"இலக்கியம் என்பதன் மூலம் கட்சி இலக்கியத்தை நான் கருதவில்லை. கட்சி இலக்கியத்தை அடியோடு வெறுக்கிறேன். கலை கலைக்காக என்ற வாதம் பிழையானது. ஆனால் அதைவிடப் பிழையானது கலை கட்சிக்காக என்ற வாதம். முன்னதில் கொஞ்சமாவது தனித்தன்மைக்கும் புதிய தத்துவங்கள் பிறப்பதற்கும் வசதி இருந்தது. பின்னதில் அந்த வசதி கொஞ்சமும் இல்லை. ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு! ஒரே ராகம்! எல்லாப் பிரச்சினையையும்...
'பிறத்தியாள்' தொகுப்பை முன்வைத்து...
In வாசிப்புFriday, December 10, 2010

1.
பானுபாரதியின் 'பிறத்தியாள்' தொகுப்பு. போர்க்காலச் சூழலில் உயிர்த்திருத்தலுக்கான தத்தளிப்பையும், புலம்பெயர் வாழ்வினது நெருக்கடிகளையும், அதிகம் கவனிக்காது புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் அகவுலகத்தையும் பேசுகின்றது. இத்தொகுப்பிலுள்ள 31 கவிதைகளில் அரைவாசிக் கவிதைகள் ஈழத்தில் இருந்தபோதும், மிகுதிக் கவிதைகள் புலம்பெயர் தேசத்திலிருந்தும்...
சிறகு வளர்ந்த குரல்களுடன் பறந்தவன்
In சிறுகதைWednesday, December 01, 2010

-இளங்கோ
1.
நீண்டகாலமாய் கவிழ்ந்திருந்த குளிர்காலம் மெல்ல மெல்ல விலக, குழந்தமைக்காலக் குதூகலத்தோடு சனங்கள் தெருக்களில் பெருந்திரளாய் நடமாடிக்கொண்டிருந்தார்கள். இவன் ஏழாவது மாடியிலிருந்து ரொறொண்டோவின் முக்கிய தெருக்கள் சந்திக்கும் டன்டாஸ் ஸ்குயரைப் பார்த்தபோது ஏதோ எறும்புக்கள் நிரை நிரையாக மறைவிடத்தை விட்டு வெளியே வருவதுபோல மனிதர்கள்...
மழைக்காலம்
In பத்திWednesday, October 20, 2010
(2006, சேகரம்)
மழையைச் சந்திக்கும் எப்போதும் நினைவில் வருவது இரண்டு விடயங்கள்தான். தடிமன் வந்துவிடுமோ என்ற பயமும், அவளைப் பறறிய நனவிடை தோய்தலும்தான். மழையை- காதலுடன், மனதை வருட வைக்கும் நினைவுகளுடன், துளித்துளியாய் மனதில் பொழியவைக்கும் எழுத்துக்களை எழுதாத படைப்பாளிகள் மிகக் குறைவே என்றாலும் மழைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஒழுகாத கூரையில்லாத வீட்டை உடையவர்களும், வீடற்று தெருவில் உறங்குபவர்களும் மழையுடன் வேறுவிதமான உறவுகளைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.
ஊரில்...
North Country (திரைப்படம்)
In திரைமொழிWednesday, October 20, 2010

(2006: சேகரத்திற்காய்...)
நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது.. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்கவேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியதுமாதிரி,...
Magic Seeds by V.S.Naipaul
In வாசிப்புTuesday, October 19, 2010

-நாவல் பற்றிய சில குறிப்புகள்-
(2006ல் எழுதியது, சேகரத்திற்காய்...)
(1)
மத்திய வயதிலிருக்கும் விலி சந்திரனின் (Willie Chandran) வாழ்க்கையின் ஒரு பகுதியை இந்நாவல் கூறுகின்றது. இந்தியாவில் பிறந்து படிப்பின் நிமித்தம் இங்கிலாந்து சென்று, அங்கே போர்த்துக்கேயப் பின்புலமுள்ள ஒரு பெண்ணைத் திருமணஞ் செய்து, பதினெட்டு வருடங்கள் ஆபிரிக்காக்கண்டத்தில் வசித்த விலி சந்திரன்,...
கம்பராமாயணம் படித்த கதை அல்லது புலம்பெயர் Fusion கதை
In சிறுகதைWednesday, August 18, 2010
சமர்ப்பணம்:
'விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.'
எனக் கம்பன் கண்ட பெண்டிர்க்கு...!
முன்னீடு
சென்ற மாதம் 'மழைக்குள் காடு' நிகழ்வில் கவிதைகள் பற்றிய ஓர் உரையாடல் நடைபெற்றிருந்தது. எனக்குப் பிரியமான செல்வம் புதிதாய்க் கவிதை எழுத வருகின்றவர்கள் கட்டாயம் கம்ப இராமாயணத்தை வாசிக்கவேண்டும்...
M.I.Aயின் 'மாயா'
In M.I.A, In இசைWednesday, July 21, 2010

-மாயா அருட்பிரகாசத்தின் 'மாயா' இசைத்தொகுப்பை முன்வைத்து-
'Did you like this?
They can rewrite History
But we can re write it back faster
We have speed on our hands'
-M.I.A
மாயா அருட்பிரகாசத்தின் (M.I.A) மூன்றாவது இசைத்தொகுப்பான 'மாயா' அண்மையில் வெளிவந்துள்ளது. ஏற்கனவே மாயாவின் 'அருளர்', 'கலா' போன்ற இசைத்தொகுப்புக்கள் வந்து அதிக கவனிப்பைப்...
Subscribe to:
Posts (Atom)