இ.ஜீவகாருண்யனின் 'தேடலும் விமர்சனங்களும்..' நூலை அது
வெளிவந்த காலத்தில் (2009) மேலோட்டமாக வாசித்திருக்க வேண்டும். பின்னர்
இப்போது அதை முழுமையாக வாசித்துவிட்டு நண்பர் எமிலைத் தொடர்புகொண்டு
ஜீவகாருண்யன் இதில் எழுதுவதாகச் சொன்ன 'மு.த(ளையசிங்கம்) - ஒரு நோக்கு'
என்ற நூலை எழுதிவிட்டாரா, அப்படி எழுதியிருந்தால் அதை எப்படியாவது நாங்கள்
பதிப்பிக்க வேண்டும் எனச் சொன்னேன்.
ஜீவகாருண்யனின் பிற்காலத்தைய ஆக்கங்களில் அநேகம் எமில் ஆசிரியராக இருக்கும் 'கலைமுகம்' இதழில் வெளிவந்திருக்கின்றன. ஜீவகாருண்யனுக்கு இப்போது வயது எண்பதுகளைத் தாண்டிவிட்டது, எனவே எதையும் எழுத முடியாதிருக்கின்றார் என்று எமில் சொல்லியிருந்தார்.
ஜீவகாருண்யன், மு.த(ளையசிங்கம்), சு.வி(ல்வரத்தினம்), மு.பொ(ன்னம்பலம்), எம்.கே.மகாலிங்கம் போன்றவர்களுடன் 70/80களில் நெருக்கமாகப் பழகிய ஒருவர். மு.தவின் 'சர்வ மத சங்க' பிரார்த்தனை/தியான வகுப்பில் கலந்து கொண்டவர். அந்தவகையில் இன்றைக்கு அந்தப் பரம்பரையில் இறுதியாட்களாக ஜீவகாருண்யனும், மகாலிங்கமும் மட்டுமே இருக்கின்றனர் என நினைக்கின்றேன்.
ஜீவகாருண்யனின் பிற்காலத்தைய ஆக்கங்களில் அநேகம் எமில் ஆசிரியராக இருக்கும் 'கலைமுகம்' இதழில் வெளிவந்திருக்கின்றன. ஜீவகாருண்யனுக்கு இப்போது வயது எண்பதுகளைத் தாண்டிவிட்டது, எனவே எதையும் எழுத முடியாதிருக்கின்றார் என்று எமில் சொல்லியிருந்தார்.
ஜீவகாருண்யன், மு.த(ளையசிங்கம்), சு.வி(ல்வரத்தினம்), மு.பொ(ன்னம்பலம்), எம்.கே.மகாலிங்கம் போன்றவர்களுடன் 70/80களில் நெருக்கமாகப் பழகிய ஒருவர். மு.தவின் 'சர்வ மத சங்க' பிரார்த்தனை/தியான வகுப்பில் கலந்து கொண்டவர். அந்தவகையில் இன்றைக்கு அந்தப் பரம்பரையில் இறுதியாட்களாக ஜீவகாருண்யனும், மகாலிங்கமும் மட்டுமே இருக்கின்றனர் என நினைக்கின்றேன்.

இன்றைக்குக் கூட மு.தளையசிங்கம் 1973 மரணமாகும்வரை அந்த 'சர்வமத சங்க' விடயங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றே நம்புகின்றேன். ஒரு படைப்பாளியை அவரின் ஆக்கங்கள் மட்டுமில்லை, அவரைப் பற்றிப் பேசும் சிறந்த விமர்சகர்கள்/வாசகர்கள் கிடைப்பதும், அவர்கள் அந்தப் படைப்பாளியையும், படைப்புக்களையும் தொடர்ந்து பேசும்போது மட்டுமே அப்படைப்பாளி காலத்தில் முன் நிறுத்தப்படுவார் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும். மு.தளையசிங்கத்தை முன்னிறுத்த அவரின் சகோதரர் மு.பொன்னம்பலம், சு.வில்வரத்தினம் போன்றோர் இருந்திருக்கின்றனர். எஸ்.பொ(ன்னுத்துரை)வுக்கு அவரின் அணுக்க நண்பரான ரஹ்மான் அமைந்தது அவரின் நல்லூழ் எனச் சொல்லவேண்டும்.
இந்நூலிலும் ஜீவகாருண்யன், மு.தவைப் போன்ற ஓர் ஆளுமையை தன் வாழ்நாளில் சந்தித்தில்லை என்று சொல்கின்றார். 'முதல் சந்திப்பின்போது பிரமித்துப் போனேன். உண்மையும் உறுதியும் வீரமும் கொன்ட அப்படியான ஒருவர் 'மனித வடிவில்' இருக்கமுடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது. கண்களிலே ஒளி, பேச்சிலே தீட்சண்யம், கருத்துகளில் தெளிவு, முகத்திலே ஒரு பிரகாசம். இந்த உலகினில் எதையோ சாதிக்கப் பிறந்தவராய் என்னுள் பிரமாண்டத் தோற்றத்தை எழுப்பினார் என் முதல் சந்திப்பிலே' என்று எழுதிச் செல்கிறார்.
அப்படி மு.தவிற்குப் பிறகு எவ்வித விமர்சனமும் இன்றி ஜீவகாருண்யன் ஏற்றுக்கொண்ட எழுத்தாளர் சுந்தர ராமசாமி. சு.ராவுக்கு எழுதும் கடிதத்தில் கூட 'நான் முதன்முதலில் சந்தித்த உண்மையான மனிதன் மு.தளையசிங்கம். நான் இன்றுவரை சந்தித்த உண்மையான மனிதனும் அவர்தான், இன்னுமொருவரை அப்படித் தேடிக் கொண்டிருக்கின்றேன். அவர் கிடைப்பாரா?' என்று கூட மு.தவை குறிப்பிட்டிருக்கின்றார்.
ஜீவகாருண்யனின்
எழுதவும், அவரின் எழுத்துக்களைத் திருத்திய ஒருவராக அ.யேசுராசா
இருப்பதையும், அ.யேசுராவின் எழுத்துக்களுக்கு எதிராக அன்றைய காலங்களில்
எழுதப்பட்ட விமர்சனங்களுக்கு திருப்பி பதில் கொடுக்கும் ஒரு தீவிர
வாசகராகவும் ஜீவகாருண்யன் இருந்திருப்பதை இந்நூலில் இருக்கும்
கட்டுரைகளினூடாக பார்க்க முடியும்.
இதில் ஜீவகாருண்யன் சு.வில்வரத்தினம் மறைவையொட்டி எழுதும் நீள்கட்டுரையும், சண்முகம் சிவலிங்கத்தின் 'நீர் வளையங்கள்' தொகுப்பை முன்வைத்து எழுதிய வாசிப்பும் முக்கியமானவை.
ஏற்கனவே குறிப்பிட்டமாதிரி படைப்பாளியின் படைப்புக்கள் மட்டுமல்ல, அவரோடு ஊடாடிய மற்றவர்களின் அனுபவங்களும் இன்னும் செழுமையை ஒரு படைப்பாளிக்குக் கொடுக்கக் கூடுமென்பதற்கு, இந்த நூலில் ஜீவகாருண்யன் சு.வி, சசி போன்றவர்களின் படைப்புக்களினூடு அவர்களுடனான அனுபவங்களைப் பேசுவதும் குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சு.வில்வரத்தினம் எந்தந்த காலகட்டத்தில் எந்தந்த அவரது கவிதை நூல்களை வெளியிட்டார் என்பதும், சசியுடனான ரயில் பயணத்தில், யாரோ ஒருவர் இவர்களின் இருக்கையை எடுத்துவிட, அவரை நெஞ்சுரத்துடன் எதிர்த்துப் பேசி இருக்கையை ஜீவகாருண்யனுக்குக் கொடுத்த சண்முகன் சிவலிங்கத்தின் ஓர்மத்தையும் இந்நூலை வாசிக்கையில் அறிய முடியும்.
ஏஜே என்கின்ற அருமையான மனிதரைப் பற்றியும், 'க.கைலாசபதியைப் பற்றிய எனது கட்டுரையை வாசித்துவிட்டு அவர் (ஏஜே) சொன்னார், கைலாசபதியைக் குறைகூறுவதற்கு நியாயங்கள் இருந்தாலும் அவரிடம் ஆக்கபூர்வமான பக்கம் ஒன்று இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளிலுள்ள அறிஞர்களை உள்வாங்கி, வரவழைத்துத் துரைத்தனமற்ற ஆரோக்கியமான அறிவு வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றார். எனவே அதை ஏற்றுக்கொண்டு, கைலாசபதியை முற்றாக ஒதுக்குவதாக இல்லாமல் எழுதினால் நல்லது என்றார்' என்று ஜீவகாருண்யன் எழுதுகின்றார்.
அதுவே ஜீவகாருண்யன் அவருக்கு இன்னொருமுனையில் இருந்த மார்க்சியரான சண்முகம் சிவலிங்கத்தைச் சந்திக்கின்றபோது 'எந்தத் தர்க்கத்தின்போதும், கருத்துகளுக்குப் பின்னாளுள்ள உன்னத மனிதனை நேசிக்க வேண்டும் என்று ஏ.ஜே.கனகரத்ன சொல்வார்' என்று நினைவுகூரவும் செய்கின்றார்.
இதில் ஜீவகாருண்யன் சு.வில்வரத்தினம் மறைவையொட்டி எழுதும் நீள்கட்டுரையும், சண்முகம் சிவலிங்கத்தின் 'நீர் வளையங்கள்' தொகுப்பை முன்வைத்து எழுதிய வாசிப்பும் முக்கியமானவை.
ஏற்கனவே குறிப்பிட்டமாதிரி படைப்பாளியின் படைப்புக்கள் மட்டுமல்ல, அவரோடு ஊடாடிய மற்றவர்களின் அனுபவங்களும் இன்னும் செழுமையை ஒரு படைப்பாளிக்குக் கொடுக்கக் கூடுமென்பதற்கு, இந்த நூலில் ஜீவகாருண்யன் சு.வி, சசி போன்றவர்களின் படைப்புக்களினூடு அவர்களுடனான அனுபவங்களைப் பேசுவதும் குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சு.வில்வரத்தினம் எந்தந்த காலகட்டத்தில் எந்தந்த அவரது கவிதை நூல்களை வெளியிட்டார் என்பதும், சசியுடனான ரயில் பயணத்தில், யாரோ ஒருவர் இவர்களின் இருக்கையை எடுத்துவிட, அவரை நெஞ்சுரத்துடன் எதிர்த்துப் பேசி இருக்கையை ஜீவகாருண்யனுக்குக் கொடுத்த சண்முகன் சிவலிங்கத்தின் ஓர்மத்தையும் இந்நூலை வாசிக்கையில் அறிய முடியும்.
ஏஜே என்கின்ற அருமையான மனிதரைப் பற்றியும், 'க.கைலாசபதியைப் பற்றிய எனது கட்டுரையை வாசித்துவிட்டு அவர் (ஏஜே) சொன்னார், கைலாசபதியைக் குறைகூறுவதற்கு நியாயங்கள் இருந்தாலும் அவரிடம் ஆக்கபூர்வமான பக்கம் ஒன்று இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளிலுள்ள அறிஞர்களை உள்வாங்கி, வரவழைத்துத் துரைத்தனமற்ற ஆரோக்கியமான அறிவு வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றார். எனவே அதை ஏற்றுக்கொண்டு, கைலாசபதியை முற்றாக ஒதுக்குவதாக இல்லாமல் எழுதினால் நல்லது என்றார்' என்று ஜீவகாருண்யன் எழுதுகின்றார்.
அதுவே ஜீவகாருண்யன் அவருக்கு இன்னொருமுனையில் இருந்த மார்க்சியரான சண்முகம் சிவலிங்கத்தைச் சந்திக்கின்றபோது 'எந்தத் தர்க்கத்தின்போதும், கருத்துகளுக்குப் பின்னாளுள்ள உன்னத மனிதனை நேசிக்க வேண்டும் என்று ஏ.ஜே.கனகரத்ன சொல்வார்' என்று நினைவுகூரவும் செய்கின்றார்.
அதுபோலவே சுந்தர ராமசாமியை நிராகரித்து ஒரு கட்டுரையை யதீந்திரா எழுதுகின்றபோது அதற்கு நிரம்பிய தரவுகளோடு சுந்தர ராமசாமியின் ஆளுமையை ஒரு கட்டுரையினூடு நிரூபிக்கவும் செய்கிறார்.
ஜீவகாருண்யன் அவருக்கிருந்த வாசிப்புகளுக்கும், அனுபவங்களுக்கும் ஏற்ப அவ்வளவு நிறைய எழுதியவரல்ல. ஆனால் கொஞ்சமாக எழுதினாலும் காத்திரமாகவே எழுதியிருக்கின்றார். அவரின் சொந்தப்படைப்புக்கள் இதில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அதைத்தாண்டி அவரொரு சிறந்த வாசிப்பாளராகவும், அவருக்குப் பிடித்த எழுத்தாளர்களை கைவிடாத நல்லதொரு வாசகராகவும் இருந்திருக்கின்றார் என்பதையே இந்த நூல் ஒருவகையில் நிரூபிக்கின்றது.
ஜீவகாருண்யனைப் போன்றோரை இந்தத் தலைமுறையில் காண்பது அரிதென்பதால் அவரைப் போன்றோரை நாம் கவனப்படுத்த மட்டுமில்லை நாம் இப்படிப்பட்டவர்களை இந்தக்காலத்தில் உருவாக்கவும் வேண்டியிருக்கின்றது.
***

0 comments:
Post a Comment