
நண்பர் டிசே தமிழனின் (இளங்கோ) மெக்சிக்கோ நாவலை
நூலகங்களின் வழியே கடன்வாங்கிப் படித்தேன். பிரபஞ்சன் நினைவுப்பரிசு பெற்ற நூல்.
அவருடைய எழுத்தும் நடையும் வலைப்பதிவுகளின் வழியே அறிந்த ஒன்றுதான் என்றாலும்,
முழுநூலாய்ப் படிப்பது இதுவே முதன்முறை.
சிக்கலான கதைக்களம். அதனால் நடையும்
சொற்பாவனைகளும் சற்று அந்நியமாய் உணரச் செய்தது. தொராண்டொ, மெக்சிக்கோ, அமெரிக்கா...