-டிசே தமிழன்
அப்போதுதான் கோடை முடிந்து இலையுதிர்காலம் ஆரம்பித்திருந்தது. ஆக வெக்கையோ, குளிரோ இல்லா மிதமான காலநிலை அந்தப் பருவத்திற்கு ஒருவித அழகைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இவன் வகுப்பறைக்குள் இருந்து, மழை பொழியத்தொடங்கிய பின்னேரப்பொழுதை இரசிக்கத் தொடங்கியிருந்தான். மெல்லிய சாம்பல் நிற வானப்பின்னணியில் இலைகள் உதிர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் மனது களிமண்ணைப் போல நெகிழத்தொடங்கியிருந்தது. இவனுக்கு இன்னும் ஒரு மாதம் கடந்தால் பதினைந்து...
In
கவிதைகள்
Thursday, October 20, 2005
சாத்தானின் காற்று
நள்ளிரவை
சிலுவையில் அறைய
அதிர்கிறது
பாவஞ்செய்தவர்களின் வீட்டு யன்னல்கள்
ஓடி ஒளித்த
நட்சத்திரங்களில் ஒன்றில்
தேவாலயத்தை விட்டுத்தப்பியோடிய
ஜீசஸும்
தஞ்சம் கேட்டிருக்கலாம்
போர்வையை விலத்த
ஏறியிறங்கும் மார்புக்குவட்டுக்குள்
கடந்தகாலத்தின் துயரநதி
உறைந்துநிற்பது தெரிகிறது
தொலைவில்
பைன்மரக்காட்டுக்குள்
வைரங்களைக்காவிச் செல்லும் ஒநாய்கள்
தென்படுகின்றன
பனிப்புகாருடன்
ஒநாய்களைப் பின் தொடரத்தொடங்கி
ஏழாவது நிமிடமும்
இருபத்தைந்தாவது...
கொழும்பு: மலரும் சில நினைவுகள்
In அனுபவம்Tuesday, October 11, 2005

கொழும்பில் இருந்தது ஒன்றரை வருடங்களுக்கும் குறைவானது. யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்ட சில மாதங்கள் சிலாபத்திலிருந்ததையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒருவருடந்தான் கொழும்பில் இருந்திருக்கின்றேன் என்றுதான் சொல்லமுடியும். கொழும்பு ஒரு நகரத்துக்குரிய வசீகரங்களையும் வக்கிரகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் எனது கொழும்பு வாழ்க்கை வீடு, பாடாசாலை, ரியூசன்,...
In
கவிதைகள்
Sunday, October 09, 2005

ஊரிலென்றால்
மல்லிகைப்பூ வாசம்
கமிழ்ந்தபடி இருந்திருக்கும்
இந்தமாதத்தில்.
இரவைப் பனிமூடிக்கிடக்க
விரல்களிலும் படிகிறது
குளிர்
நிழல்களைப்போல அசைந்தாடுகிறது
கடந்தகாலத்தின் துயர்
நினைவுகள் கொடூரமாய் தோற்கடிக்கும்போது
அவசரம் அவசரமாக
போர்வைக்குள் நுழைந்து
MP3 Playerல் இசையைப் பரப்பி
புத்தகங்களில் அமிழ்ந்துபோகலாம்
அப்போது
விரியத்தொடங்கும்
இதுவரை அறியா உலகில்
நடமாடுகின்றார்கள்
மனிதர்கள்...
Subscribe to:
Posts (Atom)