கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காலம்-53வது இதழில் வந்த மூன்று கதைகள் குறித்து..

Tuesday, August 27, 2019


காலம் புதியஇதழ் (53) கையில் கிடைத்த அன்றிரவே அதில் வந்த கதைள் அனைத்தையும் வாசித்து முடித்திருந்தேன். செல்வத்தாருடன் கதைக்கும்போது அவன் கதை அனுப்பியிருக்கின்றான், இவன் கவிதை அனுப்பியிருக்கின்றான் என்று அவ்வப்போது என்னுடன் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருப்பார். ஆனால் பெண்களின் ஆக்கங்கள் எதுவும் வருதா என்ற விடயத்தை மட்டும் மறைத்துவிடுவார். இந்த இதழ் கிடைத்தவுடன் யாராவது பெண்கள் கதை எழுதியிருக்கின்றார்களா என ஆவலுடன் தேடிப் பார்த்தேன். அப்படியென்றால்தானே நானும் ஒரு பொய்ப்பெயருடன் அதைச் சிலாகித்து ஜெயமோகனின் தளத்துக்கு அனுப்ப முடியும்.

இந்தக் காலம் இதழில் ஷோபாசக்தி, அகரமுதல்வன், ஏஜே டானியல் கதைகளை எழுதியிருக்கின்றார். மூன்று பேருமே அளவுக்கு அதிகமாகப் பெண்களைப் பற்றி விசனப்பட்டிருக்கின்றார்கள். ஷோபாவும், ஏஜே டானியலும் பாலியல் தொழிலாளர்கள் பற்றியும், அகரமுதல்வன் திருமணமான பெண்ணுக்கு வரும் உறவு பற்றியும் கதை சொல்லியிருக்கின்றார்கள்.

ஷோபா இதுவரை எழுதிய கதைகளை வைத்துப் பார்க்கையில் இது ஒரு சாதாரண கதை.  கதையில் தொடக்கத்தில் வரும் 'மஞ்சள் அழகி'யை எங்கோ இந்தக் கதையைச் சொல்லும் பாத்திரம் சந்திக்கப் போகின்றது என்பது எங்களுக்கும் தொடக்கத்தில் விளங்கிவிடுகின்றது. அதற்காய் இவ்வளவு நீட்டி முழங்கிக் கதையைக் கொண்டு செல்லவேண்டுமா என்ற சலிப்பே கதையை முடிக்கும்போது வந்தது. இடைக்கிடையில் கதையின் 'நம்பகத்தன்மைக்கு' க்ரியா பதிப்பகம், பிரபஞ்சன், பிரபஞ்சனின் 'ஓரு ஊரில் இரு மனிதர்' தொகுப்பு பற்றிக் கொஞ்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஏஜே டானியல் இப்போதுதான் கதைகளை எழுதத் தொடங்கும் ஒருவர் என்பதால் அவருக்கு கொஞ்சம் இரக்கம் உண்டு.  இந்தவகையான விஸா இல்லாது பாரிஸில் வாழும் ஒருவனின் துயர கதைகள்ஏற்கனவே பலரால் சொல்லப்பட்டிருக்கின்றது என்பதால் அகவயமான தனிப்பட்ட அனுபவம் சார்ந்தஉணர்வால் வாசகரைத் தொடவதே இனியான கதைகளில் முக்கியமானது. அதைச் சொல்கின்ற ஒரு மொழி அவருக்குக் கதையின் அரைவாசிவரை வாய்த்துமிருக்கிறது. ரெயினின் சந்திக்கும் பெண்ணின் கருணையோடோ அல்லது அவரைப் போய் அவரின் வீட்டில் சந்திக்கின்றவரையோடோ கதையை முடித்திருக்கலாம். ஆகக்குறைந்தது பிகாலுக்கு கதையைச் சொல்கின்றவர் போவதோடு என்றாவது

ஏனெனில் பிகால் எதற்கு பிரபல்யம் வாய்ந்ததென்று நுட்பமான வாசகர் சொல்லாமலே புரிந்துகொள்வார். இன்னொன்று, ஒன்றோ அல்லது இரண்டோ வாக்கியங்களுடன் பந்திகளைப் பிரிக்காது தேவையானபோது பிரிக்கலாம். எஸ்.ராமகிருஷ்ணன் இப்படித்தான் பிற்கால நாவல்களை எழுதி வாசிப்பவர்க்கு எரிச்சலை கொண்டுவருகின்றவர்

'சாகாள்' என்று கதை எழுதியும், இந்துத்துவ சச்சிக்கு முண்டுகொடுத்தும் எங்களுக்கு அவ்வப்போது இரத்தக் கொதிப்பை வரச்செய்யும் அகரமுதல்வன், கொல்லப்படத் தேடப்பட்டவளும், அவளைக் கொல்லத் தேடுபவனும், இன்று போர் முடிந்து வாழப்போகின்றபோது தியாகி துரோகி என்று கெட்டவார்த்தைகளால் பேசுகின்றார் எனக் கவலைப்படுகின்றார்தியாகி X துரோகி என்ற துவிதநிலை அடையாளங்களைத் தாண்டி மனிதர்கள் மிகுந்த சிக்கலானவர்கள் என்கின்ற இந்த நிலைக்கு அவர்  வந்திருப்பதை முதலில் நாம் பாராட்டத்தான் வேண்டும். மோசமான கதைகளை அகரமுதல்வன் எழுதிக்கொண்டிருந்த காலத்தின் பின்னரும் அவரைத் தவிர்க்காது தொடர்ந்து வாசித்தற்கு அவருக்கு இருக்கும் கதைசொல்லும் திறமை ஒரு முக்கிய காரணம்

இப்படிக் கூறுவதால் இவை மூன்றும் மோசமான கதைகள் என்ற அர்த்தம் அல்ல. இன்றைய தமிழகப் பத்திரிகைகள்/சஞ்சிகைகளில் வரும் எத்தனையோ கதைகளை விட இவை மேலே உயர்ந்து ஆம்பலாகவே நிற்கின்றன. எனினும் கதை சொல்லலலில் வித்தியாசமானவை என்றோ, அண்மையில் வந்தவற்றில் முக்கியமானவை என்றோ அடையாளப்படுத்துகின்ற அளவுக்கு இவைஇல்லை என்றே சொல்வேன்.

இரண்டு கதைகள் பாலியல் தொழிலாளர்களையும், இன்னொரு கதை திருமணமான பெண்ணோடு வரும் பாலியல் உறவையும் தொட்டுச் செல்வதால், நமது தமிழ் ஆண்களுக்கு/கதை சொல்லிகளுக்கு இப்படி ஏன் பெண் உடல்கள் தொடர்ந்து தொந்தரவுபடுத்திக்கொண்டிருக்கின்றது என்றும் ஒரு யோசனை எனக்குள் ஓடியது. நமது காதலிகள்/துணைகள்/மனைவிகள் நம்மைச் சந்திக்கும்வரை 'கன்னி'களாக இருக்கவேண்டும் என்று காலங்காலமாகத் திணிக்கப்பட்டு வந்துவிட்ட விடயத்தை இன்றைய காலப் பெண்கள் எளிதாய் உடைத்துச் செல்ல, நம் எவராலும் அதைத் தாங்கிக்கொள்ள முடியாததும் ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ?

(Jun, 2019)

0 comments: