கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 49

Friday, October 11, 2024

ம்மாதம் நடைபெறவிருக்கும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை அவ்வளவாகப் பின் தொடர்வதில்லை. இலங்கையில் இருக்கும் (அக்கா குடும்பம்) மருமகளோடும், சில நண்பர்களோடும் இருந்து மட்டும் அவ்வப்போது சில தகவல்களை/களநிலவரங்களை அறிந்து கொள்வேன்.

 

இடதுசாரிகளென தம்மை அழைத்துக்கொள்ளும் ஜேவிபியினர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெல்லும் சாத்தியம் அதிகமெனச் சொல்கின்றார்கள். அது நடக்குமா, நடக்காதா, அவர்கள் உண்மையான இடதுசாரிகள்தானா என்ற விவாதங்களை ஒரு புறம் இப்போதைக்கு ஒதுக்கிவைப்போம். அவர்கள் சர்வ அதிகாரமுடைய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், மார்க்ஸின் வழியிலா, லெனினின் வழியிலா, ஸ்டாலினின் வழியிலா ஆட்சி செலுத்துவது என்பதை ஜேவிபியினரும் இலங்கை மக்களும் சேர்ந்து முடிவு செய்துகொள்ளட்டும்.

ஆனால் ஜேவிபியினர் வென்றால் அவர்களுக்கு இதுவரை வரலாற்றில் கிடைக்காத ஒரு அரிய சந்தர்ப்பம் வழங்கப்படும். அது அவர்கள் இலங்கை அரசியலை, முற்றுமுழுதாக இலங்கையின் அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தும் மகாநாயக்க தேரர்களிடமிருந்து விடுதலை செய்வதாகும்.

இலங்கையானது பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்றது தொடக்கம் இந்த மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் தேரர்களின் பாதிப்பிலிருந்து ஒருபோதும் தப்பி வந்ததில்லை. இலங்கையின் பிரதமர்களின் ஒருவரான SWRD பண்டாரநாயக்காவையே ( முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் தந்தையார்) புத்தபிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லுமளவுக்கு பிக்குகளின் ஆதிக்கம் 1950களிலிருந்தே இலங்கையில் இருக்கின்றது. இன்றைக்கும் இந்த பெளத்த பீடங்களுக்கு எதிராக எதையும் செய்ய எந்த இலங்கை ஜனாதிபதி/பிரதமர்களால் முடிந்ததில்லை.
 
ஆகவே மதத்தை நிராகரித்த மார்க்ஸினதும், 'மதம் ஒரு அபின்' என்று தெளிவாக வரையறுத்த லெனினதும் இடதுசாரிப் பின்னணியில் இருந்து வருகின்ற ஜேவிபியினர் ஜனாதிபதி தேர்தலில் வென்றால், 
அரசியலை மதத்தில் இருந்து விடுதலை செய்வார்களாயின், இலங்கையானது சிங்கள பெளத்த இனவாதத்திலிருந்து தப்பி, சிறுபான்மை இனங்களுக்கு மட்டுமில்லை சிங்களவர்க்கும் மூச்சுவிடக்கூடிய நிம்மதியான ஒரு புதிய அரசியல் களநிலவரத்தைத் தோற்றுவிக்கலாம்.

காலம் ஜேவிபினர்க்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை வழங்குகின்றதென்றால், இந்த இடதுசாரிகள் அரசியலை மதத்திலிருந்து பிரித்துக் கொண்டு செல்வார்களாயின் நாடு எதிர்காலத்தில் சுபீட்சமாவது மட்டுமில்லை, இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைச் சாதித்தவர்கள் எனவும் பதியப்படுவார்கள்.

செய்வார்களா? செய்ய அவர்களுக்கு அந்தளவுக்கு நெஞ்சுரமும், நேர்மையும் இருக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வி.


************


(Sept 08, 2024)

0 comments: