கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'ம்'

Friday, January 21, 2005

நாவலிருந்து சில பகுதிகள்

"...இனி நான் எழுதப்போவதைப் படிக்கும்போது நீங்கள் சலிப்படையக்கூடும். சாவை வாசிப்பதால் நீங்கள் சலிப்படைகின்றீர்கள். நீங்கள் புத்தகத்தைத் தூக்கி வீசுவதாலோ இனி வரும் சில பக்கங்களை படிக்காமல் தள்ளிவிடுவதாலோ ஒரு காலத்தைக் கடந்து விடமுடியுமென்று நினைக்கின்றீர்களா? அந்தக்காலத்தில் திரும்பவும் திரும்பவும் 'ஜெயவாவோ' முழக்கம் எங்களைச் சூழ்ந்து எழுந்தது. சிங்களத்தில் வெறிக்கூச்சல் வெலிகட முழுவதும் பரவிற்று.

நீளமான விசில்கள் சாவை ஒலித்தன. வெள்ளை நிறத்தில் 'ப்ப்ளின்' துணியில் முழங்கால்களை முட்டும் முழங்கால்களை முட்டும் காற்சட்டைகளும் மேற்சட்டைகளும் அணிந்திருந்த கைதிகள் வை.ஓ கட்டடத்தின் முகப்பிலிருந்த கம்பிகளால் பின்னப்பட்ட பிரதான கதவை உடைக்கத் தொடங்கினர். அவர்களில் முதலாவதாக சேபால ஏக்கநாயக்கா கோடரியால் கதவைக் கொத்தினான். வை.ஓ கட்டடத்தைச் சூழ்வும் சிங்கள்க் கைதிகள் சுவர்களில் தொற்றி ஏறினார்கள். அவர்கள் தங்களின் கைகளில் சசிறையின் கிடாரத்தில் சோறு கிளறும் இராட்சத அகப்பைகள், சிறைத் தச்சுத் தொழிற்சாலையில் இருந்து எடுக்கப்பட்டிருக்கக்கூடிய உளிகள், மரம் அரியும் வாட்கள் கோடரிகள் போன்றவற்றை வைத்திருந்தார்கள். எங்களின் சிறைக்கூண்டுகள் அதிரலாயின. ஜெயவோவா!
(ப 98-99)

"...அவர்கள் மேலும் சில 'செல்'களை உடைத்துவிட்டார்கள். ஒருவர்ன் ஒரு முழுக்கையை இரத்தம் சொட்ட சொட்ட, தரையில் இழுத்துச் சென்றான். நவரத்திணசிங்கம் வெட்டப்படுகிறார். ரொபேர்ட்டின் உடல் அவர்களால் அலவாங்கால் புரட்டிப் போடப்படுகிறது. 'சிவசுப்பிரமணியத்தையும் கொன்று விட்டார்கள்' என்ற அலறல் கேட்கிறது. ஓவ்வொரு கோடரி வீச்சுக்கும் ஒவ்வொரு உளிக்குத்துக்கும் ஒவ்வொரு அலவாங்கு அடிக்க்கும் ஒரு ஜெயவேவாச் சத்தம் எக்காளத்தோடு எழுகிறது.

சிறையின் தரை முழுதும் உதிரச் சகதி. அந்தச் சகதியில் கொலைக்காரர்கள் நடக்கவும் முடியாமல் ஓடவும் முடியாமல் திரும்பத் திரும்பக் கால்கள் வழுக்கி விழுந்தார்கள் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? அதை நான் என் கண்களால் கண்டேன். எங்கள் செல்லின் கதவை உடைக்க முயன்றவர்கள் இரத்தத்தில் நிற்கமுடியாமல் தடுமாறினார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தடுமாறி விழுகின்றார்கள்..."
(பக 95-96)

"....மாதா எங்கள் எல்லோரையும் பார்த்துச் சொன்னான். 'கிட்டு மாமாக்கு உங்களின் ஆட்கள் குண்டு வீசியிருக்கிறார்கள்' என்று மறுபடியும் பக்கிரியை எழுந்திருக்கச் சொன்னான். பக்கிரியின் முகம் விகாரமாய்க் கிடந்தது. அவரின் வாயில் நீர் வடிந்தது.

மாதா தன் கையிலிருந்த துப்பாக்கியை நீட்டி அதன் குழலால் பக்கிரியின் முகத்தைத் தொடப்போனான். பக்கிரி 'Fucking Weapons' என்று கூறியவாறே அந்தத் துப்பாக்கிக் குழலை தன் கையால் பற்றி மெல்ல புறத்தே தள்ளிவிட்டார். எங்கள் பதின்நான்கு பேரினதும் கண்களின் முன்னே எதிரே அன்று அவர்கள் பக்கிரியின் வாயைக் கைகளால் கிழித்தே அடித்தே பக்கிரியைக் கொலை செய்தார்கள்..."
(ப 158)

......
ரோசாவசந்த் இந்த நாவலிருந்து சிலபகுதிகளைப் பதிந்ததைப் பார்த்த ஆவலில் நானும் சிலதைப் பதிகின்றேன். பொடிச்சி, மு.மயூரன், வெங்கடேஷ் (சூனாமியிற்கு நன்றியை இன்னமும் எடுக்கவில்லையா? hrrrr) போன்றவர்கள் வாசித்த தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கின்றார்கள்.

1 comments:

Anonymous said...

நன்றி, வீச்சறுவாள். எனக்குக் கூட இந்தப்புத்தகம் ஒரு தோழி இரவல் தந்ததுதான்.

1/23/2005 01:20:00 AM