கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அனுக் அருட்பிரகாசத்தின் 'A Passage North'

Friday, October 29, 2021

Iஎல்லாக் கதைகளும் எழுதப்பட்டுவிட்டதெனின், எந்தக் கதைகளைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஓர் விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை,  அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை  யாரேனும் எழுதப்போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகிவிடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பி எழுதிப்பார்த்ததால்தான் ...

அலெஜாந்திரோ ஸாம்பிராவின் புனைவுலகம்

Monday, October 25, 2021

1.சமகாலத்தில் அலெஜாந்திரோ ஸாம்பிரா (Alejandro Zambra) சிலியின் முக்கிய எழுத்தாளராக இருக்கின்றார். ஸாம்பிராவின் தலைமுறை என்பது சிலியில் பினோச்சோவின் சர்வாதிகாரம் முடிந்த தருவாயில் முகிழ்ந்த பரம்பரையாகும். ஆகவே கொடுங்காலத்தை நேரடியாக அனுபவிக்காதபோதும், தமது பெற்றோர், பேரர்களிடம் இருந்து அந்த இருண்டகாலத்தை அறிந்தவர்களாக ஸாம்பிரா போன்றவர்கள் இருக்கின்றார்கள். ...

சுகுமாரனின் 'பெருவலி'

Tuesday, October 12, 2021

சில படைப்புக்களை வாசிக்க வழமையை விட நிறையக் காலம் எடுக்கும். இன்னுஞ் சில தம்மை வாசிப்பதற்கான நேரம் இதுவல்லவென உதாசீனம் செய்யும். இவ்வாறு அருந்ததி ரோயின் The God of small thingsஐ பலமுறை வாசிக்கத் தொடங்கியும் முழுமையாக வாசித்து முடிக்காதிருக்கின்றேன். இன்னும் இதை வாசித்து முடிப்பதற்கான காலம் வரவில்லையென என்னை ஆறுதற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு பிரான்ஸிஸ்...

A Kind of Magic

Thursday, October 07, 2021

1.உங்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஓர் அற்புதம் நடந்தது. இயற்கையின் மீது வர்ணத்தை யாரோ விசிறியதுபோல, சட்டென்று நிறையப் பறவைகள் செம்மஞ்சளும், நீலமும், சாம்பலாகவும் தரையில் வந்திறங்கின. இவர்களோடு அறிமுகஞ் செய்யவேண்டும் என்ற ஆவலில் முயலார் அதேகணத்தில் பற்றைக்குள்ளிலிருந்து வந்துசேர்ந்தார். யாரோ ஒருவர் மாந்தீரிகக்கோலால் தட்டிவிட, இவையெல்லாம் நிகழ்வதுபோல நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.நானும்,...

ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி

Wednesday, October 06, 2021

ஹெமிங்வே ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதேவேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது.  இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருக்கின்றார். ஒருவர் தனது வாழ்ந்த காலத்திலேயே அவர்  இறந்துவிட்டதான அஞ்சலிக்குறிப்புக்களை வாசிக்க முடியுமா?...