உங்களுக்காய் ஒரு நாள் இனிதாய் விடிகிறது. மென்வெயிலும் முற்றத்த்தில் சிறகடிக்கும் பறக்கும் சாம்பல்நிற flycatcher களும், செம்மஞ்சள்நிற ரொபின்களும் விடியலுக்கு வேறொரு வனப்பைத் தந்துவிடுகின்றன. என்றோ ஒருநாள் குதூகலத்தின் எல்லையில் நீங்கள் ஏவிவிட்ட வெடியொன்று பக்கத்து வீட்டுக் கூரையை உரசியதால் உங்களோடு முரண்பட்டு, முகத்தை இறுக்கமாய் வைத்திருப்பவர் கூட, புற்களைப் பராமரித்தபடி வழமைக்கு மாறாய் காலை வணக்கம் கூறுகின்றார். மேலும் இன்று நீங்கள் உங்களுக்கு...
நெரூடா
In அம்ருதா, In திரைமொழிMonday, September 25, 2017

நெரூடாவின் வாழ்க்கை மிக நீண்டது மட்டுமில்லாது மிகச் சிக்கலானதும் கூட. வலதுசாரிகளுக்கு இருக்கும் தெரிவுகளைப் போல, இடதுசாரிகளாய் இருக்க விரும்புகின்றவர்களுக்குத் தெரிவுகள் அவ்வளவு எளிதாய் அமைவதில்லை. அவர்கள் ஆதரிக்கும் கம்யூனிசக் கட்சியோ, தலைவர்களோ எப்போது மாறுவார்கள், என்ன செய்வார்கள் என்பதையும் எவராலும் இலகுவாய் ஊகித்தறியவும் முடியாது. ஆனாலும் இடதுசாரிகளாய்...
நயோமியின் 'What lies between us'
In அம்ருதா, In வாசிப்புSunday, September 24, 2017

வாழ்க்கையின் திசைகளை எவை தீர்மானிக்கின்றன என்பதை மனிதர்கள் எவரும் அறியார். வீசும் காற்றிற்கேற்ப வளையும் நாணல்களைப் போல மனிதர்களுந்தான் விரும்பியோ விரும்பாமலோ தம்மை மாற்றவேண்டியிருக்கின்றது என சொல்கின்றது நயோமியின் 'எங்களுக்கிடையில் என்ன இருக்கின்றது' என்கின்ற இந்நாவல். கங்கா என்கின்ற சிறுமி, வளரிளம் பருவப்பெண்ணாகி, ஒரு குழந்தையிற்குத் தாயாகும்வரையான...
Subscribe to:
Posts (Atom)