கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நாககன்னி

Thursday, November 30, 2006

போர் பேரலையாகி
மூர்க்கமாய் எற்றித்தள்ள
சமுத்திரங்கள் தாண்டி
பெயரறியாக் கரையடையும் ஆதிமனிதன்
புரட்டுகின்றான்
பூர்வீகநிலம் அபகரிக்கப்படும்
வரலாற்றின் பக்கங்களை

இவன்
இருப்பிழந்த வலியின்
கனந்தாங்காது துடித்த தேவதைகள்
மழைக்காலத்தில் அனுப்பிய
நாககன்னியுடன்
பகிர்ந்தும் பிணைந்தும் சிலிர்க்க
அந்நிலப்பரப்பெங்கும் மலரத்தொடங்கின
குழந்தைகள் குதூகலத்துடன்

இங்கு
வாழ்வு செழிப்பாகவும்
இயற்கை தாலாட்ட
எவருக்கும் அஞ்சவேண்டியதில்லையெனவும்
தற்செயலாய் வந்திறங்கிய
கடற்கொள்ளையரிடம்
செய்தி கொடுத்தனுப்பினான்;
உயிருக்காய்
அலைமேல் தத்தளிக்கும்
தன் நாட்டு மக்களுக்கு.

கூட்டமாய் வந்தவர்கள்
தம்வாழ்வு
துப்பாக்கிமுனையில் தீர்மானிக்கப்பட்ட
பொழுதுகள் மறந்து
பசும்மரங்களை தீயிட்டு கொளுத்தி
இசைமீட்டிய பறவைகளை
நாண்பூட்டி வதைக்கவும்
தொடங்கலாயினர்

விரும்பியதை புனைந்து
விரும்பியதை அருந்தி
இயற்கையாய் வாழ்ந்த நாககன்னியை
வன்மத்துடன் புணரத்துடித்த
குறிகளின் வசீகரப்பேச்சில்
தன்சுயத்தையும் தொலைத்தான்
ஆதிமனிதன்

சூரியன் துணையிருக்கும்வரை
அவளை அடைதல் ஆகாதெனும்
உண்மை கசக்க
தங்களைப் போல பிறப்பால்
சாதிப்பச்சை குத்தப்படாதவள்
இழிபிறவியென கற்பிதங்கள் இயற்றத்தொடங்கினர்
பெயர்ந்தவர்கள்

ஓர் அமாவாசையிரவில்
நாககன்னியையும்
பச்சை குத்தப்படமுடியா குழந்தைகளையும்
சாதியுருவேறியாடி
கொன்று புதைக்க
வெகுண்டெழுந்தான் ஆதவன்
விழிகள் சிவக்க

மீண்டும்
நாடற்றவர்களான இவர்களை
இனி
தேவதைகளும்
அரவணைக்கப்போவதில்லை.

(2006)
(காலம் - இதழ் 27)


0 comments: