கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சண்முகம் சிவலிங்கத்தை நினைவுகொள்ளல்

Sunday, April 22, 2012

-அவரது கவிதைகளினூடாக- (1939-2012) இன்னுமொரு காடு பறக்கிறது இந்தக் காட்டையும் விட்டு பறவை புழு அரித்துப்போன இலை நுனி கறுத்துப்போன அரும்புகள் சாவட்டையாய் வதங்கி சலித்துப் போன நோய்த் தாவரங்கள் குச்சும் கம்புமாய் பரட்டை பற்றித் தெரிகிறது காடு மனவருத்தந்தான் குருவிக்கு எனினும் வாழ்வை மறுதலிக்க முடியவில்லை இன்னுமொரு காடு இன்னுமொரு காடு பறக்கிறது...

மூன்று தீவுகள் (இறுதிப்பகுதி)

Wednesday, April 18, 2012

(முதல் பகுதியிற்கு...) ரொப‌ர்ட் த‌ப்புவ‌த‌ற்கு க‌ச்சித‌மாய் ஒரு திட்ட‌த்தைத் தீட்டிவிட்டு, த‌ன‌க்கு ந‌ம்பிக்கைக்குரிய‌ சில‌ரைத் தேர்ந்தெடுத்துத் த‌க‌வ‌ல் அனுப்பியிருந்தார். சில‌ர் இங்கேயே நீண்ட‌கால‌ம் வாழ்ந்துவிட்ட‌தால், தாங்க‌ள் வ‌ந்த‌ நாட்டுக்குத் திரும்பிப்போகும் எண்ண‌த்தைக் கை கழுவியிருந்த‌ன‌ர். வில்லிய‌ம்ஸ் இங்கிருந்து த‌ப்பிப் போவ‌தா, இல்லை தொட‌ர்ந்து...

மூன்று தீவுகள்

Tuesday, April 17, 2012

சில‌ நிக‌ழ்வுக‌ள் த‌ற்செய‌லைப் போல‌த்தான் நிக‌ழ்கின்ற‌ன‌. ஆனால் அவ‌ற்றிற்கான‌ விளைவுக‌ளை அறிந்துகொள்ள‌ சில‌ச‌ம‌ய‌ம் ஆயுட்கால‌த்தையே விலை கொடுக்க‌வும் வேண்டியிருக்கும். பிரித்தானிய‌ அர‌சியின் ஆதிக்க‌த்திற்குட்ப‌ட்ட‌ நாடொன்றிலிருந்து அவ‌ர்க‌ள் ப‌ன்னிரெண்டுபேர் புற‌ப்ப‌ட்டார்க‌ள். ம‌ல‌பார் தேச‌த்தில் முளைத்தெழும் ஒவ்வொரு ம‌ர‌ஞ்செடியிலும் வாச‌னைத் திர‌விய‌ங்க‌ள்...

இலங்கையின் கொலைக்களங்களும், இன்னபிறவும்

Tuesday, April 10, 2012

இப்போது ‘இலங்கையின் கொலைக்களங்கள்; தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் (Sri Lanka, Killing Fields: War Crimes Unpunished)’இரண்டாவது பகுதியாக பிரித்தானியாவின் சனல்4ல் வெளிவந்திருக்கின்றது. முதலில் காண்பிக்கப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள் (Sri Lanka, Killing Fields) ஆவணப்படத்தைப் பார்க்காததைப் போலவே இந்த இரண்டாம் பகுதியையும் பார்க்கவில்லை. அதற்கான மனோதிடம் என்னிடமில்லை...

ரெயின்

Monday, April 02, 2012

ஒளியைச் சுருட்டியபடி விரையும் ரெயினின் இழுபடும் பெட்டிகளில் வாழ்வு ஓலமிடுகிறது ஒரு ரூபாய் நாணயத்தை தண்டவாளத்தில் வைத்துவிட்டு புளியம்பூவை சுவைத்து நின்ற நாட்களும் பிறகு ரெயினே வராத நிராதரவான தண்டவாளங்களில் சிலிப்பர் கட்டை பெயர்த்து பங்கர்கள் சமைத்தபோதுகளில் நம் கண்களின் முன்னே ரெயினொரு வரலாற்றுப் பொருளாகிக் கடந்துபோனது. நின்று நிதானித்து ஏறிப் பயணிக்கவோ விடுப்புப் பார்க்கவோ எந்த இரெயினும் பிறகு வாய்த்ததுமில்லை கடந்த காலங்களின் முன் மண்டியிடும்போது வந்துசேரும்...