கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாழ்விக்க வந்த தாயே வாழ்வழித்தாய்

Tuesday, January 11, 2005

இந்தப்பாடலை CTR (www.ctr24.com) வானொலியில் இணையத்தின் மூலம் கேட்டேன். ட்சூனாமியின் ஈழத்தில் (அல்லது புலம்பெயர்ந்த தேசத்தில்) வெளியிடப்பட்ட இசைத்தட்டிலிருந்து ஒலிபரப்பப்பட்ட பாடல் என்று நினைக்கிறேன். மிகவும் உருக்கமான குரலிலும், வலிமையான வசனத்திலும் இந்தப் பாடல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்த சூழலில் ட்சூனாமியின் நேரடியான பாதிப்பு இல்லாது, சொந்த தேசத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தை மறக்கடிக்கும் பல்வேறு சூழ்நிலைக்காரணிகள் இருக்கும் இந்தச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான பாடல்கள்/செய்திகள்/சம்பாஷாணைகள் தாயகத்தை நோக்கி நம் மனதைத் நிச்சயம் திருப்பும்.

கடந்த சனிக்கிழமை ஒன்ராரியோ மாநகரசபையின் திறந்தவெளி அரங்கில், ஈரநினைவுகளின் ஒன்று கூடல் நட்ந்து முடிந்தது. ஏற்கனவே சனிக்கிழமை கனடாவில் ட்சூனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான துக்கதினமாய் பிரகடனப்படுத்தப்பட்டு, மத்திய மாநில அரசாங்கக்கட்டடங்களில் நினைவாராதனைகள் நிகழ்ந்தன. முக்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள் எல்லாம் கனடா தமிழர் பேரவையால் செய்யப்பட்ட நிகழ்வில் பங்குபெற்றியிருந்தனர். Jack Leyton (New Democratic Party leader) புலிகளின் கட்டுப்பாடுகளிலுள்ள பகுதியில் நேரடியாக பார்வையிட அனுமதி மறுக்கப்பட்ட ஐ.நா செயலாளர் நாயகம் கோ·பி அனான் குறித்த செய்தியையும், இலங்கை அரசாங்கத்தையும் கண்டித்துப்பேசியிருந்தார். (பொங்கு தமிழ் நிகழ்ந்தபோதும், ஏனைய அரசியல்வாதிகள் எல்லாம் சுருண்டு கிடந்தபோது, எவ்விதத்தயக்கமில்லாது வந்து ஈழத்தமிழர்களின் சமாதான முயற்சிகளுக்கான முழுஆதரவை Jack Layton தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்கது). ஈர நினைவுகளின் ஒன்றுகூடலில் இலங்கையில் வெளிநாட்டு உதவிகள் சரியாக பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக கனடீய பாராளுமன்ற மற்றும் அனைத்து மட்டங்களிலுள்ள அமைச்சர்களுக்கு தமிழ் மாணவர்களால் முன்வைக்கப்பட்டது.

ஈழ இலக்கியவாதிகள் பற்றி விமர்சிக்க பல காரணங்கள் இருந்தாலும் ஆபத்து/உதவி என்று வரும்போது நீளும் அவரது கரங்கள் நம்பிக்கையளிக்கக் கூடியவை. அய்ரோப்பாவில் இலக்கியச்சந்திப்பு நண்பர்கள் நிதிசேகரித்துக்கொண்டிருப்பதுவும், கனடாவில் அண்மையில் வெளியிடப்பட்ட என்.நடேசனின் புத்தகவெளியீட்டில் புத்தகம் விற்று வந்த பணம் முழுதும் ட்சூனாமி நன்கோடைக்கு அளிக்கப்பட்டதும் இதமான செய்திகளாகும். ஈரநினைகளின் ஒன்றுகூடலிற்கு சேரன் போன்றவர்கள் எல்லாம் பங்கேற்றதை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இலக்கியவாதிகள் என்றால் சும்மா எழுத்தோடு மட்டும் வாளாவிருப்பவர்கள் என்ற பிரேமிற்குள் நமது எழுத்தாளர்கள் இல்லை என்பது தெம்பூட்டக்கூடியதாகவிருந்தது.

கனடாவைப் பற்றியும் சிலவற்றைச் சொல்லவேண்டும். ட்சூனாமிக்காய் 4 மில்லியனின் தொடங்கிய நிதி 425மில்லியன் வரை உயர்ந்திருப்பதில் இங்குள்ள மக்களின் பரந்த இதயம் தெரிகிறது. ஈரநினைவுகளின் ஒன்றுகூடலில் தோழி ஒருவர் சொன்னமாதிரி, கனடாவின் அகண்ட நிலத்தைப்போல மக்களின் மனதும் பரந்துவிரிந்தது என்பது உண்மைதான். அமைச்சர்கள், பிரதம மந்திரி என்று எல்லோரும் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களிற்கு செல்ல ஆயத்தமாவதிலும், கனடா நாட்டு நிவாரணம் சரியாக பகிர்ந்தளிக்கப்படவேண்டுமென்பதில் பிடிவாதமாய் இருப்பதிலும். நம்பிக்கையின் மெல்லிய ஒளிக்கீற்று தெரிகிறது. வேலைக்கு போனபோது உனது தாயகத்தில் நிகழ்ந்த பேரழிவிற்கு வருந்துவதாய் ஏதோ சொந்த உறவுகள் போல ஆறுதல்களைச் சொன்ன மனிதர்களைப் பார்க்கையிலும், தனது நண்பி இறந்துவிட்டா அவாவின் funeralற்கு போகோணும், எண்டாலும் உங்கட நாட்டில் நடந்தது மிகவும் கோரம். சின்ன பிள்ளைகள் எல்லாம் கடலோடு போய்விட்டார்கள் என்று ஒரு co-worker சொன்னபோதும் எனக்கும் நெஞ்சு கனத்தது. இந்த நாட்டோடு ஒட்டமுடியாது என்று பல நூறு காரணங்கள் சொல்லி விமர்சிக்கும் என்னைப்போன்றவர்களை எதுவும் சொல்லவிடாமல் மனதைக் கலங்க வைக்கும் சில தருணங்களில் இதுவும் ஒன்று.

2 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

DJ,

vaNakkam!

ungaLukku oru mail pOttanaan. kidaichchathaa endru theriyavillai.

ennudaiya mathygrps at gmail dot com muhavarikku oru vari ezutha mudiyumaa? naan pathil pOdukiren.

natpudan,
Mathy Kandasamy

1/12/2005 08:25:00 AM
ROSAVASANTH said...

I have also sent a mail. Pl check! anbuLLa vasanth

1/13/2005 11:26:00 AM