- ஒவ்வொரு விவாதமும்அந்தக் கொலையில் மையங்கொள்ளும்அல்லதுமூச்சுத்திணறவைத்தபடி முற்றுப்பெறும்அதே கொலையில்.......- ஆணாதிக்கத்தைப் போலஎன்றும் வெறுப்பேன்உங்களின் மேலாதிக்கத்தையும்............- இரும்புக் கவசத்தால்கோதுமைமா அள்ளித்தந்தவர்பிறகுமண்டைகள் உடைத்ததையும்வீட்டினருகிலிருந்த முகாமிலிருந்துஅலறும் குரல்கள்நம் இரவுகள் தின்றதையும்மறந்தும்விடலாம்செம்மணிப் புதைகுழிபோல...........- புதைந்த குழியிலிருந்துஎலும்புக்கூடுகளை எடுத்தால்வெறுப்புத்தான் எஞ்சும்மனிதத்தை...
மூன்று படைப்பாளிகள்
In ஈழம்Wednesday, February 22, 2006

-வலைப்பக்க அறிமுகங்கள்-
(1)சனாதனன்
ஈழத்து இளந்தலைமுறை ஓவியர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒருவர்.ஓவியத்துக்கான பட்டப்படிப்பை புது டெல்லியிலுள்ள ஓவியக்கல்லூரி ஒன்றிலும் கற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். தற்சமயம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றார். வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் இவரது ஓவியங்கள் குறித்து விரிவாக கட்டுரைகளும்...
மலர்களும், 'மலர்களும்'
In அனுபவம்Tuesday, February 14, 2006
காதலர் தினம் என்றவுடன் எத்தனையோ நினைவுகள் ஞாபக அலைகளில் புரள்கின்றன. காதலர் தினம் என்பது 'காதலிப்பவர்க்கு' மட்டுமல்ல அன்பைப் பகிர விரும்பும் எந்த உறவுகளுக்கும் உரியது என்று விரிவான தளத்தில்தான் எடுத்துக்கொள்கின்றேன்.
இப்படித்தான் பலவருடங்களுக்கு முன், படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண்ணில் ஈர்ப்பு வந்து, கனக்க ரோசாப்பூக்கள் வாங்கி வைத்தபடி அவருக்குக் கொடுக்கக் காத்திருந்தேன். வாங்கி வைத்திருந்த ரோசாப்பூக்கள் அவரது வயதைவிட கூடுதலாக...
வளாக நாட்கள்
In அனுபவம்Thursday, February 02, 2006
இங்கே ring ceremony என்று ஒரு கொண்டாட்டம் பொறியியல் படித்து முடிப்பவர்களுக்கு வளாகங்களில் நடக்கும். கனடாவுக்கு மட்டுமே உரித்தான, தனித்துவமான விழா அது. அந்த நிகழ்வில், தவறுதலாய்க் கட்டி நொறுங்கிய ஒரு பாலத்தின் இரும்பிலிருந்து, மோதிரம் செய்து தருவார்கள். நீங்கள் அதை உங்களது சின்னவிரலில் அணிந்துகொள்ளலாம். இந்த நிகழ்வுக்காய் ரூட்யாட் கிப்ளிங்தான் (Rudyard Kipling) ஒரு பாடல் எழுதிக்கொடுத்திருக்கின்றார். விழா ஒரு மூடிய நிகழ்வாய், பொறியியல் படிக்கும்...
Subscribe to:
Posts (Atom)