கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்

Thursday, February 25, 2021

இந்த நாவல் தகவல் தொழில்நுட்ப (IT) வேலையின் பின்புலத்தில் நிகழ்கிறது. இது கார்த்திக்கின் முதல்நாவல் என்றாலும் அவருக்குப் புனைவுக்குரிய அலுப்படைய வைக்காத, ஒரு நிதானமான மொழி கைவந்திருக்கின்றது. ஜடியில்தான் இத்தனை உளைச்சல்களும், பாதுகாப்பின்மைகளும், மற்றவரை இழுத்துவிழுத்தும் காழ்ப்புக்களும் இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் மற்ற எந்தத் தொழில்கள் எல்லாவற்றையும் விட தகவல் தொழில்நுட்பம் சடுதியாக எமக்குள் நுழைந்து பலவிதமான திறப்புக்களை அவிழ்த்துவிட அதை எப்படி எதிர்நோக்குவது என்பதுதான் சிக்கலாயிருந்திருக்கின்றது.

எந்த ஒரு விடயமும் புதிதாக நுழையும்போது இப்படி பெரும் எழுச்சியையும், வீழ்ச்சியையும் சந்தித்து பிறகு சுதாகரித்துக்கொண்டு தன்னைக் காலத்தில் நிறுத்திக்கொள்ளும். மற்றத் தொழில்களில் இருப்பவர்க்கும் இப்படி மன அழுத்தங்கள், பணம் சம்பாதிக்கும் பேராசை போன்ற எல்லாமே இருக்கின்றன. அங்கே அது நிதானமாக கட்டம் கட்டமாக நிகழ்ந்திருக்கின்றது என்பதுதான் ஒரு சிறு வித்தியாசம். அதுபோலவே இன்றைய சமூக ஊடக வலைத்தளங்களில் எல்லாவற்றையும் பகிர்வதுபோல அப்போது இருக்கவில்லை. ஆகவே இப்போது நடப்பவை எல்லாம் நமக்கு உடனே உடனே தெரிந்துவிட இன்னும் அச்சந்தருவதாக நாளாந்த வாழ்வில் இவை சார்ந்த விடயங்கள் இருக்கின்றன.
இந்த நாவலில் வரும் நித்திலன் - மீரா உறவு நம் காலத்து உறவுச்சிக்கல்களுக்குச் சரியான உதாரணம். அத்துடன் மீராவின் பாத்திரமும் மிகக் கச்சிதமாக இங்கே விபரிக்கப்பட்டிருக்கின்றது. இன்றைய காலம் பெண்களுக்கு திறந்துவைத்திருக்கும் வெளிகளை, மரபுகள் இழைய இழைய வளர்க்கவைக்கப்படுகின்ற ஆண்களால் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியாது. நேசம் இருந்தாலும் பெண் மீது அவனுக்குள் ஊட்டிவளர்க்கப்பட்ட சந்தேகம் - முக்கியமாய் ஜடி பின்புலம் சார்ந்து - பெரும் பேயாக அவள் நடத்தைகள் ஒவ்வொன்றின் மீது படர்கின்றது. ஆனால் அது ஆண்கள் வளர்க்கும் மாயையே தவிர, பெண் எப்போதும் தனக்குப் பிடித்த ஒரு ஆணுக்கு எல்லாவற்றையும் வழங்கத் தயாராகவே இருக்கின்றாள். நேசம் வற்றிப்போகும் வரையாவது அதை அனுபவிக்க எந்த ஆணும் தயாராக இல்லை என்பதுதான் நம் காலத்தைய சோகம். அவன் அந்த அருமையான நாட்களையும் இல்லாத எதிர்காலத்துக்காய் வீணாக்கி விட்டு, பிறகு காலங்கடந்து பெண்ணுக்காய் ஏங்கிக்கொண்டிருக்கின்றான். இந்த நாவல் முடிந்தாலும் இதன் இன்னொரு பகுதியாக நித்திலன்/மீரா/வேணு/அர்ச்சனா/சத்தியமூர்த்தி/சாஜூ போன்றவர்களுக்கு பிறகு என்ன நடந்திருக்குமென கார்த்திக் எழுதினால் சுவாரசியமாக இருக்கும். இந்த நாவலை வாசித்தபோது, ஏழெட்டு வருடங்களுக்கு முன் வந்த விநாயகமுருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' ஞாபகம் வந்தது. அதே பின்னணியில், ஏன் கிட்டத்தட்ட பல சம்பவங்கள் அந்த நாவலை நினைவூட்டக்கூடியதாகவே இருக்கின்றது. ஆனால் அதில் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்ற பரபரப்பு இருந்தது போலில்லாமல், இதில் ஒரு நிதானமான கதைசொல்லல் சாத்தியமாகியிருக்கின்றது. அதுவே இதை வாசிக்கச் சுவாரசியமாக்கின்றது.
...............................

(Oct 23, 2020)

0 comments: