கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சொற்கள் (The Words)

Tuesday, March 25, 2014

ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பை எழுதுவதை விட, அதைப் பிரசுரிக்க இன்னும் எவ்வளவோ கஷ்டப்படவேண்டியிருக்கிறது. தமிழ்ச்சூழலில் பதிப்பாளர்களைத் தேடுவது ஒருவிதமானதென்றால், ஆங்கிலச் சூழலில் அது வேறு வகையானது. பதிப்பாளர்களை மட்டுமில்லை, அந்தப் படைப்பிற்கான எடிட்டர், இடையிலான ஊடாடட்டங்களுக்கு ஏஜண்ட் என நிறையப் பேரைக் கொண்ட சிக்கலான உலகுதான் இது. ஆக, ஒருவர் நல்லதொரு படைப்பை எழுதிவிட்டால் கூட, உரிய பதிப்பகம் கிடைக்காதுவிடின் அப்படியே தன் படைப்பைக் கிடப்பில் போட்டு விடவேண்டியதுதான்.
'சொற்கள்' என்ற இந்தப் படம் எழுதுவதையே தன் விருப்பாகவும் தொழிலாகவும் கொண்ட ஒரு எழுத்தாளனைப் பின் தொடர்ந்து செல்கின்றது. நல்லதொரு நாவலை எழுதியிருந்தாலும், வித்தியாசமான எழுத்து நடையில் இருக்கிறது எனச் சில பதிப்பாளர்கள் கூறினாலும் அந்நாவலை வெளியிடத் தயக்கங் காட்டுகின்றார்கள். நாவலைப் பதிப்பிக்காமல் உரிய வருமானம் கிடைக்காது என்பதால் இந்த எழுத்தாளன் தன் தந்தையிடம் உதவி பெறுகிறார். அதேசமயம் இப்படியே நீ எழுத்தை நம்பி இனியுமிருக்கமுடியாது ஏதாவது வேலையைத் தேடு, இனி தன் உதவி கிடைக்காதென இறுதி எச்சரிக்கையும் தகப்பனால் கொடுக்கப்படுகின்றது.

துணை மட்டும் இந்த எழுத்தாளரைப் புரிந்துகொள்கின்றார். நாவலைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஒவ்வொருமுறையும் தோல்வியடையும்போது அவரை அரவணைத்து நம்பிக்கை கொடுக்கின்றார். இவ்வாறான ஒரு காலகட்டத்தில் பாரிஸில் ஒருகாலத்தில் antique கடையில் வாங்கிய பிரீவ்கேஸில் யாராலோ எழுதப்பட்ட ஒரு நாவலில் கையெழுத்துப் பிரதியை இந்த எழுத்தாளர் கண்டுபிடிக்கிறார். அது 2ம் உலகமகாயுத்தத்தில் சிக்குப்பட்ட ஒரு காதல் சோடியின் கதை. அதை வாசித்துவிட்டு அதன் பாதிப்பில் தனது புதிய நாவலைத் தட்டச்சு செய்ய முற்ப்படுகின்ற இந்த எழுத்தாளர், அந்த நாவல் கதைக்களனின் ஈர்ப்பில் அதை அப்படியே வரிக்கு வரிக்கு தட்டச்சு செய்கின்றார்.

தற்செயலாய் தட்டெழுத்துச் செய்யப்பட்ட இந்த நாவலை அவரது துணை வாசித்து, இந்த நாவலை இந்த எழுத்தாளரே எழுதினார் என நம்பி, அதைப் பதிப்பகத்திற்குக் கொடுக்க  உற்சாகப்படுத்துகின்றார். நடந்த உண்மையைச் சொல்ல, எழுத்தாளர் தன் துணைக்கு முயன்றாலும் -தான் எழுதிய முதல் நாவல் வெளிவராத சோர்வில் இந்த நாவலை எழுதவில்லை என்பதை எல்லோரிடமிருந்து மறைத்து-ஒருகட்டத்தில் இந்நாவலைப் பதிப்பாளரிடம் எடுத்துச் சென்று பதிப்பிகின்றார். இதன் பின் என்ன நிகழ்கின்றது என்பதே இத்திரைப்படம். ஒருவகையில் பெரும் புகழ் கொடுக்கும் இந்நாவலை, எப்படி தான் எழுதாத நாவல் என்ற குற்றவுணர்ச்சியுடன் எதிர்கொள்வதென்ற சிக்கலை இப்படம் அழகாய் முன்வைக்கின்றது. இதைவிட அந்த கையெழுத்துப் பிரதி எழுதியவரே உயிருடன் இருந்து இந்தப் படைப்பாளியைச் சந்தித்தால் எப்படியிருக்கும்?

நாவல், நாவலுக்குள் இன்னொரு நாவல், பிறகு இந்த நாவலுக்குள் இன்னொரு நாவலென மூன்று தளங்களில் இத்திரைப்படம் மிகுந்த சுவாரசியத்துடன் விரிகிறது. 'சொற்கள்' என்பது உண்மையிலே புகழ்ச்சியிற்குரியதா அல்லது சாபமா என ஒவ்வொரு பொழுதுகளிலும் நினைவுபடுத்தியபடி இருக்கிறது. இதுவரை அவ்வளவு ஈர்க்காத Bradley Cooper கூட இவ்வளவு அருமையாக நடிக்க முடியுமா என நினைக்க வைத்த ஒரு திரைப்படம். இறுதியில் இது fictionனா அல்லது auto-fictionனா என ஓர் இளம் பெண் வந்து உடைத்துப் போடுகின்ற இடத்தில் படம் முடிவது கூட சுவாரசியமானதுதான்.

0 comments: