கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சக்கரவர்த்தி, ஷோபாசக்தி, சில அவதானங்கள்

Wednesday, February 02, 2005

புலம்பெயர்ந்து எழுதுகின்றவர்களில் என்னை அதிகம் வசீகரித்த படைப்பாளிகள் யார் என்றால் ஷோபாசக்தியையும், சக்கரவர்த்தியையும் தயங்காமல் உடனே சொல்வேன். படைப்புக்களில் மட்டுமில்லாது அவர்களின் பிற செயற்பாடுகளாலும் என் கவனத்தை ஈர்ந்தவர்கள் இந்த இருவரும். சக்கரவர்த்தி, யுத்தசந்நியாசம் என்ற கவிதைத் தொகுப்பையும், யுத்தத்தின் இரண்டாம் பாகம் என்ற சிறுகதைத் தொகுப்பும் எழுதியுள்ளார். யுத்தத்தைத் தின்போம் என்ற மூன்று கவிஞர்களின் கவிதைத் தொகுப்பிலும், இவரும் ஒரு படைப்பாளி. ஷோபாசக்தி, கொரில்லா, ம் என்ற இரண்டு நாவல்களையும், தேசத்துரோகி என்றொரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

சக்கரவர்த்தி முழக்கம் பத்திரிகைக்கு ஒருமுறை கொடுத்த நேர்காணல் இங்கே பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. வெள்ளாளர்களையும், ஆறுமுகநாவலர், இராமநாதன் என்ற சனாதனவாதிகளையும் கிழிகிழியென்று அந்த நேர்காணலில் கிழித்திருந்தார். இதற்கு எதிர்வினையாக, ஆறுமுகநாவலரை இந்துசமயத்தின் (?) காவலராய் இன்னொரு பத்திரிகையான முரசொலி புகழ்ந்து எழுத, சக்கரவர்த்தி அந்தப் பத்திரிகையிலே பொய்யான தகவல்களை எல்லாம் திரித்து வேறொரு பெயரில் எழுத அதையெதுவுமே சரிபார்க்காது அப்படியே அந்தப் பத்திரிகை பிரசுரித்திருந்தது. பிறகு சக்கரவர்த்தி தாந்தான் (கணபதிப்பிள்ளை என்ற பெயர் என்று நினைக்கின்றேன்) சும்மா பொய்யான தகவலகளுடன் எழுதினேன் என்று முழக்கத்தில் தெரியப்படுத்த, முரசொலி பத்திரிகை மூக்குடைந்து போய் செய்வதறியாது திகைத்து நின்றது. அதே மாதிரி, கனடாவிற்கு வந்த வைரமுத்துவின், கவியரங்கிலும் கவிதை பாடி சர்ச்சைக்குள்ளாகி, அடுத்த நாள் நடைபெற இருந்த கவிதா நிகழ்வும் நிறுத்தப்பட்டிருந்தது. கலகக்காரர்கள் என்று சொல்லில் மட்டுமில்லாது செயலில் செய்து காட்டியிருந்தது சக்கரவர்த்தியின் மீது மேலும் மதிப்பு ஏற்பட்டது.

ஷோபாசக்தியும், பிறரைப் போல நடுநிலையாளர்கள் என்று பிரகடனப்படுத்தி புலி எதிர்ப்பு மட்டும் செய்துகொண்டிருக்காதிருந்தது பிடித்திருந்தது. புலிகளை 100% எதிர்க்கிறேன். ஆனால் 200% இலங்கை அரசாங்கத்தின் பயங்காரவாதத்தை எதிர்க்கின்றேன் என்று சொன்னதோடு மட்டும் நில்லாமல், தனது பிரதிக்குள்ளேயும் இதை நிகழ்த்தியும் காட்டியவர்/காட்டுபவர். ஷோபாசக்தியின் நேர்காணல்களை வாசித்தபோது பிடித்த விடயம் என்னவென்றால், அவர் எந்தப்படைப்பாளியையும் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திட்டியதில்லை. ஏதோ ஒரு நேர்காணலில் உங்கள் நண்பர்கள் கற்சுறா, சாருநிவேதிதா எல்லாம் உங்கள் கதைகளை நிராகரிக்கின்றார்களே என்றபோது, அது அவரவர்களின் கருத்து. அவர்களுக்கு அதை முன்வைக்கும் சுதந்திரம் உண்டு என்று நிதானமாய்த்தான் பதிலளித்திருந்தார். அவன் என்னண்டு இப்படிச்சொல்லுவான் என்று முண்டாதட்டாதது ஆறுதலாயிருந்தது. புலம்பெயர் படைப்புக்களுக்கு ஒரு களமாய் இருந்த எக்ஸில் சஞ்சிகை, பிறகு எக்ஸில், உயிர்நிழல் என்று தமிழகத்து இலக்கிய அரசியலின் பாதிப்பில் தேய்ந்து கட்டெறும்பானது அநேகருக்குத் தெரிந்திருக்கும். நேர்காணலின்போது, பின்னோக்கி பார்க்கும்போது, சின்ன விடயத்தை பெரிதுபடுத்தி வீணாய் சண்டைபிடித்துவிட்டோம் என்று மனவருந்தி ஷோபாசக்தி இதுகுறித்து கூறியிருந்தார். ஷோபாசக்தி எக்ஸிலிருந்து பிரிந்து பிறகு அம்மாவில் கூட ஆசிரியர்களில் ஒருவராய் இருந்திருக்கிறார் என்று நினைக்கின்றேன்.

இவர்களின் அரசியல், படைப்புக்கள் என்று பலவிடயங்களில் எனக்கு முரண்பாடிருக்கும்போதும் (ஜெயமோகன் -சூர்யா தவிர அனைவரும் எங்கோ ஓரிடத்தில் வித்தியாசப்படவே செய்வோம்), இவர்களது படைப்புக்களும், ஆளுமைகளும் என்னை கவருகின்றன. சிலவேளைகளில் இவர்கள் தங்களவில் நேர்மையாக இருப்பதால் இன்னும் கூடுதல் ஒட்டு வருகின்றதோ என்றும் நினைப்பதுண்டு. இந்தச் சமயத்தில்தான், ஈழத்து இலக்கியம் பற்றிய பதிவுகள் விவாதத்தில் ஜெயமோகன், ஈழத்தில் யார் நல்ல சிறுகதைகள் எழுதுகின்றார்கள் என்ற பதிலுக்கு நான் சக்கரவர்த்தியையும் ஒரு உதாரணமாகச் சொல்லியிருந்தது ஞாபகம் வருகின்றது. அந்தப்பொழுதில் சக்கரவர்த்தியின் சில சிறுகதைகளை வாசித்திருந்தாலும், யுத்தத்தின் இரண்டாம் பாகம் தொகுப்பு வாசித்திருக்கவில்லை. அதையும் இப்போது வாசித்தபின் நான் சொன்னதில் தவறில்லை என்றுதான் நினைக்கின்றேன். ஆடு புலி புல்லுக்கட்டு, மற்றும் படுவான்கரையும் மிகச் சிறந்த படைப்புக்கள். வழமைபோல் ஜெயமோகன் அதை நிராகரித்திருந்தாலும் (அவருக்கு அ.முத்துலிங்கத்தைத் தவிர வேறொருவரும் கதை எழுதுவதில்லை என்று ஒரு நினைப்பு) அது குறித்து நான்(ம்) அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஜெயமோகனைப் போன்றவர்களுக்கு அ.முத்துலிங்கம் போன்றவர்களைப் பிடிப்பதற்கு அ.முத்துலிங்கம் எந்த அரசியலையும் தனது படைப்புக்களில் முன்வைப்பதில்லை. ஆனால் புலம்பெயர்ந்த 99%மான ஈழத்தமிழர்களுக்கு அரசியலைத் தவிர்த்து வாழ்வென்பது கிடையாதென்றுதான் நினைக்கின்றேன். அ.முத்துலிங்கம் எந்த அரசியலையும் வெளிப்படையாக வைக்காததால் எல்லா தமிழகத்துப் பத்திரிகைளும் எந்தப்பிரச்சனையுமின்றி அவரது படைப்புக்களை வெளியிடுகின்றன (இதனால் நான் அ.முத்துலிங்கத்தின் அனைத்துப் படைப்புக்களை நிராகரிக்கின்றேன் என்று அர்த்தமல்ல). இனி புதிதாய் வாசிக்கத்தொடங்கும் எந்த வாசகரும் அ.முத்துலிங்கத்தின் படைப்புக்களை மட்டும் புலம்பெயர்ந்த படைப்பாய் முன்னுதாராணம் கொள்ளும் அபாயம் வரக்கூடும். சக்கரவர்த்தியின் சில கதைகள் கூட, அந்நியச்சுழலை முற்றுமுழுதாக முன்வைத்து எழுதப்பட்டிருக்கின்றன (EX-அழகி, நானும் ஓகஸ்டீனாவும் ஒரு பந்தயக்குதிரையும்). ஆனால் சக்கரவர்த்தி ஏனைய 99% ஈழத்தமிழர்களைப்போல அரசியலைத் தவிர்த்து பேசமுடியாதவராகையால், இந்தப்படைப்புக்கள் கூட கவனத்தில் இல்லாமற்போய்விட்டன.

இந்தக்கணத்தில்தான் ஜெயமோகன் போன்றோர் முன்வைக்கும் நுண்ணரசியல் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். புலம்பெயர் எழுத்துக்கள் என்றால் அ.முத்துலிங்கத்தையும் , தலித் படைப்புக்கள் என்றால் *பூமணியையும், சோ.தருமனையும் ஏன் இவர்கள் முன்வைக்கிறார்கள் என்றால், அவர்களின் கதைகளோ அல்லது அவர்களோ ஏற்கனவே வழிமொழியப்பட்ட இலக்கியத்தளத்தை அடைய முயற்சிப்பவை. அ.முத்துலிங்கம் எப்படி தனது அரசியலை மறைக்கின்றாரோ அப்படியே *பூமணி போன்றவர்கள் தமது தலித் அடையாளங்களை மறந்து மேல்வர்க்கங்களோடு சமரசம் செய்து போக விரும்புகின்றவர்கள். முரணான விடயம் என்னவென்றால், அழகியல் பற்றி பேசுகின்ற விமர்சகர்கள், அழகியல் என்று ஒன்றிருந்தால் அழகியல்Xஎதிர் அழகியல் என்பது இருப்பதை இலகுவாக மறைத்துவிடுகிறார்கள். இந்த எதிர்அழகியல்தான் தமிழக தலித்துக்களிடம், ஈழத்தமிழர்களிடமும் வெளிப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளத்தவறும் இவர்களது அழகியலரசியல் நமக்கொன்றும் புதியதுமல்ல.

வைரமுத்துவின் தலைமையில் நடந்த கவியரங்கில் சக்கரவர்த்தி வாசித்த சர்ச்சைக்குள்ளான கவிதையிலிருந்து சில பகுதிகள்...

....
சிலுவைகள் கிளை உடைய
சிறகுகள் இப்போது
சுமையாகிப் போயின.
நான் என் தேசம் மீளல் வேண்டும்
தேசம் மீதான பசலை நோய்
தேகத்தில் படர
தேசம் பற்றிய கனவு
நமக்கிப்போது பிணியாகிப் போனது.

துப்பாக்கிகள் எப்போது துருப்பிடிப்பது.
நாம் எப்போது
நம் தேசம் மீள்வது?
நான்கு புறமும் அலைகள்
நடப்பதென்னவோ கொலைகள்.
...........
87 இல்
நம் சகோதரிகளை
விரட்டி விரட்டி
கற்பழித்த ஹிந்தியன்
இன்று நம் வீட்டு அயல் வீட்டுக்காரன்

துரத்தி துரத்தி
முலைகடித்த சீக்கியன்
இன்று நம் எதிர்வீட்டுக்காரன்.
எதிரி எனப்பட்டவன்
எதிர்க்க இருந்தும்
இன்று நாம் அவனை புன்முறுவலுடன் சிநேகிக்கவில்லையா?
என்ன ஆயிற்று நம் கோபம்
என்ன ஆயிற்று நம் மானம்?
எங்கே போயிற்று
தமிழ் மறவர் வீரம்?
..................
இனச்சுத்தம் இனச்சுத்தம்
எனச் சொல்லி
சோனகரை எல்லாம்
ஒற்றை நாள் இடைவெளியில்
நாட்டைவிட்டு நாம் விரட்டியடித்தோம்.

நாமென்ன நாசிகளுக்கா பிறந்தோம்?
நம் பூர்வீகம் என்ன ஜேர்மனியா?

தூக்கிச் செல்ல மனச்சுமையும்
ஜநூறு ரூபாயையும் மட்டுமே
அனுமதித்த நாம் ஏன் மறந்தோம்,
பாட்டன் முப்பாட்டன் பரம்பரையாய்
சோனகரே ஆயினும்
அவனும் தமிழன் என்பதை ஏன் மறந்தோம்?

காலத்தின் கட்டாயத்தை
இப்போது இங்கே பாருங்கள்
இனச் சுத்தம் பேசும் நம் பரம்பரையின்
பிள்ளைகள் இன்று
கறுப்பின ஆபிரிக்கருடன் சல்லாபிக்கும்
காலத்தின் கட்டாயத்தைப் பாருங்கள்!
கறுப்பருடன் சல்லாபித்து விட்டு
வெள்ளைத்தோல் அமெரிக்கருக்கு
பிள்ளை பெற்றுக் கொள்ளும்
காலத்தின் தீர்ப்பை யார் மறுப்பார்!
..............
ஜயாயிரம் மைல்களுக்கப்பால்
சிவனே என்றிருக்கும் நயாகராவைப் பாடும்
சிகரங்களைத் தொட்ட
எங்கள் வைரமுத்து ஜயா(?) அவர்கள்
கூப்பிடு தூரத்தில் அழுகை ஒலி கேட்பதைப் பற்றி
அலட்டிக் கொள்வதில்லை?

வயாகரா மீது இருக்கும் அக்கறை
அக்கரையில் இருக்கும்
ஈழத்தின் மீது ஏன் இல்லை?

போகட்டும்

வெல்லத்தானே வீரம்
கொல்வதற்கு இல்லை.
கவியரசு ஜயா!
நீங்கள் சொன்னதாகத் தான் சொல்கிறது
பாட்டுப் பெட்டி.

யுத்தம் ஒன்றைத் தவிர
வேறொன்றும் தெரியாதென்னும்
எம் தேசம் நோக்கி
கொல்லாமல் வெல்வது எப்படி
என்றாவது சொல்லுங்கள்....
............


* பூமணி பற்றி இப்படி எனக்கு ஒரு விமர்சனம் இருப்பினும், அவர் நல்ல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கின்றார் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.

23 comments:

Anonymous said...

ஜெயமோகனைப் போன்றவர்களுக்கு அ.முத்துலிங்கம் போன்றவர்களைப் பிடிப்பதற்கு அ.முத்துலிங்கம் எந்த அரசியலையும் தனது படைப்புக்களில் முன்வைப்பதில்லை.

YOU ARE DEAD, MY FRIEND ;-)
AT LAST ONE TALKED ABOUT THE EMPEROR'S CLOTH. THANKS IN DEED

2/02/2005 04:21:00 AM
கறுப்பி said...

டி.சே தங்களுடைய கருத்தோடு நான் முற்று முழுதாக ஒத்துக் கொள்கின்றேன். அரசியல் சார்ந்த அல்லது தீவிர எழுத்து என்பதை ஒரு கௌரவக்குறைச்சலாய்ப் பார்க்கும் பல படைப்பாளிகள் இருக்கின்றார்கள். இல்லாவிடின் அடிக்கடி தமது கருத்தை மாற்றிப் படைப்புக்களை (இதை ஒருவகை ளயஉசகைiஉநள என்று கூடச் சொல்ல முடியும்) தந்து கொண்டிருப்பவர்களும் இருக்கின்றார்கள். இது எங்கு சென்றாலும் தம்மைத் தக்க வைத்துக் கொள்ள கையாளும் யுக்தி என்று நான் நினைக்கின்றேன். இதற்கு சேரனை உதாரணமாகச் சொல்லலாம். ஒரு மனிதனுக்கு தனது கொள்கை நம்பிக்கையில் மாற்றம் ஏற்படுவது என்பது சாத்தியம் எப்போது எனின் பலகால தேடல் ஆய்வு போன்றவற்றால் தனது கொள்கையில் மாற்றத்தை ஓருவர் கொண்டு வருவரலாம். அதை விடுத்து தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கருத்துக்களை மாற்றுபவர்கள் பச்சோந்தி என்றே அழைக்கப்படுகின்றார்கள்.
சக்கரவர்த்தி போன்ற எழுத்தாளர்கள் தமக்கான கருத்தைக் கொள்கையை முற்று முழுதாக நம்புபவர்கள் நேசிப்பவர்கள். தமது கருத்தை முன்வைக்கத் தயக்கம் கொள்ளாதவர்கள். இதனால் நேரும் அனர்த்தங்களைப் பற்றி அலட்டியும் கொள்ளாதவர்கள். அத்தோடு எந்த ஒரு அரசியல் நடவடிக்கையையும் பொய்யாகப் புடம் போட்டுத் தமக்குச் சார்பாகத் திரிக்காதவர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது. இருந்தும் சக்கரவர்த்தியின் அரசியல் சார்ந்த கவிதைகள்இ சிறுகதைகளைப் போல் மற்றைய எழுத்துக்கள் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. அவை ஆழமற்ற மேலோட்டமானவை என்பதே எனது கருத்து.
ஆனல் சோபாசக்தியின் “கொறில்லா” நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தும் அவரின் எழுத்தில் பல பொய்யான தகவல்கள் இருப்பதாக அறிந்த போது மிகவும் எரிச்சல் எழுந்தது. (இது எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது)

"எல்லோரையும் வெட்டித்தான் கொலை செய்திருக்கிறாங்கள். கையில்லாமல் காலில்லாமல் தலையில்லாமல் கைக்குழந்தையைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு கிடந்த பிரேதங்களை தோணிகளில ஏத்தினாங்கள். தோணியள் நாவாந்துறையைப் பார்த்து போகுது. நாவாந்துறையில் இருந்து பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போறதுக்கு அங்கயும் வாகனங்கள் றெடியாய் நிக்குதெண்டு செய்தி கிடைச்சுது. குஞ்சன்வயல் சனங்கள் ஒரே ஆத்திரமும் அழுகையுமாய் பிரேதங்களை தோணியில ஏத்திறதுக்கு உதவி செய்தவை"

“கொறில்லா”வில் வந்த இந்தப் பகுதி முற்றுமுழுதாகத் திரிக்கப் பட்டுள்ளதாக எனக்கு சில நண்பர்கள் கூறினார்கள். அதாவது “குமுதினி” அனர்த்தத்தின் போது வெட்டுப்பட்ட மக்களின் உடலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதும் அகற்றியதும் மக்களுக்கு உதவியதும் விடுதலைப் புலிகள் என்று சோபாசக்தி தனது படைப்பு மூலம் கூறியுள்ளார் ஆனால் தாம் நேரில் நின்று பார்த்ததாகவும்இ விடுதலைப்புலிகளுக்கும் அந்தச் சம்பவத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என்றும் கூறப்படுகின்றது. இப்படியான அரசியல் பதிவு ஒன்றைத் தமக்கு சார்பாக மாற்றி அமைத்தல் என்பது மிகவும் கொடூரமானது என்பதே எனது கருத்து. இதற்கு சோபாசக்திதான் விளக்கம் அழிக்க வேண்டும்.

2/02/2005 11:22:00 AM
Narain Rajagopalan said...

படிக்காமல் கருத்து கூறுதல் நன்றாக இருக்காது. இப்போது தான் வாங்கி வைத்திருக்கிறேன் ஷோபா சக்தியின் இரு நாவலையும். உங்களுக்கு கொடுத்த வாக்குப்படி, மேன்ஷன் கவிதைகள் என் பதிவில் பதிந்திருக்கிறேன். ;-)

2/02/2005 11:45:00 AM
இளங்கோ-டிசே said...

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே.
கறுப்பி, நீங்கள் குறிப்பிடும் விடயம் எனக்குப் புதிது. கொரில்லா ஒரு புனைவு என்றவகையில் எல்லாம் உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கமுடியாதெனினும், ஷோபாசக்தி ஒரு நேர்காணலில் அது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது என்று பிரகடனப்படுத்தியபின், நிச்சயம் அவர் இவை குறித்துப் எப்போதேனும் ஒருபொழுதில் பதில் சொல்லத்தான் வேண்டும்.
நரேன், பவுத்த அய்யனாரின் கவிதைகளைப் உள்ளிட்டதற்கு மிகவும் நன்றி. நீங்களும் ஷோபாசக்தியின் நாவல்களை வாசித்தபின் உங்கள் வாசிப்பனுவத்தை எம்மோடு பகிர்ந்து கொள்ளுவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.

2/02/2005 10:23:00 PM
கறுப்பி said...

என்ன டி.சே இப்படி இலகுவாகச் சொல்லி விட்டீர்கள். ஷோபாசக்தி இடம், பெயர், திகதி போன்ற சாட்சியங்களுடன்தான் “கொறில்லா”வைப் படைத்துள்ளார். புனைவு நாவல் என்று அவர் இனி இப்படைப்பைக் கூற முடியாது. ஒரு சுயசரிதை போல தனது அனுபவங்களைத் தான் கூறியுள்ளார். ஒரு புத்தக வெளியீட்டின் போது விமர்சகர் ராஜேந்திரா கூறிய நகைச்சுவை எனக்கு இப்போது ஞாபத்திற்கு வருகின்றது. அதாவது
“ஓரு ஏழை மிகவும் சிரமப்பட்டு ஒரு ஆட்டை வாங்கித் தனது வீட்டிற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்த வழியில், அந்த ஆட்டைத் தமக்காக்கி;க் கொள்ள நினைத்த மூன்று திருடர்கள், அந்த ஏழை சென்ற வழியில் மூன்று இடங்களில் நின்று ஒருவர் மாற்றி ஒருவராக ஏனையா நாயை காசு கொடுத்து வாங்கிச் செல்கின்றாய் என்று கேட்க குழம்பிய ஏழை தான் கொண்டு செல்லவது ஆடல்ல நாய் என்று நம்பி அதனை அவிட்டு விடுகின்றானாம்.”
அப்படி இருக்கிறது எமது அரசியல் சார்ந்த தகவல்கள். எமது நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் இப்படியாகிப் போய் விட்ட அவல நிலை. வரலாறு என்று படிக்கப் போகும் எமது எதிர்காலச் சந்ததிக்கு கிடைக்கப் போவதெல்லாம் வெறும் திரிக்கப்பட்ட புனைவுகளே.

2/03/2005 09:18:00 AM
இளங்கோ-டிசே said...

கறுப்பி, உங்களைப்போலவே எனக்கும் கொரில்லா வாசிக்கும்போது சில சந்தேகங்கள் வந்தன. இந்திய அமைதிப்படை இறுதியாய் வெளியேற முன்னதாக நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற தற்கொலைப்படைத்தாக்குதலும், 90களில் இலண்டன் தியேட்டரில் ஒன்று வெட்டிக்கொல்லப்படுவதான சம்பவமும் பற்றிய அடிக்குறிப்புக்களும் சரியான தகவல்களா என்பதில் இன்னும் ஜமிச்சம் இருக்கிறது.
இந்தியா இராணுவத்துடன் மட்டுமல்ல, அண்மைய ஜெயசிக்குறு வரைக்கும் பெண் தற்கொலைப்படைப்பாளிகள் எவரும் (தரையில்) இருந்ததாக எந்த குறிப்புமில்லை. அநாமதயமாக உரிமை கோரப்படாத தற்கொலைத்தாக்குதல்கள் இருக்கின்றனவே தவிர, இன்னார், இந்தவிடத்தில் என்று பெண்போராளிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றதாக வாசித்தாகவோ கேள்விப்பட்டதாகவோ இல்லை. மற்றது, இலண்டன் தியேட்டரில் ஒன்று ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டதான சம்பவம் சில வருடங்களுக்கு முன்தான் நிகழ்ந்தாய் தெரியும். 90களில் இப்படி ஒரு சந்தர்ப்பம் நடைபெற்றதா என்பதில் சற்று சந்தேகமாகவே இருக்கிறது. இன்றைய காலத்தைப் போல் 90களில் Gangs பெருவளர்ச்சியடைந்திருந்தனவோ தெரியாது.
நிற்க, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியத்தில் பதிப்பாளர் ஒருவர் சொன்னமாதிரி, ஒவ்வொருவர் கோணத்தில் வெவ்வேறு 'உண்மைகள்' வெளிவரும். அதற்கேற்ப வரலாறும் மாறுபடும் என்பதுதான் ஞாபகம் வரும். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி, குமுதினிக் கொலைகளின் பின்பான சம்பவங்களில் புலிகளின் பங்களிப்பு இல்லையென்றால், ஷோபாசக்தியின், 'கணக்குப் பார்ப்பது சரியாகுமோ' என்ற வரிகள் மிக அபத்தமாய்த்தான், ஒரு ஹிரோயிசமாய்த்தான் போய் முடியும்.

2/04/2005 12:18:00 AM
Mookku Sundar said...

பிரபலமாக வேண்டுமென்றால், இலக்கியவாதி என அடையாலம் காணப்படவேண்டுமென்றால், இன, மொழி அடையாலங்கலைத் துறக்கவேண்டும் என்பது விதி. இதை அனுசரிப்பவர்களே எல்லோராலும் பொருட்படுத்தப்படுவர். இல்லாவிடில் முத்திரை குத்தப்படுவர்.

பேருக்கும் புகழுக்கும் எழுதாமல், தனக்கும் தன் உணர்வுக்கும் உண்மையாக இருப்பவர்களை இலக்கிய உலகம் கண்டுகொள்வதில்லை. நல்ல பதிவு டீஜே. நன்றி.

2/04/2005 07:39:00 PM
வசந்தன்(Vasanthan) said...

நான் அப்புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் டி.சே கேட்கும் சந்தேகம் சரியானதே. தாண்டிக்குளத்தில் 10.06.1997 அன்று வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் யாழினி தான் விடுதலைப்புலிகளின் (அவர்களால் வெளியிடப்பட்ட) முதலாவது பெண் தரைக் கரும்புலி. அச்சம்பவத்துக்கு முன் அப்படித் தாக்குதல் ஏதும் தரையில் நடந்ததாகத் தகவல்களில்லை.

2/09/2005 09:12:00 AM
Anonymous said...

பதிந்தது:வசந்தன்

பரிசோதனை

25.2.2005

2/24/2005 11:30:00 PM
Anonymous said...

பதிந்தது:ranji

டிசே தமிழன் சோபாசக்தி எக்ஸில் சஞ்சிகை குழுவில் இருந்தார் என்று நீங்கள் எழுதுகிறீர்கள் ஆனால் எக்ஸில் தொடங்கிய காலம் வரை இன்று வரைக்கும் எக்ஸில் குழுவில் சோபாசக்தி இருக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள். தங்களது சொந்த பணத்தையும் உழைப்பையும் செலுத்தி சஞ்சிகை விட தங்களது சொந்த லாபத்திற்காகவும் பெயருக்காவும் தாங்களும் அச்சஞ்சகை குழுவில் இருப்பதாக கதை விடுபவர்கள் பலர் அந்த வர்க்கம் தான் சோபாசக்தி அவர் எக்ஸில் குழுவில் இருந்தார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா??

4.3.2005

3/04/2005 07:33:00 AM
இளங்கோ-டிசே said...

றஞ்சி, நான் எழுதியது கொஞ்சம் குழப்பாகிவிட்டதென்று நினைக்கின்றேன். மன்னிக்கவும்.
எக்சிலிருந்தவர்கள், பிறகு எக்சில், உயிர்நிழல் என்று பிரிந்துபோக ஷோபாசக்தி எக்சில் சஞ்சிகையிலேயே மட்டும் எழுதிவந்தார். அதையேதான் நான் எழுதப்போக, அதன் ஆசிரியர்களில் ஒருவராய் ஷோபாசக்தியும் இருந்தார் என்ற வாசிப்பு வந்துவிட்டதென்று நினைக்கின்றேன். எக்சிலிக்கு ஆசிரியர்களாய் ஜெபா, கற்சுறா, ஸ்ராலின் அல்லது சேனன் இருந்தாய்தான் நினைக்கின்றேன். உயிர்நிழலுக்கு ல்க்சுமியும், கலைச்செல்வனும் ஆசிரியர்களாய் இருந்திருக்கிறார்கள். பிறகு அம்மாவிற்கு ஆசிரியர்களில் ஒருவராய் ஷோபாசக்தி இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றால் அதற்கு என்னிடம் எதுவுமில்லை. அம்மாவிற்கு ஆக்கம் அனுப்பும்படி ஒரு நண்பர் சொன்னபோது, மனோவிற்கு ஒரு நண்பரிடாக அனுப்பியபோது, எனக்குத்தெரிந்த நண்பர்தான் அம்மாவில் ஆசிரியர்களில் ஒருவராய் ஷோபாசக்தி இருப்பதாய் சொன்னார். சரியா பிழையா என்று தெளிவாகத்தெரியாது. மற்றும்படி ஷோபாசக்தி, தான் எக்சிலின் ஆசிரியர் குழுவில் இருந்ததாய் சொல்லி எங்கேயும் வாசித்தாய் நினைவினில்லை. ஷோபாசக்தி மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு, அதற்காய் But என்று சொல்லித்தான் ஒரு கட்டுரையை எழுதவேண்டும் (பொடிச்சி இதை அழகாக ஜெயமோகன் பற்றிய கட்டுரையில் சொல்லியிருக்கிறார்) என்ற கட்டாயமில்லைத்தானே. மற்றபடி எழுதப்பட்ட பத்தியில் ஏதாவது பிழைகள் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள், திருத்திக்கொள்கிறேன். நன்றி.

3/04/2005 09:58:00 PM
ROSAVASANTH said...

//தங்களது சொந்த பணத்தையும் உழைப்பையும் செலுத்தி சஞ்சிகை விட தங்களது சொந்த லாபத்திற்காகவும் பெயருக்காவும் தாங்களும் அச்சஞ்சகை குழுவில் இருப்பதாக கதை விடுபவர்கள் பலர் அந்த வர்க்கம் தான் சோபாசக்தி அவர் எக்ஸில் குழுவில் இருந்தார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?? //

இப்படி கேட்பவர் "தாங்களும் அச்சஞ்சகை குழுவில் இருப்பதாக கதை விடுபவர்கள் பலர் அந்த வர்க்கம் தான் சோபாசக்தி " என்பதை நிருபிக்க முடியுமா? அல்லது அதற்கு டீஜே தன் பதிவில் சொன்னது மட்டுமே ஆதாரமா?

3/05/2005 04:43:00 AM
Anonymous said...

பதிந்தது:Sri Rangan

அன்புடையீர்
திரு.கலைச்செல்வன் மாரடைப்பாற் காலமாகிவிட்டார்.
இவர் எக்ஸ்சில் சஞ்சிகை ஆசிரியர்.அவருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

5.3.2005

3/05/2005 07:06:00 AM
இளங்கோ-டிசே said...

கலைச்செல்வனின் இழப்பு மிகவும் துயரமானது. உயிர்நிழலில் ஆசிரியரான பின்னர் எழுதுவதைக்குறைத்துக்கொண்டாலும், பிரான்சிலிருந்த காத்திரமான இலக்கியவாதிகளில் இவரும் ஒருவர். உயிர்நிழலில் ஆசிரியராக இருந்த சமயம் கனடா வந்தபோது திருமாவளவனின் (திருமாவளவனின் தம்பி, கலைச்செல்வன்) வீட்டில் இவரை, நானும் இன்னுமொரு தோழனுமாக சந்திருக்கின்றோம். நண்பர்கள், உறவுகள் நிரம்பியிருந்த வீட்டில், மற்றவர்கள் குறுக்கிடக்கூடாதென்று, எம்மைத் தனியே ஒரு அறைக்குள் கூட்டிச்சென்று பேசிய அவரது அன்பு நினைவு கூரக்கூடியது.
பல கனவுகள், நம்பிக்கைகள் என்று நானும் நண்பனுமாய் தொடர்ந்து விடாமல் பேசப்பேச எம்மைப் பேசவிட்டபடி சிகரெட் புகைத்தபடி விழிகளால் எம்மை படித்தபடி இருந்த கலைச்செல்வன் இன்று எம்மிடையே இல்லையென்பதை எப்படித் தாங்கிக்கொள்வது? சஞ்சிகை வெளியிடும் எண்ணமெல்லாம் எங்களுக்கு உண்டென்று கூறியதற்கு தனது அனுபவங்களை இவங்கள் பெடியங்கள்தானே என்று அலட்சியப்படுத்தாமல் எங்களுடன் விரிவாகப் பகிர்ந்திருந்தார். தனதும் இலக்சுமியினதும் வேலை செய்யும் முக்கால்வாசிப்பணம் உயிர்நிழல் வெளியிடுவதிலேயே போயிவிடுவதாகவும், இங்கே வந்தபோது எல்லா வீட்டிலும் விலைஉயர்ந்த Sofa-set, dining table இருப்பதைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது என்று நகைச்சுவையாகச் சொன்னதும் நினைவில் வருகிறது. ஈழத்து அரசியல், இலக்கியம் என்றெல்லாம் பலதும் பேசியபோது நேர்மையாகப் பலவிசயங்களை ஒப்புக்கொண்டபோது அவர்மீதான என் மதிப்பு மேலும் உயர்ந்தது. அவரை நேரில் சந்திக்க முன்னர், நான் யாரென்ற அடையாளந்தெரியாமலே மின்னஞ்சலில் உயிர்நிழலுக்காய் அனுப்பிய படைப்புக்களை பிரசுரித்து என்னை ஊக்குவித்த அவரை நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.
அவரை இழந்த துயரத்தில் தவிக்கும், லக்க்சு, கலைச்செல்வனின் மகன், திருமாவளவன் குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் அனைவருடன் எனது துயரையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

3/05/2005 10:36:00 AM
Anonymous said...

பதிந்தது:Sri Rangan

அன்புடன்
டி.ஜே.வணக்கம்.
தங்கள் எண்ணங்கள் யாவுமே சரியானது.அமரர் கலைச்செல்வன் பற்றிய குறிப்புகளைப் படித்ததும் ஒரு உண்மை புலனாகிறது.அதாவது கலை ஒருபோதுமே எவரையும் மதிக்காமல் நடந்ததை நாம் அறியோம்.நாம் அவரைச் செல்லமாக் கலையென்பதும் அவரெமை பாவி(ப.வி.)என்பதும் இன்னும் எமது நெஞசில் பசுமையானது.நாம் பல இ.சந்திப்புகளில் அவரோடு இணைந்து செயற்பட்டுள்ளோம்.இன்று நினைத்தாலும் நெஞ்சில் பசுமையான பல நினைவுகள் வந்து போகின்றது;நாம் பார்த்திபன் நடராசன் சுசீஅண்ணன் சுகன் கவிஞர் சிவம் வீட்டில் நாட்கணக்காக உரை யாடிய 90களின் பல பொழுதுகள் இப்போது வந்து கண்முன் விரிகிறது.அவரது எக்ஸ்சில் பிளவுடன் நாம் அவரது உயிர் நிழலில் எழுதுவதைத் தவிர்த்தோம்.இப்போது நோக்கும்போது நம் சிறுபிள்ளைத்தன மேதாவிவேலை நம் முகத்தில் ஓங்கியடிக்கக் கண்ணீர் வருகிறது.நாம் அவ்வளவு பாசத்துடனான தோழமையுறவைக்கொண்டிருந்தோம்.அவரது தனிப்பட்ட வாழ்வைக் கிண்டலடித்து நாமொரு சிறுகதையைக் பாரீஸ் ஈழமுரசில் எழுதியதும்"வெண்பனிச் சகதி" எனும் தலைப்பில் பின்பு எமது அறிவின் கட்டுப்பெட்டித்தனத்தையெண்ணி வருந்தி பொழுதும் இப்போ எம் விழிகளை ஈராமாக்கியபடி.கலைச்செல்வன் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர்கள்.அவரது அறிவுப் பலமே அதுதாம்.திரு. நா.கண்ணனைப் போல் எவ்வளவு கருத்துச் சேறடிப்புக்கும் அவர் உணர்ச்சி வசப்படுவதில்லை. இது ஒன்றே எனக்கு அவரிடம் அதிகம் விரும்பிய குணம்.அவர் இப்போது நம் மத்தியிலில்லை.ஆனால் அவரது மிகப்பெரிய அறிவுசார் விமர்சனப்பாங்கும் அவர்தம் ஆழ்ந்த சமூகப்பார்வையையும் நம்மத்தியில் விட்டுப் போய்யுள்ளார்கள்.இருக்கும்போது நாம் ஆய் ஊய் என்பதும் பின்பு சுடலை ஞானத்துடன் கருத்திடுவதையெண்ணும்போது வருத்தமாகவுள்ளது!தூண்டில் எனும் சஞ்சிகையையும் இந்த நண்பர்கள் குழாத்தையும் என்றும் மறக்கவே முடியாது. அதுவொரு காலம்.என்றபோதும் அவரது இழப்பாற்றுயருரும் லக்ஸ்மி அக்காவுக்கும் அவர்தம் குமரன் கபிலனுக்கும் கூடவே அவர் உறவினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் முடிந்தாலஇ இறுதிச் சடங்கில் வந்தம் கலக்கிறோமென ஆறுதல் படுத்துகிறோம்.

5.3.2005

3/05/2005 11:59:00 AM
Anonymous said...

KAlaichchelvanukku enathu anjali. nalla oru ilakkiya nanban marainthu vittar.
Athu sari pa. sri rangan enam muhamudi.
nere eluthalame?

3/05/2005 12:16:00 PM
Anonymous said...

பதிந்தது:P.V.Sri Rangan

பெயரற்றுக் கருத்திடும் அன்பரே! நாம் எப்போதும் முகமூடியணிந்த வரலாறுகிடையாது.ஈழவிடுதலை குறித்த பார்வைகளுக்கே நாம் முகமூடியணியவில் இதற்கா அணிகிறேன்?
அனுதாபத்துடன்
ப:வி:ஸ்ரீரங்கன்

5.3.2005

3/05/2005 12:32:00 PM
ROSAVASANTH said...

எனக்கு உயிர்நிழலின் இரண்டு அல்லது மூன்று இதழ்கள் மட்டுமே வாசிக்க கிடைத்திருக்கிறது. கலைசெல்வனை பற்றி அதிகம் எனக்கு தெரியவில்லை. நன்பர்களுடன் இந்த இழப்பின் சோகத்தில் பங்குகொள்கிறேன். என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

3/05/2005 07:59:00 PM
Anonymous said...

பதிந்தது:ranji

டிசே கலைச்செல்வனின் மறைவு எம்மை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. காலை 7இ30க்கு போன் வந்தபோது நான் வேலைத்தளத்தில் நின்றிருந்தேன் எனது கணவர் ரவி போன் பண்ணி கலைச்செல்வன் இறந்து விட்டான் என்று கூறிய போது உண்மையிலேயே நான் சொக்காகி விட்டேன் உடனேயே நாம் பலருக்கு போன் செய்த போது அவர்கள் பலதடவைகள் இது உண்மையா என்று கேட்டார்கள். அவருடன் பழகிய நாட்களை நாம் திரும்பத் திரம்ப மீட்டுப் பார்க்கின்றோம். சோபாசக்தி சோபாசக்தி எக்ஸிலில் இருக்கவில்லை அதில் விஜிஸ்ராலின்கற்சுறா ஜெபா நால்வருமே ஆசிரியர்கள். அதேபோல் உயிர்நிழலில் கலைச்செல்வனும் லக்சுமியும் இருந்தார்கள் உயிர்நிழலை சுவிசுக்கு விநியோகம் செய்வது நாங்கள் தான்.அதே போல் எக்சிலையும் செய்தோம். கலைச்செல்வனின் இறப்புச் செய்திழயால் கலங்கியிருக்கும் வேளையில் இந்த விவதத்தை நான் தொடர விரும்பவில்லை.

நன்றி


7.3.2005

3/07/2005 01:31:00 AM
Anonymous said...

பதிந்தது:ranji

மன்னிக்கவும் பல எழுத்துப்பிழைகள் வந்துவிட்டன.

7.3.2005

3/07/2005 01:36:00 AM
ROSAVASANTH said...

நான் சோபா சக்தி எக்ஸிலில் இருந்தாரா என்று கேட்கவில்லை. எக்ஸிலில் இருந்ததாக 'கதை விட்டிருக்கிறாரா' என்பதுதான் நான் கேட்டது. றஞ்சி (விவாதிக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு) சொன்ன பதிலை பார்க்கையில், "தாங்களும் அச்சஞ்சகை குழுவில் இருப்பதாக கதை விடுபவர்கள் பலர் அந்த வர்க்கம் தான் சோபாசக்தி " என்று சொன்னது பச்சையான அவதூறு என்பதன்றி வேறில்லை என்றே எடுத்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த அவதூறின் பின்னால் இருப்பது வெறும் வெறுப்பை முன்வைத்த அரசிலாக மட்டுமே எனக்கு படுகிறது.

என்னுடய அறிதலின்படி சோபா சக்தி அப்படி சொல்லி லாபம் தேடக்கூடியவரும் இல்லை. இது போன்ற ஒரு அவதூறை வெறுப்பின் அடிப்படையில் மட்டும் அடுத்தவர் மீது வைப்பவரும் அல்ல. நான் இங்கே விவாதத்தில் கலந்துகொள்ள விரும்பாவிடினும், சில சமயங்களில் மௌனமாய் இருப்பதும் நேர்மையின்மை என்று தோன்றியதால் இதை எழுதினேன். கலை செல்வன் மறைவின் அஞ்சலிகளின் நடுவே இதை சொல்ல நேர்ந்ததற்கு வருந்துகிறேன்.

3/08/2005 06:38:00 AM
Anonymous said...

பதிந்தது:www.tamilcircle.net

முரணற்ற சிந்தனை மட்டுமே
உன்னதமான படைப்பை உருவாக்கும்.

இலக்கியம் ஊடாகவே தத்துவத்தை பேசும் சக்கரவர்த்தியின் சிறுகதை தொகுப்பான ~~யுத்தத்தின் இரண்டாம் பாகம்|| அண்மையில் வந்த முக்கிய படைப்புகளில் ஒன்றாகும்;. தெளிவான உள்ளடக்கம் மேல் கலையையும் பல்வேறு பிரதேச மொழியையும் சிறுகதைகள் மூலம்; வெகு சிறப்பாக கையாளும் இவர்ää தன்னை நேருக்கு நேர் தயக்கமின்றி ஒளிவுமறைவின்றி அடையாளம் காட்டுகின்றார். இந்த வகையில் இவர் இன்றைய இலக்கியவாதிகளுக்குள்ää கதை சொல்லும் போக்கில் ஒரு நேர்மையைக் கையாளுகின்றார். இலக்கியம் அருவமானது. உருவம் பற்றி பேசத் தேவை இல்லை என்ற போலியைää இவர் தெளிவாகவே உடைத்துக் காட்டிவிடுகின்றார். ஒரு இலக்கியம் மூலம் மக்களுக்கு வழிகாட்டää விளக்க முடியும் என்பதை படைப்பின் மூலம் நிறுவுகின்றார். இவரின் தத்துவம் சார்ந்த வழிகாட்டல்ää அது சார்ந்த உள்ளடக்கத்தை மக்களின் விடுதலை சார்ந்து முன்வைக்கின்றாரா? என்ற கேள்வி எமக்கு அடுத்து முக்கியத்துவமுடையதாகும். இவரின் இந்த சிறுகதை தொகுப்பு இரண்டு முக்கிய விடயங்களை பேசுகின்றது.

1.இயக்கங்கள் மக்கள் மேல் கையாண்ட வன்முறைகள் பற்றிää பல்துறை சார்நது பேசுகின்றது
2.பெண்களின் பாலியலை பற்றி தன் உணர்வு சார்ந்துää பெண்களைப் பற்றி கூறுகின்றார்.

தமிழ் மண்ணில் இருந்து கனடாவரையிலான புலம்பெயர் சமூகத்தின் பல தளத்தில் கதை சொல்லும் இவர்ää அதன் முரண்களின் மேல் தன்னை அடையாளம் காட்டுகின்றார். யாரும் பேச மறுத்தää பேசுவதே மரண தண்டனைக்குரிய குற்றமாக துரோகமாக கருதிய இயக்கங்களின் வன்முறைகளையும்ää அது சார்ந்த நடத்தைகள் தொடர்பாகவும் இவரின் சிறுகதைகளின் ஒருபகுதி; பேசுவதால் மட்டுமேää இதன் மீதான விமர்சனம் அவசியமாகின்றது. இயக்கத்தின் உள் மற்றும் வெளி நடத்தைகள்ää மக்களுக்கும் இயக்கங்களுக்கும் உள்ள உறவாக்கம்ää எதிரிக்கும் அவர்களுக்குமுள்ள உறவாக்கம் சார்ந்த வன்முறைகள் மீதான இலக்கியங்கள்ää விமர்சனங்கள் ஒரு மரண தண்டனைக்குரிய குற்றமாக இன்று யதார்த்தத்தில் உள்ளது. இந்த வரலாற்று தொடர்ச்சியில் இதற்கு எதிரான போராட்டங்கள்ää அதை வெளிக் கொண்டு வந்த எழுத்து முயற்சிகள்ää பல்துறை சார்ந்த பதிவுகள் என வரலாற்று நிகழ்வாக தொடர் போராட்டமாகவும்ää மறுதளத்தில் வெறும் பதிவாகவும் மாறுகின்றது. இந்த பதிவாக்கம் கூட ஒரு அங்கீகாரத்தை படைப்பாளிக்கு கொடுக்கின்ற போதுää படைப்பாளியின் பிற்போக்கு கூறுகள் கூட மூடி மறைத்துவிடுவது நிகழ்கின்றது. அந்தளவுக்கு தமிழ் சமூகத்தில் சாதாரண மக்கள் முதல் அறிவுத்துறை ஈறாகää சமூக இயங்கியல் வாழ்வின் மீதான தத்துவத்தின் வறுமை காணப்படுகின்றது. ஒரு காலத்தில் எது பயங்கரமாகவும்ää அபாயகரமாகவும் இருக்கின்றதோ அதை எதிர்த்துää அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் மனித உணர்வுகள் மதிப்புக்குரியவைதான். ஆனால் அவன் இன்னொரு அநீதிக்கு அது சார்ந்து துணை போவானாயின்ää அதை நாம் விமர்சனக் கண்கொண்டு விமர்சிக்கவும்ää அதை எதிர்த்து அம்பலம் செய்யும் பணிதான்ää அநீதிக்கு எதிரான உயர்ந்த புரட்சிகர பண்பாகவுள்ளது. இயக்கத்தின் வன்முறைகளை பற்றி பேசியபடிää அரசுக்கு குண்டி கழுவுவது எவ்வளவு கேவலமானதோää அது போன்று அரசை எதிர்த்தபடி இயக்கத்தின் மக்கள் விரோத வன்முறைக்கு துணைபோவதும் கேவலம்தான். இது போன்றே அனைத்தும்ää அனைத்து துறை சார்ந்து அனைத்து இலக்கியத்துக்கும் பொதுவானது. இலக்கியத்தில் முற்போக்காகவும் பிற்போக்காகவும் வௌ;வேறு விடயம் சார்ந்து செயற்பட முடியாது. இரண்டும் ஒரே தளத்தில் இயங்க முடியும் என்பதுää அனைத்தையும் எப்படியும் முரணாக நியாயப்படுத்திவிட முடியும்;.

இயக்க மற்றும் அரசு வன்முறைகள் எதிர்ப்பது முதல் சில நிலப்பிரபுத்துவ பண்பாட்டு கலாச்சாரங்களை எதிர்ப்பது ஈறாகää இவரின் மையக் கருவாக உள்ளது. வன்முறை மீதான எதிர்ப்பை ஏகாதிபத்திய சார்ந்தää ஜனநாயகம் சுதந்திரம் என்ற மாமூல் கண்ணோட்டத்தில் நின்றே விமர்சிக்க முனைகின்றார். இந்த எல்லைக்குள் தேசியத்தை எதிர்ப்பதில்ää தன்னை தெளிவுபடவே அடையாளம் காட்டுகின்றார். மற்றைய கதைகளில் ஆணாதிக்கத்தை ஆதாரமாக கொண்டு பெண்களை இழிவாக்கும் இவர்ää முதலாளித்துவ ஜனநாயகம் மீது நின்றே இயக்க வன்முறையை எதிர்த்து நிற்கின்றார். முரணற்ற முதலாளித்துவ ஜனநாயக எல்லைக்குள் மட்டுமே முற்போக்காக செயற்படுகின்றது. இவர் குறிப்பிடும் தத்துவமான ~~வெறும் மயக்கங்கள் மாத்திரம் உள்ள மாமூல் வாழ்க்கையில் மாற்றம் தேவை.. நிஜம் தேவை....|| என்ற கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்ட இவர்ää இருக்கும் பிற்போக்கு யதார்த்த மாமூலை நிராகரித்து உண்மையான சமூகத்தை கண்டறிய முயலுகின்றாரா எனப் பார்ப்போம்;.

~~யுத்தமும்....|| என்ற சிறுகதையை எடுப்பின்ää யுத்தத்துக்கு எதிரான கண்ணோட்டத்தை அதற்கு காரணமான காரணத்தை இழிவாக காட்டி பிரதிபலிக்க முனைகின்றார். பழைய வரலாற்று கதையூடாக நிகழ்காலத்தை பிரதிபலித்து கருத்துக் கூற முற்படும் போதுää யுத்த எதிர்ப்பை தவறான முறையில் விளக்க முனைகின்றார். உலகில் அனைத்து யுத்தங்களுமே வர்க்கப் போராட்டங்களே என்ற உண்மையை இவரின் மாமூல் கண்ணோட்டம் காண மறுக்கின்றது. யுத்தத்தை தலைமை தாங்கும் மக்கள் விரோத பிரதிநிதிகள் நியாயமற்ற வன்முறையையும்ää மக்களின் நியாயமான கோரிக்கைகளில் எழும் போராட்டமும் சார்ந்து வன்முறையையும் கோடுபிரித்தறிய இவரின் மாமூல் கண்ணோட்டம் மறுக்கின்றது. யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தை மக்கள் விரோத ஜனநாயக விரோத கோரிக்கைகளை அடைப்படையாக கொண்டுää எதிர்த்து நிற்பது என்பது உள்ளடக்கத்தில் மக்களின் நியாயமான கோரிக்கைகளை எதிர்து குரல் கொடுப்பதாகும்;. இங்கு ஜனநாயக கோரிக்கையையும்ää மக்களை அடக்கியாளக் கோரும் கோரிக்கையையும் கோடு பிரித்து பார்க்கத் தவறுகின்ற மாமூல் தனம்ää யுத்த எதிர்ப்பை தவறாக விளக்க முனைகின்றது. பழைய வரலாற்று கதையூடாக பேசும் படைப்பாளிää ஏன் வன்னியர் சங்கிலியர் ஆட்சியை சதி மூலம் கவிழ்க்க விரும்பினர் என்ற கேள்வியைää அவரின் மாமூல்ததனம் கேட்க மறுத்துவிடுகின்றது. வன்னியர் விரிந்த ஆட்சி பரப்பை விரும்பினர் எனின் ஏன் அது அவசியமாகின்றது. இங்கு விருப்பாமான மாமூல் காரணத்தை அடிப்படையாக கொண்டே விளக்குவது ஏன் என்ற கேள்வியும்ää யுத்த எதிர்ப்பு உள்நோக்கம் கொண்டவையாகின்றது.

ஒரு ஆட்சியை பிடித்தல் என்பதுää சுரண்டும் வர்க்க நலன்களை சார்ந்து அதை விரிவாக்கவேயாகும். இது சொந்த மக்களை அல்லது மற்றைய பிரிவு மக்களை அடக்கியளவும் அவர்களின் உழைப்பை உறிந்து சுரண்டி வாழ்வதுமே நிகழ்கின்றன. இங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் கடந்த வரலாற்றில் ஜனநாயக கோரிக்கையாகää அதன் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து அவை புரட்சிகர யுத்தமாகவும் பெரும்பாலும் இருந்துள்ளது. ஆனால் இந்த வர்க்க அமைப்பில் ஒடுக்குவனை வென்று ஆட்சிக்கு வரும் ஒடுக்கப்பட்டவன் கூட புதிய அடக்குமுறையாளனாக சுரண்டுபவனாக மாறிவிடும் சமூக பொருளாதார உள்ளடக்கம் வழிகாட்டிவிடுகின்றது. இந்த மாமூல்த்தனத்தை எதிர்த்தே வர்க்க அமைப்பை ஒழித்துக் கட்டவும்ää வர்க்க அமைப்புக்கு எதிரான யுத்த ஒழிப்பை நிபந்தனையாக்கின்றது. இந்த பாதை என்பது வன்முறையை ஆதாரமாக அடிப்படையாக கொள்கின்றது. கடந்த நிகழ்கால யுத்த மரபுகளில் இருந்து இது முற்றிலும் வேறுபடுகின்றது. பழைய மற்றும் நிகழ்கால யுத்தத்தின் போது எழும் ஜனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரிக்க தவறுகின்ற ஒரு படைப்பாளிää உண்மையில் ஒடுக்கமுறையாளனுக்கே உதவி செய்கின்றான்;. இந்த நிலையில் ஒரு படைப்பாளி தனது இலக்கியத்தை விரிந்த மாமூல் தளத்தை கடந்துää உண்மையை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொள்ளவேண்டும்; அதில் உள்ள பிற்போக்கு கோரிக்கைகளை எதிர்த்து ஜனநாயகக் கோரிக்கையை சார்ந்து மக்களின் அதிகாரத்தை கோரவேண்டும்;. இதை மறுத்து பிற்போக்கு கோரிக்கையை மட்டும் காட்டிää ஜனநாயகக் கோரிக்கையையும் எதிர்த்து நிற்பது என்பது சதாரண மாமூலில் இது அல்லது அதுää என்பதில் ஒன்றை முன்வைப்பதுதான்.

வன்னியர் ஏன் நல்லுர் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தனர்? என்பதை ஆராய மறுக்கின்றார். இதை எதிர்த்து கோழை கூட வீரனாகவும்ää தளபதியாகவும் மாறியதுடன் மனித நியாயம் பற்றி பேசுபவனாகவும்ää இறுதியாக பிற்போக்கு கட்டளைக்கு அடிபணிந்து போவதாகவும் காட்டுவதன் ஊடாகää ஒரு மனிதனின் மாற்றத்தை காட்டுகின்றார். ஆனால் ஏன் யுத்தம் அவசியமாகின்றது? மதம் மாறியவர்களை ஏன் கொல்ல விரும்புகின்றனர். அதிகார பீடங்களில் யார் என்ன நோக்கத்துக்காக வீற்று இருக்கின்றனர் என்பதைää மயக்கத்துக்குள் மாமூல் சிந்தனைக்குள் விட்டுச் சென்றதன் மூலம்ää நிஜத்தை கண்டறியத் தவறிவிடுகின்றனர். இதனால் யுத்தம் பற்றி ஒரு தலைப்பட்சமான விளக்கம் முன்வைப்பது நிகழ்கின்றது. இது சமகாலத்தில் நடக்கு தேசிய போராட்டத்தை எதிர்ப்பதாக மாறுகின்றது. இயக்கத்தின் பிற்போக்கு வன்முறை சார்ந்துää தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையான சுயநிர்ணயக் கோரிக்கையை எதிர்ப்பது கட்டமைக்கப்படுகின்றது. மக்களின் நியாமான ஜனநாயகக் கோரிக்கைக்கும்ää இயக்கத்தின் நியாயமற்ற பிற்போக்கு கோரிக்கைக்கும் இடையில் கோடு பிரித்து வெளிபடுத்த வேண்டியது ஒரு படைபாளியின் கடமை. உண்மையை கண்டறியவும் அதை முன்வைப்பதுமே மாமூல் கடந்த ஒரு கண்ணோட்டமும் படைப்பாளியின் கடமையுமாகும்.

~~படுவான்கரை|| என்ற சிறுகதையை எடுப்பின் தமிழ் குடும்பம் ஒன்று சந்திக்கும் இயக்க மற்றும் இராணுவ வன்முறையை சித்தரிக்கின்றது. ஆனால் மக்களின் நியாயமான கோரிக்கை மேல் இதை அம்பலம் செய்ய படைப்பாளி தவறிவிடுகின்றார். மாமூல் இயல்பு வாழ்க்கை சார்ந்து இந்த வன்முறையை எதிர்த்து நிற்கின்றார். மாமூல் வாழ்விலுள்ள வாழ்வுக்கான நியாயமான உண்மையை இவர் தேடி கண்டறியத் தவறிவிடுகின்றார். இயக்கம் மற்றும் இராணுவம் ஒருவனை கைது செய்கின்ற போதுää கையாளும் வேறுபட்ட வன்முறையையும்ää அதன் மொழியையும் தெளிவான ஒரு இலக்கியமாக கொண்டு வருவதில் இந்த கதை வெற்றி பெறுகின்றது. அதே நேரம் இந்த கதையின் இயல்பான ஒட்டத்தில் ~~யாழ்ப்பாணத்தில் இருந்து புதுசாய் இந்த ஏரியாவுக்கு பொறுப்பாளரு வாறாரு|| அதனால் தான் கைது சித்திரவதை என்பதுää யதார்த்ததை திரிக்கின்றது. யாழ் அல்லாத இயக்கத் தலைவர்கள் இது போன்ற வன்முறைகளைச் செய்வதில்லையா? இது இருக்கும் யதார்த்த வடிவத்தை திரிக்கின்றது. வன்முறையை யாழ் சார்ந்தாக மட்டும் காட்டும் போக்கு இக் கதையில் தொங்கிவிடுகின்றது. கிழக்கில் இருக்கும் இயக்ககாரர்கள் சித்தரவதைää கைது என்று எதுவும் செய்வதில்லையா? இங்கு யாழ் தலமை மற்றும் உறுப்பினர் என்றால் அவர்கள் வன்முறையிலும் கூட மோசமானவர்கள்ää கிழக்கில் இருப்போர் அப்படி அல்ல என்ற கண்ணோட்டத்தைää படைப்பாளி மாமூல் கண்ணோட்டம் சார்ந்து பிரதிபலிக்கின்றார். ஒரு இயக்கத்தின் மக்கள் விரோத கைதுகள் சித்திரவதைகள் பிரதேசம் சார்ந்த தலைமைத்துவம் தீர்மானிப்பதில்லை. மாறாக இயக்கத்தின் வர்க்க அரசியல் தான் தீர்மானிக்கின்றது. இயக்க உறுப்பினர்களின் பிரதேசம் சார்ந்த உணர்வுகள் வன்முறையை பிரதிபலிப்பதில்லை. மாறாக வன்முறை கண்ணோட்டத்தைää எல்லா பிரதேச மக்களுக்கு எதிராகவும் பிரதேசம் கடந்து இயக்க உறுப்பினர்கள் ஒரேவிதமாக கையாளுகின்றனர். அடுத்து இராணுவம் அதிகாரி ஒருவர் கொழும்பில் இருந்து வருவதால் கைது என்பதுää படைப்பாளியின் இயல்பற்ற ஒரு இயங்கியலற்ற இணைப்பாகும். இலங்கை அரசுக்கும் எதிரானவன் என்பதை தெளிவுபடுத்தää இணைத்துக் கொண்ட ஒரு தொடர்ச்சியாகும்;. இது கதையின் கலை இயல்பை அழிக்கின்றது. அதுபோல் மனைவிää மற்றும் மனைவியின் தாய் தேடிப் போகவும்ää அவர்கள் கொண்டு வந்து விடும் தன்மையும் இலக்கிய இயங்கியலற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது. இவை இரண்டும் இயல்பாக இல்லை.

படைப்பாளி மாமூல் கடந்து கைது செய்தவர்களிடம் கேட்கவில்லைää ஏன்? என்ன? சந்தேகம் என்று. மனைவி மற்றும் மனைவின் தாய் இயக்கத்தை எதிர்த்து சொந்த துயரம் ஊடாக பேசுகின்ற போது கூடää இயல்பில் இருந்தே விலகிவிடுகின்றார். மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மக்கள் எதிர்க்கவில்லை என்ற உண்மையை படைப்பாளி காண மறுத்துää எதிர்ப்பதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்துகின்றார். மக்களின் நியாயமான போராட்டத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டுää இயக்கத்தை நோக்கிய கேள்விகள் எழுப்பப்படவில்லை. ஆனால் மக்கள் இயல்பில் இதை எழுப்புவர். ஏனெனில் சமுதாயம் முன்னோக்கி முன்னேறுகின்ற இயங்கியலில்ää இருக்கும் யதார்த்த வன்முறையை கடந்து விடுதலை சார்ந்தே மக்கள் சிந்திக்கின்றனர். போராட்டம் மக்களுக்கு எதிராக மாறியபோதும்ää போராட்டத்தை மக்கள் நிராகரிக்கவில்லை. இதற்கிடையில் உள்ள நேர் எதிர்ப் போக்கினை ஒரு படைப்பாளி இனம் கண்டு கொள்ளாதவரைää ஒரு படைப்பு அரையும் குறையுமாக பிரசுவிக்கப்படுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் சில குறைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்ட படைப்புகள்ää அதைத் தாண்டி எதையும் சமூகத்துக்கு முன்வைத்து வழிகாட்டுவதில்லை என்பதை இந்தச் சிறுகதை மீண்டும் காட்டுகின்றது.
~~எண்டஅல்லாஹ்!|| என்ற சிறுகதையைப் எடுப்போம்;. ஒரு தமிழ் விவசாயியின் வெங்காயத்தை வாங்கிய ஒரு முஸ்லிம் வியாபாரியின் அவலம் சார்ந்த ஒடுக்குமுறை மீது கதை நகர்கின்றது. இயக்கம் இராணுவம் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்துää இராணுவத்தின் அக்கிரமங்கள் சார்ந்து ஒரு முஸ்லிம் வியாபாரியின் துயரத்தை பேசுகின்றது. தாக்குதலை அடுத்து வெங்காயத்தை விற்க முடியாத நிலையிலும்ää முஸ்லீம் வியாபாரியின் நேர்மை பற்றியும்ää முஸ்லீம் வியாபாரி மகன் மூலம் தமிழ் விவசாயிக்கு ஒரு சிறு தொகையை கொடுத்த அனுப்பியருந்தார். இருந்தபோதும்ää தமிழ் விவாசாயி பணத்துக்கு ஆசைப்பட்ட துரோகத்தால்ää பணம் கொண்டு வந்தவனை இயக்கம் கொல்ல துனைபோகின்றார். இதுவே கதையின் மையமான செய்தி. சமுதாயத்தின் மேலான இயக்க வன்முறைகள்ää சந்தேகமே துரோகமாக முத்திரை குத்தவும் படு கொலை செய்யவும் போதுமான காரணமாக உள்ளது. போராட்ட வரலாற்றில் இதுவே ஒரு போக்காக மாறிää பல நூறு பேர் தம் உயிரை இதற்காகவே இழந்துள்ளனர். இதை ஒரு படைப்பாளியாக கொண்டு வரும் போதுää அதன் வடிவங்கள்ää தன்மைகள்ää அதன் மொழியைக் கூட தெளிவாக புரிந்த கொண்டு இதை அம்பலம் செய்கின்றார். ஆனால் இதை தொகுக்கும் போது யதார்த்த இயல்பைää உழைக்கும் மக்களின் நேர்மையை புரிந்து கொள்ளத் தவறிää கதையின் ஊடாக கொச்சைப்படுத்திவிடுகின்றார். அத்துடன் ஒரு இனங்களின்; குறியீடாக காட்டிää இனங்களை பகை நிலைக்கு கொண்டுவருகின்றார். சொந்த உடல் உழைப்பில் ஈடுபடும் விவசாயி 1500 ரூபா காசுக்கு ஆசைப்பட்டுää முஸ்லிம் மகனொருவனை கொல்ல துணை போனான் என்பது உழைப்பின் வலிமையை நேர்மையை மறுப்பதாகும். இது உழைப்பையும்ää சுரண்டலையும் புரிந்து கொள்வதில் இருந்து விலகுகின்றது. முஸ்லீம் மக்களுக்கு எதிராக கையாளப்பட்ட இயக்க வன்முறையின் போதுää தமிழ் மக்கள் அதை ஆதாரித்து வன்முறையில் ஈடுபடவில்லை. முஸ்லீம் மக்களின் சொத்தை மிக மலிவாகவும்ää மறு தளத்தில் ஏலம் விட்ட போதும் வாங்குவாரற்று காணப்பட்டது. முஸ்லீம் மக்களின் உழைப்பை இயக்கங்கள் கொள்ளையடித்து விற்ற போதுää தமிழ் மக்கள் வாங்குவதை மறைமுகமாக எதிர்த்தே நின்றனர். உழைப்பின் பரஸ்பரம் நேச உறவுகளை கொண்ட மக்கள்ää ஐக்கியத்தை கோருவதில்ää நடப்பை பேணுவதில் இருந்தேää இன்றும் இவ்விரு சமூகங்களும் ஒன்றுபட்டு வாழ முனைப்பு பெறுகின்றான்;. எதிர்பாராத ஒரு விதிவிலக்குகள் நடந்து இருப்பின்ää அதை பொதுமைப்படுத்தி ஒரு சமூக வன்முறையாக விளக்குவது ஒரு சமூக கண்ணோட்டத்தையே தகர்ப்பதாகும்;. அதாவது ஒரு அப்பாவியை குற்றவாளியாக்கி மண்டையில் போடுவது போல்ää விதிவிலக்கான பாத்திரத்தை கொண்டு ஒரு சமூகத்துக்கே மண்டையில் போடுவது அபத்தமாகும். ஒரு விவசாயி பணத்துக்கு ஆசைப்பட்டு மற்றொரு சமூகம் என்பதால் கொல்ல துணை போவது என்பதுää தமிழ் விவசாய சமூகத்தையும் பொது குறியீட்டாக்கி குற்றவாளியாக்குகின்றது. மறு தளத்தில் ஒரு முஸ்லீமின் வர்த்தக நேர்மை பற்றி பேசி அதை முஸ்லீம் பொது குறியீட்டாக்கும் கதைப் பாங்குää இரண்டு சமூகங்களை நேர் எதிரில் நிறுத்துவதாகும். இது சமூக பிளவை மேலும் ஆழமாக்கின்றது. இங்கு ஒரு நிகழ்ச்சி நடக்கும் போதுää சமூகங்களை நேர் எதிராக நிறுத்துவது சமூக மாற்றத்தில் அக்கறையின்மையில் இருந்து எழும்ää தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்ட மாமூல் தன்மையாகும். இரண்டு சமூகங்களை நேர் எதிராக கொண்டு செல்லும் அரசியல்ää அதில் குறிப்பான பங்கை தெளிவாக அம்பலம் செய்வதே சமூக நோக்கம் கொண்ட படைப்பின் உள்ளடக்கமாக இருக்க முடியும். இங்கு உழைக்கும் மக்களின் மிக சிறந்த மனித இயல்புகளை படைப்பாளி புரிந்து கொண்டு கதை சொல்லாத வரைää உண்மையான நிகழ்வுகளை கற்பனையின் வளம் சார்ந்து சமூகத்தை திரிவுபடுத்தி அதன் மேல் கதை சொல்வது சமூகத்துக்கு எதிரானதாகும். ஒரு விவசாயிக்கும் இயக்கத்துக்கும் இடையிலான முரண்பாடு என்ன? ஏன் இயக்கம் விவாசயிகளை அடிப்படையாக கொண்டு போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. ஏன் அதற்கு எதிராக உள்ளனர்? இந்த அடிப்படை முரண்பாட்டை புரிந்து கொண்டேää பாத்திரங்களை சரியாக தெரிவு செய்ய வேண்டும். முஸ்லீம் மக்கள் மேலான இயக்க வன்முறைகளை நியாயமானவையா என தமிழ் மக்களிடம் கேட்பின்ää அதை எதிர்த்தே மக்கள் கருத்து கூறுவர். அதாவது யுத்தத்துக்கு எதிராக சிங்கள மக்கள் கருத்து கூறுவது போல்ää முஸ்லீம் மக்கள் மேலான இயக்க வன்முறையையும் எதிhத்தே தமிழ் மக்கள் நிற்கின்றனர். இதற்கு எதிராக தமிழ் மக்கள் என்ன செய்தார்கள் என்று கேட்பின்ää அதற்கான பொறுப்பை நானும் நீங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்;. இதை விட்டு சமூகத்தை மட்டும் குற்றம் சாட்டுவது அபத்தமானதாகும்.

~~ஆடுää புலிää புல்லுக்கட்டு|| என்ற சிறுகதையை எடுப்போம். ஒரு தற்கொலை தாக்குதலை நடத்தும் ஒருவனின் மனச்சாட்சி ஊடாக கதை சொல்ல முனைகின்றார். தற்கொலையாளி எப்படி தன்னை மறைத்துக் கொண்டு மக்களுக்குள் வாழ்கின்றார்ää பின்னார் எப்படி அதே மக்களுக்குள் குண்டை வைக்க முனைகின்றார். இதற்குரிய வெடிமருந்துகளையும்ää வாகனங்களையும்ää முந்திய குடும்பம் மற்றும் சமூக உறவாக்கத்தை சிதைத்து எப்படி பெறுகின்றனர்ää என்று தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றார். தற்கொலை தாக்குதலை நடத்த வரும் ஒருவனின் உணர்வுகள்ää அவன் அதை செய்ய பழகும் மனிதர்களுடன் நடமாடும் போது ஏற்படும் மனமாற்றம்ää அதை மனச்சாட்சி ஊடாக விமர்சிக்கும் சமூக இணைவின் கண்ணோட்டமää இதை மீறி சமூகத்துக்கு வெளியில் இருந்து வரும் இராணுவ உத்தரவுகள் எப்படி சமூகத்துக்கு எதிராக இயங்க வைக்கின்றது என்பதைää கதை தெளிவபடவே வெளிக் கொண்டு வருகின்றது. இங்கு விமர்சனம் என்பது ஏன் அப்பாவி மக்கள் கூடும் இடங்களை தெரிவு செய்கின்றனர் என்ற குறுந்தேசிய அரசியலை கேள்விக்குள்ளாக்கவில்லை. ஏன் இராணுவ இலக்குகளை செய்வது தானே போராட்டம் என்றுää படைப்பாளி ஏன் சொல்ல முற்படவில்லை. அதாவது ஒரு போராட்டத்தின் அவசியம்ää அது எதிரிக்கு எதிராக இருப்பதற்கு பதில் எப்படி அப்பாவி மற்றும் மற்றைய இன மக்கள் மேல் மாறிச் செல்கின்றது என்ற விடையத்தை கேட்க படைப்பு மறுக்கின்றது. மாறாக இவர் இயக்கங்கள் இழைக்கும் மக்கள் மேலான மக்கள் விரோத வன்முறை சார்ந்துää போராடுவதே பிழை என்ற கருத்தை தொங்கவிட்டுவிடுகின்றார். அதாவது ஏகாதிபத்தியம் மக்கள் விரோத தனிநபர் பயங்கரவாதத்தை காட்டிää உலக ஆக்கிரமிப்பையும் மக்களை ஒடுக்குவதை மேல் இருந்து நியப்படுத்துவது போன்றுää கதை அதையே கீழ் இருந்து சொல்லப்படுகின்றது.

அடுத்து ~~பிசாசுகளின் வாக்குமூலம்|| என்ற கதை மூலம் ஒரு இயக்கக்காரன் மரணத்தை அடைந்த பின்புää மரணம் அடைந்தவர்கள் தமது கால இயக்க வன்முறைகளையும்ää அதை வளர்த்தெடுத்த வடிவங்களையும் பேசிக் கொள்ளும் வடிவில் இயக்க வன்முறைகளை பேசுகின்றது இக்கதை. எப்படி என்ன காரணத்துக்காக இனப் படுகொலைகளை ரசித்துச் செய்தோம்ää அதன் மூலம் எப்படி புகழையும் இயக்க தலைமைக்கு வந்தோம்ää தலைமைக்கு இடையிலான அதிகார போட்டியை எப்படி துரோகமாக்கி கொன்றோம்ää என்று பல தளத்தில் கதை நகருகின்றது. மிக தெளிவாக இதை கதையாக சொல்ல முனையும் இவர்ää மக்களுக்கான போராட்டத்தின் அவசியத்தை இதன் ஊடாக சொல்ல மறுக்கின்றார். இயக்கம் இழைக்கும் தவறுக்கு அந்த போராட்டமே வேண்டாம் என்கின்ற எதிர் நிலைக்குள்ää சதாரண மாமூல் எல்லைக்குள் கதை சொல்லும் தன்மையேää இவரின் அனைத்து கதைகளையும் வலுவிழக்கச் செய்கின்றது. ஜனநாயக எல்லைக்குள் ஏற்றுக் கொள்ளக் கூடிய இந்தக் கதைகள்ää அதைத் தாண்டி கடுவிமர்சனத்துக்குரியதாகின்றது. ~~போரின் பகைப்புலம் அறியாது போர்ப்பரணி பாடும் பாட்டுக்காரர்கள் எவரோ - அவரே ஈழம் இன்னமும் எரிந்துகொண்டிருக்க முதற்காரணி என்பேன்|| என்று கூறுவதன் மூலம்ää இலங்கையின் இன ஒடுக்குமுறையை மறுக்கின்றார். இலங்கையில் சிங்கள இனவாத அரசின் ஒடுக்குமுறை தான் இன்னமும் ஈழம் எரியக் காரணமாக இருக்கிறது. அதை இவர் மறுக்கின்றார். அதை தமிழர் தலைப்பில் ஒரு தலைப்பட்சமாக குற்றம் சாட்டுகின்றார். ஒரு யுத்தமற்ற முதாலாளித்துவ ஜனநாயகம் உன்னதமானதா? யுத்தம் எங்கிருந்து எப்படித் தோன்றுகின்றன? சமதானம் என்பது என்ன? எந்த சமூக அமைப்பில் யுத்தமற்ற சமாதனம் நிலவும்;? இதை கேள்வியாகத்தன்னும் எழுப்பாத இலக்கியவாதி படைப்புகளை உருவாக்கும் போது அவை வலது குறைந்தனவாகிவிடுகின்றன.

இலங்கையில் யுத்தம் தொடர என்ன காரணம்? சமாதனம் எதன் வழிகளில் எப்படி தோன்றும்;? இனங்களுக்கிடையிலான அமைதி எந்த உள்ளடக்கத்தில் சாத்தியமானது? மக்களுக்கு எதிரான இயக்க வன்முறைகள் எங்கிருந்து தோன்றின? ஏன் அவை நிகழ்கின்றன? மக்களுக்கு எதிரான வன்முறையற்ற போராட்டம் சாத்தியமில்லையா? போராட்டம் எதை எப்படி சாதிக்க வேண்டும்? இது போன்று பலவற்றை படைப்பின் கரு மீது ஒரு படைப்பாளி கேட்டு தெளிவாக மக்கள் சார்ந்து விடை தெரிந்திராத வரைää அந்த படைப்புகள் குறைபாடு கொண்டே பிறக்கின்றது.

அடுத்து இந்த கதையில் ஒரு இனத்துக்கு எதிரான படுகொலைகள்ää தற்செயலாக சில காரண காரியங்கள் மேல் நிகழ்ந்தாக காட்டுவது தவறானவை. உதாரணமாக பாதை தெரிந்துவிடும் என்ற காரணமேää படு கொலை நடத்தத் தூண்டியது என்பது தவறானது. இது படுகொலை செய்வதை நியாயப்படுத்த முன்வைக்கும்ää ஒரு எடுகோள் மட்டுமே. மாறாக இனங்கள் பற்றியும்ää மக்கள் பற்றியும் கொண்டுள்ள கண்ணோட்டம் சார்ந்துää முன்கூட்டியே திட்டமிட்டே படு கொலைகள் நிகழ்ந்தனää நிகழ்கின்றன. இந்த உள்ளடக்கத்தை தனிமனித புகழ் மற்றும் முடிவு சார்ந்தாகää சிந்தனையாகவே இந்த கதை பேசுகின்றது. இது ஒரு படுகொலை வரலாற்றின் மேலான ஒரு திரிபாகும். அவரின் பெண்ணியம் பற்றிய கண்ணோட்டம் முதல் அவரின் சிறுகதை முழுக்கää இந்த திரிபே அரசியல் சாரமாக உள்ளது. தனிமனித நடத்தைகள் சார்ந்த விருப்பு வெறுப்பகவும்ää பிரதேசம் சார்ந்த முடிவாக இனப்படுகொலைகள் விளக்குவதுää அதன் ஸ்தாபான ரீதியான வர்க்க அரசியல் கண்ணோட்டத்தை பூசிமொழுகுவதாக உள்ளது. தனிமனித நடத்தைகள் அந்த இயக்கத்தில் அராசியல் கண்ணோட்த்தில் இருந்தே பிறக்கின்றது என்பதைää இந்த படைப்பாளி புரிந்து கொள்ளவேயில்லை. தனிமனிதனைச் சுற்றி கதை சொல்லும் போதுää தனிமனிதனின் தோற்றுவாயை தெளிவாக புரிந்த கொண்டே அதை விமர்சிக்க வேண்டும். தனிமனிதர்கள் ஒரு இயக்க போக்கில் ஒரு பாத்திரத்தை சில விருப்பு வெறுப்புக்கு எற்ப நடித்துக் காட்டுகின்றார்கள் என்பதைää தெளிவாக வேறுபடுத்தியும் காட்டவேண்டும்;.

~~... அதன் இரண்டாம் பாகமும்|| என்று புத்தக தலைப்பு சார்ந்த வெளியான இக்கதைää முஸ்லீம் சமூகத்துக்கு இழைக்கபட்ட கொடூமையைப்பற்றி பேசுகின்றது. அந்த கொடூமையில் ஈடுபட கோரும் ஒருவனின் ஊடாகää அவனின் எதிர்வாதமாகவும் மறுதளத்தில் இயக்க சத்தியப் பிரமானத்தினுடாக இதை செய்ய நிர்ப்பந்திக்கும் நிலையைää இந்த கதை சிறப்பாகவே வெளிக் கொண்டு வந்துள்ளது. இங்கும் யுத்தத்துக்கு எதிரான தத்துவத்தை பேசுகின்றார். ~~ஆயுதம் மானிடத்தை மீட்கும் என்பது முட்டாள்தனம்|| ~~துப்பாக்கி முனையில்தான் சுபீட்சம் பிறக்கும்|| என்பதை எதிர்த்து இந்த கதை தொடங்குகின்றது. இது இயங்கியலில் தன்மை மறுக்கின்றது. ஒரு பொருள் நேர் மற்றம் எதிர் தளத்தில் இயங்குகின்ற பன்மை மறுக்கின்றது. ஒரு அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் இரண்டு தளத்தில் செயற்படுகின்றன. மனிதன் தன் உழைப்பை அடிப்படையாக கொண்டு கண்டறியும் அறிவியல்ää அவனுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் சமூகத்தில் நாம் உள்ளோம்;. ஆகவே உழைப்பையும் அதன் அறிவியலையும் நிராகரிக்க முடியுமா? ஒரு அறிவியல் சார்ந்த பொருளை மனித இனத்துக்கு எதிரகவே கையாளும் மற்றொரு மனிதன்ää எப்படி? எந்த? சமூக அமைப்பில் எது சார்ந்து? ஏன் உருவாகின்றான்? இந்தக் கேள்விகளை விடுத்து மாமூல் கண்ணோட்த்தில் ஆயுதத்தை விமர்சிக்கும் போதுää மனித அடிமைத்தனத்தை நியாப்படுத்திவிடுகின்றது. மனிதன் தன் மேல் போடப்பட்டுள்ள விலங்குகளை எப்படிக் களைவது? ஆயுதம் ஏந்திய ஒடுக்கமுறைகளை எதிர்த்துப் போராட வேண்டுமா? அல்லது இல்லையா? எப்படி? அதில் ஆயுதத்தின் பங்கு என்ன? இந்த கேள்விகளை படைப்பாளி கேட்டு தெளிவு படுத்துவதற்கு பதில்ää அதை எதிர் நிலையில் மறுத்துவிடுகின்றார். ஏகாதிபத்தியம் உலக பயங்கரவாத்தை ஒழிக்கää உலகு எங்கும் ஆயுதங்களை களையப் போவதாக கூறுவதற்கு நிகரானது. இந்த கதையிலும் கிழக்கு இயக்காரர்கள் இந்த குற்றத்தை இழைக்கவில்லைää மாறாக யாழ்ப்பாணத்து இயக்ககாரர்கள் தான் இதைச் செய்கின்றனர் அல்லது யாழ் சென்று திரும்புபவர்களே செய்கின்றனர் என்ற வாதங்கள்ää யாழ் மையவாதம் மீதான எதிர்ப்பை பொருத்தமற்ற வகையில் முன்வைத்துää வன்முறை சார்ந்த அரசியல் வடிவத்தை திரித்துவிடுகின்றார். இயக்கத்தில் யாழ் மையவாதம் என்பதுää அதன் அரசியல் சமூக கூறுகள் மேல் இனங்காணக் கூடியவையே. அது அரசியல் கோரிக்கையில் இருந்து சமூகத்தின் அடிப்படைக் கோரிக்கைகளை நிராகரிப்பது வரையிலான உள்ளடக்கத்தில் காணமுடியும்;. யாழ் முஸ்லீம் மக்கள் வெளியேற்றிய நிகழ்வுää கிழக்கு தலைமையால் முன் நின்ற நடத்தப்பட்டது. இதை மறுக்கும் இவர் கிழக்கு முஸ்லீம் மீதான வன்முறைகு யாழ் பிரதேசவாதம் சார்ந்துää கருத்து வைப்பது ஒருதலைபட்சமானவை. அத்துடன் வடக்கில் இருந்த தான் இயக்கம் இங்கு வந்தது என்பது ஒரு தலைபட்சமானவை. ஒரு சமூகம் மீதான ஒடுக்குமுறையை மறுத்து ஒரு பிரதேசம் சார்ந்து கற்பனையில் திணிக்கப்பட்டதாக காட்டுவது ஒரு திரிபாகும். ஒரு பிரேதேசம் முன்னேறிய விழிப்புணர்ச்சியை பெறலாம்;. ஆனால் அதை மற்றைய சமூகத்துக்குää பிரதேசத்தக்கு யாரும் திணிக்க முடியாது. வன்முறையை ஒரு பிரதேசம் சார்ந்த மொழியாக நடத்தையாக வருணிப்பதுää சொந்த பிரதேசத்தின் வன்முறையையும் அதன் மொழியையும் மறப்பதாகும்;. இவர் வன்முறையையும்ää அதன் கொடூரங்களையும் யாழ் பிரதேசவாதத்தில் இருந்தே உருவாகுவதாக கூறிää வன்முறையின் உள்ளடக்கத்தை திரித்து புரட்டுகின்றார். அனைத்தையும் அதன் அரசியலில்ää அதன் வர்க்க முரணில் கண்டுபிடிக்க தவறுகின்ற போக்குää இலக்கியத்தின் தனிமனித வாத சுயட்சையைக் கொண்டே அவதாரிக்கின்றது.

பெண்கள் பற்றிய சக்கரவர்த்தியின் பார்வை அவரின் படைப்புளின் மீதான விமர்சனத்தை தெளிவாக்க மேலும் உதவுகின்றது. ஒரு படைப்பாளி சமூகம் மேலான அனைத்து ஒடுக்குமுறையையும் முரணற்ற வகையில் புரிந்த கொள்ள வேண்டும்;. இதற்கு முரணற்ற தத்துவத்தை ஆதாரமாக கொள்ள வேண்டும்;. இங்கு ஒன்றில் முற்போக்கு என்பதும் மற்றதில் பிற்போக்கு என்பது சில நியாப்படுத்தலுக்கு உதவலாம.;; ஆனால் அந்த முற்போக்கிலும் எங்கோ ஒரு குறைபாடு ஒளித்திருப்தைää ஒரு முரணற்ற தத்துவார்த்ததால் தெளிவாக கண்டு கொள்ள முடியும். இது தான் சக்ரவர்த்தியின் யுத்தின் இரண்டாம் பாகம் என்ற நூலின்ää இரண்டு பிரதான அடிப்படை உள்ளடக்கத்திலும் பிரதிபலிக்க தவறவில்லை. பெண்கள் பற்றி கண்ணதாசனின் கொச்சை வடிவிலான தத்துவ விரச எழுத்துப் போன்றுää சக்கரவர்த்தியும் பெண்கள் பற்றிய கொச்சை தத்துவத்தை முன்வைக்கின்றார்.

இவர்; பெண்கள் பற்றி கூறுவதைப் பார்ப்போம். ~~நம்ம தமிழிச்சிகளுக்கு ஆண் என்றால் எப்படித் தெரியுமா இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்... கூந்தலை சுற்றி தலையை சுவரில் மோதவைக்க வேண்டும். எதிர்த்தால் பிடறி வீங்க விளாச வேண்டும். தூசன வார்த்தை பேச வேண்டும். வீதியில் போகும் போது இடையையோ மார்பையோ தீண்ட வேண்டும்.|| என்று இவர் குறிப்பிடுகின்றார். பாரிசில் வேறு சில பாலியல் வக்கிரம் பிடித்த மனநோயாளர்கள் பெண் பற்றி கூறும் போது இதே பாணியில்ää பெண்கள் மார்பை இந்தா பிடி இந்தா பிடி என்று சொல்லி நடப்பதாகவும்ää மூன்று ஆண்களுடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ள பெண் விரும்புவதாகவும் கூறுகின்றனர். இப்படிப் பல. ஆனால் அனைத்தும் இலக்கியமாக இலக்கிய சுதந்திரத்தில் குளிர்காய்கின்றது. ஒரு பெண் தனது மார்பை அல்லது இடையை உரசி நடக்க விரும்புகின்றாள் என்பதுää எவ்வளவு கேவலமான பெண் பற்றிய ஆணாதிக்க விளக்கமும் பார்வையாகும். இது ஆணின் எண்ணமாக இருக்கää அதை பெண்ணுக்கு மகுடம் சூட்டுவது ஆணாதிக்கத்தின் பண்பாகும்;. வன்முறையைச் செய்யும் ஆணை பெண் விரும்புகின்றாள் என்பதுää பெண் ஒரு உயிரியல் தொகுதி என்பதையே ஆணாதிக்கம் மறுக்கின்ற உள்ளடக்கத்தை அடைப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டது. ஒரு பெண் அடிமையாகவும்ää இத்தகைய துன்ப துயரங்களை சகித்த படி இந்த வாழ்க்கையை தேர்ந்த எடுக்கின்றாள் எனின்ää அது தனிப்பட்ட ஒரு பெண்ணின் குற்றமல்ல. மாறாக ஆணாதிக்க சமூக அமைப்பின் ஒரு அடக்குமுறை வடிவமாக பெண் மேல் திணிக்கப்டுகின்றது. இது அனைத்து வன்முறைகள் போன்றதே. சாதரணமாக பெண்கள் மேல் உரசி நடத்தல்ää நிற்றல் போன்ற ஆணாதிக்க சமூக வன்முறை நிகழும் போதுää பெண்ணை அப்படி செய்வதாக தூற்றுவதும் ஒடுங்கி நடக்க நிற்;க கோரும் அடக்குமுறையில் இருந்தே பெண் பற்றிய கொச்சை இலக்கியம் பிறக்கின்றது.

குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வீதிகளில் நடக்கும் போதுää ஆணுக்கு பின்பாக பெண்; பத்தடி வித்தியசத்தில் நடக்கும் பராம்பரியம் எமது சமூகத்தில் காணப்படுகின்றது. இது மூன்றாம் உலக நாடுகளுக்கே பொதுவானது. நிலப்பிரபுத்துவ பெண் அடிமைத்தனத்தை அடிப்படையாக கொண்ட பெண்ணின் பின்தாங்கிய நிலைக்குää ஆணாதிக்க கண்ணோட்டம் தெளிவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் போதிக்கின்றது. இந்த வரலாற்று போக்கில் பெண் ஆணுடன் சமத்துவமாக அருகில் நடக்க விருபும் ஒரு முயற்சியைää ஏகாதிபத்திய கண்ணோட்டத்தில் சிந்திக்கும் நிலப்பிரபுத்துவ ஆண்ää பெண் தனது இடுப்பையும்ää மார்பையும் உரசி நடக்க விரும்புவதாக கூறுவது இங்கு நிகழ்கின்றது. இங்கு இந்த விடயத்தில் ஏகாதிபத்திய ஆணாதிக்கம் உரசி நடப்பதை கோருகின்றது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் உரசி நடப்பதாகவும் கொச்சைப்படுத்தவது நிகழ்கின்றது. பெண் அருகில் சமத்துவமாக நடக்க விரும்பும் விருப்பம்ää இயல்பானது இயற்கையானது. அதை மறுக்கும் ஆணாதிக்கம் இதற்கு கொடுக்கும் விளக்கம் தான் உரசி நடக்க விரும்பவதாக கூறி கொச்சைப்டுத்துவதாகும்;.

~~நானும் ஒகஸ்டீனாவும் ஒரு பந்தயக்குதிரையும்|| என்ற சிறு கதைää படைப்பாளியின் ஆணாதிக்க சமூக கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகின்றார். ஏகாதிபத்திய கொலிவூட் ஆணாதிக்க சினிமா உள்ளடக்கத்தை இவர் மீளவும் முன்வைக்கின்றார். மிக குறைந்த வயதுடைய ஒரு பணக்கார அழகிய செல்லப் பெண் மீது ஆசை கொள்கின்றான். (உண்மையில் அவள் அழகிய அகதிப் பெண்ணாக இருப்பதும்ää அவனின் வயது முதிர்ந்த முதலாளி தனது பாலியல் தேவைக்கு வைப்பாட்டியாக பயன்படுத்துவதும் பின்னால்தான் அறிகின்றான்.) இந்நிலையில் அவன் வீட்டில் கூலி வேலை செய்தவன்ää அந்த பெண்ணுடன் இரகசியமாக உறவு கொள்கின்றான்;. இதைச் சுற்றியே நகரும் கதை. இங்கு பெண்ணின் அழகுää கவர்ச்சிää அதிகாரம்ää அந்தஸ்த்துää வெள்ளை நிறம் சார்ந்து அவளை அனுபவிக்க துடிக்கும் மனநிலைää பின்னால் அதை நியாயப்படுத்த பெண்ணின் துயரம் பற்றி பேசி உடல் உறவை கொள்கின்றான்;. ~~.. கறுப்பன். நான் கனவு காணலாம். ஒரு வெள்ளைக்காறிய நினச்சுää அதுவும் இந்தப் பெரிய பண்ணைக்கும் முப்பத்தேழு குதிரைக்கும் சொந்தக்காரியை...|| இங்கு அந்த பெண்ணுடன் ஆன உறவை எங்கிருந்து தொடங்குகின்றார். ~~முக்கால் தொடை தெரியிற மாதிரி காச்சட்டை போட்டிருந்தாள். அதக் கூட மேல்பக்கமா சுருட்டி விட்டிருந்தாள். உள்ளுக்கு கறுப்பு ~பிறா| போட்டிருக்காள் போல... வெள்ளை வெனியனுக்கு மேலால லேசா தெரிந்து. எனக்கு சங்கடமாயும் இருந்திச்சு. சந்தோசமாயும் இருந்திச்சு|| இதற்கு பின்தான் அவளின் வைப்பாட்டி வாழ்க்கை தெரியவருகின்றது. இங்கு தமிழ் கலாச்சார ஆணாதிக்கம் சார்ந்து அவளின் உடுப்பு சங்கடமாகின்றது. அது ஏகாதிபத்திய ஆணாதிக்க கலச்சாரமாக மாறும் போது சந்தோசமாக வெளிப்படுகின்றது. ஒரு பெண்ணின் நடை உடை முதல் அவளின் உயிருள்ள அம்சங்கள் மேலான உயிருள்ள நடத்தைகளை எல்லாம்ää மூலதனம் தனது வர்த்தக விளம்பர எல்லைக்குள் தீர்மானிக்கின்றது. இந்த விளம்பரம் எல்லாம் உலகமயமாதல் என்ற ஆணாதிக்க எல்லைக்குள் நின்றுää பெண் பற்றிய ஆணின் ரசனைக்குள் கட்டமைக்கப்படுகின்றது. ஒரு பெண்ணை அவன் பார்க்கும் பார்வைää நிறம் சார்ந்த பாலியல் வக்கிரம் இந்த கதையில் வெளிப்படுகின்றது. இங்கு அவன் அல்லää ஆணாதிக்க சமூகமே அப்படியே தான் பார்க்கின்றது. இது கொலிவூட் வகைப்பட்ட சமூக யதார்த்தமாகும்;. இங்கு அதை நியாப்படுத்தவே பெண்ணின் துயரம் பற்றி அதே வடிவில் புகுத்தப்படுகின்றது. இந்த துயரம் சார்ந்தே ~~.. காப்பத்த வேணும் எண்டு என்ர மனசில எண்ணம் வரத் தொடங்கியது|| ஒரு தமிழனாக ~~பரிவான புள்ள இவள்|| என்று சிந்தனைää நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை மரபை சார்ந்து வெளிப்படுத்துகிறார். அதைத் தொடர்ந்தே பாலியல் ரீதியாக உறவை கொள்கின்றார். கொலிவூட் கதாநாயகர்கள் எல்லாம் சினிமாவில் இப்படித் தான் உறவு கொள்பவர்கள்;. அந்த பெண்ணின் அசைவுகளை தமிழ் சினிமா மற்றும் கொலிவூட் வகையில் சித்தரிக்கவும் தவறவில்லை. கள்ள உறவை அவன் தெரிந்து கொண்ட போதுää ~~..இதெல்லாம் சகஐம் தானே எண்டு லேசா எடுத்துக் கொள்வானா? டானியல் வெள்ளக்காறன் தானே|| என்று கூறுவதன் மூலம்ää ஐரோப்பிய சமூகத்தையே கொச்சைப்படுத்துகின்றார். ஐரோப்பிய பெண்களை புரிந்து கொண்ட விதம் ஆபாசமானது. இப்படி இந்த சிறுகதை தனது வெட்டு முகத்தை காட்டும் போது மற்றைய கதைகளை கேள்விக்குள்ளாக்கின்றது.

~~ரூபம்|| என்ற சிறுகதை தத்துவம் தொடர்பாக தொடங்கி ஏகாதிபத்திய பாலியல் நுகர்வை நியாப்படுத்துவதில் முடிகின்றது. ~~வெறும் மயக்கங்கள் மாத்திரம் உள்ள மாமூல் வாழ்க்கையில் மாற்றம் தேவை...
நிஜம் தேவை....|| என்று குறிப்பிடும் இவர்ää அதை தமிழ் பண்பாடு கடந்து ஏகாதிபத்திய பண்பாட்டு கலாச்சாரத்துக்குள்ளேயே நிஜத்தைத் தேடுகின்றார். தமிழ் நிலப்பிரபுத்துவ மதவாத பெண் அடிமைத்தனத்தை கேள்விக்குள்ளாக்கும் இவர்ää அதற்கு பதிலாக ஏகாதிபத்திய நுகர்வை முன் தாள்ளுகின்றார். ~~அப்படி எண்டால் உண்மைதான் தத்துவமா?|| ~~ஏறக்குறைய... ஆனால் உண்மைய விட உண்மை|| என்கின்றார். அந்த உண்மை என்ன. உண்மை என்பது இருக்கின்ற வேறுபட்ட சமூக பண்பாட்டு கலாச்சாரக் குறைகள் அல்ல. இருக்கின்ற சமூக பண்பாட்டு கலாச்சார கூறுகள் ஏன்ää எப்படிää எங்கிருந்துää எதற்காக உருவாகி வளர்கின்றது என்ற கேள்வி மீதான உண்மையேää அனைத்தையும் விட அடிப்படையானது. இதை இந்த சிறுகதை தொகுப்பு முற்றாக மறுக்கின்றது. மாறாக ஏகாதிபத்திய போலி ஜனநாயகம்ää கட்டற்ற பாலியல் சுதந்திரம் மீது காதல் கொள்கின்றார். அதையே சிறு கதை பிரதிபலிக்கின்றது. இயக்க வன்முறையில் கூட இந்த சுதந்திரம்ää ஜனநாயகம் என்ற எல்லைக்கள் நின்றே படைப்பு பேசுகின்றது. இது சில வரையறைக்குள் மட்டும் முற்போக்காக உள்ளது.

தொடர்ந்து இந்தச் சிறுகதையில் ~~ஒரு நாள் அதுவும் ரெண்டோ மூணு மணித்தியாலமோ தான் கதைக்க ஒருத்திக்காக இன்னொருத்தி தன் புருஷனை பங்கு போட ஓம் எண்டு சொல்றது.... சே... ஏற்றுக் கொள்ள முடியாது... எவ்வளவு அசிங்கமாக இருக்கு|| என்று பெண் சொல்லää படைப்பாளி ~~நாறிப் போன மீனைப் பார்ப்பதுபோல் அவள் முகம் அஷ்ட கோணலாய் நெளிந்தது. இது தமிழ் பெண்களுக்கு மாத்திரமே உரிய அருவருப்பு நெளிப்பு. மற்றவர்களும் நெளிகின்றார்களே என்று தானும் நெளிக்கிற பம்மாத்து நெளிப்பு. நெளிக்காது போனால் தூரத்தில் வீசப்படுவோமோ என்கின்ற பயத்தில் எல்லாப் பெண்களும் போலியாகவே போனார்கள்|| என்று எழுதும் சக்கரவர்த்திää தனது உண்மை இது என்கின்றார். இது மாமூல் கடந்த விளக்கம் என்கின்றார். ஒரு பெண் பற்றி இவரின் பார்வை இப்படிபட்டதே. ஒரு எழுத்தளான் தனது இலக்கியம் மீதான நேர்மை போன்றேää பெண்ணின் உடல் மேலான உரிமையும். ஒரு சில மணித்தியாளத்தில்; இன்னுமொருவனுடன் உறவு கொள்கின்றாள் என்பதுää படைப்பாளியான ஆணின் கற்பனை. இது கொலிவுட் இரண்டு மணி சினிமாவில் மட்டும் நடப்பவை. அல்லது பாலியல் வக்கிர இசையும் மதுவும் இணைந்த போதையில் நடப்பவை. அல்லது பாலியல் நுகர்வின் விளம்பர மோகத்தில் உந்தப்பட்டு சுய அறிவிழந்து நடப்பவை. இவை எல்லாம் விதிவிலக்குகள். சுய அறிவுள்ள எந்த பெண்ணும் இப்படிச் செய்வதில்லை. தமிழன் எப்போதும் ஐரோப்பிய சமூகத்தின் விதிவிலக்கை தூக்கிபிடித்தேää தூற்றுவதும் போற்றுவதும் நிகழ்கின்றது.

~~முதிர்க்கன்னி|| என்ற கதை ஒரு பெண் சீதனம் இன்றி திருமணம் செய்யாது வாழும் வாழ்க்கை பற்றி பேசுகின்றது. இந்த கதையில் அந்த பெண் மீதான ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் பலாத்காரத்தைää பாலியல் சுகம் சார்ந்து ரசிப்பதாக அல்லது மறைமுகமாக இணங்கிப்போகும் வடிவில் கதை சொல்லி பெண்ணை இழிவாக்கின்றது. அவளுக்கு படிப்பித்தவன் அத்து மீறி உடலில் கைவைத்ததுää இந்திய இராணுவம் கற்பழித்ததுää மேற்கு நாடுகளுக்கு ஆள் கடத்துபவன் அவளை கற்பழித்ததுää விக்கிரமித்தன் அவளை கற்பழிக்க தூக்கிச் செல்வது ஈறாக நடக்கும் வன்முறை மற்றும் பலாத்காரத்தைää பெண் ஏற்று இணங்கி போவதாக கதை சொல்வதுää பெண்ணின் இயங்கியல் எதிர்ப்பை கொச்சைப்படுத்தி அவள் அப்படித்தான் என்று ஒரு ஆணாதிக்கவாதியாக கதை சொல்லுகின்றார்.

மற்றொரு கதையில் ~~எவனோ இளநீரைக் குடிக்க அப்புறம் நான் கோம்பை சுமக்க வேண்டி வந்துவிடும்...|| என்ற கூற்று தந்தை வழி சமூகத்தின் வாரிசு நோக்கத்தை அடிப்படையாக கொண்டது. அந்த அடிப்படையில் நின்றே சக்கரவர்த்தி பெண்ணின் தாய்மையை எதிர்க்கின்றார். குழந்தை தனது சொந்த விந்து சார்ந்தாகää பெண்ணின் கற்பின் மீது சொந்த உரிமை சார்ந்தாக இருக்க வேண்டும் என்றää ஆணாதிக்க சமூகத் தொடர்ச்சியை பிரதிபலித்தபடியே பெண்ணின் கற்பொழுக்கத்தை இதன் அடிப்படையில் முன்வைக்கின்றார். இங்கு அவர் கற்பை பெண்ணிடம் கோருகின்றார். குழந்தையின் தந்தை வழியுரிமை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும் என்பதையேää பிரகடனம் செய்கின்றார். இங்கு தாய் வழி உரிமையை கொச்சைப்படுத்துகின்றார். இங்கு பெண்ணின் நடத்தை தொடர்ப்பான விவாதம் இரண்டாம் பட்சமாகவே உள்ளது. இங்கு ஆணின் நடத்தை தொடர்பான பிரச்சனையே முதன்மையானது. இங்கு பெண் பேசவில்லை. ஆண்தான் பெண்ணாக பேசிää ஆணின் ஆணாதிக்க சுகத்தை நியாப்படுத்துகின்றார்.

~~பலமான ஆணிண் குறுக்கிடல் இல்லாத வரைக்கும் எல்லா பெண்ணும் இடுப்புக்கு கீழே சுத்தமாகத்தான் இருக்க முடியும்;. பத்தினியாகவும் கற்புடனும் பத்திரமாகவும் இருக்க முடியும்தான்.|| என்ற பெண் பற்றிய கொச்சைப் பார்வை ஆணாதிக்கத்தின் திமிராகும். கற்பை பெண்ணின் இடுப்புக்கு கீழ் மட்டும் காணும் இந்த ஆணாதிக்க சமூகத்தைப்பற்றி விமர்சித்தபடிää இவரும் அதையே செய்வதுதான் வேடிக்கை. ஒரு ஆணுடன் பெண் உறவு கொள்வது என்ற எல்லைக்குள் அவளின் பத்தினித்தனம் மற்றம் கற்பு எல்லாம் முடிவடைகின்றது என்ற விளக்கவுரைää ஆணாதிக்க வரையறைக்கு உட்பட்டது. இது பற்றி விபரமாக புரிந்து கொள்ள எனது பெண்ணிய நூலைப் பார்க்கவும்.

~~அவுத்துப் போடாத வரைக்கும் தான் பொம்பள சுவாரஸ்யம்ää ஆச்சரியம் எல்லாம். அவுத்துட்டா அப்பறம் ஒரு மண்ணும் கிடையாது|| என்று யாரோ ஒரு பன்றியின் பெயரில் சொல்லியேää அதை அங்கீகரிக்கின்றார். ஆணாதிக்க ஆண்கள் பெண் பற்றி புரிந்து கொண்ட எல்லைக்குள் தத்துவம் பேசுகின்றார். ஆண் பற்றிய பெண்ணின் ஆர்வம் எதனுடன் முடிகின்றது. ஒரு பெண்ணை அவுத்துப் போட வைப்பதை தனிப்பட்ட ஆண் முதல் உலகமயமாதல் மூலதனம் வரை தீவிரமாக கோரும் போதுää அதையே இந்த சிறுகதை ஊடாக சக்கரவர்த்தியும் கோருகின்றார். பின்பு அவளை சலித்துப் போன தனிமனித நுகர்வு எல்லைக்குள் இழிவுபடுத்துவது நிகழ்கின்றது. தனிச் சொத்துரிமை சார்ந்து அதுவே நுகர்வு வெறியாக பண்பாடாக மாறிய பின்புää ஆணின் அடிமையான பெண்ணை நுகர்வு எல்லைக்குள் ரசிக்கவும் தூக்கியெறியவும் முடிகின்றது. இந்த நுகர்வை அவுத்துப் போடக் கோரும் ஆணாதிக்க நுகர்வு எல்லைக்குள் தான்ää பெண்ணைப் பற்றிய மதிப்பீட்டை கொடுக்கின்றார்.

~~... வெள்ளைக்காரிச்சிகள் யோக்கியம்! நம்மவளுகள் ஒழுங்காக அனுபவித்ததும் இல்லை.|| என்று கூறுவதன் மூலம்ää வெள்ளையினப் பெண்கள் பாலியலை அனுபவிப்பதாகவும்ää தமிழ்ப் பெண்கள் பாலியலை அனுபவிக்கவில்லை என்கின்றார். அதாவது நிலப்பிரபுத்துவ கட்டப்பாடு கொண்ட பாலியலையும்ää ஏகாதிபத்திய நுகர்வை அடிப்படையாக கொண்ட விபச்சார பாலியலையும் எதிர் எதிரே நிறுத்திää தமிழனாக ஏகாதிபத்திய பண்பாட்டுக்குள் விபச்சார பாலியலை அனுபவிக்க கோருகின்றார். அதாவது ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ சமூக முரண்பாட்டுக்குள் சிக்கி தவிக்கும் ஒரு அழுமூஞ்சியாகää இரண்டு தளத்துக்குள்ளும் அலை பாய்ந்தபடி புலம்பவது நிகழ்கின்றது. ஒரு வெள்ளையின பெண் அனுபவிக்கும் துயரத்தையிட்டு எதையும் தெரிந்து கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆணாதிக்க நாயகனாக நின்றுää நிலப்பிரபுத்துவ பெண்ணை அவளின் அடிமை வாழ்வின் மேல் கொச்சைப்படுத்தும் வக்கிரம் நிகழ்கின்றது. உண்மையில் தமிழ் பெண்களை விபச்சார எல்லைக்குள் ஆணாதிக்க தமிழர்கள் அனுபவிக்க துடிக்கும் ஆவல்ää கோட்பாட்ட ரீதியாக பெண்ணை விபாச்சரியாக்க கோருகின்றார். அதுவே இவர் உருவாக்கிய காத பத்திரங்களான பெண்கள் செய்யத் தொடங்குகின்றனர்.

~~இருட்டில் யாரோ ஒருவனுடன் சல்லாபித்து விட்டுää பகலில் எவனோ ஒருவனுக்கு மனைவியாவதுதானா தமிழியல்?|| என்ற இவரின் மற்றொரு முரண்பட்ட மதிப்பீடுää ஒரு சமுதாயம் பற்றி இழிவு செய்கின்ற பார்வையாகும்;. பெண்கள் பற்றிய கொச்சைத் தனமானää அவளின் சுயநிர்ணயம் மீது காறி உமிழ்கின்ற இந்த இலக்கியம்ää ஏகாதிபத்திய விபச்சார நுகர்வு எல்லைக்குள் பெண்ணை வரக் கோருவதாகும்;. பெண்களை விரும்பியபடி எந்த நேரமும் யாருடனும் உறவு கொள்ளக் கோரும் கண்ணோட்டத்தை திணிக்கவேää பெண் இரட்டை தளத்தில் சுயமிளந்து இரகசியமாக வாழ்வதாக பறை சாற்றுகின்றார். ஒரு ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் நிலை என்பது ஆணின் வருணைக்குட்பட்ட எல்லைக்குள் தான்ää அவளின் நடத்தைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இங்கு அவளின் சுயம் கூட கொச்சைப்படுத்தப்படுகின்றது. ஆண் ஒரு பெண்ணைப்பற்றி எதை நினைக்கின்றானோää அதுவே பெண்ணின் இயல்பாக இலக்கியம் ஊடாக முத்திரை குத்தப்படுகின்றது. ஒவ்வொரு ஆணும் பெண்பற்றிய தனது அபிப்பிராயத்தை கொண்டேää ஒவ்வொரு பெண்ணின் அடிமைவாழ்வும் அதன் எல்லைக்குள் வரையறுக்கப்படுகின்றது. இதில் இருந்து கொண்டு மொத்த பெண்களை அடிப்படையாக கொண்ட சமூகத்தை பற்றிää கொச்சையான சிந்தனையையும் கண்ணோட்டத்தையும் பொதுமைப்படுத்துகின்றனர்.

இவர் மேலும் பெண்ணைப்பற்றி குறிப்பிடும் போது ~~முதலாவது கை எடுத்துக் கும்பிட எண்ணம் வரும். ரெண்டாவது உடனேயே சாய்ச்சிட எண்ணம் வரும்!|| என்று பெண்ணை இரண்டாக வகுத்து தனது ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றார். பெண்ணை கையெடுத்துக் கும்பிடக் கோரும் எல்லை என்பது ஆணாதிக்க அடிமைத்தனத்தில் அடங்கிவாழும் பெண்ணை அதன் அடிமைத்தனத்தை மெச்சி பெண்மையின் மேல் வழிபடுவதாகும்;. இரண்டாவது அடங்கி நடக்க மறுக்கும் பெண்ணைää அவளுடன் படுத்து விட நினைக்கும் ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்விரண்டும் உள்ளடக்கத்தில் ஒன்றுதான். அதாவது இந்த இரண்டு பெண்ணையும் அவர் ஏகாதிபத்தியää நிலப்பிரபுத்துவ எல்லைக்குள் நின்றே வரையறுக்கின்றார். அத்துடன் படுத்துவிட நினைக்கும் பெண்ணை இவர் குறிப்பிட்டது போல்ää அவித்துவிடும் வரைக்கும் தான் ஏகாதிபத்திய ஆணின் வக்கிர நோக்கமும் மதிப்பீடுகளும் அமைகின்றன. ஆணாதிக்க சமுதாயத்தில் நுகர்வின் பண்பாடுää பெண்ணையும் கூட நுகர்வின் எல்லைக்குள் இருக்கவும்ää இருப்பதாகவும் கூறி கோருகின்றது. பொருட்களைப் போல் பெண்ணையும் கைகூப்பி கூம்பிடும் ஒரு பதுமையாகவும்ää மறுதளத்தில் நுகர்வாகவும் அக்கம் பக்கமாகவும் செயற்படுகின்றது. இது வாழ்வின் நுகர்வு நெறியில் தெளிவாக எல்லா துறையிலும் காணமுடியும்;.

ஒரு பெண் தனது வாழ்வில் அத்து மீறி வாழ்கின்ற போது ~~கோழைகளின் திருட்டு மீறல்தான் நம் தமிழ்ச்சிகளிடம்...|| என்கின்றார். இது பெண்களின் குணமா? இல்லை. அத்துடன் இது தமிழ் பெண்களின் குணமா? இல்லை. ஆண் பெண் வேறுபாடு இன்றிää நிற வேறுபாடு இன்றி சமுதாயத்தில் பண்பாட்ட கலாச்சார மற்றும் சட்டங்கள் என அனைத்தையும்ää திருட்டுத்தனமாக மீறுவது வாழ்வின் யதார்த்தில் உள்ளது. இதை கோழைத்தனம் என்று கூறுவது முழுமையற்றது. மாறாக அதை திருட்டுத்தனமாக ஏன் மீறுகின்றனர். இந்த சமுதாயத்தின் அடக்குமுறைகள் சுரண்டலாகவும்ää ஆணாதிக்கமாகவும்ää சாதி ஒடுக்கமுறையாகவும் என சமுதாயத்தில் புரையோடியுள்ள பலவேறு ஒடுக்குமுறையால் திருட்டு மீறல்கள் நிகழ்கின்றன. இதுவே சமுதாய மாற்றமாக நிகழ்கின்ற போதுää அந்த திருட்டாக இருப்பதில்லை. தனிமனித செய்கின்ற போதுää அங்கு திருட்டுத்தனம் உள்ளடக்கமாக இயல்பாக உள்ளது. இதை தமிழ் பெண்களின் பாலியல் மேல் கொச்சைப்படுத்தி காட்டுவதுää தமிழ் ஆண்களின் திருட்டுத்தனத்தையும் கோழைத் தனத்தையும் ஆணாதிக்க மூகமுடியின் கீழ் மூடிமறைப்தாகும்;.


15.3.2006

3/15/2005 03:36:00 PM
Anonymous said...

பதிந்தது:www.tamilcircle.net

பதிந்தது:www.tamilcircle.net

முரணற்ற சிந்தனை மட்டுமே
உன்னதமான படைப்பை உருவாக்கும்.

இலக்கியம் ஊடாகவே தத்துவத்தை பேசும் சக்கரவர்த்தியின் சிறுகதை தொகுப்பான ~~யுத்தத்தின் இரண்டாம் பாகம்|| அண்மையில் வந்த முக்கிய படைப்புகளில் ஒன்றாகும்;. தெளிவான உள்ளடக்கம் மேல் கலையையும் பல்வேறு பிரதேச மொழியையும் சிறுகதைகள் மூலம்; வெகு சிறப்பாக கையாளும் இவர்ää தன்னை நேருக்கு நேர் தயக்கமின்றி ஒளிவுமறைவின்றி அடையாளம் காட்டுகின்றார். இந்த வகையில் இவர் இன்றைய இலக்கியவாதிகளுக்குள்ää கதை சொல்லும் போக்கில் ஒரு நேர்மையைக் கையாளுகின்றார். இலக்கியம் அருவமானது. உருவம் பற்றி பேசத் தேவை இல்லை என்ற போலியைää இவர் தெளிவாகவே உடைத்துக் காட்டிவிடுகின்றார். ஒரு இலக்கியம் மூலம் மக்களுக்கு வழிகாட்டää விளக்க முடியும் என்பதை படைப்பின் மூலம் நிறுவுகின்றார். இவரின் தத்துவம் சார்ந்த வழிகாட்டல்ää அது சார்ந்த உள்ளடக்கத்தை மக்களின் விடுதலை சார்ந்து முன்வைக்கின்றாரா? என்ற கேள்வி எமக்கு அடுத்து முக்கியத்துவமுடையதாகும். இவரின் இந்த சிறுகதை தொகுப்பு இரண்டு முக்கிய விடயங்களை பேசுகின்றது.

1.இயக்கங்கள் மக்கள் மேல் கையாண்ட வன்முறைகள் பற்றிää பல்துறை சார்நது பேசுகின்றது
2.பெண்களின் பாலியலை பற்றி தன் உணர்வு சார்ந்துää பெண்களைப் பற்றி கூறுகின்றார்.

தமிழ் மண்ணில் இருந்து கனடாவரையிலான புலம்பெயர் சமூகத்தின் பல தளத்தில் கதை சொல்லும் இவர்ää அதன் முரண்களின் மேல் தன்னை அடையாளம் காட்டுகின்றார். யாரும் பேச மறுத்தää பேசுவதே மரண தண்டனைக்குரிய குற்றமாக துரோகமாக கருதிய இயக்கங்களின் வன்முறைகளையும்ää அது சார்ந்த நடத்தைகள் தொடர்பாகவும் இவரின் சிறுகதைகளின் ஒருபகுதி; பேசுவதால் மட்டுமேää இதன் மீதான விமர்சனம் அவசியமாகின்றது. இயக்கத்தின் உள் மற்றும் வெளி நடத்தைகள்ää மக்களுக்கும் இயக்கங்களுக்கும் உள்ள உறவாக்கம்ää எதிரிக்கும் அவர்களுக்குமுள்ள உறவாக்கம் சார்ந்த வன்முறைகள் மீதான இலக்கியங்கள்ää விமர்சனங்கள் ஒரு மரண தண்டனைக்குரிய குற்றமாக இன்று யதார்த்தத்தில் உள்ளது. இந்த வரலாற்று தொடர்ச்சியில் இதற்கு எதிரான போராட்டங்கள்ää அதை வெளிக் கொண்டு வந்த எழுத்து முயற்சிகள்ää பல்துறை சார்ந்த பதிவுகள் என வரலாற்று நிகழ்வாக தொடர் போராட்டமாகவும்ää மறுதளத்தில் வெறும் பதிவாகவும் மாறுகின்றது. இந்த பதிவாக்கம் கூட ஒரு அங்கீகாரத்தை படைப்பாளிக்கு கொடுக்கின்ற போதுää படைப்பாளியின் பிற்போக்கு கூறுகள் கூட மூடி மறைத்துவிடுவது நிகழ்கின்றது. அந்தளவுக்கு தமிழ் சமூகத்தில் சாதாரண மக்கள் முதல் அறிவுத்துறை ஈறாகää சமூக இயங்கியல் வாழ்வின் மீதான தத்துவத்தின் வறுமை காணப்படுகின்றது. ஒரு காலத்தில் எது பயங்கரமாகவும்ää அபாயகரமாகவும் இருக்கின்றதோ அதை எதிர்த்துää அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் மனித உணர்வுகள் மதிப்புக்குரியவைதான். ஆனால் அவன் இன்னொரு அநீதிக்கு அது சார்ந்து துணை போவானாயின்ää அதை நாம் விமர்சனக் கண்கொண்டு விமர்சிக்கவும்ää அதை எதிர்த்து அம்பலம் செய்யும் பணிதான்ää அநீதிக்கு எதிரான உயர்ந்த புரட்சிகர பண்பாகவுள்ளது. இயக்கத்தின் வன்முறைகளை பற்றி பேசியபடிää அரசுக்கு குண்டி கழுவுவது எவ்வளவு கேவலமானதோää அது போன்று அரசை எதிர்த்தபடி இயக்கத்தின் மக்கள் விரோத வன்முறைக்கு துணைபோவதும் கேவலம்தான். இது போன்றே அனைத்தும்ää அனைத்து துறை சார்ந்து அனைத்து இலக்கியத்துக்கும் பொதுவானது. இலக்கியத்தில் முற்போக்காகவும் பிற்போக்காகவும் வௌ;வேறு விடயம் சார்ந்து செயற்பட முடியாது. இரண்டும் ஒரே தளத்தில் இயங்க முடியும் என்பதுää அனைத்தையும் எப்படியும் முரணாக நியாயப்படுத்திவிட முடியும்;.

இயக்க மற்றும் அரசு வன்முறைகள் எதிர்ப்பது முதல் சில நிலப்பிரபுத்துவ பண்பாட்டு கலாச்சாரங்களை எதிர்ப்பது ஈறாகää இவரின் மையக் கருவாக உள்ளது. வன்முறை மீதான எதிர்ப்பை ஏகாதிபத்திய சார்ந்தää ஜனநாயகம் சுதந்திரம் என்ற மாமூல் கண்ணோட்டத்தில் நின்றே விமர்சிக்க முனைகின்றார். இந்த எல்லைக்குள் தேசியத்தை எதிர்ப்பதில்ää தன்னை தெளிவுபடவே அடையாளம் காட்டுகின்றார். மற்றைய கதைகளில் ஆணாதிக்கத்தை ஆதாரமாக கொண்டு பெண்களை இழிவாக்கும் இவர்ää முதலாளித்துவ ஜனநாயகம் மீது நின்றே இயக்க வன்முறையை எதிர்த்து நிற்கின்றார். முரணற்ற முதலாளித்துவ ஜனநாயக எல்லைக்குள் மட்டுமே முற்போக்காக செயற்படுகின்றது. இவர் குறிப்பிடும் தத்துவமான ~~வெறும் மயக்கங்கள் மாத்திரம் உள்ள மாமூல் வாழ்க்கையில் மாற்றம் தேவை.. நிஜம் தேவை....|| என்ற கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்ட இவர்ää இருக்கும் பிற்போக்கு யதார்த்த மாமூலை நிராகரித்து உண்மையான சமூகத்தை கண்டறிய முயலுகின்றாரா எனப் பார்ப்போம்;.

~~யுத்தமும்....|| என்ற சிறுகதையை எடுப்பின்ää யுத்தத்துக்கு எதிரான கண்ணோட்டத்தை அதற்கு காரணமான காரணத்தை இழிவாக காட்டி பிரதிபலிக்க முனைகின்றார். பழைய வரலாற்று கதையூடாக நிகழ்காலத்தை பிரதிபலித்து கருத்துக் கூற முற்படும் போதுää யுத்த எதிர்ப்பை தவறான முறையில் விளக்க முனைகின்றார். உலகில் அனைத்து யுத்தங்களுமே வர்க்கப் போராட்டங்களே என்ற உண்மையை இவரின் மாமூல் கண்ணோட்டம் காண மறுக்கின்றது. யுத்தத்தை தலைமை தாங்கும் மக்கள் விரோத பிரதிநிதிகள் நியாயமற்ற வன்முறையையும்ää மக்களின் நியாயமான கோரிக்கைகளில் எழும் போராட்டமும் சார்ந்து வன்முறையையும் கோடுபிரித்தறிய இவரின் மாமூல் கண்ணோட்டம் மறுக்கின்றது. யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தை மக்கள் விரோத ஜனநாயக விரோத கோரிக்கைகளை அடைப்படையாக கொண்டுää எதிர்த்து நிற்பது என்பது உள்ளடக்கத்தில் மக்களின் நியாயமான கோரிக்கைகளை எதிர்து குரல் கொடுப்பதாகும்;. இங்கு ஜனநாயக கோரிக்கையையும்ää மக்களை அடக்கியாளக் கோரும் கோரிக்கையையும் கோடு பிரித்து பார்க்கத் தவறுகின்ற மாமூல் தனம்ää யுத்த எதிர்ப்பை தவறாக விளக்க முனைகின்றது. பழைய வரலாற்று கதையூடாக பேசும் படைப்பாளிää ஏன் வன்னியர் சங்கிலியர் ஆட்சியை சதி மூலம் கவிழ்க்க விரும்பினர் என்ற கேள்வியைää அவரின் மாமூல்ததனம் கேட்க மறுத்துவிடுகின்றது. வன்னியர் விரிந்த ஆட்சி பரப்பை விரும்பினர் எனின் ஏன் அது அவசியமாகின்றது. இங்கு விருப்பாமான மாமூல் காரணத்தை அடிப்படையாக கொண்டே விளக்குவது ஏன் என்ற கேள்வியும்ää யுத்த எதிர்ப்பு உள்நோக்கம் கொண்டவையாகின்றது.

ஒரு ஆட்சியை பிடித்தல் என்பதுää சுரண்டும் வர்க்க நலன்களை சார்ந்து அதை விரிவாக்கவேயாகும். இது சொந்த மக்களை அல்லது மற்றைய பிரிவு மக்களை அடக்கியளவும் அவர்களின் உழைப்பை உறிந்து சுரண்டி வாழ்வதுமே நிகழ்கின்றன. இங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் கடந்த வரலாற்றில் ஜனநாயக கோரிக்கையாகää அதன் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து அவை புரட்சிகர யுத்தமாகவும் பெரும்பாலும் இருந்துள்ளது. ஆனால் இந்த வர்க்க அமைப்பில் ஒடுக்குவனை வென்று ஆட்சிக்கு வரும் ஒடுக்கப்பட்டவன் கூட புதிய அடக்குமுறையாளனாக சுரண்டுபவனாக மாறிவிடும் சமூக பொருளாதார உள்ளடக்கம் வழிகாட்டிவிடுகின்றது. இந்த மாமூல்த்தனத்தை எதிர்த்தே வர்க்க அமைப்பை ஒழித்துக் கட்டவும்ää வர்க்க அமைப்புக்கு எதிரான யுத்த ஒழிப்பை நிபந்தனையாக்கின்றது. இந்த பாதை என்பது வன்முறையை ஆதாரமாக அடிப்படையாக கொள்கின்றது. கடந்த நிகழ்கால யுத்த மரபுகளில் இருந்து இது முற்றிலும் வேறுபடுகின்றது. பழைய மற்றும் நிகழ்கால யுத்தத்தின் போது எழும் ஜனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரிக்க தவறுகின்ற ஒரு படைப்பாளிää உண்மையில் ஒடுக்கமுறையாளனுக்கே உதவி செய்கின்றான்;. இந்த நிலையில் ஒரு படைப்பாளி தனது இலக்கியத்தை விரிந்த மாமூல் தளத்தை கடந்துää உண்மையை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொள்ளவேண்டும்; அதில் உள்ள பிற்போக்கு கோரிக்கைகளை எதிர்த்து ஜனநாயகக் கோரிக்கையை சார்ந்து மக்களின் அதிகாரத்தை கோரவேண்டும்;. இதை மறுத்து பிற்போக்கு கோரிக்கையை மட்டும் காட்டிää ஜனநாயகக் கோரிக்கையையும் எதிர்த்து நிற்பது என்பது சதாரண மாமூலில் இது அல்லது அதுää என்பதில் ஒன்றை முன்வைப்பதுதான்.

வன்னியர் ஏன் நல்லுர் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தனர்? என்பதை ஆராய மறுக்கின்றார். இதை எதிர்த்து கோழை கூட வீரனாகவும்ää தளபதியாகவும் மாறியதுடன் மனித நியாயம் பற்றி பேசுபவனாகவும்ää இறுதியாக பிற்போக்கு கட்டளைக்கு அடிபணிந்து போவதாகவும் காட்டுவதன் ஊடாகää ஒரு மனிதனின் மாற்றத்தை காட்டுகின்றார். ஆனால் ஏன் யுத்தம் அவசியமாகின்றது? மதம் மாறியவர்களை ஏன் கொல்ல விரும்புகின்றனர். அதிகார பீடங்களில் யார் என்ன நோக்கத்துக்காக வீற்று இருக்கின்றனர் என்பதைää மயக்கத்துக்குள் மாமூல் சிந்தனைக்குள் விட்டுச் சென்றதன் மூலம்ää நிஜத்தை கண்டறியத் தவறிவிடுகின்றனர். இதனால் யுத்தம் பற்றி ஒரு தலைப்பட்சமான விளக்கம் முன்வைப்பது நிகழ்கின்றது. இது சமகாலத்தில் நடக்கு தேசிய போராட்டத்தை எதிர்ப்பதாக மாறுகின்றது. இயக்கத்தின் பிற்போக்கு வன்முறை சார்ந்துää தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையான சுயநிர்ணயக் கோரிக்கையை எதிர்ப்பது கட்டமைக்கப்படுகின்றது. மக்களின் நியாமான ஜனநாயகக் கோரிக்கைக்கும்ää இயக்கத்தின் நியாயமற்ற பிற்போக்கு கோரிக்கைக்கும் இடையில் கோடு பிரித்து வெளிபடுத்த வேண்டியது ஒரு படைபாளியின் கடமை. உண்மையை கண்டறியவும் அதை முன்வைப்பதுமே மாமூல் கடந்த ஒரு கண்ணோட்டமும் படைப்பாளியின் கடமையுமாகும்.

~~படுவான்கரை|| என்ற சிறுகதையை எடுப்பின் தமிழ் குடும்பம் ஒன்று சந்திக்கும் இயக்க மற்றும் இராணுவ வன்முறையை சித்தரிக்கின்றது. ஆனால் மக்களின் நியாயமான கோரிக்கை மேல் இதை அம்பலம் செய்ய படைப்பாளி தவறிவிடுகின்றார். மாமூல் இயல்பு வாழ்க்கை சார்ந்து இந்த வன்முறையை எதிர்த்து நிற்கின்றார். மாமூல் வாழ்விலுள்ள வாழ்வுக்கான நியாயமான உண்மையை இவர் தேடி கண்டறியத் தவறிவிடுகின்றார். இயக்கம் மற்றும் இராணுவம் ஒருவனை கைது செய்கின்ற போதுää கையாளும் வேறுபட்ட வன்முறையையும்ää அதன் மொழியையும் தெளிவான ஒரு இலக்கியமாக கொண்டு வருவதில் இந்த கதை வெற்றி பெறுகின்றது. அதே நேரம் இந்த கதையின் இயல்பான ஒட்டத்தில் ~~யாழ்ப்பாணத்தில் இருந்து புதுசாய் இந்த ஏரியாவுக்கு பொறுப்பாளரு வாறாரு|| அதனால் தான் கைது சித்திரவதை என்பதுää யதார்த்ததை திரிக்கின்றது. யாழ் அல்லாத இயக்கத் தலைவர்கள் இது போன்ற வன்முறைகளைச் செய்வதில்லையா? இது இருக்கும் யதார்த்த வடிவத்தை திரிக்கின்றது. வன்முறையை யாழ் சார்ந்தாக மட்டும் காட்டும் போக்கு இக் கதையில் தொங்கிவிடுகின்றது. கிழக்கில் இருக்கும் இயக்ககாரர்கள் சித்தரவதைää கைது என்று எதுவும் செய்வதில்லையா? இங்கு யாழ் தலமை மற்றும் உறுப்பினர் என்றால் அவர்கள் வன்முறையிலும் கூட மோசமானவர்கள்ää கிழக்கில் இருப்போர் அப்படி அல்ல என்ற கண்ணோட்டத்தைää படைப்பாளி மாமூல் கண்ணோட்டம் சார்ந்து பிரதிபலிக்கின்றார். ஒரு இயக்கத்தின் மக்கள் விரோத கைதுகள் சித்திரவதைகள் பிரதேசம் சார்ந்த தலைமைத்துவம் தீர்மானிப்பதில்லை. மாறாக இயக்கத்தின் வர்க்க அரசியல் தான் தீர்மானிக்கின்றது. இயக்க உறுப்பினர்களின் பிரதேசம் சார்ந்த உணர்வுகள் வன்முறையை பிரதிபலிப்பதில்லை. மாறாக வன்முறை கண்ணோட்டத்தைää எல்லா பிரதேச மக்களுக்கு எதிராகவும் பிரதேசம் கடந்து இயக்க உறுப்பினர்கள் ஒரேவிதமாக கையாளுகின்றனர். அடுத்து இராணுவம் அதிகாரி ஒருவர் கொழும்பில் இருந்து வருவதால் கைது என்பதுää படைப்பாளியின் இயல்பற்ற ஒரு இயங்கியலற்ற இணைப்பாகும். இலங்கை அரசுக்கும் எதிரானவன் என்பதை தெளிவுபடுத்தää இணைத்துக் கொண்ட ஒரு தொடர்ச்சியாகும்;. இது கதையின் கலை இயல்பை அழிக்கின்றது. அதுபோல் மனைவிää மற்றும் மனைவியின் தாய் தேடிப் போகவும்ää அவர்கள் கொண்டு வந்து விடும் தன்மையும் இலக்கிய இயங்கியலற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது. இவை இரண்டும் இயல்பாக இல்லை.

படைப்பாளி மாமூல் கடந்து கைது செய்தவர்களிடம் கேட்கவில்லைää ஏன்? என்ன? சந்தேகம் என்று. மனைவி மற்றும் மனைவின் தாய் இயக்கத்தை எதிர்த்து சொந்த துயரம் ஊடாக பேசுகின்ற போது கூடää இயல்பில் இருந்தே விலகிவிடுகின்றார். மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மக்கள் எதிர்க்கவில்லை என்ற உண்மையை படைப்பாளி காண மறுத்துää எதிர்ப்பதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்துகின்றார். மக்களின் நியாயமான போராட்டத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டுää இயக்கத்தை நோக்கிய கேள்விகள் எழுப்பப்படவில்லை. ஆனால் மக்கள் இயல்பில் இதை எழுப்புவர். ஏனெனில் சமுதாயம் முன்னோக்கி முன்னேறுகின்ற இயங்கியலில்ää இருக்கும் யதார்த்த வன்முறையை கடந்து விடுதலை சார்ந்தே மக்கள் சிந்திக்கின்றனர். போராட்டம் மக்களுக்கு எதிராக மாறியபோதும்ää போராட்டத்தை மக்கள் நிராகரிக்கவில்லை. இதற்கிடையில் உள்ள நேர் எதிர்ப் போக்கினை ஒரு படைப்பாளி இனம் கண்டு கொள்ளாதவரைää ஒரு படைப்பு அரையும் குறையுமாக பிரசுவிக்கப்படுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் சில குறைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்ட படைப்புகள்ää அதைத் தாண்டி எதையும் சமூகத்துக்கு முன்வைத்து வழிகாட்டுவதில்லை என்பதை இந்தச் சிறுகதை மீண்டும் காட்டுகின்றது.
~~எண்டஅல்லாஹ்!|| என்ற சிறுகதையைப் எடுப்போம்;. ஒரு தமிழ் விவசாயியின் வெங்காயத்தை வாங்கிய ஒரு முஸ்லிம் வியாபாரியின் அவலம் சார்ந்த ஒடுக்குமுறை மீது கதை நகர்கின்றது. இயக்கம் இராணுவம் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்துää இராணுவத்தின் அக்கிரமங்கள் சார்ந்து ஒரு முஸ்லிம் வியாபாரியின் துயரத்தை பேசுகின்றது. தாக்குதலை அடுத்து வெங்காயத்தை விற்க முடியாத நிலையிலும்ää முஸ்லீம் வியாபாரியின் நேர்மை பற்றியும்ää முஸ்லீம் வியாபாரி மகன் மூலம் தமிழ் விவசாயிக்கு ஒரு சிறு தொகையை கொடுத்த அனுப்பியருந்தார். இருந்தபோதும்ää தமிழ் விவாசாயி பணத்துக்கு ஆசைப்பட்ட துரோகத்தால்ää பணம் கொண்டு வந்தவனை இயக்கம் கொல்ல துனைபோகின்றார். இதுவே கதையின் மையமான செய்தி. சமுதாயத்தின் மேலான இயக்க வன்முறைகள்ää சந்தேகமே துரோகமாக முத்திரை குத்தவும் படு கொலை செய்யவும் போதுமான காரணமாக உள்ளது. போராட்ட வரலாற்றில் இதுவே ஒரு போக்காக மாறிää பல நூறு பேர் தம் உயிரை இதற்காகவே இழந்துள்ளனர். இதை ஒரு படைப்பாளியாக கொண்டு வரும் போதுää அதன் வடிவங்கள்ää தன்மைகள்ää அதன் மொழியைக் கூட தெளிவாக புரிந்த கொண்டு இதை அம்பலம் செய்கின்றார். ஆனால் இதை தொகுக்கும் போது யதார்த்த இயல்பைää உழைக்கும் மக்களின் நேர்மையை புரிந்து கொள்ளத் தவறிää கதையின் ஊடாக கொச்சைப்படுத்திவிடுகின்றார். அத்துடன் ஒரு இனங்களின்; குறியீடாக காட்டிää இனங்களை பகை நிலைக்கு கொண்டுவருகின்றார். சொந்த உடல் உழைப்பில் ஈடுபடும் விவசாயி 1500 ரூபா காசுக்கு ஆசைப்பட்டுää முஸ்லிம் மகனொருவனை கொல்ல துணை போனான் என்பது உழைப்பின் வலிமையை நேர்மையை மறுப்பதாகும். இது உழைப்பையும்ää சுரண்டலையும் புரிந்து கொள்வதில் இருந்து விலகுகின்றது. முஸ்லீம் மக்களுக்கு எதிராக கையாளப்பட்ட இயக்க வன்முறையின் போதுää தமிழ் மக்கள் அதை ஆதாரித்து வன்முறையில் ஈடுபடவில்லை. முஸ்லீம் மக்களின் சொத்தை மிக மலிவாகவும்ää மறு தளத்தில் ஏலம் விட்ட போதும் வாங்குவாரற்று காணப்பட்டது. முஸ்லீம் மக்களின் உழைப்பை இயக்கங்கள் கொள்ளையடித்து விற்ற போதுää தமிழ் மக்கள் வாங்குவதை மறைமுகமாக எதிர்த்தே நின்றனர். உழைப்பின் பரஸ்பரம் நேச உறவுகளை கொண்ட மக்கள்ää ஐக்கியத்தை கோருவதில்ää நடப்பை பேணுவதில் இருந்தேää இன்றும் இவ்விரு சமூகங்களும் ஒன்றுபட்டு வாழ முனைப்பு பெறுகின்றான்;. எதிர்பாராத ஒரு விதிவிலக்குகள் நடந்து இருப்பின்ää அதை பொதுமைப்படுத்தி ஒரு சமூக வன்முறையாக விளக்குவது ஒரு சமூக கண்ணோட்டத்தையே தகர்ப்பதாகும்;. அதாவது ஒரு அப்பாவியை குற்றவாளியாக்கி மண்டையில் போடுவது போல்ää விதிவிலக்கான பாத்திரத்தை கொண்டு ஒரு சமூகத்துக்கே மண்டையில் போடுவது அபத்தமாகும். ஒரு விவசாயி பணத்துக்கு ஆசைப்பட்டு மற்றொரு சமூகம் என்பதால் கொல்ல துணை போவது என்பதுää தமிழ் விவசாய சமூகத்தையும் பொது குறியீட்டாக்கி குற்றவாளியாக்குகின்றது. மறு தளத்தில் ஒரு முஸ்லீமின் வர்த்தக நேர்மை பற்றி பேசி அதை முஸ்லீம் பொது குறியீட்டாக்கும் கதைப் பாங்குää இரண்டு சமூகங்களை நேர் எதிரில் நிறுத்துவதாகும். இது சமூக பிளவை மேலும் ஆழமாக்கின்றது. இங்கு ஒரு நிகழ்ச்சி நடக்கும் போதுää சமூகங்களை நேர் எதிராக நிறுத்துவது சமூக மாற்றத்தில் அக்கறையின்மையில் இருந்து எழும்ää தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்ட மாமூல் தன்மையாகும். இரண்டு சமூகங்களை நேர் எதிராக கொண்டு செல்லும் அரசியல்ää அதில் குறிப்பான பங்கை தெளிவாக அம்பலம் செய்வதே சமூக நோக்கம் கொண்ட படைப்பின் உள்ளடக்கமாக இருக்க முடியும். இங்கு உழைக்கும் மக்களின் மிக சிறந்த மனித இயல்புகளை படைப்பாளி புரிந்து கொண்டு கதை சொல்லாத வரைää உண்மையான நிகழ்வுகளை கற்பனையின் வளம் சார்ந்து சமூகத்தை திரிவுபடுத்தி அதன் மேல் கதை சொல்வது சமூகத்துக்கு எதிரானதாகும். ஒரு விவசாயிக்கும் இயக்கத்துக்கும் இடையிலான முரண்பாடு என்ன? ஏன் இயக்கம் விவாசயிகளை அடிப்படையாக கொண்டு போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. ஏன் அதற்கு எதிராக உள்ளனர்? இந்த அடிப்படை முரண்பாட்டை புரிந்து கொண்டேää பாத்திரங்களை சரியாக தெரிவு செய்ய வேண்டும். முஸ்லீம் மக்கள் மேலான இயக்க வன்முறைகளை நியாயமானவையா என தமிழ் மக்களிடம் கேட்பின்ää அதை எதிர்த்தே மக்கள் கருத்து கூறுவர். அதாவது யுத்தத்துக்கு எதிராக சிங்கள மக்கள் கருத்து கூறுவது போல்ää முஸ்லீம் மக்கள் மேலான இயக்க வன்முறையையும் எதிhத்தே தமிழ் மக்கள் நிற்கின்றனர். இதற்கு எதிராக தமிழ் மக்கள் என்ன செய்தார்கள் என்று கேட்பின்ää அதற்கான பொறுப்பை நானும் நீங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்;. இதை விட்டு சமூகத்தை மட்டும் குற்றம் சாட்டுவது அபத்தமானதாகும்.

~~ஆடுää புலிää புல்லுக்கட்டு|| என்ற சிறுகதையை எடுப்போம். ஒரு தற்கொலை தாக்குதலை நடத்தும் ஒருவனின் மனச்சாட்சி ஊடாக கதை சொல்ல முனைகின்றார். தற்கொலையாளி எப்படி தன்னை மறைத்துக் கொண்டு மக்களுக்குள் வாழ்கின்றார்ää பின்னார் எப்படி அதே மக்களுக்குள் குண்டை வைக்க முனைகின்றார். இதற்குரிய வெடிமருந்துகளையும்ää வாகனங்களையும்ää முந்திய குடும்பம் மற்றும் சமூக உறவாக்கத்தை சிதைத்து எப்படி பெறுகின்றனர்ää என்று தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றார். தற்கொலை தாக்குதலை நடத்த வரும் ஒருவனின் உணர்வுகள்ää அவன் அதை செய்ய பழகும் மனிதர்களுடன் நடமாடும் போது ஏற்படும் மனமாற்றம்ää அதை மனச்சாட்சி ஊடாக விமர்சிக்கும் சமூக இணைவின் கண்ணோட்டமää இதை மீறி சமூகத்துக்கு வெளியில் இருந்து வரும் இராணுவ உத்தரவுகள் எப்படி சமூகத்துக்கு எதிராக இயங்க வைக்கின்றது என்பதைää கதை தெளிவபடவே வெளிக் கொண்டு வருகின்றது. இங்கு விமர்சனம் என்பது ஏன் அப்பாவி மக்கள் கூடும் இடங்களை தெரிவு செய்கின்றனர் என்ற குறுந்தேசிய அரசியலை கேள்விக்குள்ளாக்கவில்லை. ஏன் இராணுவ இலக்குகளை செய்வது தானே போராட்டம் என்றுää படைப்பாளி ஏன் சொல்ல முற்படவில்லை. அதாவது ஒரு போராட்டத்தின் அவசியம்ää அது எதிரிக்கு எதிராக இருப்பதற்கு பதில் எப்படி அப்பாவி மற்றும் மற்றைய இன மக்கள் மேல் மாறிச் செல்கின்றது என்ற விடையத்தை கேட்க படைப்பு மறுக்கின்றது. மாறாக இவர் இயக்கங்கள் இழைக்கும் மக்கள் மேலான மக்கள் விரோத வன்முறை சார்ந்துää போராடுவதே பிழை என்ற கருத்தை தொங்கவிட்டுவிடுகின்றார். அதாவது ஏகாதிபத்தியம் மக்கள் விரோத தனிநபர் பயங்கரவாதத்தை காட்டிää உலக ஆக்கிரமிப்பையும் மக்களை ஒடுக்குவதை மேல் இருந்து நியப்படுத்துவது போன்றுää கதை அதையே கீழ் இருந்து சொல்லப்படுகின்றது.

அடுத்து ~~பிசாசுகளின் வாக்குமூலம்|| என்ற கதை மூலம் ஒரு இயக்கக்காரன் மரணத்தை அடைந்த பின்புää மரணம் அடைந்தவர்கள் தமது கால இயக்க வன்முறைகளையும்ää அதை வளர்த்தெடுத்த வடிவங்களையும் பேசிக் கொள்ளும் வடிவில் இயக்க வன்முறைகளை பேசுகின்றது இக்கதை. எப்படி என்ன காரணத்துக்காக இனப் படுகொலைகளை ரசித்துச் செய்தோம்ää அதன் மூலம் எப்படி புகழையும் இயக்க தலைமைக்கு வந்தோம்ää தலைமைக்கு இடையிலான அதிகார போட்டியை எப்படி துரோகமாக்கி கொன்றோம்ää என்று பல தளத்தில் கதை நகருகின்றது. மிக தெளிவாக இதை கதையாக சொல்ல முனையும் இவர்ää மக்களுக்கான போராட்டத்தின் அவசியத்தை இதன் ஊடாக சொல்ல மறுக்கின்றார். இயக்கம் இழைக்கும் தவறுக்கு அந்த போராட்டமே வேண்டாம் என்கின்ற எதிர் நிலைக்குள்ää சதாரண மாமூல் எல்லைக்குள் கதை சொல்லும் தன்மையேää இவரின் அனைத்து கதைகளையும் வலுவிழக்கச் செய்கின்றது. ஜனநாயக எல்லைக்குள் ஏற்றுக் கொள்ளக் கூடிய இந்தக் கதைகள்ää அதைத் தாண்டி கடுவிமர்சனத்துக்குரியதாகின்றது. ~~போரின் பகைப்புலம் அறியாது போர்ப்பரணி பாடும் பாட்டுக்காரர்கள் எவரோ - அவரே ஈழம் இன்னமும் எரிந்துகொண்டிருக்க முதற்காரணி என்பேன்|| என்று கூறுவதன் மூலம்ää இலங்கையின் இன ஒடுக்குமுறையை மறுக்கின்றார். இலங்கையில் சிங்கள இனவாத அரசின் ஒடுக்குமுறை தான் இன்னமும் ஈழம் எரியக் காரணமாக இருக்கிறது. அதை இவர் மறுக்கின்றார். அதை தமிழர் தலைப்பில் ஒரு தலைப்பட்சமாக குற்றம் சாட்டுகின்றார். ஒரு யுத்தமற்ற முதாலாளித்துவ ஜனநாயகம் உன்னதமானதா? யுத்தம் எங்கிருந்து எப்படித் தோன்றுகின்றன? சமதானம் என்பது என்ன? எந்த சமூக அமைப்பில் யுத்தமற்ற சமாதனம் நிலவும்;? இதை கேள்வியாகத்தன்னும் எழுப்பாத இலக்கியவாதி படைப்புகளை உருவாக்கும் போது அவை வலது குறைந்தனவாகிவிடுகின்றன.

இலங்கையில் யுத்தம் தொடர என்ன காரணம்? சமாதனம் எதன் வழிகளில் எப்படி தோன்றும்;? இனங்களுக்கிடையிலான அமைதி எந்த உள்ளடக்கத்தில் சாத்தியமானது? மக்களுக்கு எதிரான இயக்க வன்முறைகள் எங்கிருந்து தோன்றின? ஏன் அவை நிகழ்கின்றன? மக்களுக்கு எதிரான வன்முறையற்ற போராட்டம் சாத்தியமில்லையா? போராட்டம் எதை எப்படி சாதிக்க வேண்டும்? இது போன்று பலவற்றை படைப்பின் கரு மீது ஒரு படைப்பாளி கேட்டு தெளிவாக மக்கள் சார்ந்து விடை தெரிந்திராத வரைää அந்த படைப்புகள் குறைபாடு கொண்டே பிறக்கின்றது.

அடுத்து இந்த கதையில் ஒரு இனத்துக்கு எதிரான படுகொலைகள்ää தற்செயலாக சில காரண காரியங்கள் மேல் நிகழ்ந்தாக காட்டுவது தவறானவை. உதாரணமாக பாதை தெரிந்துவிடும் என்ற காரணமேää படு கொலை நடத்தத் தூண்டியது என்பது தவறானது. இது படுகொலை செய்வதை நியாயப்படுத்த முன்வைக்கும்ää ஒரு எடுகோள் மட்டுமே. மாறாக இனங்கள் பற்றியும்ää மக்கள் பற்றியும் கொண்டுள்ள கண்ணோட்டம் சார்ந்துää முன்கூட்டியே திட்டமிட்டே படு கொலைகள் நிகழ்ந்தனää நிகழ்கின்றன. இந்த உள்ளடக்கத்தை தனிமனித புகழ் மற்றும் முடிவு சார்ந்தாகää சிந்தனையாகவே இந்த கதை பேசுகின்றது. இது ஒரு படுகொலை வரலாற்றின் மேலான ஒரு திரிபாகும். அவரின் பெண்ணியம் பற்றிய கண்ணோட்டம் முதல் அவரின் சிறுகதை முழுக்கää இந்த திரிபே அரசியல் சாரமாக உள்ளது. தனிமனித நடத்தைகள் சார்ந்த விருப்பு வெறுப்பகவும்ää பிரதேசம் சார்ந்த முடிவாக இனப்படுகொலைகள் விளக்குவதுää அதன் ஸ்தாபான ரீதியான வர்க்க அரசியல் கண்ணோட்டத்தை பூசிமொழுகுவதாக உள்ளது. தனிமனித நடத்தைகள் அந்த இயக்கத்தில் அராசியல் கண்ணோட்த்தில் இருந்தே பிறக்கின்றது என்பதைää இந்த படைப்பாளி புரிந்து கொள்ளவேயில்லை. தனிமனிதனைச் சுற்றி கதை சொல்லும் போதுää தனிமனிதனின் தோற்றுவாயை தெளிவாக புரிந்த கொண்டே அதை விமர்சிக்க வேண்டும். தனிமனிதர்கள் ஒரு இயக்க போக்கில் ஒரு பாத்திரத்தை சில விருப்பு வெறுப்புக்கு எற்ப நடித்துக் காட்டுகின்றார்கள் என்பதைää தெளிவாக வேறுபடுத்தியும் காட்டவேண்டும்;.

~~... அதன் இரண்டாம் பாகமும்|| என்று புத்தக தலைப்பு சார்ந்த வெளியான இக்கதைää முஸ்லீம் சமூகத்துக்கு இழைக்கபட்ட கொடூமையைப்பற்றி பேசுகின்றது. அந்த கொடூமையில் ஈடுபட கோரும் ஒருவனின் ஊடாகää அவனின் எதிர்வாதமாகவும் மறுதளத்தில் இயக்க சத்தியப் பிரமானத்தினுடாக இதை செய்ய நிர்ப்பந்திக்கும் நிலையைää இந்த கதை சிறப்பாகவே வெளிக் கொண்டு வந்துள்ளது. இங்கும் யுத்தத்துக்கு எதிரான தத்துவத்தை பேசுகின்றார். ~~ஆயுதம் மானிடத்தை மீட்கும் என்பது முட்டாள்தனம்|| ~~துப்பாக்கி முனையில்தான் சுபீட்சம் பிறக்கும்|| என்பதை எதிர்த்து இந்த கதை தொடங்குகின்றது. இது இயங்கியலில் தன்மை மறுக்கின்றது. ஒரு பொருள் நேர் மற்றம் எதிர் தளத்தில் இயங்குகின்ற பன்மை மறுக்கின்றது. ஒரு அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் இரண்டு தளத்தில் செயற்படுகின்றன. மனிதன் தன் உழைப்பை அடிப்படையாக கொண்டு கண்டறியும் அறிவியல்ää அவனுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் சமூகத்தில் நாம் உள்ளோம்;. ஆகவே உழைப்பையும் அதன் அறிவியலையும் நிராகரிக்க முடியுமா? ஒரு அறிவியல் சார்ந்த பொருளை மனித இனத்துக்கு எதிரகவே கையாளும் மற்றொரு மனிதன்ää எப்படி? எந்த? சமூக அமைப்பில் எது சார்ந்து? ஏன் உருவாகின்றான்? இந்தக் கேள்விகளை விடுத்து மாமூல் கண்ணோட்த்தில் ஆயுதத்தை விமர்சிக்கும் போதுää மனித அடிமைத்தனத்தை நியாப்படுத்திவிடுகின்றது. மனிதன் தன் மேல் போடப்பட்டுள்ள விலங்குகளை எப்படிக் களைவது? ஆயுதம் ஏந்திய ஒடுக்கமுறைகளை எதிர்த்துப் போராட வேண்டுமா? அல்லது இல்லையா? எப்படி? அதில் ஆயுதத்தின் பங்கு என்ன? இந்த கேள்விகளை படைப்பாளி கேட்டு தெளிவு படுத்துவதற்கு பதில்ää அதை எதிர் நிலையில் மறுத்துவிடுகின்றார். ஏகாதிபத்தியம் உலக பயங்கரவாத்தை ஒழிக்கää உலகு எங்கும் ஆயுதங்களை களையப் போவதாக கூறுவதற்கு நிகரானது. இந்த கதையிலும் கிழக்கு இயக்காரர்கள் இந்த குற்றத்தை இழைக்கவில்லைää மாறாக யாழ்ப்பாணத்து இயக்ககாரர்கள் தான் இதைச் செய்கின்றனர் அல்லது யாழ் சென்று திரும்புபவர்களே செய்கின்றனர் என்ற வாதங்கள்ää யாழ் மையவாதம் மீதான எதிர்ப்பை பொருத்தமற்ற வகையில் முன்வைத்துää வன்முறை சார்ந்த அரசியல் வடிவத்தை திரித்துவிடுகின்றார். இயக்கத்தில் யாழ் மையவாதம் என்பதுää அதன் அரசியல் சமூக கூறுகள் மேல் இனங்காணக் கூடியவையே. அது அரசியல் கோரிக்கையில் இருந்து சமூகத்தின் அடிப்படைக் கோரிக்கைகளை நிராகரிப்பது வரையிலான உள்ளடக்கத்தில் காணமுடியும்;. யாழ் முஸ்லீம் மக்கள் வெளியேற்றிய நிகழ்வுää கிழக்கு தலைமையால் முன் நின்ற நடத்தப்பட்டது. இதை மறுக்கும் இவர் கிழக்கு முஸ்லீம் மீதான வன்முறைகு யாழ் பிரதேசவாதம் சார்ந்துää கருத்து வைப்பது ஒருதலைபட்சமானவை. அத்துடன் வடக்கில் இருந்த தான் இயக்கம் இங்கு வந்தது என்பது ஒரு தலைபட்சமானவை. ஒரு சமூகம் மீதான ஒடுக்குமுறையை மறுத்து ஒரு பிரதேசம் சார்ந்து கற்பனையில் திணிக்கப்பட்டதாக காட்டுவது ஒரு திரிபாகும். ஒரு பிரேதேசம் முன்னேறிய விழிப்புணர்ச்சியை பெறலாம்;. ஆனால் அதை மற்றைய சமூகத்துக்குää பிரதேசத்தக்கு யாரும் திணிக்க முடியாது. வன்முறையை ஒரு பிரதேசம் சார்ந்த மொழியாக நடத்தையாக வருணிப்பதுää சொந்த பிரதேசத்தின் வன்முறையையும் அதன் மொழியையும் மறப்பதாகும்;. இவர் வன்முறையையும்ää அதன் கொடூரங்களையும் யாழ் பிரதேசவாதத்தில் இருந்தே உருவாகுவதாக கூறிää வன்முறையின் உள்ளடக்கத்தை திரித்து புரட்டுகின்றார். அனைத்தையும் அதன் அரசியலில்ää அதன் வர்க்க முரணில் கண்டுபிடிக்க தவறுகின்ற போக்குää இலக்கியத்தின் தனிமனித வாத சுயட்சையைக் கொண்டே அவதாரிக்கின்றது.

பெண்கள் பற்றிய சக்கரவர்த்தியின் பார்வை அவரின் படைப்புளின் மீதான விமர்சனத்தை தெளிவாக்க மேலும் உதவுகின்றது. ஒரு படைப்பாளி சமூகம் மேலான அனைத்து ஒடுக்குமுறையையும் முரணற்ற வகையில் புரிந்த கொள்ள வேண்டும்;. இதற்கு முரணற்ற தத்துவத்தை ஆதாரமாக கொள்ள வேண்டும்;. இங்கு ஒன்றில் முற்போக்கு என்பதும் மற்றதில் பிற்போக்கு என்பது சில நியாப்படுத்தலுக்கு உதவலாம.;; ஆனால் அந்த முற்போக்கிலும் எங்கோ ஒரு குறைபாடு ஒளித்திருப்தைää ஒரு முரணற்ற தத்துவார்த்ததால் தெளிவாக கண்டு கொள்ள முடியும். இது தான் சக்ரவர்த்தியின் யுத்தின் இரண்டாம் பாகம் என்ற நூலின்ää இரண்டு பிரதான அடிப்படை உள்ளடக்கத்திலும் பிரதிபலிக்க தவறவில்லை. பெண்கள் பற்றி கண்ணதாசனின் கொச்சை வடிவிலான தத்துவ விரச எழுத்துப் போன்றுää சக்கரவர்த்தியும் பெண்கள் பற்றிய கொச்சை தத்துவத்தை முன்வைக்கின்றார்.

இவர்; பெண்கள் பற்றி கூறுவதைப் பார்ப்போம். ~~நம்ம தமிழிச்சிகளுக்கு ஆண் என்றால் எப்படித் தெரியுமா இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்... கூந்தலை சுற்றி தலையை சுவரில் மோதவைக்க வேண்டும். எதிர்த்தால் பிடறி வீங்க விளாச வேண்டும். தூசன வார்த்தை பேச வேண்டும். வீதியில் போகும் போது இடையையோ மார்பையோ தீண்ட வேண்டும்.|| என்று இவர் குறிப்பிடுகின்றார். பாரிசில் வேறு சில பாலியல் வக்கிரம் பிடித்த மனநோயாளர்கள் பெண் பற்றி கூறும் போது இதே பாணியில்ää பெண்கள் மார்பை இந்தா பிடி இந்தா பிடி என்று சொல்லி நடப்பதாகவும்ää மூன்று ஆண்களுடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ள பெண் விரும்புவதாகவும் கூறுகின்றனர். இப்படிப் பல. ஆனால் அனைத்தும் இலக்கியமாக இலக்கிய சுதந்திரத்தில் குளிர்காய்கின்றது. ஒரு பெண் தனது மார்பை அல்லது இடையை உரசி நடக்க விரும்புகின்றாள் என்பதுää எவ்வளவு கேவலமான பெண் பற்றிய ஆணாதிக்க விளக்கமும் பார்வையாகும். இது ஆணின் எண்ணமாக இருக்கää அதை பெண்ணுக்கு மகுடம் சூட்டுவது ஆணாதிக்கத்தின் பண்பாகும்;. வன்முறையைச் செய்யும் ஆணை பெண் விரும்புகின்றாள் என்பதுää பெண் ஒரு உயிரியல் தொகுதி என்பதையே ஆணாதிக்கம் மறுக்கின்ற உள்ளடக்கத்தை அடைப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டது. ஒரு பெண் அடிமையாகவும்ää இத்தகைய துன்ப துயரங்களை சகித்த படி இந்த வாழ்க்கையை தேர்ந்த எடுக்கின்றாள் எனின்ää அது தனிப்பட்ட ஒரு பெண்ணின் குற்றமல்ல. மாறாக ஆணாதிக்க சமூக அமைப்பின் ஒரு அடக்குமுறை வடிவமாக பெண் மேல் திணிக்கப்டுகின்றது. இது அனைத்து வன்முறைகள் போன்றதே. சாதரணமாக பெண்கள் மேல் உரசி நடத்தல்ää நிற்றல் போன்ற ஆணாதிக்க சமூக வன்முறை நிகழும் போதுää பெண்ணை அப்படி செய்வதாக தூற்றுவதும் ஒடுங்கி நடக்க நிற்;க கோரும் அடக்குமுறையில் இருந்தே பெண் பற்றிய கொச்சை இலக்கியம் பிறக்கின்றது.

குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வீதிகளில் நடக்கும் போதுää ஆணுக்கு பின்பாக பெண்; பத்தடி வித்தியசத்தில் நடக்கும் பராம்பரியம் எமது சமூகத்தில் காணப்படுகின்றது. இது மூன்றாம் உலக நாடுகளுக்கே பொதுவானது. நிலப்பிரபுத்துவ பெண் அடிமைத்தனத்தை அடிப்படையாக கொண்ட பெண்ணின் பின்தாங்கிய நிலைக்குää ஆணாதிக்க கண்ணோட்டம் தெளிவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் போதிக்கின்றது. இந்த வரலாற்று போக்கில் பெண் ஆணுடன் சமத்துவமாக அருகில் நடக்க விருபும் ஒரு முயற்சியைää ஏகாதிபத்திய கண்ணோட்டத்தில் சிந்திக்கும் நிலப்பிரபுத்துவ ஆண்ää பெண் தனது இடுப்பையும்ää மார்பையும் உரசி நடக்க விரும்புவதாக கூறுவது இங்கு நிகழ்கின்றது. இங்கு இந்த விடயத்தில் ஏகாதிபத்திய ஆணாதிக்கம் உரசி நடப்பதை கோருகின்றது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் உரசி நடப்பதாகவும் கொச்சைப்படுத்தவது நிகழ்கின்றது. பெண் அருகில் சமத்துவமாக நடக்க விரும்பும் விருப்பம்ää இயல்பானது இயற்கையானது. அதை மறுக்கும் ஆணாதிக்கம் இதற்கு கொடுக்கும் விளக்கம் தான் உரசி நடக்க விரும்பவதாக கூறி கொச்சைப்டுத்துவதாகும்;.

~~நானும் ஒகஸ்டீனாவும் ஒரு பந்தயக்குதிரையும்|| என்ற சிறு கதைää படைப்பாளியின் ஆணாதிக்க சமூக கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகின்றார். ஏகாதிபத்திய கொலிவூட் ஆணாதிக்க சினிமா உள்ளடக்கத்தை இவர் மீளவும் முன்வைக்கின்றார். மிக குறைந்த வயதுடைய ஒரு பணக்கார அழகிய செல்லப் பெண் மீது ஆசை கொள்கின்றான். (உண்மையில் அவள் அழகிய அகதிப் பெண்ணாக இருப்பதும்ää அவனின் வயது முதிர்ந்த முதலாளி தனது பாலியல் தேவைக்கு வைப்பாட்டியாக பயன்படுத்துவதும் பின்னால்தான் அறிகின்றான்.) இந்நிலையில் அவன் வீட்டில் கூலி வேலை செய்தவன்ää அந்த பெண்ணுடன் இரகசியமாக உறவு கொள்கின்றான்;. இதைச் சுற்றியே நகரும் கதை. இங்கு பெண்ணின் அழகுää கவர்ச்சிää அதிகாரம்ää அந்தஸ்த்துää வெள்ளை நிறம் சார்ந்து அவளை அனுபவிக்க துடிக்கும் மனநிலைää பின்னால் அதை நியாயப்படுத்த பெண்ணின் துயரம் பற்றி பேசி உடல் உறவை கொள்கின்றான்;. ~~.. கறுப்பன். நான் கனவு காணலாம். ஒரு வெள்ளைக்காறிய நினச்சுää அதுவும் இந்தப் பெரிய பண்ணைக்கும் முப்பத்தேழு குதிரைக்கும் சொந்தக்காரியை...|| இங்கு அந்த பெண்ணுடன் ஆன உறவை எங்கிருந்து தொடங்குகின்றார். ~~முக்கால் தொடை தெரியிற மாதிரி காச்சட்டை போட்டிருந்தாள். அதக் கூட மேல்பக்கமா சுருட்டி விட்டிருந்தாள். உள்ளுக்கு கறுப்பு ~பிறா| போட்டிருக்காள் போல... வெள்ளை வெனியனுக்கு மேலால லேசா தெரிந்து. எனக்கு சங்கடமாயும் இருந்திச்சு. சந்தோசமாயும் இருந்திச்சு|| இதற்கு பின்தான் அவளின் வைப்பாட்டி வாழ்க்கை தெரியவருகின்றது. இங்கு தமிழ் கலாச்சார ஆணாதிக்கம் சார்ந்து அவளின் உடுப்பு சங்கடமாகின்றது. அது ஏகாதிபத்திய ஆணாதிக்க கலச்சாரமாக மாறும் போது சந்தோசமாக வெளிப்படுகின்றது. ஒரு பெண்ணின் நடை உடை முதல் அவளின் உயிருள்ள அம்சங்கள் மேலான உயிருள்ள நடத்தைகளை எல்லாம்ää மூலதனம் தனது வர்த்தக விளம்பர எல்லைக்குள் தீர்மானிக்கின்றது. இந்த விளம்பரம் எல்லாம் உலகமயமாதல் என்ற ஆணாதிக்க எல்லைக்குள் நின்றுää பெண் பற்றிய ஆணின் ரசனைக்குள் கட்டமைக்கப்படுகின்றது. ஒரு பெண்ணை அவன் பார்க்கும் பார்வைää நிறம் சார்ந்த பாலியல் வக்கிரம் இந்த கதையில் வெளிப்படுகின்றது. இங்கு அவன் அல்லää ஆணாதிக்க சமூகமே அப்படியே தான் பார்க்கின்றது. இது கொலிவூட் வகைப்பட்ட சமூக யதார்த்தமாகும்;. இங்கு அதை நியாப்படுத்தவே பெண்ணின் துயரம் பற்றி அதே வடிவில் புகுத்தப்படுகின்றது. இந்த துயரம் சார்ந்தே ~~.. காப்பத்த வேணும் எண்டு என்ர மனசில எண்ணம் வரத் தொடங்கியது|| ஒரு தமிழனாக ~~பரிவான புள்ள இவள்|| என்று சிந்தனைää நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை மரபை சார்ந்து வெளிப்படுத்துகிறார். அதைத் தொடர்ந்தே பாலியல் ரீதியாக உறவை கொள்கின்றார். கொலிவூட் கதாநாயகர்கள் எல்லாம் சினிமாவில் இப்படித் தான் உறவு கொள்பவர்கள்;. அந்த பெண்ணின் அசைவுகளை தமிழ் சினிமா மற்றும் கொலிவூட் வகையில் சித்தரிக்கவும் தவறவில்லை. கள்ள உறவை அவன் தெரிந்து கொண்ட போதுää ~~..இதெல்லாம் சகஐம் தானே எண்டு லேசா எடுத்துக் கொள்வானா? டானியல் வெள்ளக்காறன் தானே|| என்று கூறுவதன் மூலம்ää ஐரோப்பிய சமூகத்தையே கொச்சைப்படுத்துகின்றார். ஐரோப்பிய பெண்களை புரிந்து கொண்ட விதம் ஆபாசமானது. இப்படி இந்த சிறுகதை தனது வெட்டு முகத்தை காட்டும் போது மற்றைய கதைகளை கேள்விக்குள்ளாக்கின்றது.

~~ரூபம்|| என்ற சிறுகதை தத்துவம் தொடர்பாக தொடங்கி ஏகாதிபத்திய பாலியல் நுகர்வை நியாப்படுத்துவதில் முடிகின்றது. ~~வெறும் மயக்கங்கள் மாத்திரம் உள்ள மாமூல் வாழ்க்கையில் மாற்றம் தேவை...
நிஜம் தேவை....|| என்று குறிப்பிடும் இவர்ää அதை தமிழ் பண்பாடு கடந்து ஏகாதிபத்திய பண்பாட்டு கலாச்சாரத்துக்குள்ளேயே நிஜத்தைத் தேடுகின்றார். தமிழ் நிலப்பிரபுத்துவ மதவாத பெண் அடிமைத்தனத்தை கேள்விக்குள்ளாக்கும் இவர்ää அதற்கு பதிலாக ஏகாதிபத்திய நுகர்வை முன் தாள்ளுகின்றார். ~~அப்படி எண்டால் உண்மைதான் தத்துவமா?|| ~~ஏறக்குறைய... ஆனால் உண்மைய விட உண்மை|| என்கின்றார். அந்த உண்மை என்ன. உண்மை என்பது இருக்கின்ற வேறுபட்ட சமூக பண்பாட்டு கலாச்சாரக் குறைகள் அல்ல. இருக்கின்ற சமூக பண்பாட்டு கலாச்சார கூறுகள் ஏன்ää எப்படிää எங்கிருந்துää எதற்காக உருவாகி வளர்கின்றது என்ற கேள்வி மீதான உண்மையேää அனைத்தையும் விட அடிப்படையானது. இதை இந்த சிறுகதை தொகுப்பு முற்றாக மறுக்கின்றது. மாறாக ஏகாதிபத்திய போலி ஜனநாயகம்ää கட்டற்ற பாலியல் சுதந்திரம் மீது காதல் கொள்கின்றார். அதையே சிறு கதை பிரதிபலிக்கின்றது. இயக்க வன்முறையில் கூட இந்த சுதந்திரம்ää ஜனநாயகம் என்ற எல்லைக்கள் நின்றே படைப்பு பேசுகின்றது. இது சில வரையறைக்குள் மட்டும் முற்போக்காக உள்ளது.

தொடர்ந்து இந்தச் சிறுகதையில் ~~ஒரு நாள் அதுவும் ரெண்டோ மூணு மணித்தியாலமோ தான் கதைக்க ஒருத்திக்காக இன்னொருத்தி தன் புருஷனை பங்கு போட ஓம் எண்டு சொல்றது.... சே... ஏற்றுக் கொள்ள முடியாது... எவ்வளவு அசிங்கமாக இருக்கு|| என்று பெண் சொல்லää படைப்பாளி ~~நாறிப் போன மீனைப் பார்ப்பதுபோல் அவள் முகம் அஷ்ட கோணலாய் நெளிந்தது. இது தமிழ் பெண்களுக்கு மாத்திரமே உரிய அருவருப்பு நெளிப்பு. மற்றவர்களும் நெளிகின்றார்களே என்று தானும் நெளிக்கிற பம்மாத்து நெளிப்பு. நெளிக்காது போனால் தூரத்தில் வீசப்படுவோமோ என்கின்ற பயத்தில் எல்லாப் பெண்களும் போலியாகவே போனார்கள்|| என்று எழுதும் சக்கரவர்த்திää தனது உண்மை இது என்கின்றார். இது மாமூல் கடந்த விளக்கம் என்கின்றார். ஒரு பெண் பற்றி இவரின் பார்வை இப்படிபட்டதே. ஒரு எழுத்தளான் தனது இலக்கியம் மீதான நேர்மை போன்றேää பெண்ணின் உடல் மேலான உரிமையும். ஒரு சில மணித்தியாளத்தில்; இன்னுமொருவனுடன் உறவு கொள்கின்றாள் என்பதுää படைப்பாளியான ஆணின் கற்பனை. இது கொலிவுட் இரண்டு மணி சினிமாவில் மட்டும் நடப்பவை. அல்லது பாலியல் வக்கிர இசையும் மதுவும் இணைந்த போதையில் நடப்பவை. அல்லது பாலியல் நுகர்வின் விளம்பர மோகத்தில் உந்தப்பட்டு சுய அறிவிழந்து நடப்பவை. இவை எல்லாம் விதிவிலக்குகள். சுய அறிவுள்ள எந்த பெண்ணும் இப்படிச் செய்வதில்லை. தமிழன் எப்போதும் ஐரோப்பிய சமூகத்தின் விதிவிலக்கை தூக்கிபிடித்தேää தூற்றுவதும் போற்றுவதும் நிகழ்கின்றது.

~~முதிர்க்கன்னி|| என்ற கதை ஒரு பெண் சீதனம் இன்றி திருமணம் செய்யாது வாழும் வாழ்க்கை பற்றி பேசுகின்றது. இந்த கதையில் அந்த பெண் மீதான ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் பலாத்காரத்தைää பாலியல் சுகம் சார்ந்து ரசிப்பதாக அல்லது மறைமுகமாக இணங்கிப்போகும் வடிவில் கதை சொல்லி பெண்ணை இழிவாக்கின்றது. அவளுக்கு படிப்பித்தவன் அத்து மீறி உடலில் கைவைத்ததுää இந்திய இராணுவம் கற்பழித்ததுää மேற்கு நாடுகளுக்கு ஆள் கடத்துபவன் அவளை கற்பழித்ததுää விக்கிரமித்தன் அவளை கற்பழிக்க தூக்கிச் செல்வது ஈறாக நடக்கும் வன்முறை மற்றும் பலாத்காரத்தைää பெண் ஏற்று இணங்கி போவதாக கதை சொல்வதுää பெண்ணின் இயங்கியல் எதிர்ப்பை கொச்சைப்படுத்தி அவள் அப்படித்தான் என்று ஒரு ஆணாதிக்கவாதியாக கதை சொல்லுகின்றார்.

மற்றொரு கதையில் ~~எவனோ இளநீரைக் குடிக்க அப்புறம் நான் கோம்பை சுமக்க வேண்டி வந்துவிடும்...|| என்ற கூற்று தந்தை வழி சமூகத்தின் வாரிசு நோக்கத்தை அடிப்படையாக கொண்டது. அந்த அடிப்படையில் நின்றே சக்கரவர்த்தி பெண்ணின் தாய்மையை எதிர்க்கின்றார். குழந்தை தனது சொந்த விந்து சார்ந்தாகää பெண்ணின் கற்பின் மீது சொந்த உரிமை சார்ந்தாக இருக்க வேண்டும் என்றää ஆணாதிக்க சமூகத் தொடர்ச்சியை பிரதிபலித்தபடியே பெண்ணின் கற்பொழுக்கத்தை இதன் அடிப்படையில் முன்வைக்கின்றார். இங்கு அவர் கற்பை பெண்ணிடம் கோருகின்றார். குழந்தையின் தந்தை வழியுரிமை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும் என்பதையேää பிரகடனம் செய்கின்றார். இங்கு தாய் வழி உரிமையை கொச்சைப்படுத்துகின்றார். இங்கு பெண்ணின் நடத்தை தொடர்ப்பான விவாதம் இரண்டாம் பட்சமாகவே உள்ளது. இங்கு ஆணின் நடத்தை தொடர்பான பிரச்சனையே முதன்மையானது. இங்கு பெண் பேசவில்லை. ஆண்தான் பெண்ணாக பேசிää ஆணின் ஆணாதிக்க சுகத்தை நியாப்படுத்துகின்றார்.

~~பலமான ஆணிண் குறுக்கிடல் இல்லாத வரைக்கும் எல்லா பெண்ணும் இடுப்புக்கு கீழே சுத்தமாகத்தான் இருக்க முடியும்;. பத்தினியாகவும் கற்புடனும் பத்திரமாகவும் இருக்க முடியும்தான்.|| என்ற பெண் பற்றிய கொச்சைப் பார்வை ஆணாதிக்கத்தின் திமிராகும். கற்பை பெண்ணின் இடுப்புக்கு கீழ் மட்டும் காணும் இந்த ஆணாதிக்க சமூகத்தைப்பற்றி விமர்சித்தபடிää இவரும் அதையே செய்வதுதான் வேடிக்கை. ஒரு ஆணுடன் பெண் உறவு கொள்வது என்ற எல்லைக்குள் அவளின் பத்தினித்தனம் மற்றம் கற்பு எல்லாம் முடிவடைகின்றது என்ற விளக்கவுரைää ஆணாதிக்க வரையறைக்கு உட்பட்டது. இது பற்றி விபரமாக புரிந்து கொள்ள எனது பெண்ணிய நூலைப் பார்க்கவும்.

~~அவுத்துப் போடாத வரைக்கும் தான் பொம்பள சுவாரஸ்யம்ää ஆச்சரியம் எல்லாம். அவுத்துட்டா அப்பறம் ஒரு மண்ணும் கிடையாது|| என்று யாரோ ஒரு பன்றியின் பெயரில் சொல்லியேää அதை அங்கீகரிக்கின்றார். ஆணாதிக்க ஆண்கள் பெண் பற்றி புரிந்து கொண்ட எல்லைக்குள் தத்துவம் பேசுகின்றார். ஆண் பற்றிய பெண்ணின் ஆர்வம் எதனுடன் முடிகின்றது. ஒரு பெண்ணை அவுத்துப் போட வைப்பதை தனிப்பட்ட ஆண் முதல் உலகமயமாதல் மூலதனம் வரை தீவிரமாக கோரும் போதுää அதையே இந்த சிறுகதை ஊடாக சக்கரவர்த்தியும் கோருகின்றார். பின்பு அவளை சலித்துப் போன தனிமனித நுகர்வு எல்லைக்குள் இழிவுபடுத்துவது நிகழ்கின்றது. தனிச் சொத்துரிமை சார்ந்து அதுவே நுகர்வு வெறியாக பண்பாடாக மாறிய பின்புää ஆணின் அடிமையான பெண்ணை நுகர்வு எல்லைக்குள் ரசிக்கவும் தூக்கியெறியவும் முடிகின்றது. இந்த நுகர்வை அவுத்துப் போடக் கோரும் ஆணாதிக்க நுகர்வு எல்லைக்குள் தான்ää பெண்ணைப் பற்றிய மதிப்பீட்டை கொடுக்கின்றார்.

~~... வெள்ளைக்காரிச்சிகள் யோக்கியம்! நம்மவளுகள் ஒழுங்காக அனுபவித்ததும் இல்லை.|| என்று கூறுவதன் மூலம்ää வெள்ளையினப் பெண்கள் பாலியலை அனுபவிப்பதாகவும்ää தமிழ்ப் பெண்கள் பாலியலை அனுபவிக்கவில்லை என்கின்றார். அதாவது நிலப்பிரபுத்துவ கட்டப்பாடு கொண்ட பாலியலையும்ää ஏகாதிபத்திய நுகர்வை அடிப்படையாக கொண்ட விபச்சார பாலியலையும் எதிர் எதிரே நிறுத்திää தமிழனாக ஏகாதிபத்திய பண்பாட்டுக்குள் விபச்சார பாலியலை அனுபவிக்க கோருகின்றார். அதாவது ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ சமூக முரண்பாட்டுக்குள் சிக்கி தவிக்கும் ஒரு அழுமூஞ்சியாகää இரண்டு தளத்துக்குள்ளும் அலை பாய்ந்தபடி புலம்பவது நிகழ்கின்றது. ஒரு வெள்ளையின பெண் அனுபவிக்கும் துயரத்தையிட்டு எதையும் தெரிந்து கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆணாதிக்க நாயகனாக நின்றுää நிலப்பிரபுத்துவ பெண்ணை அவளின் அடிமை வாழ்வின் மேல் கொச்சைப்படுத்தும் வக்கிரம் நிகழ்கின்றது. உண்மையில் தமிழ் பெண்களை விபச்சார எல்லைக்குள் ஆணாதிக்க தமிழர்கள் அனுபவிக்க துடிக்கும் ஆவல்ää கோட்பாட்ட ரீதியாக பெண்ணை விபாச்சரியாக்க கோருகின்றார். அதுவே இவர் உருவாக்கிய காத பத்திரங்களான பெண்கள் செய்யத் தொடங்குகின்றனர்.

~~இருட்டில் யாரோ ஒருவனுடன் சல்லாபித்து விட்டுää பகலில் எவனோ ஒருவனுக்கு மனைவியாவதுதானா தமிழியல்?|| என்ற இவரின் மற்றொரு முரண்பட்ட மதிப்பீடுää ஒரு சமுதாயம் பற்றி இழிவு செய்கின்ற பார்வையாகும்;. பெண்கள் பற்றிய கொச்சைத் தனமானää அவளின் சுயநிர்ணயம் மீது காறி உமிழ்கின்ற இந்த இலக்கியம்ää ஏகாதிபத்திய விபச்சார நுகர்வு எல்லைக்குள் பெண்ணை வரக் கோருவதாகும்;. பெண்களை விரும்பியபடி எந்த நேரமும் யாருடனும் உறவு கொள்ளக் கோரும் கண்ணோட்டத்தை திணிக்கவேää பெண் இரட்டை தளத்தில் சுயமிளந்து இரகசியமாக வாழ்வதாக பறை சாற்றுகின்றார். ஒரு ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் நிலை என்பது ஆணின் வருணைக்குட்பட்ட எல்லைக்குள் தான்ää அவளின் நடத்தைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இங்கு அவளின் சுயம் கூட கொச்சைப்படுத்தப்படுகின்றது. ஆண் ஒரு பெண்ணைப்பற்றி எதை நினைக்கின்றானோää அதுவே பெண்ணின் இயல்பாக இலக்கியம் ஊடாக முத்திரை குத்தப்படுகின்றது. ஒவ்வொரு ஆணும் பெண்பற்றிய தனது அபிப்பிராயத்தை கொண்டேää ஒவ்வொரு பெண்ணின் அடிமைவாழ்வும் அதன் எல்லைக்குள் வரையறுக்கப்படுகின்றது. இதில் இருந்து கொண்டு மொத்த பெண்களை அடிப்படையாக கொண்ட சமூகத்தை பற்றிää கொச்சையான சிந்தனையையும் கண்ணோட்டத்தையும் பொதுமைப்படுத்துகின்றனர்.

இவர் மேலும் பெண்ணைப்பற்றி குறிப்பிடும் போது ~~முதலாவது கை எடுத்துக் கும்பிட எண்ணம் வரும். ரெண்டாவது உடனேயே சாய்ச்சிட எண்ணம் வரும்!|| என்று பெண்ணை இரண்டாக வகுத்து தனது ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றார். பெண்ணை கையெடுத்துக் கும்பிடக் கோரும் எல்லை என்பது ஆணாதிக்க அடிமைத்தனத்தில் அடங்கிவாழும் பெண்ணை அதன் அடிமைத்தனத்தை மெச்சி பெண்மையின் மேல் வழிபடுவதாகும்;. இரண்டாவது அடங்கி நடக்க மறுக்கும் பெண்ணைää அவளுடன் படுத்து விட நினைக்கும் ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்விரண்டும் உள்ளடக்கத்தில் ஒன்றுதான். அதாவது இந்த இரண்டு பெண்ணையும் அவர் ஏகாதிபத்தியää நிலப்பிரபுத்துவ எல்லைக்குள் நின்றே வரையறுக்கின்றார். அத்துடன் படுத்துவிட நினைக்கும் பெண்ணை இவர் குறிப்பிட்டது போல்ää அவித்துவிடும் வரைக்கும் தான் ஏகாதிபத்திய ஆணின் வக்கிர நோக்கமும் மதிப்பீடுகளும் அமைகின்றன. ஆணாதிக்க சமுதாயத்தில் நுகர்வின் பண்பாடுää பெண்ணையும் கூட நுகர்வின் எல்லைக்குள் இருக்கவும்ää இருப்பதாகவும் கூறி கோருகின்றது. பொருட்களைப் போல் பெண்ணையும் கைகூப்பி கூம்பிடும் ஒரு பதுமையாகவும்ää மறுதளத்தில் நுகர்வாகவும் அக்கம் பக்கமாகவும் செயற்படுகின்றது. இது வாழ்வின் நுகர்வு நெறியில் தெளிவாக எல்லா துறையிலும் காணமுடியும்;.

ஒரு பெண் தனது வாழ்வில் அத்து மீறி வாழ்கின்ற போது ~~கோழைகளின் திருட்டு மீறல்தான் நம் தமிழ்ச்சிகளிடம்...|| என்கின்றார். இது பெண்களின் குணமா? இல்லை. அத்துடன் இது தமிழ் பெண்களின் குணமா? இல்லை. ஆண் பெண் வேறுபாடு இன்றிää நிற வேறுபாடு இன்றி சமுதாயத்தில் பண்பாட்ட கலாச்சார மற்றும் சட்டங்கள் என அனைத்தையும்ää திருட்டுத்தனமாக மீறுவது வாழ்வின் யதார்த்தில் உள்ளது. இதை கோழைத்தனம் என்று கூறுவது முழுமையற்றது. மாறாக அதை திருட்டுத்தனமாக ஏன் மீறுகின்றனர். இந்த சமுதாயத்தின் அடக்குமுறைகள் சுரண்டலாகவும்ää ஆணாதிக்கமாகவும்ää சாதி ஒடுக்கமுறையாகவும் என சமுதாயத்தில் புரையோடியுள்ள பலவேறு ஒடுக்குமுறையால் திருட்டு மீறல்கள் நிகழ்கின்றன. இதுவே சமுதாய மாற்றமாக நிகழ்கின்ற போதுää அந்த திருட்டாக இருப்பதில்லை. தனிமனித செய்கின்ற போதுää அங்கு திருட்டுத்தனம் உள்ளடக்கமாக இயல்பாக உள்ளது. இதை தமிழ் பெண்களின் பாலியல் மேல் கொச்சைப்படுத்தி காட்டுவதுää தமிழ் ஆண்களின் திருட்டுத்தனத்தையும் கோழைத் தனத்தையும் ஆணாதிக்க மூகமுடியின் கீழ் மூடிமறைப்தாகும்;.


15.3.2006

15.3.2006

3/15/2005 03:36:00 PM