கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பாவாவின் (Geoffrey Bawa) 'லுனுகங்க'

Wednesday, August 02, 2023

 

பாவாவின் வடிவமைப்புகளுக்கு ஒரு தனித்துவம் இருப்பதுபோலஅவருக்கு தேமாப்பூக்கள் அளவிறந்த ஈர்ப்பு இருக்கின்றது. அவர் வடிவமைத்த கட்டடங்கள் ஓவ்வொன்றின் அருகாமையிலும் இந்த தேமாப்பூ மரங்கள் விரிந்து நிற்கும். இவ்வாறே பாவாவின் சகோதரரான Bevis Bawa வின் பெந்தோட்டையில் இருக்கும் வீட்டிற்கும்தோட்டத்திற்கும் போனபோதுஇந்த தேமாப்பூ மரங்களே தனித்து அந்த வீட்டுக்கு முன்னாள் நின்றன. ஜிப்ரி பாவாவைப் போல அவரது சகோதரரும் தோட்டக்கலை வல்லுனர் ஆவர் (Landscape Architect).


ஜிப்ஃரி பாவா கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக (1948-1998) லுனுகங்காவோடு தொடர்புபட்டவர் எனவே தொடர்ச்சியாக இந்த வீட்டின் அமைவிடங்களை மட்டுமில்லைஅது சூழ்ந்திருந்த நிலப்பரப்பையும் மாற்றிக்கொண்டேயிருந்தவர். பாவாவிற்கு எப்போதும் பாவித்து எறியப்படும் பொருட்கள் மீது அதிக ஈர்ப்பு இருந்திருக்கின்றது. அவரின் தோட்டத்தை அழகுபடுத்தும் பெரும்கலயங்கள் ஏற்கனவே ஆங்கிலேயரால் கைவிடப்பட்ட சீனத்துப் பொருட்கள். அவ்வாறே முன்பு புகையிரத நிலையங்கள் பாவிக்கப்பட்ட மரப்பெஞ்சுகளையும் எடுத்துக் கொண்டு வந்து பாவித்திருக்கின்றார்.

 

Geoffrey Bawa ஒரு தலைசிறந்த architect என்பது நம் அனைவர்க்கும் தெரியும். அவர் 1919இல் இலங்கையில் பிறந்துஇங்கிலாந்தில் சட்டத்தில் பட்டம் பெற்றவர். பின்னர் 2ம் உலக மகாயுத்தகாலத்தில் இலங்கைக்கு வந்து சட்டத்துறையில் வேலை பார்க்கின்றார். எனினும் தாயாரின் மறைவையடுத்துதனது தொழிலைக் கைவிட்டு ஐரோப்பாஅமெரிக்கா எனப் பயணிக்கத் தொடங்கினார். இத்தாலியில் வீடு வாங்கி அங்கேயே வாழ நினைத்த பாவாவை இலங்கை மீண்டும் இழுத்துக் கொண்டு வருகின்றது.


அப்போது (1948) இல்பெந்தோட்டைக்கு அருகில் இந்த  15 ஏக்கர் நிலப் பரப்பை வாங்குகின்றார். அதற்கு லுனுகங்கா என பாவா பெயரிடுகின்றார். சிங்களத்தில் உப்பு ஆறு என்று அர்த்தம் வரக்கூடியது. பாவா இந்த இடத்தில் இத்தாலியன் தோட்டமொன்றை வீடொன்றுடன் சேர்த்து அமைக்க முயல்கின்றார். எனினும் காடு அடர்ந்த இந்த இடத்தில் அவரது முயற்சிஅவருக்கு தோட்ட/வீடு வடிவமைக்கும் அறிவு இல்லாததால் தோல்வியடைகின்றது. பின்னர் பாவா மீண்டும் இங்கிலாந்துக்கு architecture படிக்கச் சென்றுபட்டத்துடன் தனது 38வது வயதில் இலங்கைக்குத் திரும்புகின்றார்.

பாவாவின் வடிவமைப்பில் இருக்கும் பல கட்டடங்கள் இப்போது பொதுமக்களின் பார்வைக்கு இல்லை. அவை இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசான விடுதிகளாக இங்கே மாற்றப்பட்டிருக்கின்றன. பாவா அன்றைய காலத்தில் 15 ஏக்கராக நிலத்தை வாங்கியபோதுஅதற்கான வருடாந்த வரியை நிறையச் செலுத்தவேண்டியிருந்தது. எனவே இந்த நிலத்தை ஒரு பண்ணையாக மாற்றியிருக்கின்றார். வேளாண்மை செய்யும் நிலத்துக்கு வரி குறைவு. அன்று கோழிப்பண்ணையாக இருந்த இடம்பின்னர் கண்காட்சிக் கூடமாக இருந்துஇப்போது பயணியர் தங்கும் விடுதியாகிவிட்டடது.

இந்த நிலப்பரப்பைப் போல 10 ஏக்கர் நிலப்பரப்பை அருகிலுள்ள வாவிக்கு நடுவிலும் வாங்கியிருக்கின்றார். இன்றுவரை அதில் எதுவும் நிர்மாணிக்காமல் பறவைகளுக்கான காடாக அதை அப்படியே விட்டு வைத்திருப்பது மகிழ்வு தரக்கூடியது.

 

ங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் (ஒரு தமிழர்) பாவாவிற்கு விருப்பமான இடங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தார். பாவா காலையில் தேநீர் அருந்தும் இடத்துக்குத் தொலைவில் வாவி இருந்தாலும் அதைப் பார்க்கும்படியாக்க நிலப்பரப்பை அவர் மாற்றி அமைத்திருக்கின்றார். அதுபோலவே இன்றும் நிறையத் தேமாப்பூக்கள் அழகு சேர்க்கநெல் விதைக்கும் நிலன்கள் இருக்கின்றன. பாவா உள்ளே அமைத்திருக்கும் குளம் வண்ணத்துப்பூச்சியின் வடிவிலானது. இந்த நிலப்பரப்பு ஒருகாலத்தில் தேயிலை/இறப்பர் தோட்டமாக இருந்தாலும் பாவா நிறைய பழமரங்களை நட்டு வளர்த்திருக்கின்றார். அந்தப் பராம்பரியம் பாவா காலமாகி 20 வருடங்களான பின்னும் தொடர்கின்றது.  எனவே போகும் வழியெங்கும் ஏதேனும் ஒரு பழத்தை நாங்கள் சுவைத்துக் கொண்டு போகமுடியும். நான் நாவல்பழம்வெரலுஈச்சம்பழம் இன்னும் பெயர் நினைவில் நிற்கா சில சிங்களப்பெயருள்ள பழங்களைச் சுவைத்துப் பார்த்தேன்.

பாவா இறுதிவரை திருமணம் செய்யாதிருந்தவரென்றாலும்அவருக்கு இருபாலினரிலும் காதலர்கள் இருந்திருக்கின்றனர் என எமது வழிகாட்டி சொன்னார். பாவா தன் காதலர்களுடன் தனிமையில் இருக்கும் இடத்தோடு எமது லுனுகங்கா பயணம் முடிந்தது. பாவா கடைசிக்காலங்களில் ஸ்ட்ரோக் வந்து கோமாவிற்குள் போனவர்.   லுனுகங்காவிலிருந்து கொழும்புக்குச் சென்று கடைசி சில வருடங்கள் இந்தச் சிக்கலுடன் உயிர் வாழ்ந்தவர்.


அவரின் இறுதிவிருப்பப்படியே அவரின் அஸ்தி லுனுகங்காவில் வீசப்பட்டது. அதற்கென ஒரு சிறு அடையாளம் ஒரு மரத்தின் கீழ் எவ்வித பெயர்/வாசகமின்றி இருக்கின்றது. அந்த மரத்தின் (பெயர் மறந்துவிட்டேன்) பூக்கள் அவ்வளவு வாசனையானது. அந்த வாசத்தைப் போல பாவாவும் நீண்டகாலம் மக்களின் மனங்களில் இருந்து மறையாது வாழக்கூடும்.

 

********************


(May, 2023)

 


0 comments: