கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

துயரில் மூழ்கிய பொழுதுகள்

Wednesday, December 29, 2004

இறுதியாய் கிடைக்கும் செய்திகளின்படி வடகிழக்குப்பகுதியில் அம்பாறையில்தான் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது. எம் கையே எமக்கு உதவி என்று அனுப்பப்படுகின்ற உதவிகள் கூட திசை திருப்பப்படுகின்ற செய்திகள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போலவிருக்கிறது.
........
ஆரம்பத்தில் திருகோணமலைக்கு அனுப்பப்படவிருந்த நிவாரணப்பொதிகளுடன் இருந்த கப்பலை திசைதிருப்பிய முயற்சி இறுதியில் தமிழ் எம்பி ஒருவரால் முறியடிக்கப்பட்டது. இன்று கூட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்கு மலையகத்திலிருந்து உதவிகளுடன் சென்ற லொறிகளை இராணுவம் தாங்கள் சொல்லும் இடங்களுக்குத்தான் அனுப்பவேண்டும் என்று கட்டளையிட்டதாக வானொலிச்செய்திகள் கூறுகின்றன. எனது உறவினர் இரண்டு லொறிகளை நிவாரணப்பணிகளுக்காய் கொழும்பில் மாணவர்களிடம் கொடுத்திருக்கின்றார். அதில் ஒரு லொறியை பொதிகளுடன் காலிக்குச் செல்லவேண்டுமென அரசாங்க அதிகாரிகள் கட்டளையிட்டிருக்கின்றார்கள். அத்துடன் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஓடிய லொறிகளை (கொடுத்தவர் இலவசமாகத்தான் சேவைக்கு கொடுத்தார்) சிங்கள விதானைமார்கள் தங்கள் பெயரில் பதிந்து அதற்கான கட்டணங்களை அறவிட்டிருக்கின்றார்கள். இன்னும் உதவிகள்/நிவாரணங்கள் எதுவுமே பாதிக்கப்பட்ட மக்களை எட்டவில்லை என்றுதான் அங்கிருந்து பேசும் நேரடியாகப்பேசும் மக்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அம்பாறையில் சிங்கள மக்கள்/முஸ்லிம் மக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அங்கே உதவிப்பொருட்களை அனுப்பினால் அது தமிழ் மக்களுக்கும் போயிவிடும் என்ற பயத்தில் பலவிதத்தில் இனவாதிகள் இடையூறு விளைவித்துக்கொண்டிருப்பதாய் புலிகளின் குரலிலும் கூறினார்கள். இடையிடையில் நம்பிக்கையூட்டும் சின்ன விசயங்களும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. குருணாகலிலிருந்து சிங்கள மக்கள் தங்கள் உதவிக்கரத்தை திருகோணமலைக்கு நீட்டியிருக்கின்றார்கள். உதவிய ஒரு சிங்களவர் சொன்னார், முந்தி எங்களுக்கு வெள்ளப்பெருக்கின்போது புலிகளும் வன்னிமக்களும் உதவினார்கள். அதை நாங்கள் நன்றியுடன் மனதில் இருத்தி வைத்திருந்தோம். இது நாங்கள் உதவுவதற்கான அரிய தருணம் என்றார்.

...............
இன்று வானொலியைக் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு கிறிஸ்தவ sister யாழிலிருந்து நேரடியாகப் பேசியிருந்தார். அவர் கற்பித்த பாடசாலை முற்றாக அழிந்துபோயிருக்கிறது. கற்ற மாணவர்களில் பத்திற்கு மேற்பட்ட சிறார்கள் இறந்திருக்கின்றார்கள். பேசுவதற்கு சற்றுமுன்கூட ஒரு சிறுமியைப் புதைத்துவிட்டுத்தான் பேசினார். அவர் வானலையில் சொன்ன இரண்டு விசயங்கள் முக்கியமானது. போர் என்றாலும் ஆகக்குறைந்தது கொஞ்ச உடுப்புக்களையும் கையிலிருக்கும் பணத்தையும் எடுத்துக்கொண்டாவது ஓட முடியும். ஆனால் இந்த அழிவு அப்படிப்பட்டதல்ல. பல ஆயிரம் மக்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டிருக்கிறார்கள், உயிரைத்தவிர. மரங்களில் தப்பியிருந்த பலர் ஆடைகளில்லாது கூட பல மணித்திலாயங்கள் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். எனவே புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அவர்களுக்கான உடனடித்தேவைகளை மட்டும் நிறைவேற்றுவதோடு மட்டுமில்லாமல், அவர்களது எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளையும் செய்யவேண்டும் என்று கேட்டிருந்தார். காயப்பட்டு மற்றும் தப்பியிருக்கும் அநேகர், எல்லாப் போய்விட்டது. இனி என்ன செய்வது?' என்ற மனப்பிறழ்வுடன் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மற்றது இந்த அனர்த்தத்தில் அதிகம் இறந்துபோனது குழ்ந்தைகள் மற்றும் சிறார்கள். இதனால் எங்கள் பிரதேசங்களிள் ஒரு generation gap வரும் அபாயம் வருமென்று கூறினார். உண்மைதானே.
........
இங்கும், CNN னிலிருந்து CBC (Canadian Broadcasting Cooperation) வரை எல்லோருக்கும் இலங்கையில் பாதிப்படைந்தது தெற்குப்பகுதி மட்டுந்தான். எல்லா video clipsம் அதைத்தான் காட்டுகின்றன. இது குறித்து CBC தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு பெண்மணி நேரடியாக அழைத்துக்கேட்டபோது, தங்களால் அங்கே போகமுடியாதுள்ளதால், வடகிழக்குப்பிரதேசங்களின் பாதிப்புப் பற்றி எதுவும் அறியமுடியாதிருக்கின்றது என்று கூறினார்களாம். அழைத்த பெண்மணியும் சளைக்காமல், நாங்கள் video clips எடுத்துத்தந்தால் ஒளிபரப்புவீர்களா என்று கேட்டபோது கிடைத்தால் செய்கிறோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், உண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்னரே தமிழ் தொலைக்காட்சியினரால் video clips & information எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டதாம். என்ன செய்வது இயற்கை மட்டுமல்ல, aftermathம் எங்களுக்குச் சதி செய்துகொண்டுதானிருக்கிறது.
........
ஒன்று மட்டும் புரிகிறது. எமக்கென்றொரு சட்டரீதியான அரசாங்கம் இல்லையென்றால் எவருமே எங்களைக் கவனிக்கப்போவதில்லை என்பதே. இன்னும் தெற்குப்பகுதியில் நடைபெறும் சம்பவங்கள், தமிழ்-சிங்கள உறவை மேம்படுத்துவதற்கு பதிலாக இன்னும் விரிசலடைவதற்குத்தான் வித்திடுவதாய் தோன்றுகிறது.

1 comments:

ROSAVASANTH said...

பத்ரி : நீங்கள் சொல்வதைப்போல என்ன வேண்டும், என்ன உடனடித் தேவை என்பதும் நேரடியாக TRO அமைப்பிடமிருந்துதான் வரவேண்டும். யாருக்காவது TRO அமைப்பின் முக்கியஸ்தர்களைத் தெரியுமா? நேரடி தொலைபேசித் தொடர்பு இதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
http://thoughtsintamil.blogspot.com/2004/12/blog-post_110430229635285558.html
பத்ரி கேட்டதற்கு அங்கே பதில் வராததால் இங்கே ஒட்டுகிறேன். நேரம் கிடைக்கும்போது பதில் சொல்லவும்

12/30/2004 12:54:00 AM