கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

*Well i din kow old ppl can be like diz

Tuesday, November 16, 2004

இன்று காலமை எழும்பி வெளியே வெளிக்கிட்டபோது, மாலையில் சிலவிடயங்களை வலைப்பதிவிடவேண்டும் என்று எண்ணியிருந்தேன். பிறகு மதியப்பொழுதில் ஒரு தோழியுடன் இணையத்தில் ஒரு விடயம் பேசியபின் சோம்பலில்லாமல் இரவிற்குள் பதிப்பித்திடவேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். இந்தபத்தியின் முடிவில் தோழி சொன்ன விசயத்தைச் சொல்கிறேன்.

நான் இப்போது எழுதப்போகிற விசயங்கள் சிலவருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை. இருபத்துநான்கு மணித்தியாலமும் பேசக்கூடிய மூன்று நான்கு வானொலிகளும், பத்திற்கு மேற்பட்ட வாரப்பத்திரிகைகளும் இங்கே வருகிறதென்றால், ஊடகங்கள் எவ்வாறு எங்கடை சனங்களால் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்று சொல்லித் தெரியத்தேவையில்லை. அந்த செல்வாக்கில், அங்கே பணிபுரிகின்றவர்வர்கள் தங்களை மாமனிதர்களாக ஆக்கி ஆடும் ஆட்டங்கள்தான் சகிக்கமுடியாதன. பாலியல் சுரண்டல்கள் தெரியாதவிதமாக நடைபெறுவதும் அதுவும் நல்ல கிழவயசில் இருப்பவர்கள் இந்தச்சேஷ்டைகள் செய்யும்போது எதுவுமே செய்ய இயலாது பெண்கள் தவிர்ப்பதையும் நான் பலசமயங்களில் கண்டிருக்கிறேன்.

எனது தோழி ஒருவர் ஒரு ஊடகத்தில் பகுதிநேரமாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அங்கே ஒரு வயசுபோன ஒருவர் வேலைசெய்துகொண்டிருந்தார். அவருக்கு எனது தோழியின் வயசில் ஒரு மகள் இருப்பதாய் கேள்விப்பட்டிருந்தேன். படிப்பின் நிமிர்த்தமாய் தொலைதூரத்தில் இருந்த நான் தோழியைச் சந்திக்க அவர் வேலைசெய்யும் இடத்திற்கே செல்வேன். என் கண்முன்னாலேயே அந்த வயசுபோனவர் தோழியைத் தொட முயற்சிப்பதுவும், தொலைபேசியை எடுப்பது மாதிரி கரங்களைப் பற்றுவதாயும் abuse செய்துகொண்டிருந்தார். நான் இதை அவதானித்துவிட்டு தோழியைக்கூப்பிட்டு, 'அவர் உங்களை abuse செய்கிறார் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே?' என்று கேட்க, 'அய்யோ அவர் அப்படி நினைத்துச்செய்திருக்கமாட்டார்' என்றார். 'இதுவா முதல்தடவை' என்று கேட்க 'இல்லை முந்தியும் இப்படி முயற்சித்திருக்கிறார்' என்றார் தோழி. நான் எவ்வளவு எடுத்துக்கூறியும் தோழி விளங்கிக்கொள்ளவில்லை. பிறகுதான் எனக்கு ஒருவிடயம் உறைத்தது. நாம் பெரியோரை மதிக்கவேண்டும், அவர்கள் சொல் கேட்கவேண்டும் என்று போதிக்கப்பட்டு வந்தவர்கள். ஆகவே ஒரு வயசுபோனவர் sexual abuse செய்யப்பார்க்கிறார் என்பதை நமது மனம் உடனே ஏற்கமாட்டாது என்று. நல்லவேளையாக அந்தத்தோழி விரைவிலேயே வேலையை விட்டுவிட்டு பிறகு உயர்கல்வி படிக்கப்போய்விட்டார்.

இன்னொரு சம்பவம். என்னொடு படித்துக்கொண்டிருந்தவருக்கு நிகழ்ந்தது. ஏதோ ஒரு ஊடகம் புதிதாய் தொடங்குகிறார்களாம். நேர்முகத்தேர்விற்கு போகப்போகிறேன் என்று எனக்கு சொன்னார். சில நாள்கள் தொடர்ந்து அந்த ஊடகத்திற்கு சென்றார். திடீரென ஒருநாள் அந்தவேலையை விட்டுவிட்டேன் என்று முகம்வாடிசொன்னார். என்ன காரணம் என்று கேட்டபோது சொல்ல மறுத்தவர், மிகவும் உறுக்கிக் கேட்டபோது விசயத்தைச் சொன்னார். வேலையைப் பழக்கிறேன் பேர்வழி என்று தோழியை தொட முயற்சித்திருக்கிறார் அந்த ஊடகத்தின் பொறுப்பாளர். தோழி ஆத்திரத்தில் 'நாயே என்னைத்தொட்டாய் என்றால் அடிப்பேனாடா' என்று கோபமாய் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். இத்தனைக்கும் பொறுப்பாளருக்கு திருமணமாகி தோளுக்குமேல் வளர்ந்தபிள்ளைகளும் இருக்கிறார்கள்.

இன்னொரு சம்பவம் ஒன்று. இவரும் எனது தோழிதான். ஊடகம் ஒன்றில்தான் வேலைசெய்தவர். ஒருமுறை இவரது கணனி பழுதாகிப்போய்விட, திருத்துவதற்காய் என்னையும் அழைத்துசென்றிருந்தார். திருத்தபவர் அவ்வவ்போது ஒரு வானொலியில் நிகழ்ச்சிகள் கொடுப்பவர். அவரது தமிழ் எங்கடைமாதிரி இருக்காது. கடைக்கு கணணியுடன் போனதுதான் தாமதம், மனுசன் நான் ஒருத்தன் நிற்பதுகூடத் தெரியாமல், 'என்ன பிள்ளை make-up கூடப்போட்டிட்டாய் போல' என்று கன்னத்தைத் தடவித்தொடங்கிவிட்டது. எனக்கு கோபம் வந்திட்டுது. 'அதுக்கு உங்களுக்கென்ன?' என்றேன். பிறகு தோழிதான் மெல்லிய குரலில் 'கோபப்படாதே இப்ப ஏதும் சொன்னால் இந்த மனுசன் கண்டகிண்ட கதையெல்லாம் பரப்பிவிடும்' என்று சொன்னாள்.

மேலே கூறின சம்பவங்கள் அனைத்திலும் வயது முதிர்ந்தவர்கள்தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பெடியன்களின் abuseல் கவனமாய் இருக்கின்ற பெண்கள் அதிகம் சறுக்கிப்போவது இந்த இடத்தில்தான். எனென்றால், பெரியவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, abuse செய்யமாட்டார்கள் என்று பெண்களுக்கு கற்பிக்கப்பட்டு அது அடிமனதில் தங்கிவிட்டிருக்கிறது. எல்லாவற்றிலும் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் தாங்கள் இப்படி வயதுபோன மனுசன்களால் abuse செய்யப்படுகிறோம் என்பதை அறியாமல், வாழ்வில் பெண்கள் நகர்ந்துகொண்டிருப்பதேதான். (இவ்வளவும் நானறிய நடந்தவை, நானறியாமல் எத்தனை நடைபெற்றதோ/ நடைபெறுகிறதோ?)

சரி இன்று நடந்த சம்பவத்திற்கு வருவோம். மதியவுணவுநேரத்தில் தொலைதூரத்தில் இருக்கும் தோழியுடன் இணையத்தில் உரையாடிக்கொண்டிருந்தேன். இன்றைக்கு 'எனக்கு ஒரு கடினமான் நாள்' என்றாள். ஏன் என்றபோது, அது பெரிய கதையென்றாள். அவள் இன்று காலை வளாகம் செல்வதற்காய் பஸ்சிற்காய் காத்திருந்திருக்கிறாள். அவள் பஞ்சாபி இனத்தவள். அங்கே ஒரு வயசுபோன சிங் ஒருவர் வந்திருக்கிறார். இவளிடம் இந்தியாவில் எந்த இடத்தைச் சேர்ந்தவள் என்று கேட்டிருக்கிறார். பிறகு நகரம், தெரு என்றெல்லாம் கேட்க, தானும் அவளது இடத்திற்கு அருகில்தான் என்று சொல்லியிருக்கிறது கிழடு. பிறகு பஸ் வர, அந்தக்கிழவனும் இவளுக்கு அருகில் அமர்ந்து இவள் போற இடத்திற்குத்தான் தானும் போவதாய் சொல்லியிருக்கிறார். பிறகு இவளது வீட்டு முகவரி கேட்க இவள் நல்லவேளை கொடுக்கவில்லை. பிறகு நீ என்ரை மகளைப்போல இருக்கிறாய், நல்லாய் ஆங்கிலம் பேசுகிறாய், கெட்டிக்காரி என்று ஏதோ ஏதோ எல்லாம் சொல்லியபடி, பஸ்சினுள் hugs பண்ணத்தொடங்கிவிட்டார். இதைக்கேட்டுக்கொண்டிருந்த நான் இடைமறித்து, அவர் உன்னை abuse செய்திருக்கிறார், நீ மற்றவர்களிடம் சொல்லியிருக்கலாம்தானே என்று கேட்டேன். அவள் சொன்னாள், 'Are you crazy? He is just an old man'. பிறகு இப்படித் தொடர்ந்து torture செய்திருக்கிறது கிழடு. இறுதியாய் தன்ரை இடம் வந்திட்டு என்று சொல்லி கிழடு hug செய்துவிட்டு, kiss பண்ணியிருக்கிறது. இவள் நல்லவேளையாக திரும்பியதுதால் அந்த tortureல் இருந்து ஓரளவு தப்பிவிட்டாள். இவள் இதையெல்லாம் இப்படி எல்லாம் சொன்னாப்பிறகும், நான் அவளிடம், For sure, the old man abused you என்று பலமுறை கூறியதுபோதும் அவள் அதை ஏற்றுக்கொள்ளாமல், அவர் mentally challenge யாய் இருக்கக்கூடும் என்று சொல்லிக்கொண்டேயிருந்தாள். இல்லை இப்படி abuse செய்பவர்கள், அப்படித்தான் நடிப்பார்கள், பிடிபடாமல் இருக்க என்றும் கூறிப்பார்த்தேன். அவள் அதையும் ஏற்றுக்கொள்வதாய் இல்லை. கடைசியாக நான் சொன்னேன், If you don't beleive,the old men can't abuse, then read the yesterday news. என்று சொல்லிவிட்டு ஒரு 75 வயது முதியவர், 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காய் கைதுசெய்யப்பட்டதை கேள்விப்பட்டாயா என்றேன். அதன் பிறகுதான் அவள், இனி தானும் வயது போனவரிகளிடம் கவனமாயிருக்கவேண்டும் என்று சொன்னாள். இதை எழுதிக்கொண்டிருந்த இந்தக்கணத்தில் அவளோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன். அவள் தாயிடம் இதைப்பகிர்ந்துகொண்டபோது அவளது தாயும், நான் சொன்னதைத்தான் சொன்னதாய் சொன்னாள். ஆனால் தனது பெயரில் what a bad day என்பதை அவள் இணைத்தபடிதான் உரையாடுகிறாள். காயங்கள் இலகுவில் மறக்கமுடியாதன.

* - The heading was taken from my friends' conversation

4 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

glad to c u in blog world.

11/17/2004 03:44:00 PM
இளங்கோ-டிசே said...

Hi Ravi,
Nice to see you here after a long time. Hope we both will have contact in blogs.

11/17/2004 10:12:00 PM
Anonymous said...

டி.சே
உங்கள் பத்தி படித்தேன். பூஜை அறையில் கரடி போல் ஏனையா நீங்கள். தங்கள் தோழி(கள்) களை தாங்கள் மிகவும் குறைத்து எடை போட்டு விட்டீர்கள் என்று நம்புகின்றேன். புலம்பெயர்ந்து வாழும்(காலம் தெரியவில்லை) எம் இளம் பெண்களுக்கு ஒரு ஆண் தொடும் போது அதன் அர்த்தம் நன்றாகவே புரியும். தாங்கள் எந்தக் காலத்தில் இருக்கின்றீர்கள். தங்கள் நண்பி(கள்) அந்த ஆண்களின் தொடுகையை விரும்புகின்றார்கள். அது தங்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக புரியாதமாதிரியும் நடிக்கின்றார்கள். தாங்கள் எதற்குச் சும்மா நாயகன் போல் அவர்களைக் காப்பதாய் கற்பனை செய்துகொண்டு

தமிழச்சி
thamilachi2003@yahoo.ca

1/21/2005 12:28:00 PM
கறுப்பி said...
This comment has been removed by a blog administrator.