கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தமிழ்நதியின் 'மாயக்குதிரை'

Thursday, May 31, 2018

தமிழ்நதியின் ‘மாயக்குதிரை’யில் பத்துக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுப்பிலிருக்கும் கதைகள் அனைத்தையும் ஏற்கனவே அவை வெளிவந்த காலங்களில் வாசித்திருந்தாலும், இன்னொருமுறை தொகுப்பாக வாசித்தபோதும் அலுப்பில்லாது இருந்ததற்கு, தமிழ்நதியின் கதைகளுக்குள் இருக்கும் கவித்துவமான ஒரு நடை காரணமாயிருக்கக் கூடும். இதிலிருப்பவற்றில் முக்கிய கதைகளாக ‘நித்திலாவின் புத்தகங்கள்’,...

உழைப்பை ஒழிப்போம்?

Monday, May 28, 2018

மேதினத்தில், உழைக்கும் வர்க்கமாய்த் திரண்டு புரட்சி செய்வது, சமத்துவமான உரிமைகளையும் உழைப்பையும் கோருவது என்பது - முக்கியமாய் முதலீட்டிய நாடுகளில்- பெருங்கனவாய் இருக்கும்போது, வேறுவகைகளிலும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. 'உழைப்பு' என்பதில் ஒளிந்து நிற்கும் 'ஓய்வு' குறித்தே அதிகம் இன்றைய பொழுதுகளில் நான் யோசிக்கின்றேன். முதலீட்டிய அரசுகள்/பெரு நிறுவனங்கள் என்பவை மிக நுட்பமாக நமது உழைப்பைச் சுரண்டுவதோடு அந்த வலையிலிருந்து வெளிவராமல் நம்மால்...

இன்னும் தீராச்சோகம்

Wednesday, May 09, 2018

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவரோடு கதைத்துக்கொண்டிருந்தபோது, அவர் வெளிநாட்டுக்குப் புறப்பட்ட பயணம் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். பல்வேறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள்ளால் உரிய ஆவணங்களின்றி அது நிகழ்ந்திருந்தது. ஒருமுறை ரஷ்யா எல்லையிற்குப் போய், தனியொருவராக போலந்து எல்லைக்குள் உள்ளூர்வாசியின் உதவியுடன் கடந்திருக்கின்றார். அவருடைய கெட்டகாலம். எல்லை பாயும் இடத்தில் இராணுவம் பதுங்கியிருந்திருக்கின்றது. வழமைபோல அவர்களின் கடமையைச் செவ்வனே...

ஈழ இலக்கியம் குறித்த எதிர்வினை

Tuesday, May 08, 2018

எப்போதும் உரையாடல்கள் அவசியமானவை. அதுவும் பாடசாலையில் தமிழ் கற்பித்த ஆசிரியரோடு விவாதிப்பது என்பது இன்னும் சுவாரசியமானதுதான் அல்லவா? (1) நமது ஈழத்து/புலம்பெயர் சூழல் ஏன் நம் முன்னோர்களைக் கைவிட்டதென்பதை அறிவதற்கு சில வரலாற்றுக் காரணங்களைக் கவனிக்காமல் நகரமுடியாது. முக்கியமானது நமது 30 வருடகால ஆயுதப்போராட்ட வரலாறு. உயிர் தப்புவதே பெரும் விடயமாக இருக்கும்போது, இலக்கியம்/வாசிப்பென்பது  பெருமளவு நிகழாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த...

பட்டியல்..

Tuesday, May 08, 2018

பட்டியல் இடுவது என்பது ஒரு வாசகருக்கு, தான் வாசித்ததை/பார்த்ததை/அனுபவித்ததைப் பகிர்வதற்குரிய உரிய விடயமே தவிர, படைப்பவர்க்கு அது பெரிதாக எதையும் தந்துவிடப்போவதில்லை (அவ்வாறே விருதுகளும் எனக் கொள்க). சிறுபத்திரிகைச் சூழலில் இருந்து வந்தவர்கள் அல்லது அதன் மீது ஒரளவு மதிப்பிருப்பவர்கள் இப்போது விகடனிலோ அல்லது இந்துவிலோ தம் பெயர்களைப் பார்த்து புளங்காகிதம் அடைவதில் அப்படி என்ன இருக்கிறதென யோசித்துப் பார்க்கின்றேன். இப்போது எழுதுவதற்கு எத்தனையோ...

எழுதி அனுப்பாத கடிதம்

Monday, May 07, 2018

'காலம்' ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு, தாங்கள் எழுதிவரும் 'பாரிஸ் அனுபவங்களை' நாம் தொடர்ந்து வாசித்து வருகின்றோம். அண்மையில் பொன்மலர் அன்ரி (உங்களுக்கு அக்கா என்றால், எமக்கு அன்ரிதானே) அவர்கள் பற்றி எழுதிய பதிவில், அண்ணன் தம்பிமார் ஒன்றாய் பத்துபேரிருக்கும் ஒரே அப்பார்ட்மெண்டில் வசித்துவந்தாலும், நீலப்படம் ஓடும்போது அண்ணன் பார்க்கும்போது, தம்பி அறையில் இருக்கமாட்டான், அவ்வாறே தம்பி பார்க்கும்போது, அண்ணன் வெளியில் போய்விடுவான் என்று எழுதப்படாத...