கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சூரியகாந்திப்பூ குறிப்புகள்

Monday, January 29, 2018

கட்சிக்காரன் இமையத்தின் அண்மைக்காலக் கதைகள் என்னை அவ்வளவாய்க் கவர்ந்ததில்லை. பலரால் விதந்தோந்தப்பட்ட இமையத்தின் நாவலான 'எங் கதெ' பற்றி வேறுவிதமான பார்வை இருக்கின்றதென்பதை ஏற்கனவே பதிவு செய்திருக்கின்றேன். அதைவிட விகடனில் என்றாவது ஒருநாள் நல்லதொரு கதை வெளிவந்துவிடுமா என தொடர்ந்து பார்த்தபடியிருப்பேன். வெளியில் நன்றாக எழுதும் படைப்பாளிகள் கூட விகடனில் எழுதும்போது...

ஒரு வாசகர் கடிதம்

Sunday, January 28, 2018

அன்பின் இளங்கோ, தங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிப்பகத்தாரிடமிருந்து வாங்கினேன். சென்ற ஞாயிறு அந்த சிற்றிதழ் கிடைக்கப்பெற்றேன். வடிவம் புதுமாதிரியாக கொஞ்சம் அகலம் அதிகமாக பாடபுத்தகம் போலிருந்தது வசீகரித்தது, உள்ளடக்கங்கள் எல்லாமே அருமை எனினும் தங்களின் துவக்க கட்டுரை ஒரு பிரியமான கவிதையை வாசிக்கும் உணர்வையும், தொட்டிச்செடியின் முதல் மலரொன்று அளிக்கும் குதூகலத்தையும் மகிழ்வையும் தந்தது, எனவே உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். நிச்சயம்...

பேயாய் உழலும் சிறுமனமே - கொழும்பு

Saturday, January 27, 2018

...

மஹாகவியின் 'பொருள் நூறு'

Saturday, January 27, 2018

மஹாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பாக்கள் மிகவும் கவனத்தைப் பெற்றவை. அன்றைய காலத்தில் குறும்பாக்கள் நிறைய எழுதி பிரசுரமாவதற்குத் தயாராக இருந்த நிலையில், இன்னொரு வகைமையான 'பொருள் நூறு' என்ற பெயரிலும் மஹாகவி எழுதி வைத்திருந்ததாக எஸ்.பொ இந்நூலின் முன்னீட்டில் கூறுகின்றார். 'குறும்பா' அன்றைய காலத்தில் பிரசுரமானபோதும், ஏதோ ஒருவகையில் 'பொருள் நூறின்' கையெழுத்துப்...

ஹருகி முரகாமியின் Tsukuru Tazaki யும், நானும்

Friday, January 26, 2018

ஹருகி முரகாமியின் 'Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage' நாவலில் பதின்மங்களில் ஐந்து நண்பர்கள் மிக நெருக்கமாக இருப்பார்கள். ஒவ்வொருவரின் பெயர்களும் நீலம், சிவப்பு, கறுப்பு, வெள்ளை என தொடர்புடையதாக இருக்கும். முக்கியபாத்திரமான Tsukuru மட்டும் எவ்வித நிறத்தோடும் தொடர்பில்லாத பெயரோடு இருப்பார். எனவே பிற நண்பர்கள் Tsukuruஐ, நீ நிறமற்றவன் எனக் கேலி...

ஜெயமோகனிற்கான ஓர் எதிர்வினை

Friday, January 26, 2018

இதற்கு முன்பான பதிவுகள்  (1) மதிப்பீடுகளின் வீழ்ச்சி (2) மதிப்பீடுகளின் வீழ்ச்சியிற்கான ஜெயமோகனின் எதிர்வினை ஜெயமோகன் எனக்கெனக் கூறும் சில விடயங்கள் முக்கியமானவை. அதுவும் ஒரு படைப்பாளியாக இருந்து கொண்டு அவர் வைக்கும் விமர்சனம் எனக்கும் உவப்பானவை. அந்தவகையில்தான் எனக்கு எஸ்.பொவும், மு.தளையசிங்கமும் முக்கியமானவர்கள். படைப்பாளிகளாய் இருந்துகொண்டு அந்த மனோநிலை ஊடறுத்துச் செல்லும் விமர்சனத்தையே நானும் அதிகம் கவனத்தில் கொள்கின்றவன். நிற்க. ஜெயமோகன்...

மதிப்பீடுகளின் வீழ்ச்சியிற்கான ஜெயமோகனின் எதிர்வினை

Wednesday, January 24, 2018

இப்போதைக்கு இந்த விவாதத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை. இது தொடர்ந்துசென்று நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் விஷயங்கள் மீதான கவனத்தைக் கலைத்துவிடுமென நினைக்கிறேன். விமர்சனங்களுடன்தான் நான் ஒவ்வொருவரையும் அணுகுகிறேன். இளங்கோ [டி செ தமிழன்] உட்பட இலங்கையில் எந்தப்படைப்பாளி முக்கியமான கதைகளை எழுதினாலும் உடனடியாக அடையாளப்படுத்துகிறேன். இன்றைய சூழலில் சயந்தன், அகிலன், அனோஜன் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் அளவுக்குத் தீவிரமாக தமிழகத்தில்இளையோர்...

மதிப்பீடுகளின் வீழ்ச்சி

Monday, January 22, 2018

நண்பரொருவரின் (அனோஜன்) முகநூல் பக்கத்தினூடு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது (2017) உரையைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. ஜெயமோகன் இயல்பாய் இல்லாததுபோல அவரது உடல்மொழி பேச்சில் இருந்தது. எனக்குத் தெரிந்த ஜெமோ வழமையாக இப்படி அவ்வளவு நாடகீயத்தனத்தோடு உரையாற்றுபவரில்லை. சிலவேளை சினிமாப் பிசாசு அவரை இன்றைய காலங்களில் விழுங்கிக்கொண்டு இருக்கின்றதோ தெரியாது. இலங்கைப் பாஷை பேசுகின்றேன் என்று எங்கள் தமிழை இப்படிக் கொன்றிருக்கவும் தேவையில்லை....

Youth

Sunday, January 21, 2018

சுவிஸின் அல்ப்ஸ் மலையினருகில்  ஆடம்பர வசதிகளுடம் இருக்கும் ஹொட்டலில் இத்திரைப்படத்தின் கதை முழுதும் நிகழ்கிறது. ஒருகாலத்தில் பிரசித்தி பெற்றிருந்த இசையமைப்பாளர்,  இப்போது இசையிலிருந்து முற்றாக ஓய்வெடுத்துவிட்டு இருக்கின்றார். அவரை ஒரு நிகழ்வில், அவரது பிரசித்தி பெற்ற பாடலை  இசைக்கவேண்டுமென இங்கிலாந்து மகாராணி வேண்டிக் கேட்டும் மறுத்துவிடுகின்றார்....

Cézanne and I

Wednesday, January 17, 2018

பாரிஸில் Musée d'Orsay சென்றபோது அதன் முன்றலில் பால் ஸிஸானின் 'Boy in the Red Vest' வரவேற்றுக்கொண்டிருந்தது. உள்ளே ஸிஸான் வரைந்த மனித உருவங்களின் கண்காட்சி போய்க்கொண்டிருந்தது. பிக்காஸோவினால், ஓவியம் வரைவதில் 'எங்களுக்கெல்லாம் தந்தையைப் போன்றவர்' என்றும், 'எனது ஒரேயொரு குரு அவரே' என்றும் ஸிஸான் மனதாரப் புகழாராம் சூட்டப்பட்டவருமாவார். ஸிஸான் நூற்றுக்கணக்கான...

இலங்கைக் குறிப்புகள் - 03

Monday, January 15, 2018

1. நானும், ஹஸீனும் அக்கரைப்பற்றிலிருந்து எஸ்.எல்.எம். ஹனீபாவைப் பார்ப்பதற்கு பஸ்ஸில் ஏறினோம். இடையில் விபுலானந்தர் அழகியல் கல்லூரியில் ஜெய்சங்கரைச் சந்திப்பதென்றும் தீர்மானித்திருந்தோம். எனினும் இன்னொரு நண்பரைச் சுகம் விசாரித்துவிட்டு பஸ் ஏறவேண்டியதால், ஜெய்சங்கரோடு சந்திப்பதற்கான நேரத்தைத் தவறவிட்டிருந்தோம். இடையில் காத்தான்குடியில் இறங்கி மதியவுணவைச் சாப்பிட்டுவிட்டு...