விடுத‌லைப் புலிக‌ளுக்கும் இடையில் 2002-08 வ‌ரையிருந்த‌ யுத்த‌ நிறுத்த‌த்திற்கு ந‌ன்றி கூறிய‌ப‌டி, வ‌ன்னியிலிருந்த‌ ச‌மூக‌ங்க‌ள் ந‌டைபெற்றுக்கொண்டிருந்த‌ அபிவிருத்தியில் ம‌கிழ்ச்சிய‌டைந்திருந்த‌ன‌. ம‌க்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளிலும் வாழ்க்கைத் தேவைக‌ளிலும் முத‌லீடுசெய்து, த‌மிழ‌ர்க‌ளுக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்குமான‌ சமாதான‌த்தையும் சுபீட்ச‌த்தையும் எதிர்பார்க்க‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌ர். இந்த‌க் க‌ன‌வுக‌ள், இல‌ங்கை அர‌சாங்க‌ம் ஆறு வ‌ருட‌ யுத்த‌நிறுத்த‌ ஒப்ப‌ந்தத்தை உத்தியோக‌பூர்வ‌மாக‌ முடிவுக்குக் கொண்டுவ‌ந்த‌போது நொறுங்கி, த‌மிழ‌ர்க‌ள் மீண்டும் இட‌ப்பெய‌ர்வு, அத‌ன் பாதிப்புக்க‌ள், நிச்ச‌ய‌மின்மைக‌ள், பாதுகாப்பின்மை என்ப‌வ‌ற்றோடு ம‌ல்லுக்க‌ட்ட‌வேண்டியிருந்த‌து.

உள்நாட்டிலேயே அதிக‌ம் இட‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ளை கொண்ட‌ ஒரு நாடாக‌ உல‌கில் இல‌ங்கை இருக்கிற‌து. நிலைமை மோச‌மாக‌த் தொட‌ங்க‌த் தொட‌ங்க‌, கிட்ட‌த்த‌ட்ட‌ 400 000 ம‌க்க‌ள் த‌ம் வீடுக‌ளை இழ‌ந்திருக்க்கின்றார்க‌ள், 70, 000 பேர் -எண்ணிக்கையில்- கால் நூற்றாண்டு உள்ளூர்ப் போரால் இற‌ந்துள்ளார்க‌ள்.

2008 முழுதும், வ‌ன்னியின் தென்மேற்கு மூலையிலிருந்து இல‌ங்கை இராணுவ‌ம் குறிப்பிட‌த்த‌க்க‌ ந‌க‌ர்வுக‌ளை மேற்கொண்டிருந்த‌து. இராணுவ‌ம் முன்னேற‌ முன்னேற‌, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளையும், விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும், மீன்பிடிக் கிராம‌ங்க‌ளையும் விட்டு, வ‌ருகின்ற‌ எறிக‌ணைக‌ளிலிருந்து த‌ப்புவ‌த‌ற்காய் ஓட‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌ர். ம‌க்க‌ள் த‌ம‌து உடைமைக‌ளைக் க‌ட்டி, டிராக்ட‌ர்க‌ள் மூல‌மாகவும் ந‌ட‌ந்தும் பாதுகாப்பான‌ வ‌ட‌க்கு நோக்கி ந‌க‌ர‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌ர். விவ‌சாயிக‌ளும் மீன‌வ‌ர்க‌ளும் அந்நியோன்னிய‌மாய் வாழ்கின்ற‌ வ‌ன்னி இல‌ங்கையுள்ள‌ மிக‌வும் செழிப்பான‌ பகுதிக‌ளாகும். அவ‌ர்க‌ளுடைய‌ மிக‌ச்சொற்பமான‌ சேக‌ரிப்பை பாதுகாப்பான் இட‌ங்க‌ளுக்கு ந‌க‌ர்வ‌த‌ற்காய் டிராக்ட‌ர்க‌ளை வாட‌கையெடுப்ப‌த‌ற்கு செல‌வ‌ழிக்கின்றார்க‌ள். "ம‌ர‌ங்க‌ளுக்கு கீழே வாழும் எங்க‌ளில் ப‌ல‌ர் உரிய‌ த‌ங்குமிட‌ங்க‌ளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்த‌ நிலைமைக்குள் எப்ப‌டி என்னால் என‌து மாண‌வ‌ர்க‌ளைக் க‌வ‌னிக்க‌ முடியும்? அவ‌ர்க‌ள் வ‌ந்து ப‌டிப்ப‌த‌ற்கான‌ எந்த‌ப் பாட‌சாலையும் என்னிட‌ம் இல்லை; அந்த‌ மாண‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ர் எங்கேயிருக்கின்றார்க‌ள் என்ப‌தே தெரியாது' என்கிறார் ‍ கிளிநொச்சியிலிருந்து வ‌ந்த‌ ஆசிரிய‌ர், பிள்ளை.

இல‌ங்கை இராணுவ‌ம் இன்னும் வ‌ன்னிக்குள் உள்ந‌க‌ர‌, ப‌ல‌ ம‌க்க‌ள் க‌ளைத்தும், பிற‌ரிட‌ம் இர‌ந்தும், இன்னுமின்னும் இட‌ம் பெய‌ரத்த‌ள்ள‌ப்ப‌டுகின்றார்க‌ள். "நான் க‌ட‌ந்த‌ மூன்று வ‌ருட‌ங்க‌ளில் என‌து வீட்டிலிருந்து ஏழு முறைக‌ள் இட‌ம்பெய‌ர‌ச் செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்றேன்" என்கிறார் ஜெய‌புர‌த்தைச் சேர்ந்த‌ ச‌ந்திரா. "2005ல், இல‌ங்கை இராணுவ‌ம் எங்க‌ள் வீட்டுக்கு அண்மையிலுள்ள‌ ப‌குதிக‌ளை நோக்கி எறிகணைக‌ளை ஏவும்வ‌ரை வீரப‌ன் க‌ண்ட‌லில் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌தொரு வாழ்க்கையிருந்த‌து. என‌து க‌ண‌வ‌ன் ஒரு மீன‌வ‌ராக‌ இருந்தார்; நாங்க‌ள் ந‌ன்றாக‌வே வாழ்ந்தோம். "

"எறிக‌ணைக‌ள் வீச‌ப்ப‌ட்டிருந்த‌ கால‌ப்ப‌குதியில், க‌ர்ப்பிணியாயிருந்த‌ நான் இர‌வினுள் பாதுகாப்பின் நிமித்த‌ம் ஓட‌வேண்டியிருந்த‌து. அதிலிருந்து ஒவ்வொரு ஆறு மாத‌மும் எறிக‌ணை வீச்சினால் இட‌ம்பெய‌ர்ந்து கொண்டேயிருக்கின்றேன். நான் இப்போது இந்த‌ ம‌ர‌த்தின் கீழே இருக்கின்றேன், இது ஏழாவ‌து முறை. ஓடியோடி (இட‌ம்பெய‌ர்ந்து பெய‌ர்ந்து) என‌க்கு மிக‌வும் க‌ளைப்பாக‌ இருக்கிற‌து. "

ம‌ன்னாரிலிருந்து வ‌ந்த‌ ம‌க்க‌ளை நான் புர‌ட்டாதி 2008ல் ச‌ந்தித்த‌போது, அவ‌ர்க‌ள் ப‌ட்டினியுட‌னும் க‌ளைப்புட‌னும் ப‌ய‌த்துட‌னும் இருந்தார்க‌ள். குழ‌ந்தைக‌ள் ப‌ல‌ மாத‌ங்க‌ளாய் பாட‌சாலைக்குப் போக‌வில்லை, த‌ந்தைமார்க‌ள் த‌ம‌து தொழில்க‌ளை இழ‌ந்திருந்த‌ன‌ர், தாய்மார்க‌ள் பாதுகாப்பு, உண‌வு, ப‌டிப்பு என்ப‌வ‌ற்றை உரிய‌முறையில் வ‌ழ‌ங்க‌முடியாத‌ ப‌ல‌வேறு உண‌ர்ச்சிக‌ளோடு அல்லாடிக்கொண்டிருந்த‌ன‌ர். மிக‌ப்பெரும் த‌த்த‌ளிப்பு எல்லா ம‌க்க‌ளிடையும் காண‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து; இது 25 வ‌ருட‌ப்போரினால் வ‌ந்த‌ க‌டைசி அழுத்த‌மாயிருந்த‌து.

மேரி யாழ்ப்பாண‌த்தைப் பூர்வீக‌மாக‌க் கொண்ட‌வ‌ர், ஆனால் 1995ல் வ‌ன்னிக்கு வ‌ந்த‌வ‌ர். இவ‌ருக்கு இர‌ண்டு பிள்ளைக‌ள், க‌ண‌வ‌ர் ஒரு விவசாயி. அன்பும் அர‌வ‌ணைப்பும் உடைய‌ தாயான‌ மேரி இல‌ங்கையை விட்டு வெளியேறி புதிய‌ ஒரு வாழ்வை த‌ன‌து குடும்ப‌த்துட‌ன் வாழ‌ அவ‌திப்ப‌டுகின்றார். "இப்ப‌டியான‌ சூழ்நிலையில், ஒரு தாயாக‌ இருப்ப‌து மிக‌வும் க‌டின‌மான‌து" என்று என‌க்கு அவ‌ர் சொன்னார். " என‌க்கு இர‌ண்டு பிள்ளைக‌ள் இருக்கின்றார்க‌ள், ஒரு ப‌தினாறு வ‌ய‌து ம‌க‌னும் ப‌தின் மூன்று வ‌ய‌து ம‌க‌ளும். க‌ன‌க்க‌ பிர‌ச்சினைக‌ளை நான் எதிர்கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து, என‌து பெரிய‌ ப‌ய‌ம் என்ன‌வென்றால், புலிக‌ளால் என‌து பிள்ளைக‌ள் க‌ட்டாய ஆட்சேர்ப்புக்கு உள்ளாகிவிடுவார்க‌ளோ என்ப‌து".

"என‌து ம‌க‌ள் இங்கே என்ன‌ ந‌ட‌ந்துகொண்டிருக்கின்ற‌து என்ப‌தை அவ்வ‌ள‌வு அறிந்த‌வ‌ள் அல்ல‌, நானும் அவ‌ளுக்கு இவ‌ற்றைச் சொல்ல‌ முய‌ற்சிக்க‌வும் இல்லை. அவ‌ள‌து குழ‌ந்தைமையைச் ச‌ந்தோசிப்ப‌த‌ற்கு ச‌ந்த‌ர்ப்ப‌ம் உள்ள‌ அவ‌ளை நான் குழ‌ப்ப‌ விரும்ப‌வில்லை. ஆனால் என‌து ம‌க‌னுக்கு எல்லாம் விள‌ங்கும். "

"அவ‌ன் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வ‌ரும்போது, த‌ன‌க்கு மேல் வ‌குப்பிலுள்ள‌வ‌ர்க‌ள் ச‌ண்டைக்காய் கூட்டிச் செல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌தை அடிக்க‌டி கூறுவான். இது பிள்ளைக‌ளுக்கு மிக‌வும் க‌ஷ்ட‌மான‌து, அவ‌ர்க‌ள் த‌ம‌து பிற‌ந்தநாட்க‌ளைப் ப‌ற்றிக் க‌தைத்து, நேர‌ம் வ‌ரும்போது யார் முத‌லில் கூட்டிச் செல்ல‌ப்ப‌டுவார்க‌ள் என்ப‌தைக் க‌ண‌க்கிடுகின்றார்க‌ள். என‌து ம‌க‌ன் 1992ல் பிற‌ந்த‌வ‌ர், இப்போது, புலிக‌ள் 1991ல் பிற‌ந்த‌ பிள்ளைக‌ளைக் கூட்டிச்செல்கின்றார்க‌ள்....அடுத்த‌ வ‌ருட‌ம் 1992 ஆக‌ இருக்கும்.

"இன்னொரு பெரிய‌ பிர‌ச்சினை என்ன‌வென்றால், எங்க‌ள் ச‌ன‌த்துக்கிடையே இருக்கும் பொறாமை ம‌ன‌ப்பான்மை. ஒரு பிள்ளை வீட்டிலிருந்து (புலிக‌ளால்) கூட்டிச்செல்ல‌ப்ப‌டுகையில், அப்பிள்ளையின் பெற்றோர், புலிக‌ளிட‌ம், அந்த‌ச்சுற்றாட‌லிலுள்ள‌ வீடுக‌ளில் ஒளிந்திருக்கும் ம‌ற்றப்பிளைக‌ளைப‌ ப‌ற்றிய‌ விப‌ர‌ங்க‌ளைச் சொல்லுகின்றார்க‌ள். எங்க‌ள் ச‌ன‌த்துக்கிடையேயுள்ள‌ இவ்வாறான‌ பொறாமை ம‌ன‌ப்பான்மை, ஒவ்வொருத்த‌ரும் ஒவ்வொருத்த‌ரைப் ப‌ற்றியும் (கோள்மூட்ட‌) சொல்ல‌ வைக்கின்ற‌து. ஒரு பெண் பிள்ளை ஆறு மாத‌மாய் ஒரு ப‌ள்ள‌த்துக்குள் ப‌துங்கியிருந்த‌து என‌க்குத் தெரியும். ஒவ்வொரு இர‌வும் அவ‌ள‌து த‌ந்தை உண‌வும் நீரும் கொண்டுவ‌ந்து கொடுக்க‌ அவ‌ள் எல்லோருடைய‌ பார்வையிலிருந்தும் த‌ப்பியிருந்தாள். ஒரு வெயிலான‌ நாளில் அந்த‌ப்பிள்ளை கிண‌ற்றில் த‌ண்ணீர் குடித்துவிட்டு ப‌ள்ள‌த்துக்குள் திரும்பிப்போவ‌தை அய‌ல‌வ‌ர் ஒருவ‌ர் க‌ண்டிருக்கின்றார். அடுத்த‌ நாள் புலிக‌ள் வ‌ந்து அவ‌ளைப் ப‌ள்ள‌த்திலிருந்து கூட்டிச் சென்றிந்த‌ன‌ர். இவ்வாறான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எங்க‌ள் ச‌மூக‌ அமைப்பின் அடித்த‌ள‌ங்க‌ளை அழித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌. "

"என‌து பிள்ளைக‌ளும் கிபீருக்குச் ச‌ரியாக‌ப் ப‌ய‌ப்பிடுகின‌ம். ஒருநாள் மாலை என‌து ம‌க‌ன் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வ‌ரும்போது, வான‌த்திலில் கிபீர் ச‌டுதியாக‌த் தோன்றி, எங்க‌ள் வீட்டுக்கு அருகிலிருந்த‌ புலிக‌ளின் முகாமிற்கு குண்டு வீசிய‌து. அந்த‌ச் ச‌த்த‌ம் மிக‌ப் பெரிய‌து, அந்த‌ச் ச‌த்த‌ம் என‌க்குள் நிறைய‌ப் ப‌ய‌த்தைக் கொடுத்த‌து. என‌து ம‌க‌ன் அந்த‌ப் ப‌க்க‌த்தாலை வ‌ந்துகொண்டிருக்கும் நேர‌ம் என்ப‌தை நான் உண‌ர்ந்து அவ‌னுக்கு சேத‌ம் ஏற்ப‌ட்டிருக்குமோ என்ற‌ ப‌ய‌த்தில் நான் க‌த்தினேன். ஓடிக்கொண்டே வ‌ந்த‌ நாங்க‌ள் இருவ‌ரும் பாதையின் இடைந‌டுவில் ச‌ந்தித்தோம். அவ‌னைக் க‌ண்ட‌போது என‌க்கு ப‌ய‌மாக‌வும், ம‌கிழ்ச்சியாக‌வும் இருந்த‌து. ஆனால் இப்போது அவ‌ன் கிபீருக்கு ச‌ரியாக‌ப் ப‌ய‌ந்துபோயிருக்கின்றான். வீட்டிலிருக்கும் எங்க‌ளுக்குக் கேட்க‌முன்ன‌ரே அவ‌னுக்கு அந்த‌ச் (கிபீர்) ச‌த்த‌ம் கேட்கிற‌து. உட‌னேயே ஓடிப்போய் வீட்டுக்குப் பின்ப‌க்க‌முள்ள‌ கானுக்குள் ப‌டுத்துக்கொள்கின்றான். இவ்வாறு மாலையில் ந‌ட‌க்கும்போது, அவ‌னால் ப‌டிக்க‌ முடியாதிருக்கின்ற‌து, என‌க்கும், இந்த‌த் தாக்க‌ம் அவ‌ன‌து ப‌டிப்பைக் குழ‌ப்பிவிடுமோ என்று ச‌ரியாக‌க் க‌வ‌லையாக‌ இருக்கிற‌து. "

"என‌து பிள்ளைக‌ள் ந‌ன்கு ப‌டிக்க‌வும் ந‌ல்ல‌ க‌ல்வியையும் பெற‌ விரும்புகின்றேன், ஆனால் கிபீரின் ச‌த்த‌த்தை காலையில் நாங்க‌ள் கேட்கும்போது, அவர்க‌ள் பாட‌சாலைக்குப் போவ‌தை விரும்ப‌வில்லை. என‌து பிள்ளைக‌ள் என்றோ ஒரு நாள் கொல்ல‌ப்ப‌ட‌ப்போகின்றார்க‌ள் என்று வ‌ர‌வ‌ர‌ என‌க்குச் ச‌ரியாக‌ப் ப‌ய‌மாயிருக்கிற‌து...ஆக‌வேதான் அவ‌ர்க‌ளை வீட்டிலிருக்க‌ச் சொல்கின்றேன். என‌து பய‌த்தின் கார‌ண‌மாக‌ சில‌வேளைக‌ளில் அவ‌ர்க‌ள் வார‌த்தில் ஒருநாளோ இர‌ண்டு நாட்க‌ளோ பாட‌சாலைக்குப் போவ‌தைத் த‌வ‌ற‌விடுகின்றார்க‌ள். நானொரு கெட்ட‌ அம்மாவாக‌ ஆகிக்கொண்டிருப்ப‌தாய் இது என்னைச் ச‌ரியாய்க் க‌வ‌லைப்ப‌டுத்துகிற‌து. ஆனால் நான் என‌து பிள்ளைக‌ளைப் பாதுகாக்க‌ முய‌ற்சித்துக்கொண்டிருக்கின்றேன்."

2008 ஆண்டுமுழுதும், இல‌ங்கை இராணுவ‌ம் மேற்குக்க‌ரையோர‌த்தால் கிளிநொச்சி நோக்கியும், யாழ் தீப‌க‌ற்ப‌க‌த்தையும் மிகுதி நாட்டையும் இணைக்கும் கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ ஆனையிற‌வு நோக்கியும் முன்னேறிய‌ப‌டி இருந்த‌து. பொதும‌க்க‌ள் மீண்டும் கிளிநொச்சியிற்கும் முல்லைத்தீவிற்கும் இடையிலிருக்கும் புதுக்குடியிருப்பு நோக்கி இட‌ம்பெய‌ர‌த்தொட‌ங்கின‌ர். இந்த‌க்க‌ண‌ம்வ‌ரை, இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ள் மிக‌வும் மோச‌மான‌ நிலையில் வாழ்ந்திருந்தாலும், கிளிநொச்சியிலும், ஆனையிற‌விலும் ந‌ட‌ந்த‌ ச‌ண்டைக‌ளிலிருந்து காப்பாற்ற‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள்.

செஞ்சிலுவை ச‌ங்க‌ம் த‌விர்ந்த‌ அனைத்து உத‌வி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்க‌ளும், ஐப்ப‌சி 16, 2008ல் இருந்து வெளியேற்ற‌ப்ப‌ட்டு, அர‌சாங்க‌த்தின் ந‌க‌ரான‌ வ‌வுனியாவில் த‌ங்க‌வைக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். இம்ம‌க்க‌ளை அவ‌ர்க‌ளுக்கு உத‌வி தேவைப்ப‌டுகின்ற‌ முக்கிய‌ த‌ருண‌த்தில் விட்டுவிட்டு வ‌ந்த‌து என்னுடைய‌ வாழ்வில் மிக‌ வ‌லியைத் த‌ந்த‌ அனுப‌வ‌மாகும். அத்தியாவ‌சிய‌ தேவைக‌ள் கிடைக்காத‌ நிலையில், எறிக‌ணைக‌ளின‌தும், விமான‌ங்க‌ளின் தாக்குத‌ல்க‌ளுக்கிடையில், நான் என‌து ந‌ண்ப‌ர்க‌ளையும், கூட‌ வேலை செய்த‌வ‌ர்க‌ளையும் வ‌ன்முறைக‌ளுக்கிடையிலும், ந‌ம்பிக்கையீன‌ங்க‌ளுக்கிடையிலும் விட்டு வெளியேற‌ வேண்டியிருந்த‌து. ஐப்ப‌சி மாத‌த்திலிருந்து, உத‌வி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்கள் ஒவ்வொரு நாளும் உண‌வையும் த‌ங்குமிட‌ங்க‌ளையும், அத்தியாவ‌சிய‌மான‌ ம‌ருந்துக‌ளையும் ம‌க்க‌ளுக்கு கொண்டுசெல்வ‌த‌ற்கு திணறிக் கொண்டிருக்க‌ வேண்டியிருக்கின்ற‌து. ப‌ல‌வேறு வ‌கையான‌ அமைப்புக்க‌ளின் தொட‌ர்ச்சியான‌ த‌டுத்துநிறுத்த‌ல்க‌ளால், அத்தியாவ‌சிய‌ பொருட்க‌ள் மிக‌வும் அவ‌சிய‌மாய்த் தேவைப்ப‌டுகின்ற‌ இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ளுக்கு கொண்டுசெல்லுத‌ல் த‌டுக்க‌ப்ப‌டுகின்ற‌து. கார்த்திகை ப‌ருவ‌மழையின் கார‌ண‌மாக‌, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் ம‌ர‌ங்க‌ளைத் த‌ம‌து வீடுக‌ளாக்கி, இருக்கின்ற‌ சொற்ப உண‌வுப்பொருட்க‌ளைப் ப‌கிர்ந்த‌ப‌டி இருக்கின்றார்க‌ள். உத‌வி நிறுவ‌ன‌ங்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ ம‌லேரியாவையும், போசாக்கின்மையையும் த‌டுப்ப‌த‌ற்கு உதவி கேட்டுக்கொண்டிருக்கின்றார்க‌ள், ஆனால் விளைவு என்ன‌வோ சொற்ப‌மே.

தை 02, கிளிநொச்சி இல‌ங்கை இராணுவ‌த்திட‌ம் விழும்வ‌ரை, இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ளால் புதுக்குடியிருப்பு ப‌குதியிலிருந்து ந‌க‌ர‌ முடியவில்லை. அவ‌ர்க‌ள் இந்து ச‌முத்திர‌த்தாலும், முன்னேறிக்கொண்டிருந்த‌ இராணுவ‌த்தாலும், விடுத‌லைப்புலிக‌ளாலும் சூழ‌ப்ப‌ட்டிருந்தார்க‌ள். புலிக‌ள் இட‌ம்பெய‌ர்வ‌த‌ற்கு த‌டுத்த‌தோடு, அவ‌ர்க‌ளைத் த‌ங்க‌ள் இய‌க்க‌த்திற்குச் சேர்ப்ப‌த‌ற்கும், வேலைக‌ளைச் செய்வ‌த‌ற்கும் ப‌ய‌ன்ப‌டுத்தின‌ர்.

கிளிநொச்சியின் கைப்ப‌ற்ற‌லோடும், சில‌ நாட்க‌ளின் பின்பான‌ ஆனையிற‌வின் வீழ்ச்சியோடும், புலிக‌ளுக்கு எதிர்கால‌ம் அவ்வ‌ளவு ந‌ல்ல‌தாக‌த் தென்ப‌ட‌வில்லை. வ‌ன்னியிலுள்ள‌ ம‌க்க‌ள் கூட்ட‌ம் த‌ற்ச‌ம‌ய‌ம் த‌ங்க‌ளுக்கேற்ற ப‌குதிக‌ளைத் தேடிக்கொண்டிருக்கின்றார்க‌ள். இல‌ங்கை இராணுவ‌ம் கிளிநொச்சியைத் த‌ம் வ‌ச‌மாக்கிய‌பின், இறுதி யுத்த‌ம் புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டிலுள்ள‌ முல்லைத்தீவை நோக்கி ந‌க‌ர்ந்து கொண்டிருக்கின்ற‌து. மிக‌ப்பெரும் இட‌ம்பெய‌ர்ந்த‌ ச‌ன‌த்திர‌ள் கிளிநொச்சியிற்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலிருக்கிற‌து, ஆனால் இம்முறை அவ‌ர்க‌ளுக்கு ஒளிந்துகொள்ள‌ எந்த‌ இட‌மும் இல்லை.

"இந்த‌ மோச‌மான‌ நில‌வ‌ர‌ம் மிக‌ உச்ச‌த்தில் இருக்கிற‌து" என்றார் ச‌ர்வ‌தேச‌ அமெனெஸ்டி ஆய்வாள‌ரான‌ யோலென்டா போஸ்ட‌ர். " முல்லைத் தீவை நோக்கிய‌ அர‌சாங்க‌ ந‌ட‌வ‌டிக்கையினால் ச‌ண்டை உக்கிர‌ம‌டைய‌ க‌ட‌ந்த‌ வார‌ம் ம‌க்க‌ளுக்கு இழ‌ப்புக்க‌ள் அதிக‌ரித்திருக்கின்ற‌ன‌. த‌மிழ் புலிக‌ள் ம‌க்க‌ளைப் போக‌ விட‌வேண்டும், அதேவேளை அர‌சாங்க‌ம், பொறியில் அக‌ப்ப‌ட்டும், ப‌ல‌வேளைக‌ளில் ம‌ற‌க்க‌ப்ப‌ட்டும்விட்ட‌ ம‌க்க‌ளுக்கான‌ உட‌ன‌டி ம‌னிதாபிமான‌ உத‌விக‌ளைச் செய்ய‌ அனும‌திக்க‌ வேண்டும்."

ச‌ர்வ‌தேச‌ செஞ்சிலுவைச் ச‌ங்க‌ம், ம‌க்க‌ள் வெளியேறுவ‌த‌ற்கான‌ -உட‌ன்பாடுள்ள‌ பாதையில்லாத‌து குறித்து மிக‌வும் விச‌ன‌ப்ப‌ட்டுள்ள‌து, அத்துட‌ன் ம‌க்க‌ள் மிக‌ச்சிறிய‌தான‌ ப‌குதியில் செறிவாக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள், இத‌னால் அவ‌ர்க‌ள‌து வாழ்விட‌ நிலைமைக‌ளும், பாதுகாப்பும் மிக‌வும் க‌வ்லைக்கிட‌மாயுள்ளது, குறிப்பாய் தொற்றுநோய்க‌ள். ம‌க்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ள் (அர‌சாங்க‌த்தால்) த‌டுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாலும், , ச‌ர்வ‌தேச‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் உத‌வில்லாத‌தாலும், எவ்வித‌ பாதுகாப்புமின்றி இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ளின் நிலைமை மிக‌ மோச‌மாய் இருக்கிற‌து.

வ‌ன்னி ம‌க்க‌ளுக்கு இல‌ங்கை இராணுவ‌ம் ப‌ற்றி மிகுந்த‌ பாதுகாப்பின்மையாக‌ இருப்ப‌தே உண்மை. த‌மிழ‌ர் மீதான‌ 25 வ‌ருட‌ ப‌டுகொலைக‌ளின் வ‌ர‌லாற்றில், இல‌ங்கை இராணுவ‌த்தின் தெளிவான‌ நோக்காக‌ புலிக‌ளை முற்றாக‌ அழிப்ப‌தாய் இருக்கையில் வ‌ன்னி ம‌க்க‌ள் மிகவும் அந்த‌ர‌மான‌ நிலையை எதிர்நோக்கியிருக்கின்றார்க‌ள். கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லோருடைய‌ குடும்ப‌த்திலும் யாரோ ஒருவ‌ர் விரும்பியோ அல்ல‌து க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டோ புலி உறுப்பின‌ராக‌ இருக்கின்றார். இந்த‌ நிலைமையால் தாங்க‌ள் புலிக‌ளின் அனுதாபிகளாக‌ பார்க்க‌ப்ப‌டுவோம் என்று இன்னும் அதிக‌மாய் இல‌ங்கை இராணுவ‌த்தின் மீது ப‌ய‌ப்பிடுகின்ற‌வ‌ர்க‌ளாய் ம‌க்க‌ள் இருக்கின்றார்க‌ள், அவ்வ‌ண்ண‌மே தாங்க‌ள் இல‌ங்கையின‌து பாதுகாப்பிற்கு அச்சுறுத்த‌லாய் இருப்ப‌தாய்ப் பார்க்க‌ப்ப‌டுவோம் என்ப‌தும்.

"இல‌ங்கை இராணுவ‌ம் இந்த‌ப் ப‌குதியிற்கு வ‌ருவ‌து குறித்து என‌க்கு மிக‌வும் ப‌ய‌மாயிருக்கிற‌து" என்று யாழ்ப்பாண‌த்தைச் சேர்ந்த‌ செல்வ‌ன் கூறினார். "என‌க்கு ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் த‌ர‌ப்ப‌ட்டால் நான் வெளியேறுவேனா என்ப‌து என‌க்குச் ச‌ந்தேக‌மாய் இருக்கிற‌து. எங்க‌ள் கிராம‌த்திலிருக்கும் எல்லோரும் அர‌சாங்க‌த்தின் ப‌குதிக‌ளுக்கு செல்வார்க‌ளாயிருப்பின், நான் என‌து குடும்ப‌த்துட‌ன் போக‌க்கூடும். ஆனால் எங்க‌ள் எல்லோருக்கும் ச‌ரியாய்ப் ப‌ய‌மாயிருக்கிற‌து, நாங்க‌ள் ஒருபோதும் வெளியில்(அர‌ச‌ ப‌குதியில்) வாழ்ந்த‌தில்லை ஆதனால் அங்கே எப்ப‌டி(நிலைமை) இருக்கும் என்றும் தெரிய‌வில்லை."

வ‌ன்னி 'விடுவிக்க‌ப்ப‌டும்போது' வ‌ன்னியிலிருந்து ஆயிர‌க்க‌ண‌க்கில் ம‌க்க‌ள் வெள்ள‌மாய் வ‌ர‌க்கூடுமென்று வ‌வுனியாவில் அர‌சாங்க‌ம் (த‌டுப்பு) முகாங்க‌ளைத் த‌யார்ப‌டுத்தியுள்ள‌து. ஆனால் நாங்க‌ள் க‌ட‌ந்த‌கால‌த்தில் பார்க்கின்ற‌போது, இத்த‌கைய‌ 'ம‌னிதாபிமான‌ முகாங்க‌ள்' முக்கிய‌மான‌ சித்திர‌வ‌தைக் கூட‌ங்களாக‌வும், இம்முகாங்க‌ளிலிருந்து ம‌க்க‌ள் வெளியேற‌ ப‌ல‌ மாத‌ங்க‌ள் எடுக்க‌க்கூடிய‌தாக‌வும் இருந்திருக்கிற‌து. அத்துட‌ன் இங்கே த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளுக்கு என்ன‌ காத்திருக்கிற‌து? வ‌ள‌மான‌ அவ‌ர்க‌ளின் வ‌ன்னி நில‌ங்க‌ள் இந்த‌ யுத்த‌த்தால் வெடிக்க‌ப்ப‌டாத‌ குண்டுக‌ளால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டுள்ள‌து. இன்ன‌மும் வெடிக்காத‌ எறிக‌ணைக‌ள் ப‌திந்துள்ள விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும், க‌ரையோர‌ப் ப‌குதிக‌ளையும் சுத்திக‌ரித்து விவசாயிக‌ள் திரும்பிப்போக‌ இன்னும் ப‌ல‌வ‌ருட‌ங்க‌ள் எடுக்கும்? என்ன‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மீள்சீர‌மைப்புக்கும் மீள் குடியேற்ற‌ங்க‌ளுக்கும் செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌? இவையெல்லாம் சுத்திக‌ரிக்க‌ப்ப‌ட்டு கைய‌ளிக்கும்வ‌ரை இந்த‌ ம‌க்க‌ள் இவ்வாறான‌ த‌டுப்பு முகாங்க‌ளிலா காத்திருக்க‌வேண்டும்?

சுயாதீன‌ க‌ண்காணிப்பாள‌ர்க‌ள் வ‌ன்னியில் இல்லாத‌தால், இர‌ண்டு ப‌க்க‌மும் ஒழுங்க‌மைக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ர‌ப்புரையைச் செய்து வ‌ருகின்ற‌ன‌, இத‌னால் உத‌வி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ ஐப்ப‌சியிலிருந்து வெளியேறிய‌பின், வ‌ன்னியிலுள்ள‌ ம‌க்க‌ளின் உண்மையான‌ நில‌வ‌ர‌த்தை அறிவ‌து மிக‌வும் க‌டின‌மாயிருக்கிற‌து. அந்த‌ மாத‌ம் வ‌ரையும்(ஐப்ப‌சி) பார்த்த‌வ‌கையில் சொல்வ‌த‌னால், ம‌க்க‌ள் உண‌வு, உறைவிட‌ம், பாதுகாப்பு க‌ழிவிட‌ வ‌ச‌திக‌ள் மிக‌வும் குறைந்த‌ க‌ஷ்ட‌மான‌ வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தார்க‌ள்... ச‌ர்வ‌தேச‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் வெளியேற்ற‌த்துட‌ன், உத‌விப் பொருட்க‌ள் வ‌ழ‌ங்குவ‌து த‌டுக்க‌ப்ப‌ட்ட‌ன‌, ப‌ருவ‌ம‌ழையின் கார‌ண‌மாக‌வும், உக்கிர‌மான‌ இராணுவ‌ ந‌டவ‌டிக்கையாலும், நிலைமை மிக‌வும் மோச‌மாக‌ நினைத்துப் பார்க்காத‌ அள‌வுக்குப் போயிருக்கும்.


ந‌ன்றி:

Tehelka
த‌மிழில்: டிசே த‌மிழ‌ன்


புகைப்ப‌ட‌ம் 1: வீடும், பாதுகாப்பும் பிற‌வ‌ச‌திக‌ளும‌ற்று ம‌ர‌த்தின் கீழ் த‌ங்கியிருந்த‌ குடும்ப‌ம் ஒன்று.
புகைப்ப‌ட‌ம் 2: இல‌ங்கை இராணுவத்தின் எறிக‌ணைக‌ளால் அழிக்க‌ப்ப‌ட்ட‌ வீட்டின் எஞ்சிய‌பகுதியில் த‌னித்திருக்கும் சிறுவ‌ன்.
புகைப்ப‌ட‌ம் 3: ம‌னிதாபிமான‌ப் ப‌ணிக‌ளைச் செய்த‌ நிறுவ‌ன‌ங்க‌ளை இல‌ங்கை அர‌சாங்க‌ம் வ‌ன்னிக்குள இருந்து வெளியேற்ற‌போது, அவ‌ர்க‌ளைப் போக‌வேண்டாம் என்று ம‌க்க‌ள் ந‌ட‌த்திய‌ போராட்ட‌ம்.
(இப்ப‌ட‌ங்க‌ளும் மேலே க‌ட்டுரையை எழுதிய‌வ‌ராலேயே எடுக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌)

நாம் சொன்னால் ம‌ட்டுமே குழ‌ந்தைப் போராளி

Wednesday, January 21, 2009

-ம‌ற்றும் சில‌...


உல‌க‌த்திற்கு பொது நீதி என்ப‌து இனியில்லையென்று எப்போது நிரூபிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து. அப்ப‌டியெனில் வ‌ள்ளுவ‌ர், அவ்வையார் 'அருளிய‌தெல்லாம்' பொது நீதிய‌ல்ல‌வா என்று ஒருவ‌ர் வினாவினால் அவ‌ர‌வ‌ர் விருப்பு அவ‌ர‌வ‌ர்க்கு உரிய‌தென‌ இப்போதைக்கு விடுவோம். பின் ந‌வீன‌த்துவ‌ம் கூட‌ இனி 'பொதுவான‌' என்ற‌ ஒன்று இல்லையென‌த்தான் கூறிக்கொண்டிருக்கின்ற‌து. பின் ந‌வீன‌த்துவ‌ நில‌வ‌ர‌த்தை எவ‌ர் ஏற்றுக்கொள்கின்றாரோ இல்லையோ, இந்த‌ மேலைத்தேய‌ நாடுக‌ள் அப்ப‌டியே அர‌வ‌ணைத்துக்கொள்ள‌த் த‌யாராக‌ இருக்கிற‌து என்றுதான் கூற‌வேண்டும் - அதாவ‌து எதிர்ம‌றையான‌ ப‌க்க‌த்தில். குழ‌ந்தைப் போராளிக‌ளுக்காய் உல‌க‌ம் நீண்ட‌கால‌மாய் க‌ண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கிற‌து. அவ்வாறு விழிநீர் சொரிப‌வ‌ர்க‌ளில் உண்மையான‌ அக்க‌றையோடு இருப்ப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள்; அல்லாத‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். போர்ச்சூழ‌லில் ஒருவ‌ர் ப‌தினெட்டு வ‌ய‌திற்குள் ஆயுத‌ங்க‌ளோடு இருப்பாராயின் அவ‌ரொரு குழ‌ந்தைப் போராளியென‌ 'பொதுவாக‌' அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌து. ஆனால் அப்ப‌டியிருந்தால் ம‌ட்டும் ஒருவ‌ர் குழ‌ந்தைப் போராளியாக‌ இருந்துவிட‌ முடியாது. அத‌ற்குள்ளும் அர‌சிய‌ல் இருக்கிற‌து. அதாவ‌து இந்த‌ மேலைத்தேய‌ நாடுக‌ள் த‌ம‌து 'அளவீடுக‌ளால்' அளந்து த‌ம‌க்கு எந்த‌ப் பாத‌க‌மும் இல்லாது இருக்கிற‌து என்று நினைத்து ஒரு சான்றித‌ழை வ‌ழ‌ங்கினால் ம‌ட்டுமே ஒருவ‌ர் குழ‌ந்தைப் போராளியாக‌ முடியும்.

இன்னும் எளிதாக‌ச் சொல்வ‌து ஆனால், குழ‌ந்தைப் போராளிக‌ள் (சில‌வேளைக‌ளில் இராணுவ‌ம்) என்ப‌து இப்போராளிக‌ள் யாருட‌ன் மோதிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தைப் பொறுத்து வித்தியாச‌ப்ப‌டும். உதார‌ண‌மாக‌ இல‌ங்கை, ஆபிரிக்காக் க‌ண்ட‌த்தில் ப‌ல‌ நாடுக‌ள் போன்ற‌வ‌ற்றில் உங்க‌ளுக்குள்ளேயே நீங்க‌ள் அடிப‌ட்டுப் ப‌ல‌ரைப் போட்டுத்த‌ள்ளினால் நீங்க‌ள் குழ‌ந்தைப் போராளிக‌ள் என‌ முழும‌ன‌தாக‌ ஏற்றுக்கொள்ள‌ப்ப‌டுவீர்க‌ள். ஆனால் அதேச‌ம‌ய‌ம் நீங்க‌ள் -ப‌தினெட்டு வ‌ய‌திற்குள் இருந்து- அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேச‌ங்க‌ளின் ப‌டைக‌ளோடு போரிட்டுக் கொண்டிருந்தீர்க‌ள் என்றால் நீங்க‌ள் குழ‌ந்தைப் போராளிக‌ள‌ல்ல‌; தீவிர‌வாதிக‌ளே.

அண்மைய‌ வ‌ருட‌ங்க‌ளில் நிறைய‌ குழ‌ந்தைப் போராளிக‌ளின் சுய‌வ‌ர‌லாற்று ம‌ற்றும் புனைவு க‌ல‌ந்த‌ புதின‌ங்க‌ள் வெளிவ‌ந்திருக்கின்ற‌ன‌. புதின‌ங்க‌ள் வ‌ருவ‌த‌ன் ப‌திப்ப‌க‌/பூகோள‌ அர‌சிய‌ல்க‌ளுக்கு அப்பால் குழ‌ந்தைப் போராளியாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்காய் ம‌னிதாபிமான‌முள்ள எல்லோரின‌தும் ம‌ன‌ங்க‌ளும் க‌சிய‌த்தான் செய்கின்ற‌ன‌. ந‌ம்மைப் போன்ற‌ 'போர் துர‌த்த‌' பின்ன‌ங்கால் அடிப‌ட ஓடிவ‌ந்த‌வ‌ர்க‌ளைவிட‌, அத‌ன் சாய‌லை அறியாத‌ இந்தியா போன்ற‌ 'ச‌ன‌நாய‌க‌' நாடுக‌ளில் வாழ்ப‌வ‌ர்க‌ள், மேற்க‌த்தைய‌ நாடுக‌ளில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ள் உட்ப‌ட‌ அதிகார‌ங்க‌ளிலுள்ள‌வ‌ர்க‌ள் இன்னும் அதிக‌மாய் குழ‌ந்தைப் போராளிக‌ள் ப‌ற்றி உச்சுக்கொட்டுவ‌தை நாம் அவ‌தானித்துக் கொண்டுதானிருக்கின்றோம். அது த‌வ‌றுமில்லை. ஆனால் இவ‌ர்க‌ளின் முக‌மூடிக‌ள் எப்போது கிழிகிற‌து என்றால், இதே குழ‌ந்தைப் போராளிக‌ள் பாதிப்பை இவ‌ர்க‌ள‌து வீட்டு வாச‌லில் செய்யும்போதுதான்...எல்லாம் கிழிந்து கோவ‌ணந்தெரிகிற‌து அல்ல‌து இதுவ‌ரை பேசிய‌ ம‌னிதவுரிமைக‌ளைக் கைவிட்டு நிர்வாண‌மாய் நிற்ப‌வ‌ர்க‌ளாய் ஆகிப்போகின்றார்க‌ள்.

2001ல் அமெரிக்காவும் அத‌ன் நேச‌ப‌டைக‌ளும் (க‌ன‌டா உட்ப‌ட‌) ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கின்ற‌ன‌. 2002ல் ரொர‌ண்டோவில் பிற‌ந்த‌ (ஆக‌வே அவ‌ரொரு க‌னேடிய‌ர்) ஒமார் க‌டார் (Omar Khadr ) 2002ல் அமெரிக்க‌ப் ப‌டைக‌ளுக்குக் கிர‌னைட் எறிந்த‌ற்காய் கைது செய்ய‌ப்ப‌டுகின்றார். அப்போது அவ‌ருக்கு வ‌ய‌து ப‌தினைந்து. கிர‌னைட் வெடித்த‌தில் அமெரிக்க‌ப்ப‌டையைச் சேர்ந்த‌வொருவ‌ர்(medic) காய‌ப்ப‌டுகின்றார். அமெரிக்காப் ப‌டை திருப்பிச் சுட்ட‌தில் ஒமாரிற்குக் காய‌ம் ஏற்ப‌ட்டு ஒரு க‌ண் பார்வையை இழ‌க்கின்றார். த‌லிபானில் இருந்த‌தாக‌க் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌ட்டு ஒமார் கியூபாவிலுள்ள‌ குவாண்டனாமோ (Guantánamo) சித்திர‌வ‌தைச் சிறைக்கூட‌த்திற்கு அனுப்ப‌டுகின்றார். மீண்டும் க‌வ‌னிக்க‌, ஒமாருக்கு 15 வ‌ய‌து. ஆனால் அது ப‌ற்றி எந்த‌க் க‌வ‌னமும் எடுக்க‌ப்ப‌டாது அவ‌ர் பெரிய‌வ‌ர்க‌ளுட‌னான‌ சிறையிலே அடைக்க‌ப்ப‌டுகின்றார். இங்கேதான் ந‌ம‌க்கு ம‌னிதவுரிமைக‌ள் போதிக்கும் மேலைத்தேய‌த்தின் உண்மை முக‌ம் ப‌ல்லிளிக்கிற‌து. சாதார‌ண‌மாக‌ க‌ன‌டா உள்ளிட்ட‌ நாடுக‌ளில் ஒருவ‌ர் ப‌தினெட்டு வ‌யதிற்குள் குற்ற‌ங்க‌ள் செய்திருந்தால் (கொலையே செய்திருந்தால்கூட‌) அவ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளையே இன்ன‌பிற‌ விட‌ய‌ங்க‌ளையோ பொதுவில் வைக்க‌ப்ப‌ட‌க்கூடாது என்றொரு ச‌ட்ட‌ம் இருக்கிற‌து. அவையெல்லாம் ஒமார் விவ‌கார‌த்தில் மீற‌ப்ப‌ட்ட‌து ஒரு புற‌ம் இருக்க‌ட்டும்; ஆனால் ஆபிரிக்காக் க‌ண்ட‌ங்க‌ளில் அவ‌ன் இவ‌னைப் போட்டான், அவ‌ளை இவ‌ன் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்ந்தான் என்றெல்லாம் ந‌ட‌ந்த‌தை எழுதும்போது, என்ன‌தான் செய்திருந்தாலும் அவ‌ர்க‌ள் குழ‌ந்தைப் போராளிக‌ள் அவ‌ர்க‌ளை ம‌ன்னிக்க‌வேண்டும் என்கின்ற‌ க‌ன்டா, அமெரிக்கா உள்ளிட்ட‌ மேலைத்தேய‌ம் ஒமார் விவ‌கார‌த்தில் ஏன் வாய்க்குள் கொழுக்க‌ட்டையை வைத்து உள்ளே த‌ள்ளவும் முடியாம‌ல் வெளியே துப்ப‌வும் முடியாது ம‌வுனித்திருக்கிற‌து என்ப‌தைப் பார்க்க‌வேண்டும்.


இன்று கிட்ட‌த்த‌ட்ட‌ ஒமார் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டு ஏறேற‌க்குறைய‌ 6 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலே ஆகிவிட்ட‌ன‌. ஐ.நா ச‌பை வ‌ரைய‌றுக்கிற‌ சிறுவ‌ர் சீர்திருந்த்த‌ப்ப‌ள்ளிக்குக்கூட‌ கூட‌ ஒமாரை அனுப்பாது வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ளுட‌ன் சிறைக்கூட‌த்திற்கு ஒன்றாக‌ச் சேர்ந்து குவாண்டனாமோ சிறைக்கூட‌த்தில் அமெரிக்காவும் க‌ன‌டாவும் த‌ள்ளிய‌தை நாம் யோசித்துப்பார்க்க‌வேண்டும். க‌ன‌டாவில் சில‌வேளைக‌ளில் கொலைக‌ளைச் செய்த‌வ‌ர்க‌ள் கூட‌, 7 வ‌ருட‌த்த‌ண‌டனைக்குப் பின், குறிப்பிட்ட‌ வ‌ரைய‌றைக‌ளுட‌ன் (conditions) வெளியே வாழ்வ‌த‌ற்கு அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கும்போது, ஒமார் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு என்ன‌ நீதியை இந்த‌க் க‌னேடிய‌ அர‌சு வ‌ழ‌ங்க‌ப்போகின்ற‌து? க‌ன‌டாவிலுள்ள‌ ம‌னித‌வுரிமை ஆர்வ‌ல‌ர்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ -க‌ன‌டாப் பிர‌ஜாவுரிமையுள்ள‌- ஒமார் குவாண்டனாமோ சிறையிலிருந்து, க‌ன‌டாவுக்கு அனுப்ப‌ப்ப‌ட்டு நேர்மையான‌ முறையில் அவ‌ர‌து வ‌ழ‌க்கு க‌ன‌டா நீதிம‌ன்ற‌த்தில் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌வேண்டும் என்று குர‌ல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். ஆயிர‌த்திற்கு மேற்ப‌ட்ட‌ பால‌ஸ்தீனிய‌ர்க‌ள் அநியாய‌மாக‌க் கொல்ல‌ப்ப‌ட்டும் கூட‌, ஒரு சிறு அறிக்கையைக் கூட‌ ஒப்புக்காய் வெளியிடாது க‌ள்ள‌ ம‌வுன‌ம் சாதிக்கும் ந‌ம‌து அதிவ‌ண‌க்க‌த்திற்குரிய‌ பிர‌த‌ம‌ர் ஹார்ப்ப‌ர் இதுகுறித்து ஏதாவ‌து செய்வார் என்று எதிர்பார்ப்ப‌தைவிட‌, என்றேனும் ஒருநாள் புத‌னில் உயிரின‌ம் தோன்றி எல்லா ம‌னித‌ர்க‌ளின‌தும் உரிமைக‌ளைச் ச‌ரிநிக‌ராக‌ ம‌திக்கும் என்று ந‌ம்புவ‌து நியாய‌மான‌து.


இல‌ங்கையில் குழ‌ந்தைப் போராளிக‌ள் ப‌ற்றி மேற்குலக‌ம் க‌வ‌லைப்ப‌ட்டுக்கொண்டிருந்த‌போது, சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ஒரு சிங்க‌ள‌ப் பேராசிரிய‌ர், ந‌ண்ப‌ரொருவ‌ருக்குக் சுட்டிக்காட்டியிருந்தார்... குழ‌ந்தைப் போராளிக‌ளை விட‌ அதிக‌மாய் குழ‌ந்தைப் பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ள் நீண்ட‌கால‌மாக‌ இல‌ங்கையில் இருந்துவ‌ருகின்றார்க‌ள், அதையிட்டேன் மேற்குலக‌ம் அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை என்று. மேலும் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளாய் இந்த‌க் குழ‌ந்தைப் பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ளைத் தேடிவ‌ருவ‌து அதிக‌ம் யார் என்று ஊகிப்ப‌து ந‌ம‌க்கு அவ்வ‌ள‌வு க‌டின‌முமில்லை.

இஃது வெளியே வ‌ந்த‌ ஒரு ஒமாரைப் ப‌ற்றிய‌ க‌தை. வெளியே வ‌ராத‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ 'குழ‌ந்தைப்போராளிக‌ள்' ஒமார்க‌ளின் க‌தைக‌ள் நிக‌ழ்கால‌த்தில் ம‌றைக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கின்ற‌ன‌ என்ப‌தை நாம் நினைவிலிருத்திக் கொள்ள‌வேண்டும். ஆக‌, இன்று ந‌ம‌க்குக் க‌ற்பிக்க‌ப்ப‌டுகின்ற‌ 'ம‌னிதாபிமான‌ம்' என‌ப‌து கூட‌ பெருங்க‌தையாட‌லென‌ பின் ந‌வீன‌த்துவ‌ம் வ‌ரைய‌றுப்ப‌து ப‌ற்றி யோசித்துப் பார்ப்ப‌தில் த‌வ‌றேதும் இருக்காது போல‌த்தான் தோன்றுகின்ற‌து.

............

க‌ன‌டாவிலுள்ள‌ ச‌ட்ட‌ங்க‌ள் ம‌ற்றும் ம‌னித‌வுரிமைக‌ள் ச‌ம்ப‌ந்த‌மாய் ஒரு பாட‌ம் வ‌ளாக‌த்தில் எடுத்துக்கொண்டிருக்கும் ந‌ண்ப‌ரொருவ‌ர் த‌ம‌து பாட‌ப்புத்த‌க‌த்திலுள்ள ஒரு விட‌ய‌த்தை என்னோடு ப‌கிர்ந்துகொண்டிருந்தார். வ‌ழ‌க்கின் விப‌ர‌ம் இதுதான்...ப‌த்ம‌நாத‌ன் என்ப‌வ‌ர் க‌ன‌டாவிற்கு வ‌ந்து அக‌தி அடைக்க‌ல‌ம் கேட்டு அவ‌ருக்கு அடைக்க‌ல‌ம் கொடுக்க‌லாமா அல்ல‌து வேண்டாமா என்று வ‌ழ‌க்கு நீதிம‌ன்ற‌த்தில் நிலுவையிலிருந்த‌ கால‌ப்ப‌குதியில் அவ‌ர் பெரும‌திப்புள்ள‌ போதைப் பொருட்க‌ளைக் க‌ட‌த்திப் பிடிப‌டுகின்றார். ப‌த்ம‌நாத‌ன் போதைம‌ருந்து க‌ட‌த்த‌ல் தொட‌ர்பான‌ வ‌ழ‌க்கில் த‌ன‌து குற்ற‌த்தை ஒப்புக்கொண்டு அவ‌ருக்கு 7 வ‌ருட‌ங்க‌ள் சிறைக்குள்ளிருக்க‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌து. வ‌ழ‌க்கு முடிந்து வெளியே வ‌ரும் ப‌த்ம‌நாத‌ன், க‌ன‌டா நீதிம‌ன்ற‌த்தில் த‌ன்னையொரு அக‌தியாக‌ அடைக்க‌லம் த‌ரும்ப‌டி கேட்கின்றார். நீதிமன்ற‌ம் -அவ‌ர் போதைம‌ருந்து க‌ட‌த்திய‌ன் கார‌ண‌மாக‌- அவ‌ர‌து அக‌தி அடைக்க‌ல‌ வ‌ழ‌க்கை நிராக‌ரிக்கின்ற‌து. ஆனால் ப‌த்ம‌நாத‌ன் உச்ச‌ நீதிம‌ன்ற‌த்தில் மேல் முறையீடு செய்யும்போது ப‌த்ம‌நாத‌னுக்கு அக‌தி அடைக்க‌லம் க‌ன‌டாவில் கொடுக்க‌ப்ப‌டுகின்ற‌து. இவ்வாறு உச்ச‌நீதிம‌ன்ற‌ம் தீர்ப்பு வ‌ழ‌ங்கிய‌து ச‌ரியா பிழையா என்ற‌ க‌ல‌ந்துரையாட‌ல் ந‌ண்ப‌ரின் வ‌குப்பில் நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. வ‌குப்பு முடிந்து ந‌ண்ப‌ர் என்னிட‌ம் வ‌ந்து இத்தீர்ப்புக் குறித்து நீ என்ன‌ நினைக்கிறாய்? என்றார். ப‌த்ம‌நாத‌ன் த‌ன‌து குற்ற‌த்திற்காய் ஏழுவ‌ருட‌ங்க‌ள் த‌ண்ட‌னையை அனுப‌வித்துவிட்டார் என‌வே அவ‌ருக்கு அக‌தி அடைக்க‌லம் கொடுத்த‌தில் த‌வ‌றேதுமில்லை என்றேன். ந‌ண்ப‌ருக்கு என‌து க‌ருத்தில் அவ்வ‌ள‌வு உட‌ன்பாடில்லைப் போலும். என்றாலும் அவ‌ர்(ப‌த்ம‌நாத‌ன்) போதைம‌ருந்து க‌ட‌த்தியிருக்கின்றார்... என்றார்.


போதைம‌ருந்து க‌ட‌த்துவ‌து குற்ற‌ந்தான் அவ‌ர்க‌ள் அதைத் தெரிந்துதான் க‌ட‌த்துகின்றார்க‌ள்...அதை வாங்கிப்பாவிப்ப‌வ‌ர்க‌ளும் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ பொருளைத்தான் பாவிக்கின்றோம் என்ற‌ புரித‌லுட‌ந்தான் பாவிக்கின்றார்க‌ள். ஆனால் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளை வைத்து சூதாட்ட‌ம் ந‌ட‌த்தும் (க‌ள்ள‌ க‌ண‌க்கு உட்ப‌ட‌ எல்லா த‌கிடுதித்த‌ங்க‌ளும் செய்யும்) பெருமுத‌லைக‌ள் என்ன‌ செய்கின்ற‌ன‌ என்று யோசித்தால் போதைம‌ருந்து க‌ட‌த்துப‌வ‌ர்க‌ள் எல்லாம் சிறிய‌வ‌ர்களாகிவிடுவார்க‌ள் (மைக்க‌ல் மூரின் The Corporation என்ற‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ம் நினைவுக்கு வ‌ருகின்ற‌து). இப்பெரு நிறுவ‌ன‌ங்க‌ள் அர‌சுக‌ளால் அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌வை; அந்த‌ ந‌ம்பிக்கையில்தான் எல்லாத்த‌ர‌ப்பு ம‌க்க‌ளும் த‌ம‌து ப‌ண‌த்தை முத‌லீடு செய்கின்றார்க‌ள். ஆனால் பெருமுத‌லைக‌ளின் நிறுவ‌ன‌ங்க‌ள் திவாலாகினால் முத‌லிட்ட‌ சாதார‌ண‌ ம‌க்க‌ளுக்கு யார் ப‌தில் சொல்வார்க‌ள்? பெருமுத‌லைக‌ள் ஹாயாக‌ ஒரு வ‌ருட‌மோ அல்ல‌து இர‌ண்டு வ‌ருட‌மோ ஜெயிலுக்குள் இருந்துவிட்டு (கூட‌வே ஒரு புத்த‌க‌மும் எழுதிவிட்டு) வெளியே வ‌ந்துவிடுகின்றார்க‌ள். அவ‌ர்க‌ள் அல்ல‌வா போதை ம‌ருந்து க‌ட‌த்துப‌வ‌ர்க‌ளை விட‌ பெரும் ஆப‌த்தான‌வ‌ர்க‌ள். Nortel க‌ன‌டா த‌லைந‌க‌ரிலிருந்தே ஆப்பு வைத்த‌து ந‌ம் எல்லோருக்கும் தெரியும். (எப்போது ப‌டித்து முடிப்போம்; எப்போது நோர்ட்டெலுக்குள் நுழைய‌லாம் என்று காவிக்கொண்டிருந்த‌ என் க‌ன‌வு த‌க‌ர்ந்த‌தால் வ‌ந்த‌ எரிச்ச‌ல் அல்ல‌ இது :-) . Nortel சென்ற‌ வார‌ம் Bankruptcy File செய்திருக்கின்றார்க‌ள் என்ப‌து மேல‌திக‌ச் செய்தி.

ந‌ம்முடைய‌ பொதுப்புத்தியில் ப‌ல‌விட‌ய‌ங்க‌ள் சிறுவ‌ய‌திலிருந்தே திணிக்க‌ப்ப‌ட்டுக்கொண்டேயிருக்கின்ற‌ன‌. சில‌ருக்கு சாதி என்ற‌ அடையாளமே பெருமைக்குரிய‌ இன்னொரு பெய‌ர் போல‌... என்ற‌ மாதிரி -ப‌ல்வேறு விட‌ய‌ங்க‌ள்- ஒவ்வொருவ‌ரின் மூளையிலும் சாதார‌ண‌மாய்ப் ப‌திய‌ப்ப‌ட்டிருகின்ற‌ன‌. சில‌ நாடுக‌ளில் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்ந்த‌வ‌ர்களுக்கு ம‌ர‌ண‌த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப‌ட்டிருக்கின்ற‌ன‌. இந்தியாவில் கூட‌ சில‌ருக்கு வ‌ட‌மாநில‌ங்க‌ளில் நிக‌ழ்ந்திருக்கின்ற‌ன‌. அவ்வாறாயின் நாமேன் இவ்வாறான‌ கேள்விக‌ளை ஒருபோதும் எழுப்புவ‌தில்லை...? இந்திய இராணுவ‌ம் காஷ்மீர் அஸாம், ம‌ணிப்பூர் உள்ளிட்ட‌ உள்ளூர் மாநில‌ங்க‌ளில் ம‌ட்டுமில்லை, 'அமைதிப்ப‌டைக‌ளாக‌' ஆக்கிர‌மித்த‌ இல‌ங்கை, சோமாலியா போன்ற‌ நாடுக‌ளில் கூட‌ எண்ண‌ற்ற‌ பாலிய‌ல் வ‌ன்புண‌ர்ச்சிக‌ளைச் செய்திருக்கின்ற‌ன‌ (இந்திய‌ இராணுவ‌ம் ம‌ட்டுமில்லை; உல‌கிலுள்ள‌ அநேக‌ இராணுவ‌ங்க‌ள் அப்ப‌டித்தான். க‌ன‌டிய இராணுவ‌ம் சோமாலியாவில் செய்திருக்கின்ற‌து.) . ஆக‌ சாதார‌ண ஒருவ‌ர் பாலிய‌ன் வ‌ன்புண‌ர்ச்சி செய்யும்போது என்ன‌ த‌ண்ட‌னைக்கு உள்ளாக்க‌ப்படுகின்றாரோ அதேபோன்று இராணுவ‌த்திலுள்ள‌வ‌ர்க‌ளும் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டு த‌ண்ட‌னை விதிக்கப்ப‌ட்டிருக்க‌வேண்டும‌ல்ல‌வா? ஆக‌க்குறைந்த‌து நீதிம‌ன்ற‌த்திலாவ‌து நிறுத்த‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ளா? வீர‌ப்ப‌னைத் தேடுகின்றோம் என்ற‌ பெய‌ரில் அதிர‌டிப்ப‌டை நிக‌ழ்த்திய‌ கொடூர‌ சித்திர‌வ‌தைக‌ளுக்கும், வ‌ன்புண‌ர்வுக‌ளுக்கும் ‍-வீர‌ப்ப‌ன் கொல்ல‌ப‌ட்ட‌ சில‌ ஆண்டுக‌ளாகிய‌ பின்னாவ‌து- எந்த‌ அதிர‌ப்ப‌டையின‌ராவ‌து நீதிம‌ன்ற‌த்தில் நிறுத்த‌ப்ப‌ட்டு த‌ண்ட‌னைக்குள்ளாக்க‌ப்ப‌ட்டார்க‌ளா? ஆனால் நாம் போதை ம‌ருந்து க‌ட‌த்துப‌வ‌ர்க‌ளையும், திருடுப‌வ‌ர்க‌ளையும் ம‌ட்டுமே பெரிய‌ குற்ற‌வாளிக‌ளாக்கிவிடுகின்றோம். மிகுதி அனைவ‌ரையும் நாம் 'தேசிய‌த்தின்' பெய‌ரிலும் 'இறையாண்மையின்' இர‌ட்சிப்பிலும் ம‌ன்னித்துவிடும் ம‌காத்மாக்க‌ளாகி விடுகின்றோம் போலும். அதைவிட‌ கொடுமை இன்னுஞ்சில‌ர் இராணுவ‌ம் என்றால் அப்ப‌டியிப்ப‌டித்தான் செய்யும் என்று செப்பி ப‌ர‌மாத்மாக்க‌ளாகிவிடுவ‌தைப் பார்த்துக்கொண்டிருப்ப‌துதான்.



(1) Omar Khadr
(2) காட்டூன்: ரொர‌ண்டோ மெட்ரோ நியூஸ்(Jan 22, 2009)

புதுவிசையில் வெளிவ‌ந்த‌ இர‌ண்டு க‌விதைக‌ள்

Tuesday, January 20, 2009

-புதுவிசை (ஒக்ரோபர் - டிசம்பர் 2008)

நனவுகளின் பலிக்காலம்

கறுப்புத்துணியால்
இறுக்கப்பட்ட விழிபிதுங்க
பின்னிரவில் பின்னந்தலையில் 'பொட்டு' வைக்கப்பட்ட
என் 'சவம்' தாங்கிவருகின்றாள் தாய்
அவளிடம் சொல்வதற்கு சில வார்த்தைகளை
அவசரமவசரமாய்த் தயார்ப்படுத்துகின்றீர்கள்
இவனிற்கு ஏதேனும் இயக்கத்தோடு தொடர்பிருந்திருக்கலாம்;
-அல்லது- நாளை ஏதேனும் இயக்கத்தில் இணைந்திரண்டுபேரை
மண்டையில் போடுமொருவனாய் மாறிவிடும் ஆபத்தான கொள்கைகளோடிருந்தவன்
நாக்கு பலவாயிரம் கதைசொல்லிகளை கட்டெறும்புகளாய்ப் பிரசவிக்கிறது.

பிரேதங்கள் உரையாடுவதில்லையெனினும்
நீங்கள் ஊற்றிக்கொண்டிருக்கும் சிவப்புவைனில் மிதக்கும்
ஐஸ்கட்டியிலிருந்தெனது சிதைந்தமூளை கரைவதான நினைப்பில்
விரல்கள் நடுங்கி இதயம் அழுத்தமுறும்
ஒரு குழந்தையைப் புணர்ந்தவனுக்கும் இவ்வாறு பதற்றங்களோடிருப்பவனுக்கும்
வித்தியாசங்கள் அவ்வளவாய் இருப்பதுமில்லை

அம்மாவிற்கு
'தேசியம்' தெரியாது
சர்வதேசியத்தால் எல்லாமே தீர்ந்துவிடுமென்ற 'வரலாற்றுண்மை'யும் அறியாள்
தாடியைத்தாண்டி பெரியாரையும் மார்க்ஸையும் இனம்பிரித்தறியும்
சில்லெடுப்புக்களில் அக்கறையிருந்ததுமில்லை
ஆனால் அவளுக்கு
சுருண்டிருக்கும் குறியாய் பிஸ்ரல் இருப்பதும்
விறைத்த லிங்கமாய் ஏகே-47 விரிந்தும்
மாறிமாறி வதைத்துக்கொல்லும் 'ஆம்பிளைத்தனங்கள்' தெரியும்

என்னுடைய கனவாயிருந்தது;
எல்லாவற்றிலிருந்தும் தப்பியோடுவது
காசு கொஞ்சம் உழைத்து அம்மா உலக்கைபோட்டு அரிசி இடித்தலை
வாடி வதங்குவதை நிறுத்துவது
பனிப்புலத்தில் ஒருத்தியைப் புணர்ந்து
காஃப்காவின் நாயகனைப்போலவென் கடந்தகாலச்சோகங்களைச் சிதைப்பது.

f*** off, you bloody shot gun!
தலையிலடித்து மண்ணை வாரியிறைத்து
தன் ஆடைகள் கிழித்து
என்னைப் புணர்ந்தெனினும் தன் இளையமகனை
திருப்பித்தருவியளா பாவிகளேயெனக் கேட்டுருகும்
அம்மாக்களின் கதறல்கள் நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து எதிரொலிப்பவை

அம்மா,
உன் யோனியை இறுக்கிமூடி
குறிகளை மட்டுமில்லை
துவக்குகளையும் உள்நுழைய அனுமதிக்காதே;
நான்
எவருமே நெருங்கவியலாத
பயங்களற்ற சவமாய்
உனக்குள்ளே கதகதப்பாய்த் துயில விரும்புகின்றேன்.



இறுதியில் நிகழ்ந்தது

நாமெழுப்பும் கண்காணிப்புத்தேசத்தின்
எண்ணற்ற தெருக்களில்
நேசம் பாசியைப்போல பின்னலிடுகிறது
வழுக்கி விழுந்து உதிரமுருகி சாலைதகிப்பினும்
காயங்களை மறைக்கும் புத்திசாலித்தனத்தை
தாபமொரு சுனையாய்க் கசியவிடும்
செயல்களின் தவறுகளை கர்ப்பக்கிரகத்தில் பதுக்கியொளிக்க
துர்நாற்றம் தாங்கமுடியாக்கடவுளர்கள்
நாம் விமர்சித்து
உயிர்த்தெழுவதற்கான சந்தர்ப்பங்களோடு வெளியேறிவிடுகின்றனர்


கதகதப்பான நினைவுகளை வெயிலில் காயும்
ஆடைகளோடு உலரவைத்துவிட்டு
அலுப்பூட்டும் பெருமூச்சுக்களோடு
இந்த் ஆண்கள் இப்படித்தானென நீயும்
இந்தப் பெண்களே இப்படித்தானென நானும்
எதிரெதிர்த்திசைகளிலிருந்து சபிக்கிறோம்

காலப்பெருங்காகமொன்று
தன்கூரிய அலகால் கொத்தத்தெடங்குகையில்
விரல்கள் குழைந்து புனைந்த Tottem Pole சரிந்து
நேசம் நமக்களித்த ஓவியங்கள குலைகின்றன
ஆதிக்குடியின் வெண்தாடிக்கிழவன்
சூரியன் காணாத்துயரில் தற்கெலைத்த துயரம்
நம்மிலும் கருமையாய்ப்படர
நிச்சயமின்மைகளில் நடக்கத்தொடங்குகிறோம்

இன்னெரு இழப்பு
இன்னெரு பருவமாற்றம்
இன்னெரு இடப்பெயர்வு.

சுழன்றாடும் துருவப்பனிப்புயலிற்கு
நாடோடிக்கும் நின்று தரிப்பவனுக்கும்
வித்தியாசம் தெரிவதேயில்லை
தான் நினைத்த நேரம் பெழிந்துவிட்டு
கலங்காது நகரும் பனியின் வாழ்க்கை
எவருக்கும் வாய்ப்பதுமில்லை.


ந‌ன்றி: கீற்று

நீங்க‌ள் க‌ருவிலே எம்மைக் கொன்றிருக்க‌வேண்டும்

Thursday, January 15, 2009

Life is lived in the subtext.
-Unknown

ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்வை
திணிக்க‌ப் ப‌ழ‌கிவிட்ட‌ நாளொன்றில்
அன்று பெய்திருக்க‌வேண்டிய‌ ப‌னிம‌ழை
திசை மாறிப் பெய‌ர்ந்திருந்த‌த‌ன் வினோத‌த்தை
சுவ‌ர்க‌ள் சூழ‌விருந்த‌ தீவு அறைக்குள்ளிருந்து விய‌ந்த‌ப‌டியிருந்தோம்
வாழ்த‌ல் என்ப‌து என்ன‌வென‌று தொட‌ங்கிய‌
ச‌லிப்பான‌ தேட‌ல் புத்த‌க‌ங்க‌ளிற்குள் ப‌துங்கிக்கொள்ள
ஒரு வார‌மாய் இடைவிடாத‌ வாசிப்பு.
மூட‌ப்ப‌டாத‌ புத்த‌க‌ங்க‌ள், தோய்க்க‌ப்ப‌டாத‌ உடுப்புக்க‌ள்
ப‌சிக்கும்போது ரொட்டியைச்சூடாக்க‌ முட்டையைப்பொறிக்க‌வென‌
அவ்வ‌ப்போது குசினியுட‌னான‌ முத்த‌மிட‌ல்க‌ள்
இறுதியில் மிஞ்சிய‌து என்ன‌வோ
நிர்வாண‌ங‌களில் மீது ந‌ம் த‌னிய‌ன்க‌ள் நின்றாட‌
பெருந்த‌னிமையில் சுட‌ர்விட்ட‌ணைந்த‌ த‌விப்பு
ஒன்ப‌தாவ‌து நாள் அறை வ‌ந்துசேர்ந்த‌ தோழியுட‌ன்
நாமிணைந்து ச‌மைத்த‌ காளான்க‌றியைச் சுவைக்கையில்
வாழ்வென்ப‌து ஆவி ப‌ற‌ந்துகொண்டிருக்கும்
சோற்றில் மித‌ப்ப‌தாய்த் தோன்றிய‌து.

2.

ந‌ம‌தெல்லாக் க‌ன‌வுக‌ளும்
க‌ண்ணாடியில் ஆவியாகிக் க‌ரைந்துகொண்டிருக்கையில்
முல்லைத்தீவு முற்றுகையிட‌ப்ப‌டுகிற‌து
காஸா ஆக்கிர‌மிக்க‌ப்ப‌டுகின்ற‌து
த‌ம‌து உட‌ல்க‌ளை
நில‌ம் பிள‌ந்துவ‌ந்த‌ கவ‌ச‌வாக‌ன‌ங்க‌ளுக்கு காணிக்கைசெய்த‌
ஒரு த‌லைமுறை முன்னேயிருக்கிற‌து
இனி என்றென்றைக்குமாய் அடிமை வாழ்வாவென‌
பின் வ‌ந்த‌ த‌லைமுறை க‌ல‌ங்குகிற‌து
நாமின்னும் க‌தைத்துக்கொண்டிருக்கின்றோம்
உரையாட‌லிலிருந்து செய‌லுக்குத் திரும்புவ‌து குறித்து
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
................... அலுப்பேயின்றி.

3.
மூதாதைய‌ர் இன்னும் சுவாசித்துக்கொண்டிருக்கும் ம‌ண்ணை
ப‌ல்குழ‌ல் பீர‌ங்கிக‌ளால் பிள‌ந்து
அடிமைப் பிள்ளைக‌ளைப் பிர‌ச‌விக்க‌ முடியாது
இர‌த்த‌ வெடில‌லையும் காற்றில்
துர்க்கைய‌ம்ம‌ன்க‌ள் த‌லைவிரித்து அலைவ‌தால்
அட‌க்க‌நினைக்கும் எவ‌ர்க்கும்
நிம்ம‌தியான‌ இர‌வுக‌ளினி வாய்க்க‌ப்போவ‌துமில்லை

வ‌லிய‌வ‌ன் ம‌ட்டுமே வாழ்வானெனும்
போரின் ம‌னுநீதியைக்க‌ண்டு
வெறுத்தொதுங்கிய‌ கால‌ம் நெடிய‌தெனினும்
எம்மை வ‌யிறுக‌ளில் க‌ருவாய்ச்சும‌க்கையில்
இர‌ட்டைக் குழ‌ந்தைக‌ளாய்

கூட‌வே போரையும்
பிர‌ச‌வித்த‌ பிரிய‌ அன்னைய‌ர்க‌ளே...
நீங்க‌ள் எம்மைக் க‌ருவிலே கொன்றிருக்க‌வேண்டும்.

குழ‌ந்தைக‌ள் பிற‌க்காத‌ நாட்டில்
ச‌ந்த‌திக‌ளின் நீட்சியில்லாதது போல‌
த‌ன் துப்பாக்கிக‌ளுக்கு
குறிபார்த்துச்சுட‌ உட‌ல‌ங்க‌ள் கிடைக்காத ச‌லிப்பில்
போரும்
த‌ற்கொலை செய்வ‌ற்கு வாய்ப்பிருக்கிற‌து

5.
பிற‌கொருநாள்
அம்மார்க‌ளே...
ந‌ம்ம‌ண்ணில் உள்ள‌ன‌வெல்லாம் யுத்த‌மில்லாது வாழ‌ட்டுமென‌
புதிய‌ க‌ருக்க‌ளைப் பிர‌ச‌வியுங்க‌ள்;
இல்லாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை
குழ‌ந்தைக‌ளில்லாது நிம்ம‌தியாய் நீங்க‌ள் வாழ்ந்தீர்க‌ளென்று
எம் ச‌வ‌க்குழிக‌ளின் முன்நின்று உர‌த்துச் சொல்லுங்க‌ள்.




(வ‌ளாக‌ நாட்க‌ளுக்கு...)