கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ - நிரோஜினி

Wednesday, November 25, 2020

தனித்து பயணிக்கும் ஒரு எழுத்தாளனின் பயணம் ஒவ்வொருவரை சந்திக்கும்போதும், வெவ்வேறு இடங்களுக்கு செல்லும்போதும் ஒரு கவிதையாய் அல்லது கதையாய் அவனுக்குள்ளே உருவாகி, சிலது அச்சிடப்படுகின்றன. பல நினைவுகளுக்குள்ளே நிரந்தரமாகிவிடுகின்றன.

சிலருக்கு வாழ்க்கை என்பது நல்ல கல்வி, தொழில், திருமணம், சொந்த வீடு, வாகனம் இன்னும் சிலருக்கு சில அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என்பதாக மட்டுமே சுருங்கி விடுகிறது. வெகு சிலருக்கு வாழ்க்கை கொண்டாட்டம், ஒரு முடிவில்லா பயணம், புதிய மனிதர்களை புதிய புத்தகங்கள் போலே படித்தறியும் ஆவல் கொண்டிருப்பர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உலகம், சிலது பறந்து விரிந்தும் மிகச் சிலது குறுகியதும் அந்தகாரம் நிறைந்ததுமாய். மெக்சிக்கோ நோக்கி செல்லும் இந்த பயணி புத்தகங்ளை தனக்கு கவசமாக பயன்படுத்திக்கொண்டு கடந்த காலத்திற்குள் தன்னை சிறைப்படுத்தியிருக்கும் ஒருவன், அவனது உலகை வெளியே நின்று பார்க்கும் ஒரு கொண்டாட்டக்காரி சில நாள் பயணத்தில், காதலில், மதுவும் முத்தமும் நிறைந்த கடற்கணங்களில் அவனை விடுவிக்க எத்தனிக்கிறாள். அவனும் எப்போதோ மறந்துபோயிருந்த அம்மாவின் புடவை வாசத்தினை இவள் அருகாமையில் உணர்கிறான்.

பெண் என்பவள் நிகழ்கணங்களில் வாழ்பவள். சமூகம் விதித்திருக்கும் இத்தனை கட்டுக்களும் தான் மீது சுமத்தப்பட்டிருந்தாலும், அவள் நதியைப்போலே நகர்ந்து செல்கிறாள். பூக்காடுகளில் பிரியப்பட்ட ஊதா பூவாய் மிளிர்கிறாள். இந்த ஆணின் மீது அவள் பரிதாபம் கொள்ளவில்லை, காதல் வயப்படுகிறாள். நிகழ்காலங்களில் அவனை நிதானிக்க வைக்கிறாள்.
மெக்ஸிக்கோ படித்து முடிக்கும் வரைக்கும் சுவாரசியம் குறையாத, ஆழ்மனதின் உணர்வுகளை தெளிவாக விபரித்திருக்கும் ஒரு பயணக்கதை. பயணங்களை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும், புதிய மனிதர்களை சந்திப்பதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் சிறந்த விருந்து.கிட்டத்தட்ட சுவாரசியம் குறையாமல் மெக்ஸிகோவின் அதிசயங்களை படித்தாயிற்று ஒருமுறை பயணப்பட்டு போனால் போதுமானது. ஏற்கனவே போனவர்கள் இந்த மெக்ஸிகோவினை படித்த பின் போகும் பயணம் வேறுபட்டதாயிருக்கும். யார் கண்டார் ஒரு அம்பராவையோ, ஒரு கிறுக்கு வாசகனையோ சந்திக்க நேரும். ஒரு நாவல் இத்தனை சிறிய மாற்றத்தையேனும் நிகழ்த்தாதிருப்பதில் நியாயமில்லை தானே
அம்பாரோ வுக்கும் அவள் காதலனுக்கும் அவனுக்குள்ளிருக்கும் அந்தக்குழந்தைக்கும் ஆயிரம் முத்தங்கள்.
..............

(Oct 15, 2020)

நன்றி: நிரோஜினி

0 comments: