கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சில சிறுகதைகள்

Friday, February 16, 2018

டத்தில் சயந்தனின் சிறுகதை 'ஸ்துதி' வருவதை அறிந்தபோது. நீண்ட காலத்துக்குப் பிறகு சயந்தனின் கதை வருகின்றதென உற்சாகத்துடன் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். இதுவா கதையென அது முடியும்போது ஏமாற்றமாகவே இருந்தது. இதை எழுத 'ஆதிரை', 'ஆறாவடு' போன்ற எழுதிய ஒருவர் தேவையில்லை, ஒரு அறிமுக எழுத்தாளரே போதுமே எனத்தான் தோன்றியது.
பாலியல் விடயங்களை, முக்கியமாய் பாலியல் தொழிலாளியை/மஸாஜ் நிலையங்களைத் தேடிப்போதல், அது குறித்து எழுதுதல் என்பது எங்களைப் போன்ற ஆண்களுக்கு ஒரு ஈர்ப்புள்ள விடயமாகவே எப்போதும் இருக்கின்றதென நினைக்கின்றேன். இவ்வாறான விடயங்கள் நெடுங்காலமாய் எழுதப்பட்டுமிருக்கின்றன, எனவே நாம் எப்படி வித்தியாசமாக எழுதப்போகின்றோம் என்பதும் நமக்கு முன்னாலுள்ள முக்கிய சவாலாகும்.
இந்த விடயத்தை ஒரு அரசியல் statement ஆக வியட்னாமிய பெண் போராளியினூடாக ஷோபாசக்தி மாற்றியிருப்பார் (தேசத்துரோகி தொகுப்பில், கடைசிக் கதை, பெயர் மறந்துவிட்டது). அதுபோலவே அண்மையில் வந்த 'box கதைப்புத்தகத்திலும்' பெண்புலிகள்/மலையகப் பெண்கள் என பல்வேறு இழைகளினூடாக எவரையும் சந்தேகப்படாமல் அல்லது எல்லாவற்றையும் சந்தேகப்படும்படும்வகையாக அருமையாக எழுதியிருப்பார். நாமிவ்வாறு ஷோபாவைப் போல, இந்தத்திசையில் நின்றுதான் சொல்லவேண்டும் என்கின்ற அவசியமில்லை. ஆனால் இது சிக்கலான விடயமென்றாலும், வாசிப்பவர்களைத் தொந்தரவு செய்வதுமாதிரியாக எழுதமுடியும் என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிடுகின்றேன்.
யந்தனாவது பரவாயில்லை அண்மையில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய மூன்று கதைகளை வாசித்தபோதும் இன்னும் ஏமாற்றமாக இருந்தது. எஸ்.ராவினது நாவல்களை வாசிக்கும்போது, அவரது முன்னுரைகளிலேயே கதையைச் சொல்லும் முறையை தவிர்க்கவேண்டும் எனச் சொல்லியிருக்கின்றேன (அவரின் முன்னுரையில் இருந்து தப்பினால் கூட, மனுஷ்யபுத்திரன், எங்கே நீ உள்ளே போய் உன்போக்கில் வாசிப்பாய் பார்ப்பம் என்று நந்தி மாதிரி நின்று நாவலின் முழுக்கதையையும் சொல்லிவிடுவார்). நல்ல காலம் இப்போது அவர்களிடையே உரசல் என்பதால் எங்களுக்குக் கொஞ்சம் நிம்மதி.
எஸ்.ராவின் 'கற்பனைச் சேவல்' எழுதப்பட்ட விதத்தில் ஒரளவு நல்ல கதை. ஆனால் பாருங்கள் தலைப்பிலேயே கதையைச் சொல்லிவிட்டார். சண்டைக்குக் கோழிக்கு வளர்ப்பவரைப் பற்றிய கதை. ஆனால் அந்தக் கதையில் அந்தப் பாத்திரத்தை, அவர் வளர்க்கும் கோழியை எவ்வளவு வீரியமாக விபரித்தாலும், அது நிஜத்தில் இப்போது இல்லை, எல்லாமே கற்பனைதான் என்பதை இந்தத்தலைப்பே சொல்லிவிடுகின்றது. பிறகு எப்படி ஒரு வாசகர் அந்தக் கதையினுள்ளே ஊன்றி நின்று வாசிக்க முடியும். மற்ற இரண்டு கதைகளால, 'முதல் காப்பி'யும், 'வெறும் பணமும்' மிகச் சாதாரண கதைகள். இந்தகதைகள் குமுதம் ஒருபக்கக் கதையில் வரக்கூடிய விடயங்களை கொஞ்சம் எஸ்.ரா தன் 'ஸ்டைல் முகப்பூச்சு' பூசி எழுதியிருக்கின்றார். இதையெல்லாம் நல்ல கதைகள் என்று கூறினோம் என்றால் உபபாண்டவம், யாமம், பால்யநதி போன்ற நாவல்/சிறுகதைத் தொகுப்பு எழுதிய எஸ்.ராவையே அவமானப்படுத்துவது போலாகிவிடும்.
இந்த விடயங்களுக்கு அப்பால், திரும்பச் திரும்பச் சொல்வது, நம்மிடையே வெளிப்படையாகப் பேசப்படாத விமர்சன மரபுதான். இன்று ஆகக்குறைந்து உள்வட்டங்களைத் தாண்டி, 'நண்பர்'களாக நமக்கு இருக்கின்றார்களே என்ற அச்சந்தாண்டி வெளிப்படையாக விமர்சித்து எழுதுவது முக்கியமானது. அதுவே ஒரு படைப்பாளியின் வளர்ச்சிக்கு உதவிபுரியும் என்ற புரிதல் நமக்கு வேண்டியிருக்கின்றது. அந்த விமர்சனப் பண்பு வளர அல்லது துணிவாக எழுத்தில் வைக்க நமக்கு நிறைய வாசிப்புத் தேவை. எனெனில் அதுவே, வைக்கும் விமர்சனத்திற்குத் திரும்ப வைக்கப்படும் எந்த எதிர்வினைகளையும் நேரடியாகச் சந்திக்கும் தைரியத்தையும் நமக்குத் தரும்.
(Nov, 2017)

0 comments: