
நேற்று கா.சிவத்தம்பியின் 'நவீனத்தவம் - தமிழ் - பின்நவீனத்துவம்' என்ற நூலை வாசித்து முடித்திருந்தேன். இந்நூல் தமிழில் எப்படி நவீனத்துவம்/பின்நவீனத்துவம் இருக்கின்றது என்பது மட்டுமில்லாது, காலனித்துவ காலத்தில் எப்படி இலக்கியம்/அரசியல் முகிழ்கிறது என்பது பற்றியும் பேசுகின்றது. அதில் சிவத்தம்பி கவனப்படுத்துப்படும் ஒரு விடயம், 'பிரம்மஞான சபை' (Theosophical...