கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ நாவல் குறித்து - Shathir Ahamed

Wednesday, December 30, 2020

பிரபஞ்சன் நினைவுப்பரிசு பெற்ற நாவல் (என்று Sabry நாநா கூற கட்டாயம் வாசிக்கிறேன் என்று)வாங்கிவந்தேன். பிரபஞ்சனின் என்ற பெயர் கூறுகையில் ஞாபகம் வருவது “இவ்வளவுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்ற வரிகள் தான். மனதை நெகிழ்சியுற வைக்கும் எழுத்துக்களில் பிரபஞ்சனுடையதும் என் பிரையோரிட்டி வரிசையில் வந்துவிடும். அதே நெகிழ்ச்சியை தரவல்ல ஓர் படைப்பாகத்தான் ‘மெக்ஸிக்கோ’ வும் அமையப்பெற்றிருக்கிறது. Enrique iglesias,Murakami,Bukowski,Zedd,Passenger என என் மனதுடன் ஒன்றிய பலரையும் எழுத்தாளர் கையாண்ட விதம் அபாரம்.

பயணக்குறிப்பாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்ற வாசகனின் ஏக்கத்தை பூர்த்தியாக்கிவிட்டார் எழுத்தாளர். முக்கியமாக புத்தரைப்பற்றியான வசனக்குறிப்புகள் அன்த்துமே fபெர்ஸ்ட் கிளாஸ்.
//இன்னும் சொல்லப்போனால் புத்தர் தன்னை பின்தொடரவேண்டும் என்று எவரையும் வலியுறுத்தியவருமில்லை.கடவுள் என்ற சொல்லையே எந்தப் பொழுதிலும் பாவிக்க மறுதலித்த அவரை இன்று கடவுளாக்கியதுதான் மனிதர்கள் அவருக்குச் செய்த மிகப்பெரிய அவமானம்// என்றெல்லாம் எழுத ஒருவகைத் துணிச்சல் அவசியமாகிறது.
இடைக்கிடையே பெண்கள், வாழ்க்கை, திருமணம் என்ற தலைப்புகளில் இடம்பெறும் உரையாடல்கள் யதார்த்தத்துடன் ஒன்றித்துப்போகின்றன.விட்டுச்சென்ற பெண்ணின்மீதான மரியாதையைத்தொலைக்க கூடாது என்ற கருத்திலான வசனங்கள் கூட அழகுதான். வாழ்வில் அவர் சந்தித்த சில குடிகாரர்களை பற்றிய குறிப்பு புதிதல்ல,ஆனால் குறிப்பிட்ட முறைதான் புதிது. பிரிவின் வாதையை van Gogh மற்றும் Frida Kahlo உடன் சேர்த்துக்கூறியதும் நல்ல உத்திதான்.
கிளைமாக்ஸ் நன்றாகப் பொருந்திப்போயிருக்கிறது.இந்த நாவலைப்பற்றி சுருக்கமாக கூறுவதாயின்; வேலைசெய்து மூளை களைத்த பின் தேவைப்படும் விடுமுறையில் வாசிக்க ஏற்ற ஒரு மாஸ்டர் பீஸ்.

(Nov 28, 2020)
நன்றி: Shathir Ahamed

0 comments: