கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தேநீர்

Sunday, October 15, 2017


தேநீர் அருந்துதல் என்பது அதன் எளிமையினால் பூரணத்துவமாகிவிட்ட ஒரு செயல்.
நான் தேநீர் அருந்துகையில், நானும் தேநீரும் மட்டுமே இருக்கின்றோம்.
மற்ற உலகு அனைத்தும் கரைந்துபோகின்றது.
எதிர்காலம் குறித்த எந்தக் கவலைகளும் இல்லை.
கடந்தகாலத் தவறுகள் குறித்த எத்தகைய எண்ணங்களுமில்லை.
தேநீர் என்பது எளிமை: தேயிலைத் தூள், சூடான தூய நீர், ஒரு கோப்பை.
தேயிலையின் சிறிய அழகான துகள்கள் கோப்பையின் மேலே மிதக்க, நான் அதன் வாசத்தை உள்ளிழுக்கின்றேன்.
தேநீரை நான் அருந்தும்போது, தேயிலையின் சாரம் என்னில் ஒரு பகுதியாக மாறுகின்றது.
நான் மாற்றமடைந்துவிட்டேன் என்று தேநீரால் அறிவிக்கப்படுகின்றேன்,
இதுவே வாழ்க்கையின் செயல், ஒரு பூரணமான தருணத்தில், இது போன்ற (தேநீர் அருந்தும்) செயலில், உலகு பற்றிய உண்மை வெளிப்பட்டுவிடுகின்றது:
மனத்திலுள்ள எல்லாவிதமான சிக்கல்கள், வலிகள், வாழ்க்கை பற்றிய நாடகங்கள் அனைத்துமே எந்த ஒரு நல்ல நோக்கத்திற்காகவும் இல்லை என்ற புரிதல் வந்துவிடுகின்றது.
நானும், இந்தத் தேநீரும் மட்டுமே இப்போது சந்திக்கின்றோம்.

- Thich Nhat Hanh
தமிழில்: டிசே தமிழன்

(நன்றி:Thich Nhat Hanh Gems)

0 comments: