கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 91

Thursday, May 22, 2025

 Tourist Family திரைப்படம் வந்தவுடனேயே பார்த்திருந்தேன். எந்த ஒரு படைப்பும் - அது இலக்கியமாக இருந்தாலென்ன, திரைப்படமாக இருந்தாலென்ன- அது முதலில் நம்மை உள்ளிழுக்க வேண்டுமென நினைப்பேன். அப்படி இருந்தால்தான் நாம் அந்தப் படைப்பைப் பேச எம்மை உந்தித் தள்ளும். நம்மை வெளியில் தள்ளும் திரைப்படங்களை (அண்மைய உதாரணம் Retro) எளிதாக நாம் கடந்து போய்விடுவோம்.அந்தவகையில்...

பனிக்காலத் தனிமை - 08

Wednesday, May 14, 2025

 மே மாதம் வந்துவிட்டது. உழைப்பின் முக்கியத்துவம்/தொழிலாளர் உரிமைகளை நினைவூட்ட உழைப்பாளர் தினமும் ஒவ்வொருவருடமும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மூலதனம் பற்றியும், உழைப்பு/உற்பத்தியின் மூலம் மனிதர்கள் அந்நியமாதல் பற்றியும் மார்க்ஸ்/ஏங்கல்ஸ் நிறையப் பேசியிருக்கின்றனர். அந்தப் பாதையில் பின்னர் வந்த பாப் பிளாக் போன்றவர்கள் 'உழைப்பை ஒழிப்பது' (The Abolition...

கார்காலக் குறிப்புகள் - 90

Monday, May 12, 2025

 கனடாப் பாராளுமன்றத் தேர்தல் - 2025*******நேற்று நடந்த பாராளுமன்றத் தேர்தல் பல்வேறு ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் கனடாவில் உருவாக்கியிருக்கின்றது. கனடாவில் லிபரல், பழமைவாதக் கட்சி, புதிய ஜனநாயக் கட்சி, புளொக் குயூபெக்குவா என்பவை தேர்தலில் செல்வாக்குச் செலுத்தும் கட்சிகளாக இருக்கின்றன. அரசியல் நிலைப்பாட்டில் லிபரல் - Center, பழமைவாதக் கட்சி - Right,...

பனிக்காலத் தனிமை - 07

Friday, May 09, 2025

 ஸென்னில் எதையும் செய்யாமல் அப்படியே இரு என்பது அடிக்கடி நினைவூட்டப்படுவதை அறிந்திருப்போம். . தியானத்தின்போது கூட 'சும்மா அமர்ந்திருத்தல்' மட்டுமே போதுமானது என்று சொல்வார்கள். அதேபோன்று அப்படி சும்மா இருந்து தன்னிலையை அறிதல் சாத்தியமென்றாலும், அப்படி ஒருவர் நினைத்துக்கொண்டு தியானம் செய்தால், ஞானம் அடைதல் தூரப்போய்விடுமென்றும் பயமுறுத்துவார்கள்.எனில், சும்மா...

கார்காலக் குறிப்புகள் - 89

Sunday, May 04, 2025

 நேற்று கா.சிவத்தம்பியின் 'நவீனத்தவம் - தமிழ் - பின்நவீனத்துவம்' என்ற நூலை வாசித்து முடித்திருந்தேன். இந்நூல் தமிழில் எப்படி நவீனத்துவம்/பின்நவீனத்துவம் இருக்கின்றது என்பது மட்டுமில்லாது, காலனித்துவ காலத்தில் எப்படி இலக்கியம்/அரசியல் முகிழ்கிறது என்பது பற்றியும் பேசுகின்றது. அதில் சிவத்தம்பி கவனப்படுத்துப்படும் ஒரு விடயம், 'பிரம்மஞான சபை' (Theosophical...

கார்காலக் குறிப்புகள் - 88

Saturday, April 26, 2025

 Paris Review,  2025-Spring Issueஐ வாசித்துக் கொண்டிருந்தபோது, நஸீர் றபாவின், 'போர் முடிந்துவிட்டது' (The War Is Over) கவிதைகளைக் கண்டேன். நஸீர் 1963 காஸாவில் பிறந்தவர். இந்த கவிதைகள் இப்போது பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தை மட்டுமில்லை, என்னைப் போன்ற போருக்குள் வாழ்ந்த அனைவருக்கும் அதன் கொடுமைகளை நினைவுபடுத்துபவை.  இதைத் தமிழாக்குவதன்...

கார்காலக் குறிப்புகள் - 87

Tuesday, April 22, 2025

 இலக்கியம் போல அரசியல் எனக்கு நெருக்கமானதில்லை. ஆனால் இலக்கியம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் அரசியலுள்ளது என்கின்ற தெளிவு இருக்கின்றது. கனடாவில் தேர்தல்கள் நடைபெறுகின்றபோது, பெரும்பாலும் வாக்களித்து என் 'ஜனநாயக் கடமை'யை செய்பவன். மேலும் வெளிப்படையாக, இங்குள்ள ஒரளவு இடதுசாரி சார்புள்ள 'புதிய ஜனநாயகக்கட்சி'யை (New Democratic Party) ஆதரிப்பவன் எனச் சொல்வதிலும்...

கார்காலக் குறிப்புகள் - 86

Saturday, April 19, 2025

 கடந்த சில நாட்களாக என் பால்யகால பள்ளி நண்பர்களோடு நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன். இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு நண்பனால் இது சாத்தியமாயிருந்தது. இனியதான பாடசாலை நாட்கள் இல்லாது நம் வாழ்க்கையைக் கடந்து வந்திருப்போமா என்ன? மகிழ்வும், துயரமுமான நினைவுகள் நமக்கிடையில் நுரைத்துத் ததும்பிக் கொண்டிருந்தன.அதுவும் நாம் பெண்களும், ஆண்களும் சேர்ந்து பாடசாலையில்...

சங்கரி சந்திரனின் ‘சூரியக்கடவுளின் பாடல்’ (Song of the Sun God)

Saturday, April 12, 2025

 இலக்கியம் கடந்த காலத்தை சாம்பல் புழுதிகளிலிருந்து வெளியே எடுத்துவரும் வல்லமை உடையது. ஆகவேதான் அதிகார வர்க்கம், எழுதுபவர்களை எப்போதும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஒரு இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால், அவர்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களை அழிக்கவேண்டுமென, அன்றைய பேரரசுகளிலிருந்து இன்றைய நவீன அரசுகள் வரை முயல்கின்றன. காலனித்துவத்திலிருந்து...

கார்காலக் குறிப்புகள் - 85

Friday, April 04, 2025

 ஓர் எழுத்தாளரின் படைப்பை வாசிக்கின்றீர்கள். அந்த எழுத்து உங்களை அப்படி வசீகரிக்கின்றது. நல்லதொரு படைப்பைத் தந்த அந்த  எழுத்தாளருக்கு நன்றி சொல்ல விரும்பும்போது நீங்கள் என்ன செய்வீர்கள். நான் சங்கரியின் நாவலை வாசித்து முடித்த மகிழ்ச்சியில், அவரின் எழுத்துக்களில் எதையாவது தமிழாக்க வேண்டுமென விரும்பினேன். அதுவே இந்தக் கட்டுரை. சங்கரி தனது நாவல்கள், தான்...