கடற்கரையில்கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவனாய்பிரியமாய் சேகரிக்கின்றேன்உனக்கான வார்த்தைகளைவார்த்தைகள் அனைத்தும்வன்முறையேறிஇரத்தமாய் வழிகின்றனஅல்லதுபோதையேறிபோலியாய் பல்லிளிக்கின்றனவலிக்கவும் செய்யாமல்வருடச்செய்யும் மென்மையுமில்லாமல்உன் திமிர்வுக்கேற்ற சொற்கள்தேடிபாலைவனத்தில் நடக்கத்தொடங்குகையில்நீ மணலிலும்நான் பனியிலும்எழுதி அழித்த வாக்கியங்கள்நட்சத்திரங்களாகின்றனவருடங்கள் கடந்துவாவிகள் தாண்டிஇலைகள்மஞ்சளும் சிவப்புமாய்உதிர்ந்துகொண்டிருக்கும்...
உடைந்த உரையாடல்கள்
In அனுபவம், In புனைவுThursday, December 22, 2005
'என்னப்பா உங்கடைபாட்டில முணுமுணுத்துக்கொண்டு என்னத்தை எழுதிக்கொண்டு இருக்கிறியள்?'
'ச் சா சா...என்ன எழுத்து நடையப்பா இவனுக்கு. இவனைப்போல எழுதோணும் என்று ஆசைப்பட்டு எழுதிப்பார்த்தால் அவனது எழுத்துக்கு பக்கத்தில் கூட எதுவும் வரமாட்டேன் என்கிறது.'
'இதைத்தானேயப்பா, நீர் கல்யாணங்கட்டினதிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கின்றீர். உந்த மண்ணாங்கட்டி வேலையை விட்டுவிட்டு, கூகிளிலை இருந்து எடுத்துப்போட்டு உம்மடை ஆக்கம் என்று பத்திரிக்கைக்கு அனுப்பிவிடும்.'
'கூகிளிலிருந்தா?...
In
கவிதைகள்
Tuesday, December 20, 2005
எதை எழுதினாலும்
போலியாக இருக்கிறது
அல்லது
போலிகளைப் பேசுவதே
கலகமாகிறது
'இராணுவம் கற்பழிக்கத்தான் செய்யும்'
அற்புத தரிசனங்கள் தருபவர்கள்
வரலாற்றை எழுதவும்,
பெண்களை
சிதைத்துச்செல்பவர்கள்
திசைகள் எங்குமலைந்து
அரசியல் பேசவும்
செய்யும் விசர்ப்பொழுதில்
எதைப் பேசினாலும் எடுபடாது
தோள்கள் தினவெடுத்தால்
கொன்று குவிக்கவும்
குறிகள் விறைத்தால்
புணர்ந்து களிக்கவும்
தமிழரென நாமமது
தரணியிலே கொண்டோம்
உமக்காய்.
கொல்லுங்களடா
கொல்லுங்களடா
வன்புணர்ந்துவிட்டு
கிணற்றிலும்...
வாசிப்பு
In வாசிப்புMonday, December 19, 2005

Baise-Moi (Rape Me)
ஒரு நாவலும், பார்க்காத படமும், வசீகரிக்கும் படைப்பாளியும்
'Baise-Moi', Despentes என்ற பிரெஞ்சுப் பெண்ணால் எழுதப்பட்ட நாவல். மனு(Manu) நடீன் (Nadine) என்ற இருபெண்களைச் சுற்றிக் கதை படர்கிறது. மனு, மிகவும் கொடூரமான முறையில் வன்புணரப்பட்டு வாழ்வதில் இழப்பதற்கும் பெறுவதற்கும் எதுவுமில்லை என்ற மனோநிலையில் இருக்கின்ற சமயத்தில், விலைமாதரும், நிகிலிஸ்டுமானான...
In
கவிதைகள்
Tuesday, December 13, 2005
எல்லா விம்பங்களும்
உடைய
இலையுதிர்த்த
மரங்களின் கிளைகளில்
தொங்கும்
உறைந்துபோன பனியாய்
இறுகுகின்றது மனது
ஒரு திசை முழுதும்
கண்ணாடி நிரப்பிய
அறையிலிருந்து
கதகதப்பாய் கம்பளி போர்த்தி
தெருவை இரசிக்கையில்
குளிரிலும்
ஒப்பனை கலைந்துவிடக்கூடாதென்ற அவதியில்
'வாடிக்கையாளர்' தேடும் பெண்களும்
வீடற்ற மனிதர்களும்
நீலநிறமாக்குகின்றனர்
எனது பொழுதை
எதிர்ப்புரத்து
தேவாலயத்தின் உச்சியிலிருந்து
பல்கணியில்
கரையொதுங்கிய புறாவின் சிறகுகள்
நினைவுபடுத்தும்
குளிராய்...
குளிரோடு வந்த ஞானம்
In கவிதைகள்Wednesday, December 07, 2005
நிர்வாண விடுதியில்
சுழன்றாடிய பெண்ணின்
அடக்கிவைத்த துயராய்
பொழிகிறது பெரும்பனி
விண்வெளிக்குச் செல்லும்
பயணியாய்
ஆடைகள் புனைந்து
குளிரில் உறைந்துகொண்டிருப்பவன் முன்
கண்ணாடிச்சில்லுகளாய் தெறிக்கும்
வாழ்வின் குரூர கணங்கள்
பப்பாசிப்பழத்தை
சீவும் இலகுவாய்
கொலை கொலையாய் விழுகிறதாம்
வல்லூறுகளும் இரைகவ்வ விரும்பும்
ஊரில்
மதியம்
சோறும் கத்தரிக்காய்க்குழம்பும் உண்டால்தான்
இரவுத்தூக்கம் வருமென்பதை
மறைத்து
பெருமிதப்படலாம்
ஒரு கனடீயத்தேசியனென்று
உடல்கள்...
லீனா மணிமேகலையின் 'பலிபீடம்'
In திரைமொழிThursday, December 01, 2005
பலிபீடமும், லீனா மணிமேகலை பற்றிய சில குறிப்புக்களும்
சில திரைப்படங்களைப் பார்க்கும்போது அதனோடு ஒன்றிப்போனாலும் படம் முடிந்தவுடன் இயல்புநிலைக்கு வந்துவிடமுடியும். சில படங்கள் குளத்தில் எறிந்த கல்லைப்போல படம் முடிந்தபின்னும் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும். ஒரு பொழுது இயலாமையும் அடுத்தகணம் கோபமுமாய் உணர்வுநிலைகள் மாற மாற, பார்த்து முடித்த ஆவணப்படம் 'பலிபீடம்'....
Subscribe to:
Posts (Atom)