கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Let Her Cry

Monday, October 16, 2017


ஷோக ஹந்தகமவின் 'Let Her Cry' ஒரு பேராசிரியருக்கும் அவரிடம் கல்வி கற்கும் மாணவியிற்கும் வரும் நெருக்கத்தையும் விலகலையும் பற்றிய படமிது. இவ்வாறான ‘முரண்’ உறவுகள் பல்வேறு படங்களில் காண்பிக்கப்பட்டுவிட்டாலும், இந்தப்படத்தில் வரும் மாணவி தனது காதல் மிக உண்மையானது, அதுவின்றி தன்னால் வாழமுடியாது எனவும் பேராசிரியரைப் பின் தொடர்ந்தபடி இருப்பார்.

ஒருகட்டத்தில் தங்களது உறவை, தாங்கள் எங்கெங்கெல்லாம் செல்கின்றோம் என்பதைப் பேராசிரியரின் மனைவிற்குக் கூறிவிட்டே இந்த மாணவி பேராசிரியரோடு அலைந்தபடியிருப்பார். குடும்ப உறவும், கெளரவமும் பாதிக்கப்படப்போகின்றது என்ற அச்சத்தில் பேராசிரியரின் மனைவி அந்தப்பெண்ணை தங்கள் வீட்டுக்குள் கொண்டுவந்தே இருக்க வைத்துவிடுவார். இன்னொருவகையில் தெரிந்தோ தெரியாமலோ அந்தப் பேராசிரியருக்கு, அவரது மனைவி கொடுக்கும் ‘பெருந்தண்டனை’யாகக் கூட இது இருக்கக்கூடும். பேராசிரியர் மீதும் அந்த மாணவி மீதும் வெறுப்பிலிருக்கும் பேராசிரியரின் மனைவி அந்த மாணவியை அவரின் பலவீனங்களுடன் புரிந்துகொள்ளச் செய்கின்றார். அந்த மாணவியின் காதலைத் தொடர்ச்சியாக மறுத்தபடியிருக்கும் பேராசிரியருக்கு, ஒருகட்டத்தில் அந்த மாணவி மீது காதல் வரத்தொடங்குகின்றது. ஆனால் அதேசமயம் அந்த மாணவிக்கு வேறொரு காதல் வந்துவிடுகின்றது (அல்லது அந்தப் பேராசிரியரை நம்ப வைக்கின்றார்).

சிலவேளைகளில் எல்லாமே (வாழ்க்கையே) ஒரு நகைச்சுவையாகிப் போய்விடுகிறது என்கிறார் பேராசிரியர். அவரின் மனைவியோ இதைக் கேட்டுச் சிரிக்கத்தொடங்குகின்றார். இது என்ன மாதிரியான சிரிப்பு, sarcasmமா என்கிறார். சிரிப்பு ஒருகட்டத்தில் அழுகையாக மாறுகின்றது. பேராசிரியரின் மகள் ஏன் அழுகின்றார் எனத் தாயிடம் கேட்கின்றார். அந்த மாணவியோ, 'அழுவதற்கு எப்போதும் ஒரு காரணம் இருக்கவேண்டுமா' என்கின்றார். மனைவி அழுவதைப் பார்க்கும்,  அழுகையின் பின்னிருக்கும் எல்லாக் காரணங்களையும் அறிந்த பேராசிரியர் கூறுகின்றார், 'Let her cry'.

தற்செயலாய், வெவ்வேறு திசைகளில் மனங்கள் சிதறிப்போன எல்லோரும் பன்சலையில் இறுதியில் சந்திக்கின்றனர். அங்கே நிகழும் ஒரு சம்பவம், இவர்கள் எல்லோருக்கும் ஏதோ ஒன்றை நினைவுபடுத்துவதாய், அவரவர் செய்த குற்றங்களுக்கான மன்னிப்பையும், அந்தப் புத்தவிகாரையில் பொழியும் மழை வழங்கிவிடுவதாய் முடிந்துவிடுகின்றது.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

0 comments: