
-அவரது கவிதைகளினூடாக-
(1939-2012)
இன்னுமொரு காடு
பறக்கிறது
இந்தக் காட்டையும் விட்டு
பறவை
புழு அரித்துப்போன இலை
நுனி கறுத்துப்போன அரும்புகள்
சாவட்டையாய் வதங்கி
சலித்துப் போன
நோய்த் தாவரங்கள்
குச்சும் கம்புமாய்
பரட்டை பற்றித் தெரிகிறது காடு
மனவருத்தந்தான் குருவிக்கு
எனினும்
வாழ்வை மறுதலிக்க முடியவில்லை
இன்னுமொரு காடு
இன்னுமொரு காடு
பறக்கிறது...