கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அசுரன், ஆனால் அதைமட்டும் பற்றியதல்ல..

Thursday, April 23, 2020

அமேஸன் பிரைமில் 'அசுரன்' வந்துவிட்டது என்பதறிந்து நேற்று நள்ளிரவிலேயே பார்க்கத் தொடங்கினேன்.. இதுவரை இதுகுறித்து நிறைய விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை வாசிக்காமலே தவிர்த்திருந்தேன். எனக்கான பார்வையை நானே உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காய் திரைப்பட விடயங்களில் நான் இவ்வாறு அடிக்கடி செய்வதுதான். அசுரனில் தனுஷின் நடிப்புப் பற்றியும், வெற்றிமாறனின்...

எல்ல (Ella)

Wednesday, April 22, 2020

எல்லவிற்கு (Ella) இரெயினில் போவதென்றால், பல மாதங்களுக்கு முன்னரே பதிவுசெய்ய வேண்டும். என்றாலும் கடைசிநேரத்தில் அடித்துப் பிடித்து கெஞ்சிப்பார்த்ததில் மூன்றாம் வகுப்பில் இடங்கிடைத்தது. கொழும்பிலிருந்து எல்லவிற்கான பயணம் 9 மணித்தியாலங்களுக்கு நீளக்கூடியது. இலங்கையில் இருக்கும் இரெயின் பாதைகளில் மிக அழகானது, இந்தப் பயணத்தடம் எனச் சொல்லப்படுகின்றது. விடிகாலை ஆறுமணிக்கு...

பத்து வருட நாடோடி வாழ்க்கை

Sunday, April 19, 2020

பயணங்கள் ஒருவகையில் வாழ்க்கை குறித்து புத்தர் கூறியதுமாதிரித்தான். அவரவர் அவரவர்க்கான பாதைகளை கண்டுபிடிக்கவேண்டும், பிறரைப் பின்பற்றக் கூடாது என்பது.  மத்தியூவின் (Matt) 'பத்துவருடங்கள் ஒரு நாடோடி' என்கின்ற இந்த நூலும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இருபதுகளில் இருந்த மத்தியூஸ் 2003ல் முதன்முதலாக தனித்து அமெரிக்காவிலிருந்து கோஸ்டா ரிக்காவுக்குப் பயணிக்கின்றார்....

எனதில்லாத எனது ஊர் - ‍ யாழ்ப்பாணம்

Saturday, April 18, 2020

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும்போது காலை ரெயினை எடுத்திருந்தேன். நேரத்தை சிக்கனமாகப் பாவிக்கவேண்டுமாயின் இரவு பஸ்ஸெடுக்கலாம். ஆனால் இலங்கைக்கு எப்போதாவது செல்லும் எனக்கு பயணக்காட்சிகளைத் தவறவிடுவதில் விருப்பமில்லை என்பதால் சற்று நீண்டதாயினும் ரெயினைத் தேர்ந்தெடுத்தேன். கொழும்பின் நெரிசல்களைக் கொஞ்சம் தாண்டிவிட்டால் அது ஒரு அழகான காட்சியாக விரியத்தொடங்கும். சூரியன் இன்னும் உதிக்காக விடிகாலையில் பனிப்புகார் மூடிய பசும் வெளிகளுக்குள்ளால்...

தமிழ்ச்சூழலில் எழுதுதல்..

Tuesday, April 14, 2020

இன்று புதிதாக எழுத வரும் பலருக்கு,  தமது படைப்புக்கள் பரவலாக வாசிக்கப்படவில்லை என்கின்ற கவலையும் சலிப்பும் இருக்கின்றது. ஒருவகையில் சமூக ஊடகங்கள் வந்ததன் பிறகு, எழுதப்படும் எல்லாமே உடனே கவனிக்கப்படவேண்டும் என்கின்ற பதற்றம் வருவதும் இயல்பானது. ஆனால் எழுத்துக்கு நேரடியான கருத்தைச் சொல்லும் வாசகர்களை விட, வாசித்துவிட்டு அதைப் பகிராமல் இருக்கும் மெளனமான வாசகர்களே...

மெக்ஸிக்கோ - ஆருர் பாஸ்கர்

Monday, April 13, 2020

மனித வாழ்வு என்பது பல உறவுகளின் சங்கமம். அந்த உறவுகள் தரும் அனுபவங்களின் வழியாகவே பெரும்பாலும் ஒருவன் இந்த உலகைப் புரிந்துகொள்கிறான். அந்த வகையில், காதலில் தொடர்ந்து தோல்விற்று துவண்டிருக்கும் ஒருவன் அழகிய இளம்பெண் ஒருத்தியின் ஊடாக தன் வாழ்வைப் புதிதாக நுகரும் அனுபவமே எழுத்தாளர் இளங்கோவின் (கனடா) 'மெக்ஸிகோ' நாவலாகி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நம் சமூகத்தில்...

பன்னீர்ப்பூ குறிப்புகள்

Tuesday, April 07, 2020

Vanni - Graphic Novel "வன்னி" என்னும் இந்த கிராபிக்ஸ் நாவல் கிட்டத்தட்ட 250 பக்கங்கள் வரை நீள்கின்றது. இதை எழுதிய பெஞ்சமின், 2004ல் சூனாமி இலங்கையைத் தாக்கிய சில நாட்களில், ஐ.நாவின் உதவி நிறுவனத்தினூடாக இலங்கைக்கு தொண்டாற்றப் போகின்றார். அது பிறகு ஐ.நாவின் உதவி நிறுவனங்களை இலங்கை அரசு வன்னிக்குள் இருந்து முற்றாக அகற்றும் மட்டும் (2008), கிட்டத்தட்ட 4 வருடங்கள்...