கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பன்னீர்ப்பூ குறிப்புகள்

Tuesday, April 07, 2020

Vanni - Graphic Novel

"வன்னி" என்னும் இந்த கிராபிக்ஸ் நாவல் கிட்டத்தட்ட 250 பக்கங்கள் வரை நீள்கின்றது. இதை எழுதிய பெஞ்சமின், 2004ல் சூனாமி இலங்கையைத் தாக்கிய சில நாட்களில், ஐ.நாவின் உதவி நிறுவனத்தினூடாக இலங்கைக்கு தொண்டாற்றப் போகின்றார். அது பிறகு ஐ.நாவின் உதவி நிறுவனங்களை இலங்கை அரசு வன்னிக்குள் இருந்து முற்றாக அகற்றும் மட்டும் (2008), கிட்டத்தட்ட 4 வருடங்கள் பெஞ்சமின் வன்னிக்குள் இருந்திருக்கின்றார்.

வன்னியிலிருந்த தமிழ் மக்களின் பிறந்தநாள்/திருமணவிழாக்கள்/செத்தவீடுகள் போன்ற அனைத்திற்கும் அழைத்து தன்னை அந்நியராக உணரச்செய்யாத வன்னி மக்களை அன்பை இந்தப் புத்தகத்தில் நன்றியுடன் பெஞ்சமின் நினைவுகூர்கின்றார். வன்னிக்குள் நின்ற இறுதிக்காலங்களில் இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சிலிருந்து தப்ப, பதுங்குகுழிக்குள் இருந்த நாட்களில் வாசித்த பாலஸ்தீனியம் பற்றியதும், யூதப் படுகொலை (Maus) பற்றியதுமான கிராபிக் நாவல்களே இதற்கு உந்துசக்தியெனச் சொல்கிறார்.

பெஞ்சமின் மீண்டும் நாடு திரும்பியபோது, போரை நேரடியாகப் பார்த்ததால் PTSD யினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். அவர் அப்படி பலவந்தமாக அனுப்பப்பட்டபோது ஒரு கட்டுரையை போர் நடந்த அன்றைய காலத்தில் அநாமதேயமாக எழுதியிருக்கின்றார். அதை 'இரண்டு இராணுவங்களுக்கு இடையில்' என்று நான் தமிழாக்கம் செய்திருக்கின்றேன்.

ழப் போரின் கொடூரத்தைப் பதிவு செய்யவேண்டுமென சிறு காமிக்ஸ் புத்தகமாக 40 பக்கங்கள் அளவில் செய்யப் புறப்பட்ட இந்தத் திட்டம், இப்போது கிட்டத்தட்ட 250 பக்கங்களில் கிராபிக்ஸ் நாவலாக விரிந்திருக்கின்றது. இதை முன்வைத்தே பெஞ்சமின் தனது மானிடவியலுக்கான PhDயையும் செய்திருக்கின்றார். இந்த நாவலுக்காய், வரைபடக் கலைஞரான லிண்ட்சேயுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்ப விரும்பியிருக்கின்றார். நாட்டின் நிலைமைகள் காரணமாக, 2012ல் இவர்கள் இருவரும் பின்னர் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கிருக்கும் அகதி மக்களோடும், பிறரோடும் கள ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர்.
மேலும் இங்கிலாந்திலும், சுவிஸிலும் போரில் தப்பிய ஈழத்தமிழர்களை இவர்கள் இது தொடர்பாய்ச் சந்திருக்கின்றனர்.

வன்னியில் இருந்த காலங்களில் தனக்கு நெருக்கமான நண்பரான அன்ரனியை இந்த நாவலின் முக்கிய பாத்திரமாக்கி பெஞ்சமின் எழுதுகின்றார்.. இந்த நூலை இறந்துபோன தனது நண்பர்களுக்கும், சக பணியாளர்களுக்கும், யுத்தத்தில் தப்பியவர்களுக்கும் சமர்ப்பித்திருக்கின்றார். இவர்களுக்கான அடிப்படை மனித உரிமைகளைக் கூட, இன்னும் அங்கீகரிக்காது தோல்வியுற்ற இந்த உலகத்துக்கும் சேர்த்து பெஞ்சமின் இதைக் காணிக்கை செய்திருக்கின்றார்.

Marriage Story

தகதப்பானவையாகவும் அழகானவையாகவும் இருப்பதனால்தான் மனிதர்கள் உறவுகளுக்குள் நுழைகின்றார்கள். விலகல் வரும்போது அவை உக்கிரமானவையாகவும், வெறுப்பிற்குரியவையாகவும் பலவேளைகளில் மாறிவிடுகின்றன. பிரிதல் நிகழ்தல் உறுதி என்கின்ற நிலையில் வருகின்ற நெகிழ்வான கணங்களை அதன் அந்தரங்கமான நினைவுகளோடு பதிவு செய்கிறது இந்தத் திரைப்படம்.

உறவொன்று நிலைத்து நிற்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் சமரசம் செய்வது என்பது முக்கிய நிபந்தனையாக இருக்கின்றது. யார் யாருக்காய்ச் சமரசம் செய்கின்றார்கள் என்பது காதலின் திளைப்பில் தெரியவில்லை. ஆனால் விலகல் வரும்போது அவை பட்டியலிடப்படுகின்றன. குற்றப் பத்திரிகை இடைவெளியில்லாது வாசிக்கப்படுகின்றன. அழகான அந்தரங்கமான தருணங்களினால் நிரம்பிய இருவர் பகிர்ந்த பொழுதுகளை, தனிப்பட்ட உறவுச்சிக்கல்களின் நிமித்தம் வக்கீல்கள் இன்னும் சிக்கலாக்கின்றனர்.

வெறுப்பு உமிழ்ந்து வார்த்தைகளைக் கொட்டியபின், முழந்தாளிட்டு அவள் கால்களை அணைத்து மன்னிப்பைக் கோருகின்றான் ஒருவன். இறுதியில் எல்லாமே கைநழுவிப் போனதன்பின், தூங்கிப்போன மகனைத் தோளில் தூக்கித் தனது வீட்டுக்குக் கொண்டுசெல்கையில் சற்றுப்பொறு என்று ஓடிவந்து அவன் காலணியின் கயிற்றைக் குனிந்து அக்கறையுடன் கட்டி அனுப்பிவைக்கின்றாள் அந்தப் பெண்.

இனி என்றென்றைக்குமாய்ச் சேர்ந்து வாழ்தல் இயலாதென்ற பேருண்மை விளங்கியபின்னும், நேசத்தின் துளிர்கள் பிரிதலின் மரத்திலிருந்து ஒவ்வொன்றாக அரும்பத் தொடங்குகின்றது. அதுவே ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டாது, அவர்களின் அழகான கடந்தகால காதலாகவும் மாறுகிறது.

Android Kunjappan Version 5.25

மது தமிழ்ச்சூழல் கோடிகளில் பணத்தைக் கொட்டி சிஜிஐ மூலம் எந்திரனும், 2.0 என்றும் முழுதாய் வேகாத கதைகளை அரைகுறையாய்த் தந்து கொண்டிருக்கும்போது, ரோபர்ட்டுகளோடு அதிகம் புழங்க இருக்கின்ற எதிர்காலத்தில் மனித உறவுகளும், உணர்வுகளும் அவற்றுடன் எப்படி இருக்குமென்று பரிட்சித்துப் பார்க்கும் படமாக 'ஆண்ட்ராய்டுஆண்ராய்ட்டு குஞ்சப்பன் V 5.25' இருக்கின்றது. தகப்பனுக்கும் மகனுக்குமான உறவு, மகன் தொலைவில் வேலை நிமித்தம் போகின்றபோது முதியவரைப் பராமரிக்கும் சிக்கல்கள், சாதி பார்க்கும் தகப்பன், சாதியாலே தன் இளமையில் காதலைத் துறக்கவேண்டிய துயரம், கேரளாவில் வலுவூன்றிய மார்க்ஸியத்தைக் காட்சிகளில் மறைக்காமல் முன்வைத்தல், அதன் மீதான விமர்சனம், சாதி பார்க்கும் தகப்பனையே இறுதியில் இன்னொரு நாட்டுப் பெண்ணை மகன் காதலியாக்குவதன் மூலம் சாதி/இன/நிற வேறுபாட்டைக் கடத்தல், கிராம மக்களின் அப்பாவித்தனம், திருட்டுத்தனம், விடுப்புப் பார்த்தல் என எல்லாவற்றையும் ரோபர்ட்டுடான உறவை முன்வைத்து இதில் பேசுகின்றனர்.

எந்திரன், 2.0, இடையில் சிஜிஐயில் பெரிதாகச் சாதித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நான் தியேட்டருக்குப் போய் 3Dயில் ரத்தக்கண்ணீர் வடித்துப் பார்த்த கோச்சடையான் எல்லாம் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும்போது இடைவெட்டிப் போயிருந்தது. கும்பளாங்கி நைட்ஸ், உயரே, ஜல்லிக்கட்டு போன்றவற்றிற்கு நிகராக வைக்கக்கூடிய படம் இது இல்லை என்றாலும், எளிமையான கதையினூடும் நமது உணர்வுகளுக்கு நெருக்கமாய் நின்று பேசமுடியும் என்பதற்கும், அந்நியக் கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை எப்படி ஒரு சமூகம் தனக்குரிய நிலப்பரப்புக்குரியதாகவும், பண்பாட்டுக்குரியதாகவும் மாற்றிக்கொள்கின்றது.

அதை இங்கே நகைச்சுவையாகச் சொல்வார்கள், ரோபர்ட்டுக்கு முண்டு கட்டிவிடுவது, குஞ்சப்பன் என்று பெயர் வைப்பது, இதுவரை காலமும் சாத்திரம் பார்க்காத தகப்பன் குஞ்சப்பனுக்கு சாத்திரம் பார்க்கப் போவது, குஞ்சப்பன் இந்து அல்ல எனக் கோயிலுக்குள் அனுமதிக்கமுடியாதென்கின்றபோது குஞ்சப்பன் நிகழ்த்தும் கூத்துக்கள் என்பதைப் பார்ப்பதற்காகவேனும் இதைத் தவறவிடக்கூடாது. நடிப்பில் ஷோபின் ஷகீரைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை, ஆனால் அவரையும் தாண்டி தகப்பனின் பாத்திரத்தில் சுராஜ் அவ்வளவு தத்ரூபமாக நடித்திருப்பார். 'தொண்டிமுதலும் திரிக்‌ஷக்‌ஷியுமிலும்' பார்த்த சுராஜா இது என்று நமக்கு வியப்பு வரும்.
...................................................

0 comments: