கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ - தேவகாந்தன்

Wednesday, November 30, 2022


2019 இல் வெளிவந்திருக்கிற இளங்கோவின் முதல் நாவல் 'மெக்ஸிக்கோ'. மெக்ஸிக்கோவுக்கான ஒரு பயண அனுபவத்தைப் பதிவிறக்குவதுபோல் தொடங்கும் இந் நாவல், அதீதமாய்த் தென்படினும், உண்மையில் அது பதிவிறக்குவது * நவீன வாழ்வின் ஒரு முகத்தைத்தான். தன்னிலை ஒருமைப் பாத்திரமான 'நான்', அவர் மெக்ஸிக்கோவில் சந்திக்கும் ‘அவள்’, ஏற்கெனவே அவர் ரொறன்ரொவில் அறிமுகமாகிப் பிரிந்த துஷி, இறுதியாக கதையில் அறிமுகமாகும் மனநல வைத்தியர் ஆகிய நான்குமே நாவலின் பிரதான பாத்திரங்கள். 'நா'னும் 'அவ'ளும் நிறையவே ஓவியம், கவிதை, படைப்பெனப் பலவும்பற்றி , மிகவும் அறிவுஜீவித்தனமாகப் பேசிக் கொள்கின்றார்கள், தாம் வாசகரிடத்தில் போலியாகிக் கொண்டிருப்பதான பிரக்ஞையின்றி.


இந் நாவல் இரண்டு வாசிப்பு முறைகளைச் சாத்தியமாக்குகிறது. ஒன்று, மெக்ஸிக்கோவிலும் கனடாவில் கிங்ஸ்டனிலும் களிநிலை கொண்டலையும் பாத்திரங்களில் அழுந்திவிடும் வாசிப்பு; அது ஒருவகை வாழ்க்கையை வாசகரிடத்தில் தரிசனமாக்கும். மற்றது, அந்த அறிந்தனபோல் தோன்றும் பாத்திரங்களை மறந்துவிட்டு, அவர்களது உரையாடல்கள் வழி விரியும் கட்டுப்பாடற்றதும் அறிவார்த்தமானதுமான தனிவாழ்க்கையையும் அகவுலக வெளியையும் கவனமாக்கும் வாசிப்பு. இவை வேறுவேறு வழிகளினூடான அனுபவங்களை வாசகருக்குத் தரவல்லவை.

2012 இல் வெளிவந்த குறமகளின் 'மிதுனம் ', கனடாவில் வயது முதிர்ந்தோர் வாழ்வில்லத்தில் தனியாய்த் தங்கும் இலங்கை மூதாட்டியின் தனித்துவமான கதையை ‘மெக்ஸிக்கோ' போல் எடுத்துரைக்கும் நூல்தான். ஆனால் 'மிதுனம்' கதையாய்த் தேங்கிப்போக, தனிவாழ்வின் நாவலாய் நிமிர்ந்தது 'மெக்ஸிக்கோ'.

(நன்றி:தேவகாந்தன்
நூல்: இலங்கைத் தமிழ் இலக்கியம், ப161-162)

0 comments: