{வியந்ததும், சிலிர்த்தும், திகைத்ததும் பற்றிய சில குறிப்புக்கள்}
(1)
சிறுவயதில் வாசித்த புத்தகங்களிலிருந்து தமிழகத்து நகரங்களும், தெருக்களும் எனக்குள் ஒரு பெருமரமாய் வேர்களைப்பரப்பியபடி இருந்தன. அவை, எனக்கு அருகிலிருந்த ஈழத்தின் ஒழுங்கைளையும், ஊர்களையும் விட மிகவும் பரீட்சயமாயிருந்தன. ஈழத்தின் அழகான பிரதேசங்களான கடலோரங்களையும், மலை சார்ந்த இடங்களையும் பார்ப்பதையும்...
I'M ARMED AND I'M EQUAL
In இசைWednesday, March 23, 2005
{Arular By M.I.A}
இந்தப்பொழுதில், இசையின் தூறல் மெலியதாய் கணணியில் கசிந்தபடியிருக்கின்றது. Metalic குரலும்,அற்புதமான beatsம் இணைந்த *மாயா அருட்பிரகாசத்தின் (a.k.a M.I.A) 'அருளர்' இசைத்தட்டு இதமாய் மனதை நனைக்க, இரவு இனிமையாக விரிக்கின்றது. போரால் பாதிக்கப்பட்டு, அகதியாய் அந்நியப்பட்டு, தனது சொந்தமண்ணைத் துறக்கவும் முடியாமல் அவதிப்படும் ஒரு பெண்ணின் வாழ்வு பின்னணியில்...
பன்னிரண்டாவது அரங்காடலும், Robotsம்
In அனுபவம், In திரைமொழிTuesday, March 15, 2005
ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் வாரநாள்களில், ஒரு இனிய கனவைப்போல வாரயிறுதி நாள்களை எனக்குள் வளர்த்தபடியிருப்பேன். உறங்குவதைப் போன்ற நிம்மதியான, பிறருக்கு தொந்தரவில்லாத விசயத்திற்கே நான் முன்னிடம் கொடுப்பவன் என்றபோதும் சிலவேளைகளில் அதையும் மீறி வேறு சில விடயங்களை வாரயிறுதிகளில் அதிசயமாய் செய்துவிடுவதுண்டு. ஒவ்வொரு வாரவிறுதி நாள்களும் முடிந்தபின், மிகவும் சோம்பலாய்...
மோட்டார் சைக்கிள் டயரிகளை முன்வைத்து...
In திரைமொழிMonday, March 07, 2005
"திரு உருவைக் கலைத்துப்பார்க்கும்போது சே இன்னும் அழகாகத் தெரிகிறார். மனிதம் மிக அழகானது. அது ரத்தமும் சதையுமானது. திரு உருவாக்குதல் மனிதத்தைச் சிலையாக்குவது. அதிலிருந்து ஈரப்பசையை அகற்றுவது. வியந்து திகைப்பதைக் காட்டிலும் விமர்சித்துப் புரிய முயற்சிப்பதும் நமது புரிய இயலாமையை நாம் புரிந்து கொள்வதுமே இன்றைய தேவை. "
-அ.மார்க்ஸ் (பெப்ரவரி உயிர்மையில்)
(1)
சில...
'உயிர்நிழல்' கலைச்செல்வன் மறைவு
In நிகழ்வுSaturday, March 05, 2005
திரு.கலைச்செல்வன் மாரடைப்பாற் காலமாகிவிட்டார்.
இவர் எக்ஸ்சில் சஞ்சிகை ஆசிரியர். அவருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்
-ப.வி.ஸ்ரீரங்கன்
............................................
கலைச்செல்வனின் இழப்பு மிகவும் துயரமானது. உயிர்நிழலில் ஆசிரியரான பின்னர் எழுதுவதைக்குறைத்துக்கொண்டாலும், பிரான்சிலிருந்த காத்திரமான இலக்கியவாதிகளில் இவரும் ஒருவர். உயிர்நிழலில் ஆசிரியராக இருந்த சமயம் கனடா வந்தபோது திருமாவளவனின் (கவிஞர் திருமாவளவனின் தம்பி, கலைச்செல்வன்)...
Subscribe to:
Posts (Atom)