கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Gold - திரைப்படம்

Tuesday, December 26, 2017

தங்கத்தோடு மட்டுமில்லை, தங்கச் சுரங்கங்களோடும் மனிதர்கள் காலங்காலமாய் பகடையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஐரோப்பாக் கணடத்திலிருந்து தங்கம் மீதான பேராசையுடன் கொடுங்குளிரையும் பாராது, ஒரு பெரும் மக்கள் திரள் வட அமெரிக்காவிற்கு வந்திருந்தது கடந்தகால வரலாறு. Gold என்கின்ற இத்திரைப்படத்திலும் கனிமச்சுரங்களைக் கண்டுபிடிக்கும் ஒருவன் சொல்வான்: கொலம்பஸ் தன் நாட்டு இராணிக்கெழுதிய...

இலங்கைக் குறிப்புகள் - 02

Saturday, December 23, 2017

சட்டநாதனைச் சந்திப்பதென்று நாங்கள் முடிவெடுத்தது, நல்லூரிலிருந்த லிங்கம் கூல்பாரில் ஸ்பெஷல் ஐஸ்கிறீமையும், ரோல்ஸையும் சுவைத்துக்கொண்டிருந்த பொழுதில் என்றுதான் நினைக்கின்றேன். கூடவே கனடாவில் இருந்து வந்திருந்த நண்பர்கள் ரவிக்கும், போலுக்கும் சட்டநாதன் கல்வி கற்பித்த ஒரு ஆசிரியருமாவார். அந்த நேரத்தில் சட்டநாதனின் தொலைபேசி இலக்கம் எதுவும் எங்களிடம் இருக்கவில்லை....

பயணக்குறிப்புகள் - 18 (பெரு)

Sunday, December 17, 2017

Moray and Maras Cusco நகரிலிருந்து 50கிலோமீற்றர் தொலைவிலிருக்கின்றது Moray. இந்த வளையங்களான நிலப்பரப்பிற்கான காரணம் சரியாகத் தெரியாவிட்டாலும், சிலவேளைகளில் இன்காவினர் தங்களது பரிசோதனைப் பயிர்ச் செய்கைகளுக்காய்ப் பயன்படுத்தியிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதிலிருக்கும் இயற்கையின் விந்தையென்னவென்றால் மேலே இருந்து கீழே செல்லச் செல்ல வெப்பநிலை குறைந்துபோவது....

ஹேஸேயின் சித்தார்த்தாவை மேபிள் மரத்தடியில் சந்தித்தல்..

Saturday, December 16, 2017

(பயணக்குறிப்புகள் - 17) கோடையின் வெயில் மிதமாக இருந்தபொழுதில் நான் ஹேஸேயைத் தேடிப் போய்க்கொண்டிருந்தேன். பாதையோ ஏறியிறங்கியும் வளைந்தும் நதியொன்றை நோக்கி நீண்டபடியிருந்தது. கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னர் ஜேர்மன் மொழியில் எழுதப்பட்டுவிட்ட 'சித்தார்த்தா'வை, என்றோ ஒருநாள் வாசித்துவிட்டு இப்போது ஹேஸேயைத் தேடிப்போகும் மனதின் விந்தையை நினைந்து வியந்துகொண்டிருந்தேன். ஹேஸே...

Pedro Almodovarவின் Julieta

Thursday, December 14, 2017

எவராலும் எதையும் எழுதிவிடமுடியும் அல்லது காட்சிகளாய்த் திரைப்படமாக்கி விடமுடியும். ஆனால் பேசுவது எந்த விடயமாயினும் அதைக் கலையாக்கத் தெரிந்தவர்கள் மிக அரிதானவர்களே. கலை என்பதைத் தெளிவாக வரையறுப்பது கடினமென்றாலும், ஒருவகையில் பெரும் அமைதியையும், அதேவேளை மனதின் ஆழம்வரை சென்று தொடர்ந்து தொந்தரவுபடுத்தியபடி இருப்பதாகவும் அமைவதென ஒரு எளிமைக்காய்ச் சொல்லிக்கொள்கின்றேன். பெண்களின்...

வாசித்தலின் பேரின்பம்

Monday, December 11, 2017

1. நண்பர் இரவு தூக்கம் வரவில்லை, கதை எதையாவது வாசித்துக் காட்டு என்றபோது பிரேம்-ரமேஷின் மகாமுனியை விரித்து 'கனவில் பெய்த மழையைப் பற்றிய குறிப்புகள்' கதையை அவருக்காக வாசிக்கத் தொடங்கினேன். இன்னும் திருத்தமாகச் சொல்லவேண்டுமானால் கதையின் தலைப்பு 'ஜூலை 14, 1789 அன்று கனவில் பெய்த மழையைப் பற்றிய குறிப்புகள்'. நீண்ட இந்தக் கதையின் தலையங்கத்திலிருக்கும் நாளிலேயே பிரெஞ்சுப்...

இளங்கோவின் “பேயாய் உழலும் சிறுமனமே” -மைதிலி தயாநிதி

Wednesday, December 06, 2017

“பேயாய் உழலும் சிறுமனமே” என்று பாரதியின் பாடல் வரியினைத் தனது தலைப்பாக வரித்துக்கொண்ட இளங்கோவின் நூல் அகநாழிகை வாயிலாக 2016 செப்தெம்பரில்  வெளிவந்துள்ளது.  இது 2004 -2014 ஆண்டுகாலப் பகுதியில் பல்வேறு விடயங்கள் பற்றி எழுதப்பட்ட  30 கட்டுரைகளை  ஏறத்தாழ 185 பக்கங்களில்  உள்ளடக்கியிருக்கும் ஒரு கட்டுரைத்தொகுப்பாகும்.  அனுபவம், அலசல்,...

காற்று, மணல், நட்சத்திரங்கள்

Monday, December 04, 2017

"மனித இனத்தில் வெறுப்பு, நட்பு, மகிழ்ச்சி இவையெல்லாம் நிகழ்த்தப்படும் அரங்குதான் எவ்வளவு எளிதில் நொறுங்கக் கூடியதாக இருக்கிறது! இன்னும் வெதுவெதுப்பாக இருக்கும் எரிமலைக் குழம்பின் மேல் தற்செயலாக வந்து இறங்கி, இனி எதிர்கொள்ளவிருக்கும் பாலைகளும் பனிப்பொழிவுகளும் மிரட்டிக்கொண்டிருக்க, நிரந்தர வாழ்வின் சுவையை இந்த மனிதர்கள் எங்கிருந்து பெறுகின்றார்கள்? அவர்களுடைய...

இலங்கைக் குறிப்புகள் - 01

Saturday, December 02, 2017

சந்திப்பு 01 & 02 அ.யேசுராசாவின் படைப்புக்களைப் பற்றி நெடுங்காலத்திற்கு முன்னர் அறிந்திருந்தபோதும், அவரது 'குறிப்பேட்டிலிருந்து' என்கின்ற பத்தி எழுத்துக்களின் தொகுப்பு வெளிவந்தபோதுதான் முதன்முதலாக நாம் அறிமுகஞ்செய்து கொண்டிருக்கவேண்டும். கொழும்பிலிருந்து நண்பரொருவரினூடாக அவர் அந்த நூலை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். என்னைப் போன்ற நிறையப் பேர், எங்கள்...