கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பயணக்குறிப்புகள் - 18 (பெரு)

Sunday, December 17, 2017


Moray and Maras
Cusco நகரிலிருந்து 50கிலோமீற்றர் தொலைவிலிருக்கின்றது Moray. இந்த வளையங்களான நிலப்பரப்பிற்கான காரணம் சரியாகத் தெரியாவிட்டாலும், சிலவேளைகளில் இன்காவினர் தங்களது பரிசோதனைப் பயிர்ச் செய்கைகளுக்காய்ப் பயன்படுத்தியிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதிலிருக்கும் இயற்கையின் விந்தையென்னவென்றால் மேலே இருந்து கீழே செல்லச் செல்ல வெப்பநிலை குறைந்துபோவது. கிட்டத்தட்ட 15-20 டிகிரி செல்சியஸ் வித்தியாசப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குளிர்ச்சியாக இருந்ததையும் கீழே போகப் போக அதிக வெக்கையை நம்மாலும் உணரமுடிகின்றது.
இது எல்லாவற்றையும்விட மூன்று பெரிய வட்ட வடிவில் அமைக்கப்பட்ட வளையங்கள். இவ்வளவு நுட்பமாக வட்டங்களை அமைக்க எந்தவகையான தொழில்நுட்பத்தைப் புராதன காலத்தில் பயன்படுத்தியிருப்பார்கள் என்பது வியப்பாக இருந்தது. ஒரு வளையத்தில் இறந்த உடல்களைப் புதைப்பதற்காய்ப் பயன்படுத்தியிருப்பதாய்ச் சொல்லப்ப்படுகின்றது. இப்போதும் ஆங்காங்கே கற்களால் மூடப்பட்டிருக்கும் சில இடங்களைத் தொலைவிலிருந்து பார்க்கமுடிகின்றது.
Moray அருகிலிருப்பது Maras நகர். இங்கிருக்கும் உப்பளம் பிரபலயம் வாய்ந்தது. இன்காவினரின் காலத்திற்கு முன்னரே இது இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. முதன்முதலில் இவ்வளவு உயரத்தில் மலைகளுக்கிடையில் ஓர் உப்பளத்தைப் பார்த்தது வித்தியாசமான அனுபவம். 
அதைவிட இந்த உப்பளம் இயங்கும் முறை ஆச்சர்யமானது. இன்னமும் இன்கா வழிவந்த ஒரு சமூகத்திடம் இது இருக்கின்றது. இங்கு யாரும் தமக்குரிய உப்பளத்தைத் தொடங்கலாம். ஆனால் அந்தச் சமூகத்தோடு சேர்ந்து இருக்கவேண்டும். குடும்பம், பிள்ளைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து உப்பளப் பகுதி பிரித்துக்கொடுக்கப்படும். ஒருவித கொம்யூன் போன்று அவரவர் அங்கே வேலை செய்யவேண்டும் என்பது ஒரு விதி. இயற்கையான ஊற்றுக்களால் நீர் வந்து அதைத் தேக்கி வைத்து,வெவ்வேறு நிலைகளில் பிரித்து சாப்பாட்டிலிருந்து உடல் நோவு வரை பல்வேறு தேவைகளுக்காய் இங்கு விளையும் உப்பைப் பாவிக்கின்றார்கள்.

(Nov 21, 2015)

0 comments: