கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எழுதாமல் இருப்பதுங்கூட ஒருவகையான கலைதான்

Sunday, February 11, 2018

ழமான, தொடர்ச்சியான வாசிப்பு ஒரு படைப்பாளிக்கு முக்கியமானதா என்பதில் எப்போதும் சந்தேகமுண்டு. பரவலாய் வாசிக்குமொருவர் எழுதவரும்போது நல்ல படைப்பைத் தருவார் என்றும் எதிர்பார்க்கமுடியாது. சிலவேளை குறைவாக வாசிக்கும் ஒருவர் சிறந்த படைப்பை எளிதாகத் தந்துவிடமுடியும். எனெனில் வாசிப்பு என்பதைவிட அவரவர் அளவில் உற்றுப்பார்க்கும் அனுபவங்கள் என்பது முக்கியமானது; படைப்பிற்கு வளஞ்சேர்ப்பவை.
அப்படியெனில் தீவிர வாசிப்பு எங்கே படைப்புநிலையில் முக்கியம் பெறுகின்றது? தொடர்ச்சியாக ஒருவர் எழுத விரும்புகின்றாரெனில் இவ்வகையான வாசிப்பு அவசியமாகின்றது. ஆகக்குறைந்து ஒரே பின்னணியில், பல்வேறுபேருக்குத் தெரிந்த கதையைச் சொல்ல வரும்போதோ அல்லது ஏற்கனவே வேறு சிலரால் சொல்லப்பட்ட கதையை எழுதும்போதோ மொழியினுள் செய்யக்கூடிய வித்தையைப் புரிந்துகொள்ள வாசிப்பு அவசியமாகின்றது. இல்லாவிட்டால் வாசகர்கள் இந்தப் படைப்பில் என்னவிருக்கிறதென்றோ, இந்தக் கதை ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதெனவோ நினைத்து எளிதாகக் கடந்துபோய்விடுவார்கள்.
தொடர்ச்சியான வாசிப்பு என்பது சிலவேளைகளில் எதையாவது புதிதாய் எழுத விரும்புகின்றவர்க்கு தடை செய்யும் மனோநிலையைக் கொடுக்கக்கூடும். ஏற்கனவே வாசித்த ஒரு படைப்பை ஒருவருக்கு நினைவூட்டி இதைப்பற்றி இனியென்ன எழுதுவதற்கு இருக்கிறதெனச் சோர்வைத் தரக்கூடும்.
னால் வாசிப்பிற்கு இன்னொரு அழகான பக்கமும் இருக்கிறது. ஆகக்குறைந்தது ஒரேமொழியில் எழுதுவதை தன்னியல்பிலேயே தடைசெய்யும். வெவ்வேறு வடிவங்களில் எழுதிப் பார்க்கும் ஆர்வத்தைத் தொடர்ச்சியாகக் கொடுக்கும். அவ்வாறு இயலாதபட்சத்தில் கூட, 'எதையும் எழுதாது சும்மா இரு, அதுவே நல்லது' என்று மெல்லிய குரலில் அதட்டி இருக்க வைக்கவும் செய்யும்.
ஒவ்வொரு படைப்பாளியும் அவ்வப்போது உறங்குநிலைக்குப் போவது அவசியம். எழுத்தின் புதிய வடிவங்களுக்கோ அல்லது வேறு தளங்களுக்கோ அடிக்கடி நகர்ந்தாக வேண்டும். இவ்வாறு அவர்கள் போகும்போது அவர்களின் படைப்புக்கான இடத்தை யாரோ ஒருவர் அபகரித்துவிடுவார் என்பதும் ஒருபோதும் நிகழப்போவதில்லை. அசலான படைப்புக்களை உன்மத்தத்தோடு எழுதியவர்கள் மீளவரும்போது, காலமும் வாசகர்களும் திரும்பி இருகரங்கொண்டு அரவணைக்கவே செய்வர்/யும். அவ்வாறு உறங்குநிலைக்குப் போன படைப்பாளிகள் மீண்டும் வரும்போது அவர்களுக்கான சூழல் தமிழ்ச்சூழலில் அப்படியே இருந்ததற்கான எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. அவர்களில் சிலரின் மீள்வருகை நிகழாதபோதுகூட அந்த இடம் வெற்றிடமாகவே இருந்திருக்கின்றது/இருக்கின்றன.
எழுதுவது மட்டும் அல்ல கலை; அவ்வப்போது எழுதாமல் இருப்பதுங்கூட ஒருவகையான கலைதான்.

(February 11, 2016

0 comments: