கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இலங்கையில் நடந்தது என்ன?

Saturday, December 31, 2022

இலங்கையில் நிகழ்ந்தது/நிகழ்ந்து கொண்டிருப்பவை பின்நவீனத்துவ காலகட்டத்துக்கான மிகச் சிறந்த உதாரணம். இதை எந்த மார்க்சியரும் ஒரு இடதுசாரிப் புரட்சி என்று முழுமையாக உரிமை கோரமுடியாது. மார்க்ஸியர்களின் பங்களிப்பு இருக்கின்றதென -அது எவ்வகையான போராட்டமாக இருப்பினும்- சொல்லமுடியுமே தவிர இது முற்றுமுழுதான இடதுசாரிப் போராட்டம் அல்ல என்பது எவருக்குமே எளிதாகப் புரியும்.1968 இல் பாரிஸில் மாணவர்கள் போராடத் தொடங்கியபோது, சார்த்தர் போன்ற அறிவுஜீவிகள் அது...

அ.இரவியின் 'PKM என்கின்ற புகையிரத நிலையம்'

Thursday, December 22, 2022

 1.அ.இரவியின் பெரும்பாலான படைப்புக்களை வாசித்திருக்கின்றேன். அவர் என் தமிழாசிரியர் என்பதால் மட்டும் அல்ல, அவரின் சிறுகதைகளையும், பத்தியெழுத்துக்களையும் 'சரிநிகரில்' வாசிக்கத் தொடங்கிய என் பதினைந்து/பதினாறுகளிலேயே அவரென்னை வசீகரித்தவர். 'காலம் ஆகி வந்த கதை' அவரின் முக்கிய படைப்பென்பேன். 'பாலைகள் நூறு'க்கு விரிவாக என் வாசிப்பைப் பதிவு செய்திருக்கின்றேன்....

இனியும் மலர்கள் விரியும், வாழ்வு துளிர்க்கும்!

Friday, December 16, 2022

1.கரும்சாம்பல் மூடி மழை பொழிந்துகொண்டிருந்த வானம் சட்டென்று மாறி, வெயில் எறிக்கும் கதகதப்பான பொழுதானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? வேலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய், நடப்பதற்கான காலணிகளை அணிந்தபடி, குளிருக்கு இடையில் 'வராது வந்த மாமணி'யாய் வந்த இந்த இதமான‌காலநிலையை வரவேற்கப் போவீர்களா, இல்லையா?எந்த ஒரு விடயத்துக்கும் 'தொடக்க நிலைதான்' அறியமுடியா எல்லாச்...

கே.ஆர். மீராவின் 'கபர்'

Thursday, December 15, 2022

தமிழில் - மோ.செந்தில்குமார் 'கபர்' மிகச் சிறிய நாவல். குறுநாவல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஏழு அத்தியாயங்களே உள்ள ஒரு புனைவு. எனினும் ஒவ்வொரு அத்தியாயங்களும் அவ்வளவு சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் அதிக பாய்ச்சல்களை ஏற்படுத்தும் என்று நம்பிய மாய யதார்த்த கதைகள், பின்னர் மொழியை மட்டும் கடுமையாக்கி பாவனைகளைச் செய்யச் தொடங்கியபோது அது எதிர்பார்த்த...

மெக்ஸிக்கோ - தேவகாந்தன்

Wednesday, November 30, 2022

2019 இல் வெளிவந்திருக்கிற இளங்கோவின் முதல் நாவல் 'மெக்ஸிக்கோ'. மெக்ஸிக்கோவுக்கான ஒரு பயண அனுபவத்தைப் பதிவிறக்குவதுபோல் தொடங்கும் இந் நாவல், அதீதமாய்த் தென்படினும், உண்மையில் அது பதிவிறக்குவது * நவீன வாழ்வின் ஒரு முகத்தைத்தான். தன்னிலை ஒருமைப் பாத்திரமான 'நான்', அவர் மெக்ஸிக்கோவில் சந்திக்கும் ‘அவள்’, ஏற்கெனவே அவர் ரொறன்ரொவில் அறிமுகமாகிப் பிரிந்த துஷி, இறுதியாக...

மொழிவது சுகம் - நாகரத்தினம் கிருஷ்ணா

Monday, November 21, 2022

'முள்ளிவாய்க்கால்' சிறுகதை, 'அம்ருதா' இதழ் நவம்பர் 2021இளங்கோ என்கிற இளம் எழுத்தாளரின் சிறுகதை, பெயர் ‘முள்ளிவாய்க்கால்’. இளம் எழுத்தாளரில்லையா ஆதலால் இதொரு காதல் கதை.கனடாவில் இருந்துகொண்டு, இலங்கை திரும்பும் எழுத்தாளர் தன் வாசகியைச் கொழும்பில் வைத்து சந்திக்கிறார். சந்திக்கிற வாசகித் தோழி தனது பதின்வயது காதலையும் அது பரிணாமம் பெற்றதையும், அதன் முடிவையும்...

பிரமிளா பிரதீபனின் 'விரும்பித் தொலையுமொரு காடு'

Sunday, November 20, 2022

நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில், ஒரு நண்பர் அண்மையில் இங்கே (இலங்கையில்) வெளிவந்த நூல்களை நூற்றுக்கு மேலே நான் தரவுகளாக வைத்திருக்கின்றேன், ஆனால் யாரெனும் கேட்டால் அவற்றிலிருந்து ஒரு 10 நல்ல நூல்களைத் தேர்ந்தெடுக்கக் கடினமாக இருக்கின்றதென்றார். இலங்கையில் இருந்து எழுதுபவர்களின் நூல்களைப் பற்றிய என் வாசிப்பென்பது மிகவும் குறுகியது. இருந்தும் ஒரு சிலரின்...

சாந்தனின் 'சித்தன் சரிதம்'

Thursday, November 17, 2022

சாந்தன், எங்கள் வீட்டு நூலகத்திலிருந்த 'ஒரே ஒரு ஊரிலே' என்ற நூலின் மூலந்தான் எனக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும். அப்போது எனக்கு 11/12 வயதாகியிருக்கக் கூடும். எனவே அந்த வயதுக்குரிய விளங்கா வாசிப்பினூடாக அவரைக் கொஞ்சம் வாசித்திருந்தேன். பொறியியலாளராக கட்டுப்பெத்தையில் கல்வி கற்று, கொழும்பில் வேலையும் செய்த சாந்தன் 1977 இனக்கலவரத்தோடு யாழுக்குத் திரும்பினார். அதன்பிறகு...

பிரியா விஜயராகவனின் 'ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும்'

Tuesday, November 15, 2022

1.பிரியா விஜயராகவனின் முதல் நாவலான 'அற்றவைகளால் நிரம்பியவள்' தமிழில் மிக முக்கியமான நாவல். இற்றைவரை அது குறித்து பரவலாக உரையாடல் நிகழ்த்தப்படாமல் இருந்தாலும், அது ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி'யைப் போல இனி வருங்காலங்களில் செவ்வியல் பிரதியாக மாறிவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதுபோல பா.கண்மணியின் 'இடபமும்' தமிழில் தனக்குரிய இடத்தை விரைவில் எடுத்துக்...

பதின்மூன்று உயிர்கள் (Thirteen lives)

Thursday, November 10, 2022

 2018 உலக உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றபோது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் உலகின் இன்னொரு மூலையில் நடந்ததைப் பலர் அறிந்திருப்போம். தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் 12 சிறுவர்கள் உதைபந்தாட்டம் முடிந்தபின், தமது பயிற்றுன‌ருடன் ஒரு குகைக்குள் (Tham Luang cave) நுழைந்தபோது, சடுதியாக பெய்த மழையால் குகை நிரம்பி அவர்கள் மாட்டுப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட குகையின் நுழைவாயிலில்...

'அவ்வளவு வேகமாக நடக்காதே எல்லா இடத்திலும் மழைதான்'

Sunday, November 06, 2022

நான் எனது குருவோடு மழையில் நடக்கும்போதுஅவர் சொல்வார்'அவ்வளவு வேகமாக நடக்காதேஎல்லா இடத்திலும் மழைதான் '- ஷுன்ரியு சுஸுகி (தமிழில்: க.மோகனரங்கன்)பொழுது முழுதும் மழை பொழிந்து கொண்டிருக்கையில், கருமேகம் மூடிய பின்னணியில் விரியும் கோடையின் பசுமையில் இருப்பது உயிர்ப்பு. காலையில் எழுந்தவுடன் மழையின் சாரல் கால்களில் படர, மேலே மூடிய ஊஞ்சலில் இருந்து மொட்டவிழ்த்துவிட்ட...

புனைவுகளும், புனைவல்லாதவைகளும்..

Saturday, November 05, 2022

சில நாட்களுக்கு முன் அபுனைவுகளை எழுதுபவரை விட, புனைவுகளை எழுதுபவர்களையே சமகாலத்தில் மதிக்கின்றார்கள் என்கின்ற ஒரு பதிவை வாசிக்க நேர்ந்திருந்தது. கடந்த தலைமுறையினர் பிற படைப்பு/படைப்பாளிகள் பற்றி நிறைய விமர்சித்து உரையாடி வந்தவர்கள், இப்போதைய புதுத்தலைமுறை தன் புனைவுண்டு தானுண்டு என்கின்ற மாதிரி அதில் எழுதப்பட்டிருந்தது. இன்றல்ல, அது ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழில் காத்திரமான விமர்சனத் தலைமுறை இல்லாமற்போய்விட்டது என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய...

ஆனந்தப்ரசாத்தின் 'சொல்லப்படாத கதை'

Thursday, November 03, 2022

 1.மனிதர்கள் எல்லோரும் ஒரு இதமான‌ சூழலில் வாழ ஆசைப்படுகின்றோம். அந்தச் சூழலில் இருந்தபடியே நமக்கான அடுக்கடுக்கான கனவுகளைக் கட்டவும் தொடங்குகின்றோம். அந்தச் சுமுகமான சூழலும், கனவுகளும் சட்டென்று ஒருநாள் கலைக்கப்பட்டு விட்டால் என்னவாகும். இனவாதமும், அதன் நிமித்தம் கைதுசெய்தலும், சித்திரவதைகளும், நிலங்கள் சூறையாடப்படுவதும் நிகழ சொந்த நிலத்தில் இருந்து பல்வேறு...

கடல்புறாவும் பொன்னியின் செல்வனும் இன்னபிறவும்

Wednesday, November 02, 2022

1.முகநூலில் ஏதேனும் காணொளிகளை நண்பர்கள் பார்க்க இணைப்பு அனுப்பும்போது, அது அடுத்தடுத்த காணொளிகளுக்குத் தாவிச் செல்லத் தொடங்கி விடுவதுண்டு. அவ்வாறு தற்செயலாக வாலியின் 80 வயது நிறைவில் அவரோடு பலர் உரையாடிய காணொளிகளைத் துண்டு துண்டுகளாகக் காட்டின. வாலியை நான் அவ்வளவாகப் பின் தொடர்ந்து சென்றவனில்லை. கண்ணதாசன் காலத்திலிருந்து கடைசிக்காலம் வரை வாலி அவருக்கான ஓரிடத்தை...