கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label நிகழ்வு. Show all posts
Showing posts with label நிகழ்வு. Show all posts

என் கதைகளின் தொகுப்பு வெளியீடு

Tuesday, April 23, 2013

'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்'



சண்முகம் சிவலிங்கத்தை நினைவுகொள்ளல்

Sunday, April 22, 2012


-அவரது கவிதைகளினூடாக-
(1939-2012)


இன்னுமொரு காடு

பறக்கிறது
இந்தக் காட்டையும் விட்டு
பறவை

புழு அரித்துப்போன இலை
நுனி கறுத்துப்போன அரும்புகள்
சாவட்டையாய் வதங்கி
சலித்துப் போன
நோய்த் தாவரங்கள்
குச்சும் கம்புமாய்
பரட்டை பற்றித் தெரிகிறது காடு

மனவருத்தந்தான் குருவிக்கு
எனினும்
வாழ்வை மறுதலிக்க முடியவில்லை
இன்னுமொரு காடு
இன்னுமொரு காடு
பறக்கிறது பறவை.

(2002)


குருவிமனம்

வெயில் சலித்துப்போன ஊமைப் பிற்பகலில்
ஒருநாள்,
வானத்து மார்புத் துகில் சற்று விலகித்
தெரியும் சூரிய முலைக்காம்பில்
கொத்தி விழ
வானின் குறுக்காகத் தாவும்
கிளாத்தன் குருவிகளை
கதவடியில் நின்று பார்த்த கணமே
வாய்விட்டுச் சொன்ன வரிகள் -
"வானத்தைப் பார்த்திருந்துவிட்டே
செத்துப் போகலாம்,
பின்னொரு நாளில்."

(1992)


ஆத்மாநாம்

மனோ வியாதி
கவிதை வரிகளாய் மாறும்
மற்றொரு வியாதி

இன்று அதிகாலைப் பனியோ
இந்தக் கதவிடுக்கினுள்ளும்
கூரை வளையிடுக்கிள்ளும் புகுந்து
என் விரல் நகங்களுக்குள் ஊடுருவி
என்னை வெடவெடக்கச் செய்கிறது.

ரோமத்தைப் பிய்த்துத்
தோலை உரித்து
தசைகளைக் கிளறி
நரம்புகளை இழுத்து, உருவிக் குவித்து
கபால உள்ளீட்டின்
கறையான் அரித்த சால்களுக்கிடையில்
என்னை வழிதொலையச் செய்கிறது,
வழி தொலைந்துபோன
ஆத்மாநாம் போல...

நானும்
மனோ வியாதியின்
கவிதை வரிகள்தானோ!

(1991)


தேவதைகளும் கடவுளரும்

மறக்காதீர், மறக்காதீர்
தேவதைகளை அழிக்கு முன்
அவர்களைப் பைத்தியம் ஆக்குவர் கடவுளர்
சுறாக்களை இழுக்குமுன்
அவைச் சுதந்திரமாய் ஓடவிடுவர் மனிதர்கள்.

சிறைக் கதவுகள் மூடுவது
திறந்த கதவினுள் சென்ற பின்புதான்
துப்பாக்கிகள் வெடிக்காதிருப்பது
தொடுவில்லை தொடாத வரையில்தான்
ஒரு நிகழ் யுத்தத்தின் நிறுத்தம்
வரும் யுத்தத்தின் தொடக்கம்.
திறந்த வெளிச் சிறைக்கூடம்
சுதந்திரபூமி ஆவதில்லை.

மறக்காதீர், மறக்காதீர்
தேவதைகளை அழிக்கு முன்
அவர்களைப் பைத்தியம் ஆக்குவர் கடவுளர்
சுறாக்களை இழுக்குமுன்
அவைச் சுதந்திரமாய் ஓடவிடுவர் மனிதர்கள்.

(2003)

துப்பாக்கிக் குழந்தை

உன் தங்க மீன்கள்
இன்னமும் கண்ணாடித் தொட்டியில்
தகதகக்கின்றன
உந்துதல்
ஓடுதல்
ஒளித்தல் எனும்
எந்த நகர்வும் இன்றி
நீரின் மேலெழுந்து
எங்கே நீ எனத் தேடுகின்றன
எவர் அவர்க்கு உன்போல்
தீனி இடுவர்?

வெண்பஞ்சுத் துளிகள் - உன் முயல்கள்
வெளியில் வந்து
துள்ளித் துள்ளி
முன்பாதங்கள் தூக்கி
செங்கண் முகத்தைத் திருப்பித் திருப்பி
எங்கே நீ எனத்தான்
இன்னமும் தேடுவன
எவர் உன்போல்
அடம்பன் தளிரை ஊட்டுவார்
அவர்க்கு?

பப்பி திரிகிறது
நாலுகால் பாய்ச்சலில்
எறிந்த பந்தை எடுத்துவந்து
என்னிடம் தராதாம்
உன்னையே தேடி
ஓட்டமாய்த் திரிகிறது.

இத்தனையும் விட்டு
எப்படி நீ
துப்பாக்கியோடு
வாழ்வைத் தொடர்கிறாய்
மகனே!

(1986)

போர்க்களம்

போனேன்
நான் உன் போர்க்களம் காண

விடிந்ததும் விடியாததுமாக
காதில் விழுந்தது
பல முகங்கள்
மிகத் துயரில்
விம்மலுடன்

முகங்கள் ஊடு
முகங்கள் ஊடு
பிடரிகள் ஊடு
பிடரிகள் ஊடு

அர்ச்சுனர் வீதியில்
அரைத்தூரம்...
இதுதான்...
என்றார்கள்
இடைவிடாது
துப்பாக்கிக் காயங்கள் துளைத்த
மதில் சுவருக்கும்
கிளிசரியா மரங்களுக்கும் இடையில்

நேருக்கு நேர்
நீ ஒருவன் தனியாக
சுழன்று சுழன்று தொடுத்த பாணங்களின்
அற்புதம் பற்றி அளந்தார்கள்
அமைதிப் படை
சர்ப்பமாய் ஒளிந்து
சக்கரமாய் மாறிய
அற்பத்தனம் பற்றியும் அளந்தார்கள்

மதிலோரத்தின் மயங்கிய மண்ணில்
குழிந்து கிடந்தது உன் குருதி
மெதுவாக அள்ளி முத்தமிட்டு
விரலிடை நெரித்தேன்

மீண்டும்
முகங்கள் முகங்கள்
முகங்கள் ஊடு
சிவந்த சூரியனின் சிதறிய முகத்துண்டுகள்
ஆயிரம் என் கண்ணில், அட என் மகனே

(1989)

ஒரு போராளியின் புதையல்

உன்னையும்
ஒரு சவப்பெட்டியுள்தான் ஒடுக்கினார்கள், மகனே!

நீட்டி நிமிர்ந்து நீ நெடுமலாய்க் கிடக்கையிலே
நிழல் போலக்
கறுத்து
விறைத்த உன் முகம்மீது
வீழ்ந்து புலம்பல் அல்லால்
வேறென்ன முடியும் உறவுக்கு?

மாலை வரையும் உன்னை வைத்திருக்கத் தடை
மதியத்திற்கு முதல்
புதைப்போம் என்ற பொறுப்பு
வழக்கமான பாதைக்கு மறுப்பு
ஊர்வலம் ஆகாதென உறுமல்

புதைத்தார்களா?
வாய்க்கரிசி போட்டார்களா?
பொன் மணலைக்
குவித்தார்களா? பிரண்டங்கொடி நட்டார்களா?
கொழுத்தினார்களா மெழுகுவர்த்தி
கடற்காற்றின் கொசுகொசுப்பினிடையே?
எதைத்தான் பார்த்தேன்,
என் மகனைக் கொன்றது ஓர்
இந்தியத் துப்பாக்கி என
எண்ணுவதைத் தவிர?

(1989)



நன்றி:
கவிதைகள்:சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகைகளும் -2010
ஓவியம்: றஷ்மி

மே தின‌ம் - 2011

Monday, May 02, 2011

தெருக்களில் 'வாக்கு' - No One Is Illegal

No One Is Illegalன் மேதின‌ அழைப்பு அறிக்கையை விரிவாக‌ வாசிக்க‌



எனெனில், இனி குடும்ப‌ ஸ்பொன்ச‌ர்ஷிப் செய்வ‌த‌ற்கு ப‌தினான்கு வ‌ருட‌ங்க‌ள் வ‌ரை எடுக்க‌லாம் ம‌ற்றும் அக‌திக‌ளை ஏற்றுக்கொள்வ‌து 56%த்தால் குறைக்க‌ப்ப‌டுகின்ற‌து



எனெனில், எல்லைக் காவ‌ல‌ர்க‌ளுக்கு பெண்க‌ளின் வ‌திவிட‌ங்க‌ளை ஆக்கிர‌மிப்ப‌த‌ற்கான‌ அதிகார‌ம் இப்போது இருக்கிற‌து


எனெனில், த‌ற்காலிக‌ குடியேற்றத் தொழிலாள‌ர்க‌ள் 'திற‌ன் குறைந்தவ‌ர்க‌ள்' என‌க் க‌ருத்த‌ப்ப‌ட்டு, நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு க‌ன‌டாவிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட‌லாம்



எனெனில், ரொர‌ண்டோவில் ஒவ்வொருநாளும், 70 ச‌மூக‌ உறுப்பின‌ர்க‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டு நாடு க‌ட‌த்த‌ப்ப‌டுகின்றார்க‌ள்



எனெனில், ஹார்ப்ப‌ருக்குத் தேவை 'மிக‌வும் இன‌த்துவ‌மான‌' வாக்கு, ஆனால் குடியேறிக‌ள் தேவையில்லை.



எனெனில், (ரொர‌ண்டோ மேய‌ர்) போர்ட் (அர‌சுக்குச் சொந்த‌மான‌) பொது வீடுக‌ளை விற்க‌வும்,ரிரிசி ப‌ஸ்க‌ளை குறைக்கவும், பொதுச்சேவைக‌ளுக்கு ப‌ண‌ம் அற‌விட‌வும் விரும்புகின்றார். இந்த ந‌ட‌வ‌டிக்கைக‌ள் பெண்க‌ள், குடியேறிக‌ள் ம‌ற்றும் வ‌றிய‌ ச‌மூக‌ங்க‌ளை இன்னும் மோச‌மாக‌ப் பாதிக்கும்.



எனெனில்,குடியேறிக‌ளின் நீதிக்கான‌ ஒழுங்க‌மைப்பாள‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்டு, கைது செய்ய‌ப்ப‌ட்டு, சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌துட‌ன் தொட‌ர்ச்சியாக‌ பொலிசால் தொந்த‌ர‌வுக்குள்ளாக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்.



எனெனில், க‌னேடிய‌ அர‌சு தொட‌ர்ச்சியாக‌ பூர்வீக‌ ம‌க்க‌ளின் இறையாண்மையையும் விடுத‌லையையும் எதிர்த்துக்கொண்டே இருக்கிற‌து.



எனெனில், எங்க‌ளின் க‌ன‌வுக‌ள் வாக்க‌ளிப்புப் பெட்டிக‌ளில் முடிய‌க்கூடிய‌து அல்ல‌


ஆவ‌ண‌மில்லாத‌ ம‌ற்றும் குடியேறி தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ நீதி: எல்லோருக்குமான‌ அந்த‌ஸ்து! ப‌ய‌மில்லாது (எல்லாவ‌ற்றையும்) அணுகிப் பெறுத‌ல்!







எங்க‌ள் ச‌மூக‌ங்க‌ளுக்கான‌ நீதி: ச‌ம்ப‌ள‌த்தை, வாழும் காசை, தொழிற்ச‌ங்க‌ங்க‌ளை, இல‌வ‌சமான‌தும் எளிதில் பெற‌க்கூடிய‌துமான‌ பொதுச் சேவைக‌ளை அனைவருக்க‌மாய் அதிக‌ரித்த‌ல், வ‌ன்முறையான‌ பொலிசை அய‌லிட‌ங்க‌ளிலிருந்து அக‌ற்றுத‌ல்



கால‌னித்துவ‌ம், இராணுவ‌ ம‌ற்றும் பொருளாதார‌ போர்க‌ள் ம‌ற்றும் சூழ‌லிய‌ல் த‌ர‌ங்குறைத‌ல் என்ப‌வ‌ற்றிலிருந்து விடுத‌லை



சுத‌ந்திர‌மான‌ ந‌ட‌மாட்ட‌ம், சுத‌ந்திர‌மான‌ திரும்ப‌ல் ம‌ற்றும் சுத‌ந்திர‌மான‌ த‌ங்க‌ல்

மே தினம்

Saturday, May 02, 2009

-NO ONE IS ILLEGAL சார்பாக-

(படங்களின் மேல் அழுத்திப் பெரிதாக்கிப் பார்க்கலாம்)


























































மனிதச்சங்கிலியாய் ஈழத்திலுள்ள மக்களுக்காய்...

Friday, January 30, 2009

கடுங்குளிரிலும் ரொறோண்டோத் தெருக்களில் கூடிய கூட்டம்...

நடந்த நிகழ்வை காணொளியில் பார்க்க...

நிகழ்வு மனிதச்சங்கிலியாய் ஆரம்பித்து இறுதியில் ரொரண்டோ பெரும்பாகத்தின் முக்கிய போக்குவரத்துப்பாதையான yonge-bloor-university பாதை மக்கள் திரளால் முற்றாக மூடப்பட்டு, உள்ளூர் ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் - காலம் கடந்ததாயினும்- முக்கிய breaking news ஆகக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

As Many As 10,000 Protestors Create Commuter Chaos At Union Station During Afternoon Rush Hour

Friday January 30, 2009

CityNews.ca Staff

It has been an extraordinary day in the downtown core, a spectacle rarely if ever seen in this city. The cause: a day long downtown-wide massive protest by Canadian Sri Lankans, designed to attract attention to what they call acts of genocide in their homeland.
The human chain demonstration stretched from Bloor St. to University Ave. and Yonge St. and snaked all the way to Front.
But it was at that final destination that the crowds truly tried to make their point. As many 5-10,000 people wound up at Union Station, causing such an overwhelming sea of humanity that police were forced to close off the roadway for a time.
Mounted units, traffic cops and even the RIDE spotcheck command post were all called into action while chaos prevailed around the transit hub. The assembled multitude was peaceful, a remarkable achievement for such a large gathering, but it was inside the typical transit hubs where chaos reigned.
Police were able to finally open a small corridor to allow pedestrians and travellers to get through.
A man named George was one of those caught in the gridlock while attending a library convention downtown. He didn't seem to mind the inconvenience it caused. "I'll support the protesters, it's a good cause," he confirms. "But, you know what? There's thousands of people that have been affected."
But while police did their best to clear the way, when commuters finally did get down to Union Station it was hardly clear sailing. It was so crowded in the subway the line waiting to get in stretched all the way back to the area where passengers pay their fares.
And it was almost as bad uptown. Busy Bloor Station was so filled with passengers, the TTC was forced to stop all its trains before they entered the station to ensure safety.
It was a long day for authorities, who were hopping since the protest began earlier in the morning. Drivers were also affected, as the protestors kept to the sidewalk but provided an endless visual distraction for blocks.
It was an amazing sight, all the more so because it stayed so peaceful. "There are probably thousands, tens of thousands of Tamils here all trying to bring some attention to their cause," confirmed CityNews reporter Francis D'Souza at the height of the madness. "You can see them on the street corners here trying to hand out pamphlets just to let people know what they're actually talking about."
He believes they more than achieved their aims. "Their message is 'stop Tamil genocide in Sri Lanka.' If that's what they wanted, that's what they're getting right now. Because the hundreds of thousands of commuters who use Union Station every day are trying to get through and listening to their message."
How busy was it at the height of the protest? D'Souza reveals he was forced to get out of the CityNews vehicle and walk to the scene. His cameraman and all his equipment didn't get through the gridlock until 25 minutes later.
The protestors had promised their massive march would end at 6pm. True to their word, as the dinner hour struck, the crowds slowly began to disperse and left the area, creating yet more headaches for an already swollen public transit system.
Thanks: http://www.citynews.ca/news/news_31530.aspx



















நிகழ்வு: ஏலாதி இலக்கியவிருது

Sunday, August 17, 2008

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா)
கவிதை நூல்களுக்கு ஏலாதி இலக்கியவிருது


-தொகுப்பு; ஹெச்.ஜி.ரசூல், நட.சிவகுமார்

2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84 கவிதை நூல்கள் இப்போட்டிக்கு வரப் பெற்றன.இரண்டுஅடுக்கு தேர்வின் அடிப்படையில் தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி கவிதை நூல்,மற்றும் புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ஈழத்து இளம் படைப்பாளியான இளங்கோவின் நாடற்றவனின் குறிப்புகள் கவிதை நூல் ஏலாதி இலக்கியவிருதுக்காய் தேர்வு செய்யப்பட்டன.

ஆகஸ்ட்15 தக்கலையில் நடைபெற்ற ஏலாதி இலக்கிய விருது விழாவிற்கு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தலைமை தாங்கினார். அறிமுக உரையை கவிஞர் நட.சிவகுமார் நிகழ்த்தினார்.

குமரிமாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்கவிஞர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்ட கவிதைப் பயிலரங்கத்தை பணித்திரு.பி.எஸ்.அருள் தொடங்கி வைத்தார். ஏலாதி இலக்கிய விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு தன்னுடைய கவிதைப் பகிர்வை வெளிப்படுத்தினார்.

'கோட்பாடுகளுக்குள் கவிதையை தேடாமல்.வாழ்க்கை அனுபவங்களுக்குள் கவிதையை கண்டுபிடிக்கவேண்டும் என்றார்.உதிரத்தின் நிணத்துடனும்,வியர்வையின் கசகசப்புடனும், உழுத மண்ணின் பிரசிவிப்பு மூச்சுடனும், நான் பிறந்த கிராமத்தின் சகதியுடனும், வெக்கையுடனும் என் எழுத்து ஞாபகங்களாக விரிகிறது என்றார். அலாவுதீனின் பூதத்தை சின்ன குப்பிக்குள் அடைக்கும் மாயவித்தையையாகவும் கவிதை உருமாறும் என்றார்''

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஏலாதி இலக்கிய விருதுக்கான ரூபாய் இரண்டாயிரத்துக்கான நன்கொடையையும் நினைவுப் பரிசினையும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் ,ஜி.எஸ்.தயாளன் ஆகியோர் வழங்கினர்.

குமாரசெல்வா,ஆர்.பிரேம்குமார்,செல்சேவிஸ்,சிவசங்கர்,ஹாமீம் முஸ்தபா ஆன்டெனிராஜாசிங்,தர்மசிங் சிவராமன், விஜயகுமார், ஜே.ஆர்.வி.எட்வர்டு, சிறப்புவிருந்தினர் கே.ஏ.குணசேகரன், உள்ளிட்டவர்கள் கவிதை உரையாடலில் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவினரின் கிராமிய இசை, நிகழ்ச்சிக்கு அழகூட்டியது.தவில் நாயன கலைஞர்களுக்கு அரங்குக்கு வெளியே விளம்பரம் எதுவுமின்றி கவிஞர் தமிழச்சி நிதி உதவிகள் வழங்கினார்.

விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மல்லாங்கிணறு கிராமத்தை சார்ந்தவர்.சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளரான தமிழச்சி இலங்கை புலம்பெயர் தமிழர்களின் படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் குறித்த முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.இவரின் முதல் கவிதை தொகுப்பு எஞ்சோட்டுப் பெண். ஏலாதி விருது பெற்ற வனப்பேச்சி கவிதை தொகுப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதுபோல் ஏலாதிவிருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட ஈழத்துப் படைப்பாளியான 'நாடற்றவனின் குறிப்புகள்' நூலாசிரியர் இளங்கோ யாழ்பாணம் அம்பனையில் பிறந்தவர்.போர் மூர்க்கமாய் எழுந்தபோது உள்நாட்டிலேயே அகதியாக அலைந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர். போர்க்கால அவலங்களும் புலம்பெயர் வாழ்வின் அலைக்கழிதல்களும் இவரது 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதை நூலில் மெளன சாட்சியாய் பதிவாகி உள்ளன. இத் தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கவிஞர் இளங்கோ கனடாவிலிருந்து அனுப்பியிருந்த மின்னஞ்சல் உரை மிகவும் உருக்கமாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் இருந்தது. ஏலாதி இலக்கிய விருது விழாவில் வாசிக்கப்பட்ட அதன் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்

'சிறுவயதிலேயே உயிருக்காய் தப்பியோடி அகதி வாழ்க்கை பழக்கமாயிற்று விட்டது. பதினொரு வயதுக்குப் பிறகு முற்றாக நான் வாழ்ந்த ஊருக்கு போக முடியாத அளவுக்கு போர் மிக உக்கிரமாயிருந்தது.

இன்றைய காலகட்டத்தில் போர் நான் ஈழத்தில் வாழ்ந்த காலகட்டத்தைவிட இன்னும் பலமடங்கு உக்கிரமாய் பல நூர்றுக்கணக்கானவர்களை பலி கொண்டும், இடம் பெயரவும் செய்து கொண்டிருக்கும் போது எனக்காய் விதிக்கப்பட்ட அகதிவாழ்க்கையில் நான் ஒரளவு 'ஆசீர்வதிக்கப்பட்டவன்' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஆகக் குறைந்தது உயிருக்காவது உத்திரவாதமளிக்கும் ஒரு நாட்டிலாவது வாழ்ந்து கொண்டிருக்க முடிகிறது. எறிகணை வீச்சினதோ, விமானத்தாக்குதலினதோ அச்சமில்லாது விரும்புகின்ற போது அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்க முடிகின்றது.

ஒரு புதியவனுக்கு அவன் யாரென்று அவனது பின்புலங்கள் அறியாது அவனது படைப்பை மட்டுமே முன்னிறுத்தி வழங்கப்படும் ஒரு விருது என்ற வகையில் ஏலாதி இலக்கிய விருதை ஏற்றுக் கொள்கின்றேன்.

...இறுதியில் நான் சிறுவயதில் அகதியாய் அலைந்ததைவிட மிகக் கொடுமையான சூழ்நிலைக்குள் இன்று ஈழத்திலும் உலகெங்கிலும் சிறார்கள் அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அச்சிறார்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன்.இன்னும் இவ்விருதுடன் வழங்கும் நன்கொடையை தமிழகத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஏதாவதொன்றுக்கு வழங்குமாறு என் சார்பில் இதைப் பெற்றுக் கொள்ளும் 'அடையாளம்' சாதிக்கிடம் கேட்டுக் கொள்கிறேன்'

ஏலாதி விருது வழங்கும் விழாவை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தக்கலை ஏற்பாடு செய்திருந்தது.


(மின்னஞ்சலில், ஏலாதி இலக்கிய விருதை வழங்கிய நண்பர்கள் நடந்த நிகழ்வைப் பதிவு செய்து அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. முழுமையான ஏற்புரையை இங்கு வாசிக்கலாம்)